நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3638 (page 295)

நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்

GREATER IS HE THAT IS ON OUR PART

தானியேல் 6:10-23

பொய்யான புகழ்ச்சியும், வீண் புகழ்ச்சியும், கர்த்தருடைய ஜனங்களுக்குத் தீங்குபண்ணுவதற்கான எதிராளியானவனுடைய கருவிகளாய்க் காணப்பட்டிருக்கின்றன மற்றும் அநேகந்தரம், தீங்கும் விளைவித்துள்ளது மற்றும் இந்த உண்மையினை அடையாளம் கண்டுகொள்பவர்கள் யாவரும் விசேஷமாய் ஜாக்கிரதையாய்க் காணப்பட வேண்டும். உண்மைதான் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களில் எவருமே தரியு இராஜா போன்று அதிகாரம் அல்லது கீர்த்தியின் உப்பரிகையில் வைக்கப்படுகிறதுமில்லை, சொல்லர்த்தமாய்த் தொழுதுகொள்ளப்படுவதற்கும் வாய்ப்புமில்லை எனினும் சிறு உலகங்கள், சிறு சாம்ராஜ்யங்கள், அதாவது அதே கொள்கைகள் ஏறத்தாழ செயல்படுத்தப்படுகின்றதான அறிமுகமான சிறுவட்டாரங்கள் காணப்படவே செய்கின்றன. கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒவ்வொரு சிறு கூட்டங்களிலும், தாலந்துகள் காரணமாகவோ அல்லது வேறு தேவ செய்கையினால் ஏற்பட்டச் சந்தர்ப்பங்கள் காரணமாகவோ கூட்டத்தாருடைய அன்பிலும், மதிப்பிலும் முதன்மையாய்க் காணப்படுகிற ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள் மற்றும் இது நியாயமானது மாத்திரமல்லாமல், நீதியானதும்கூட என்று கர்த்தருடைய வசனமானது சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருப்பார்களானால், அவர்களது ஊழியத்தின் நிமித்தமாக அவர்கள் அன்புகூரப்பட வேண்டும் மற்றும் கனப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவர்கள் இன்னமும் சகோதரர்கள்தான் என்றும், கர்த்தருக்கு மாத்திரம் உரியதான கனமும், மரியாதையும் எவ்விதத்திலும் அவர்களுக்குக் கொடுக்கப்படக்கூடாது என்றும் நினைவில்கொள்ளப்பட வேண்டும். தேவனானவர் எல்லா விதத்திலும் பிரதானமானவராகவும், தொழுதுகொள்ளுவதற்குப் பாத்திரமான ஒரே ஒருவராகவும் இருக்கின்றார் என்ற இந்தக் கொள்கையில், எந்தச் சபை அல்லது தேசக்கூட்டமைப்பினாலும் தலையிட முடியாது. சபையிலுள்ள சகோதரர்களும், சகோதரிகளும் உண்மையுள்ள வழிநடத்துனர்களை மிகவும் உயர்வாய் எண்ணுகையில், தங்களால் கர்த்தருடைய மற்றும் அவரது மந்தையினுடைய ஊழியக்காரர்களென ஒப்புக்கொள்ள முடிபவர்களை முகஸ்துதி அல்லது தற்பெருமைக்கொள்ளச் செய்து, அல்லது எவ்விதத்திலாகிலும் இறுமாப்படையச் செய்து, இப்படியாய் அவர்களைச் சீரழித்துப் போடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோலவே தேவனுடைய குடும்பத்தில் காணப்படும் ஒவ்வொரு வழிநடத்துனனும், பெருமை, பேராசை மற்றும் இச்சையினுடைய நயவஞ்சகமான தாக்கங்களுக்கு எதிராகவும் மற்றும் சத்தியத்தின் நிமித்தமும், அதுபற்றின அறிவின் நிமித்தமும், அதை மற்றவர்களுக்கு முன்வைத்திடுவதற்கான ஏதோ சில திறமைகள் நிமித்தமும், தேவனுக்குச் சேரவேண்டிய கனத்தினைத் தனக்கென ஏற்றுக்கொள்ளும் காரியத்திற்கு எதிராகவும் விழிப்பாய் இருந்திட வேண்டும். தாழ்மை என்பது சந்தேகத்திற் கிடமின்றி நமக்கான படிப்பினைகளில் மிகவும் முக்கியமானதொன்றாய் இருக்கின்றது – இதை எந்த அளவிலாகிலும் புறக்கணிப்பவர்கள், நிச்சயமாக இதன் காரணமாக துன்பத்திற்குள்ளாவார்கள்.

ஜெபத்திற்கான ஒழுங்கு மற்றும் அவசியம் குறித்தும் நாம் பார்க்கலாம். கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணுகின்ற சிலர் – முழு ஜீவியமே ஜெபமாக இருக்க வேண்டும் என்றும், தொழுதுகொள்ளும் போதும், ஸ்தோத்திரிக்கும்போதும், கர்த்தருக்கு முன்பாக முழங்கால்படியிடும் ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படக்கூடாது என்றுமுள்ள – ஒழுங்கில்லாத ஜெபத்தினை வலியுறுத்துவது குறித்து அவ்வப்போது கேட்கையில் நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். இத்தகைய புதுக்கருத்துக்களானது எங்களுக்கு அதிர்ச்சியுண்டாக்குகின்றது – இக்கருத்துக்களின் காரணக்காரியமானது, புரிந்துகொள்ள முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. உண்மைதான் நாம் இடைவிடாமல் ஜெபம்பண்ணிட வேண்டும். கர்த்தருக்காகவும், அவரது காரணங்களுக்காகவும் நம்முடைய முழு ஜீவியமே மிகவும் அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அவரது காருண்யத்தினைக் குறித்த நன்றியுணர்வால் நம்முடைய மனங்களானது மிகவும் நிரம்பிக் காணப்பட வேண்டும் மற்றும் அவரிடத்திலான நம்முடைய விசுவாசமானது, மிகவும் உறுதியாகவும், மிகவும் பிரகாசமாகவும் காணப்பட வேண்டும் – இப்படி இருந்தால் ஒவ்வொரு காரியத்திலும் மனதில் அவர் சித்தத்தினையே எப்போதும் நாம் பெற்றிருப்போம் மற்றும் இப்படியாய்த் தொடர்ச்சியாக இருதயத்தில் ஜெப சிந்தையுடன் காணப்படுவோம்;. ஆனாலும் இந்த இருதய நிலையினை – மிகவும் குறிப்பான மற்றும் ஒழுங்கான விதத்தில் ஒருவேளை விரும்பும்பட்சத்தில் முழங்காற்படியிட்டு மற்றும் கூடுமானால் சிலசமயங்களில் தனிமையிலாகிலும் கர்த்தரிடம் செல்லாமல், எந்தக் கிறிஸ்தவனாலும் தக்கவைத்திட முடியாது – “உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு.”

இது குடும்ப ஜெபங்கள் அல்லது கர்த்தருடைய குடும்ப வட்டாரமாகிய சபையில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் பற்றின சிந்தனைக்குத் தடைவிதிக்கிறதில்லை. நமது கர்த்தர் இதற்குத் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும் வண்ணமாக, அவர் தனித்து ஜெபம்பண்ணத்தக்கதாக தனிமையில் மாத்திரமல்லாமல், சில சமயங்களில் சீஷர்களுக்காக, சீஷர்களோடு ஜெபித்துமுள்ளார். உதாரணத்திற்கு, யோவான் 17-ஆம் அதிகாரத்தில் பதிவு பண்ணப்பட்டுள்ளதான ஜெபம் காணப்படுகின்றது மற்றும் சபையில் ஜெபம் பண்ணுதல் தொடர்பான அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் காணப்படுகின்றன மற்றும் ஜெபத்தில் கலந்து கொள்ளும் மற்றவர்களாலும் புரிந்துகொள்ளப்படத்தக்கதான தொனியிலும், குரலிலும் ஜெபம் ஏறெடுக்கும் ஒழுங்கினைக் குறித்துக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றதான அப்போஸ்தலரின் வார்த்தைகளும் காணப்படுகின்றன. இவைகளுக்கு எதிர்மாறாகப் போராடுகின்றவர்கள், தங்களால் புரிந்துகொள்ளப்படாத காரியங்களுக்கு எதிராக போராடுகின்றதாக அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். இவர்கள் எவ்வளவுதான் திறமிக்கவர்களாய் இருப்பினும், இவர்களுக்குக் கர்த்தருடைய ஜனங்களின் கூடுகைகளில் முதன்மையான ஸ்தானங்கள் கொடுக்கப்படக்கூடாது. மந்தையில் வழி நடத்துனர்களாக இருக்கும்படிக்கு, இவர்கள் அழைக்கப்படுவதற்கு முன்னதாக, முதலாவதாக இவர்கள் கற்றுக் கொள்வார்களாக. இதே கொள்கையானது – ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரித்தல் தொடர்புடைய விஷயத்திற்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இத்தகையவர்கள் அன்பாய் நடத்தப்பட வேண்டும்; ஏனெனில் நம்முடைய சத்துருக்கள்கூட அன்பாய் நடத்தப்பட வேண்டும்; ஆனால் இவர்கள் – அதாவது பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின் அறிவும், அவ்விசுவாசத்திற்கு மதிப்பும் கொண்டிராதவர்கள் மற்றும் கர்த்தரினாலும், அவரது அப்போஸ்தலர்களினாலும் நிறுவப்பட்ட நடைமுறைகள் யாவற்றிற்கும் மதிப்புக் கொண்டிராதவர்கள் – கர்த்தருடைய மந்தைக்கான ஊழியக்காரர்களாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.