சபையின் ஏற்படுத்துதல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R 5587 (page 363)

சபையின் ஏற்படுத்துதல்

THE CHURCH’S ORDINATION

மத்தேயு 28:16-20; லூக்கா 24:36-49

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத்தேயு 28:20.

இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலைப் பின்தொடரும் நாற்பது நாட்களளவும் கொடுத்திட்ட செய்திகள் மூலம், தம்முடைய சபையிடம் அவர் பணியை ஒப்படைப்பதுப்பற்றியே நம்முடைய இப்பாடம் அமைகின்றது. முதலாவதாக எருசலேமுக்கு அருகாமையிலான எம்மாவு என்னும் கிராமத்திற்குச் சீஷர்களில் இருவர் போய்க் கொண்டிருக்கும்போது, அந்தச் சாயங்கால வேளையில் ஆண்டவரினால் கொடுக்கப் பெற்ற வார்த்தைகளை நாம் பெற்றிருக்கின்றோம். அடுத்ததாக இயேசு தம்முடைய சீஷர்களை விட்டுப்பிரிந்து, எடுத்துக்கொள்ளப்படுவதற்குச் சற்று முன்னதாக இயேசுவினால் கூறப்பட்ட பணியின் காரியங்களையும் நாம் பெற்றிருக்கின்றோம்.

எம்மாவுக்குப் போகிற வழியிலும், அடுத்து வந்து இயேசு காட்சியளித்துத்தோன்றின தருணங்களிலும் கொடுக்கப்பட்ட படிப்பினைகள், அவ்வேளையில் காணப்பட்ட கிறிஸ்துவின் பின்னடியார்கள் யாவருக்கும் மிகவும் விலையேறப்பெற்றதாய் இருந்திருக்க வேண்டும். “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கத்தரிசிகளின் ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துக்கொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” என்று கூறினார் (லூக்கா 24:44-47).

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை எடுத்திருக்க வேண்டிய சம்பாஷணைகளையும், வேதவாக்கியங்களின் விளக்கங்களையும், சுவிசேஷகன் சில வார்த்தைகளுக்குள்ளாக அடக்கி கூறியுள்ளார். அவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கத்தக்கதாக, என்ன விளக்கங்களெல்லாம் கொடுக்கப்பட்டது என்பது நமக்குச் சொல்லப்படவில்லை என்றாலும், அதை நாம் அனுமானிக்கலாம். இயேசு அநேகமாக வருடந்தோறும், அக்குறிப்பிட்ட காலத்தில் அடிக்கப்படும் பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கி, தாம் அந்த ஆட்டுக்குட்டியினுடைய, நிஜமாக இருப்பதைக் காண்பித்துக் கொடுத்திருந்திருக்கலாம்; பஸ்காவினுடைய அர்த்தத்தை அநேகமாக அவர் விளக்கி இருக்கலாம்; அதாவது நிழலில் இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் மரணத்திலிருந்து கடக்கப் பெற்றார்கள் என்றும், இந்த முதற்பேறானவர்கள் ஆசாரியர்களையும் உள்ளடக்கின லேவி கோத்திரத்தாரினால் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் என்றும், இந்த முதற் பேறானவர்களுக்கான நிஜமாக, (பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாகிய முதற்பலனான) சபை காணப்படுவார்கள் என்றும், இயேசுவின் பின்னடியார்களாகிய பரிசுத்தவான்கள் இராஜரிக ஆசாரியக்கூட்டத்தினராகவும் மற்றும் நிஜமான லேவியர்கள் என்பவர்கள், மேசியாவின் இராஜ்யத்தில் மனுக்குலத்தின் உலகமானது உயர்த்தப்படும் வேலையில், இராஜரிக ஆசாரியக்கூட்டத்தாருக்கு வேலைக்காரர்களாகவும் இருப்பார்கள் என்றும் விளக்கியிருந்திருக்கலாம்.

ஆண்டவர் நிஜமான பாவ நிவாரண நாள் குறித்தும், விசேஷித்த பலிகள் குறித்துங்கூடச் சில விளக்கங்களைச் சீஷர்களுக்குக் கொடுத்திருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை; அதாவது, தாமே இந்த விசேஷித்தப் பலிகளை ஆரம்பித்ததாகவும், அது தம்முடைய சீஷர்களினால் தொடரப்படும் என்பதாகவும், பலிகள் நிறைவடையும்போது பிரதான ஆசாரியனிடமிருந்து, ஒப்புரவாகுதலின்/பாவ நிவாரண ஆசீர்வாதங்கள் ஆயிரம் வருடங்கள் கொண்ட மேசியாவின் இராஜ்யத்தில் கடந்துவரும் என்பதாகவும் ஆண்டவர் விளக்கம் கொடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

“உன்னதத்திலிருந்து வல்லமை வாக்களிக்கப்பட்டது” – SUB HEADING

ஆண்டவருடைய மாபெரும் திட்டங்களில் எவைகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆண்டவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவைகளைக் கேட்பதில் ஆழமான ஆர்வத்தை அடைந்திருப்பார்கள் என்பதில் நமக்கு உறுதியே. அவர்களுடைய கவலை மறைந்துவிட்டது. ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் ஆண்டவரையும், அவருடைய ஆலோசனைகளையும், அவருடைய அறிவுரைகளையும் இழந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்தனர்; ஆனால் இப்பொழுதுதோ இந்தப் பிரகாசிப்பித்தலின் வாயிலாக, அவர்களுடைய இருதயங்கள் அறிவினுடைய புதிய ஏவுதலினால் கொளுந்துவிட்டு எரிந்தது. அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத தெய்வீகத் திட்டத்தினுடைய உயரங்களையும், ஆழங்களையும், நீளங்களையும், அகலங்களையும் கண்டார்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களினால் தூண்டப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் நடைபெறுவதற்கு, இயேசுவின் மரணம் அவசியமாய் உள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். தங்களுக்கு அவரோடு கூடப் பாடுபடுவதற்கு மாத்திரமல்லாமல், மகிமையடைவதற்குமான சிலாக்கியம் உள்ளதையும், அவர்கள் கண்டுகொண்டார்கள்.

அக்கடைசி தருணத்தின்போதான் ஆண்டவருடைய செய்தியின் நிறைவு பகுதியானது, “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” என்பதேயாகும் (லூக்கா 24:49). கிறிஸ்துவின் மணவாட்டிhகிய சபை, அவர்களுடைய தலையாகிய இயேசுவிடமிருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதைப் பிதா பல்வேறு நிழல்களில் வாக்களித்துள்ளார். உதாரணமாக, இக்காரியத்திற்கு ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட பரிசுத்த தைலம் நிழலாகக் காணப்படுகின்றது; ஆரோன் இயேசுவுக்கு நிழலாய் இருக்கின்றார்; மற்றும் ஆரோனின் சரீரத்தில் தைலம் வழிந்தோடின காரியமானது, சபையினுடைய அபிஷேகித்தலுக்கு நிழலாய் இருக்கின்றது.

இப்படியாகச் சபையினுடைய தெய்வீக ஏற்றுக்கொள்ளப்படுதல்/அங்கீகரிக்கப்படுதல் குறித்ததான இந்த வாக்குத்தத்தமானது மிகவும் முக்கியமான காரியமாகும். இது இல்லாமல், சீஷர்களுக்கு எந்தப் பணியும் இருக்காது, மற்றும் சீஷர்களால் தேவனுடைய ஸ்தானாபதிகளாகவும் இருக்க முடியாது. இயேசு முதலாவதாக 12-பேரையும், பிற்பாடு எழுபது பேரையும் அனுப்பி வைத்தது உண்மைதான்; ஆனால், இவர்கள் அவருடைய தனிப்பட்ட பிரதிநதிகளாகக் காணப்பட்டனர்; அவர் தம்முடைய சொந்த ஆவியையே, தம்முடைய சொந்த வல்லமையையே இவர்களுக்குக் கொடுத்திருந்தார்; மேலும் இதை வைத்துதான் இவர்கள் அற்புதங்களைச் செய்து, பிசாசுகளைத் துரத்தினார்கள். இவர்கள் அப்போது பிதாவினால் அங்கீகரிக்கப்படவில்லை. “இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை” (யோவான் 7:39). இந்தப் பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலுக்காகவும், அபிஷேகத்திற்காகவும் இவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் பரிசுத்த ஆவியினால் மாத்திரமே இவர்கள் தெய்வீக ஊழியத்திற்கும், தேவனுடைய ஸ்தானாபதிகளாகவும் மற்றும் பிரதிநிதிகளாகவும் இருப்பதற்கும் தகுதிப்படுத்தப்பட முடியும்.

“இதோ உங்களுடனேகூட இருக்கிறேன்” – SUB HEADING

நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்திட்ட ஆசியும், தம்முடைய நற்செய்தியைத் தெரிவிப்பதற்கான பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்ததும் பற்றியதான பரிசுத்தவானாகிய மத்தேயு அவர்களின் பதிவானது, நம்மை வெகுவாய் ஈர்க்கின்றது. கர்த்தர் சந்திப்பேன் என்று கூறியப் பிரகாரமாகமே, பதினொரு பேரும் அவரைக் கலிலேயாவிலுள்ள மலை ஒன்றில் சந்தித்தார்கள். அவர் கொஞ்சம் நேரந்தான் அவர்களுக்குக் காட்சியளித்துத் தோன்றினார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டனர், சிலர் முழுமையாய் நம்பிக்கொண்டனர், சிலர் தடுமாற்றத்திலேயே காணப்பட்டனர். இப்படியாக தடுமாற்றத்தில் இருப்பவர்களை நம்ப செய்வதற்கே, இயேசு நாற்பது நாட்கள் பூமியில் காணப்பட்டார். பதினொரு பேரையும் நம்ப வைக்கும் தமது வேலையை, கர்த்தர் முழுமையாய் நிறைவேற்றினார் என்பதில் நமக்கு உறுதியே; ஏனெனில், அவர்கள் மேல்வீட்டறையில், பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருக்கும்போது, ஒரே இருதயமும், ஒரே மனமும் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள் என்று பார்க்கின்றோம்.

இயேசு அவர்கள் அருகாமையில் வந்து, பூமிக்குரிய காரியங்கள் மற்றும் பரலோகத்திற்குரிய காரியங்கள் தொடர்புடைய விஷயத்தில், தமக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவ்விஷயத்தை அவர்கள் உணர்ந்துக்கொள்ளாதது வரையிலும், அவர்களால் சரியான விதத்தில், உலகத்திற்கு முன்னதாக அவரை அடையாளங்காட்ட முடியாது. இந்த ஓர் அதிகாரத்தையும், வல்லமையையும் அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில் கொண்டிருக்கவில்லை. அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தினுடைய காலப் பகுதியில், மரணம் வரையிலுமான அதாவது சிலுவையின் மரணம் பரியந்தமுமான தம்முடைய உண்மையுடன்கூடிய நேர்மைக்கான பரீட்சையின் கீழ்க் காணப்பட்டார். ஆனால் அவர் தம்முடைய நேர்மையை நிரூபித்துக் காட்டின பிற்பாடு, பிதா அவரை மரணத்திலிருந்து மகிமையான பூரண வல்லமைக்கான நிலைமைக்கு எழுப்பினார். இப்படியாக அவர் மரணத்திலிருந்ததான தம்முயை உயிர்த்தெழுதல் வாயிலாக, வல்லமையுள்ள தேவனுடைய குமாரனாக அழைக்கப்பெற்றார். தாம் இனி ஒருபோதும் மனிதனுக்கான எல்லைகளின் கீழ் அல்லது மரண உடன்படிக்கையினுடைய எல்லைகளின் கீழ்க் காணப்படுவதில்லை என்பதை, கர்த்தர் தம் சீஷர்கள் அறிய வேண்டுமென விரும்பிட்டார். அந்த வேலையைக் கர்த்தர் நிறைவேற்றிவிட்டார். அவர் ஆசீர்வாதத்திற்குள், பலனுக்குள் இப்பொழுது பிரவேசித்திட்டார். அவர் சுபாவ மாற்றத்தை அடைந்துவிட்டார் மற்றும் இப்பொழுது அவர் பூமிக்குரிய காரியங்களில் மாத்திரமல்லாமல் பரம காரியங்களிலும் அனைத்து வல்லமையையும் பெற்றுள்ளார்.

வானோர் மற்றும் பூதலத்தார் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்கிடுவார்கள் என்பதாகத் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்க்கத்தரிசனமானது நிறைவேற ஆரம்பிக்கும் நிலைக்கு அவர் வந்திருக்கின்றார். அவர் பரத்திற்கு ஏறிச்சென்றார்; அங்குத் தேவதூதர்கள் அனைவரும் அவரைப் பணிந்துக்கொண்டு, அவர் பிதாவினால் உயர்த்தப்பட்டவரென அவருக்குச் செவிக்கொடுக்கின்றனர். தீர்க்கத்தரிசனத்தின்/வாக்குத்தத்தத்தின் ஒரு பாகம் இன்னமும் நிறைவேறவில்லை. அதாவது, பூலோகத்தார் யாவரும் அவர் முன் வணங்கிட வேண்டுமென்ற பாகம் இன்னமும் நிறைவேறவில்லை. இப்படியாகச் சம்பவிப்பதற்கான காலம், ஆயிர வருடங்கள் கொண்ட அவருடைய மேசியாவின் இராஜ்யத்திலேயே ஆகும். ஆனால் தற்காலத்தில் இயேசு, தேவனுடைய குமாரன் என்ற அறிவிற்குள்ளாக வருபவர்கள் அனைவரும், அவர் பிதாவின் பிரதிநிதி என்ற விதத்தில், தங்கள் முழங்கால்களை அவருக்கு முன்பாக மகிழ்ச்சியுடன் முடக்குகின்றனர். இப்படியாகவே உலகமும் அவரை ஒரே பேறான குமாரன் என்று அடையாளம் கண்டுகொண்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.

இறுதியில் எல்லா முழங்கால்களும் முடங்கும், எல்லா நாவுகளும் அறிக்கைப் பண்ணும்; தெய்வீக ஏற்பாட்டின்படி, தேவனுடைய மகிமைப்படுத்தப்பட்ட குமாரனை ஏற்றுக்கொள்ள தவறுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; அதாவது, தேவன் கிறிஸ்து மூலமாய் விழுந்துபோன சந்ததிக்கு வடிவமைத்திட்ட ஆசீர்வாதங்களையும், தேவக் கிருபைகளையும், இன்னமும் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு அபாத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.
R5588 : page 364

“ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், உபதேசம் பண்ணுங்கள்” – SUB HEADING

இங்குதான் உருவாகின்றது, ஊழிய பொறுப்பு ஒப்படைக்கப்படும் காரியம். முதலாவது இந்தப் பணி பதினொரு அப்போஸ்தலர்களுக்கு உரியதாய் இருந்தது; பின்னர், இதனுள் யூதாசுக்குப் பதிலாக வந்த பரிசுத்தவானாகிய பவுலும் இடம்பெறுகின்றார். “மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்” என்று பவுல் குறிப்பிடுகின்றார் (2 கொரிந்தியர் 11:5). அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபைக்குமான வாய்க்கருவிகளாக, உலகத்திற்கு காணப்படுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு வாரிசாக, அப்போஸ்தல கண்காணிகள் காணப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படுவது அனைத்தும் தவறான காரியமாகவும், வேதவாக்கியங்கள் அங்கீகரிக்காததுமாக இருக்கின்றது. அப்போஸ்தலர்களுக்குப் பின்வரும் அப்போஸ்தலர்கள் என்று எவரும் இல்லை; அப்போஸ்தலர்கள் இன்னமும் நம்முடன் காணப்படுகின்றனர்; இவர்கள் மூலமான ஆண்டவருடைய செய்தியானது, நமக்குப் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16-17). அப்போஸ்தலர்களிடமே சபையை ஆரம்பித்து வைப்பதற்கான மாபெரும் வேலை ஒப்படைக்கப்பட்டது. அப்போஸ்தலர்கள் பெந்தெகொஸ்தே நாளன்று வல்லமையினைப் பெற்றுக்கொண்டார்கள்.

இயேசு 12-அப்போஸ்தலர்களைச் சபைக்கான வாய்க் கருவிகளாக/ பிரதிநிதிகளாக விசேஷமாய் நியமித்தது, அவர்கள் பூமியிலே எதைக் கட்டுகிறார்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும் என்றும், அவர்கள் பூமியிலே எதை அவிழ்க்கின்றார்களோ, அது பரலோகத்திலும் அவிழ்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தாலும், சபையினுடைய ஒவ்வொரு அங்கமும் தம்முடைய பிரதிநிதியாக இருக்கத்தக்கதாகவும், அவரவருடைய வாய்ப்பு மற்றும் திறமைக்குத் தக்கதாக சுவிசேஷச் செய்தியை அறிவிக்கும் வேலையில் பங்கடையத்தக்கதாகவும் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார். பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகத்தையும், ஜெநிப்பித்தலையும் அடைந்தவர்கள், ஏசாயா 61:1-3-ஆகிய வசனங்களின்படி, அபிஷேகிக்கப்பட்ட தலையாகிய இயேசுவின் கீழ், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டவும் . . . அவர் என்னை அனுப்பினார்” (ஏசாயா 61:1-3). பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவரும் இப்படியாக அவன் (அ) அவளுடைய வாய்ப்பு (அ) வரம்பு (அ) சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரசங்கிப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளனர். சகோதரிகள் பொதுவிடங்களில் போதிக்கக்கூடாது என்பது அப்போஸ்தலர் கொடுத்திட்ட ஒரு கட்டுப்பாடாகும் (1 தீமோத்தேயு 2:12). எனினும் அனைவருக்கும், அநேகமான வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் கிறிஸ்தவ மண்டலத்தின் குருமார் வகுப்பார் (clergy class) அதாவது தாங்கள் மாத்திரமே தேவனுடைய செய்தியைப் போதிப்பதற்கு (அ) பிரசங்கிப்பதற்கு அதிகாரம் உடையவர்கள் என்று தங்களைக் குறித்துக் கூறிக்கொள்பவர்களாகிய குருமார்கள், மாபெரும் தவறை செய்துள்ளனர். இயேசுவும் சரி, அப்போஸ்தலர்களும் சரி, குருமார் வகுப்பாரை (clergy) (அ) கிறிஸ்தவ பொதுமக்கள் வகுப்பாரை (laity) தங்கள் மத்தியில்கொண்டிருக்கவில்லை. மாறாக, நமது கர்த்தர், “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். . . கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்” என்றே கூறியுள்ளார் (மத்தேயு 23:8-10). ஆண்டவரும், அவரது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் ஆண்டவருடைய சீஷர்கள் மத்தியில் குறிப்பிட்ட வகுப்பாரை, மாபெரியவர்கள் போல் நாடுவதையும் மற்றும் குருமார் வகுப்பார் போன்ற காரியத்தையும் தடை பண்ணுகிறவர்களாகவே காணப்பட்டனர்.

“சபைக்கான பணி” – SUB HEADING

“ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளிலிருந்தும் சீஷர்களை உருவாக்கிடுங்கள்” (சரியான மொழிப்பெயர்ப்பு) என்ற செய்தி அப்போஸ்தலர்களுக்கு வழங்கப்பட்டது. ஜாதிகளை/தேசங்களைச் சீஷராக்க வேண்டும் என்பதாக பணி கொடுக்கப்படவில்லை; மாறாக, அனைத்துத் தேசங்களிலிருந்தும், கிறிஸ்துவின் சீஷர்களாகும்படிக்கு விரும்புபவர்கள் ஐசுவரியவான்களாகவோ (அ) தரித்திரர்களாகவோ, கல்வியறிவு உடையவர்களாகவோ (அ) கல்வி அறிவு இல்லாதவர்களாகவோ, இழிவானவர்களாகவோ (அ) மேன்மையானவர்களாகவோ இருந்திட்டாலும், அவர்களைச் சேர்த்துக் கொள்வதே பணியாகும். கிறிஸ்துவின் சீஷன் என்பவன் அவருடைய பின்னடியானவனாகவும், கற்றுக்கொள்கிறவனாகவும், பின்பற்றுகிறவனாகவும் இருக்கின்றான். இந்தச் சீஷத்துவத்தை இயேசு பின்வருமாறு விளக்குகின்றார்; அதாவது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், (என்னுடைய சீஷனாக இருக்கவிரும்பினால்) அவன் தன்னைத் தான் வெறுத்து, (தன்னையும், தனது தாலந்துகளையும், தனது சித்தத்தையும், தனது ஆஸ்தியையும், தன்னுடைய அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டு, சீஷத்துவத்தை முதலாவதாக நிறுத்தி) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24).

கிறிஸ்துவின் உண்மையான பின்னடியார்களாகவும், உண்மையான சீஷர்களாகவும் காணப்படும் அனைவரும், கர்த்தர் தங்களை வழிநடத்துகின்ற பாதை கடினமான ஒன்று என்றும், இப்பாதையில் தங்கள் சொந்த சித்தங்கள் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்டு, கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்றும், இப்பாதையில் தங்களுக்கு மாம்சத்தின் விஷயத்தில் எப்போதும் சிரமம்/பிரச்சனை காணப்படும் என்றும் உணர்ந்துக்கொள்வார்கள். எனினும் இறுதியில் நான் எங்கே இருக்கின்றேனோ (பரலோகத்தில் (அ) மகிமையின் இராஜ்யத்தில்) அங்கே என் சீஷர்களும் இருப்பார்கள்” என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவினுடைய சபையின் தண்ணீர் ஞானஸ்நானமானது, உலகத்திற்கு மரித்திருக்கிற காரியத்திற்கும், சுயத்திற்கு மரித்திருக்கிறதற்கும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராக, புதிதான ஜீவனுக்குள் எழுந்திருக்கிறதற்குமுரிய அடையாளமாகப் பார்க்கப்பட்டாலும், தண்ணீர் ஞானஸ்நானமானது வெறும் ஓர் அடையாளமே. ஆகையால் நமது பணி தண்ணீர் ஞானஸ்நானம் வழங்குவதாக இல்லாமல், மாறாக பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டிய ஞானஸ்நானமாய் இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாக ஞானஸ்நானம் கொடுங்கள்” (சரியான மொழிப்பெயர்ப்பு) எனும் வசனத்தில் இடம்பெறும் “நாமத்திற்குள்ளாக” எனும்போது, இது ஐக்கியத்திற்குள்ளாக ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் அனைவரும், பிதாவினுடைய நாமம், நீதியின் சார்பில் உள்ளது என்பதை அங்கீகரிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும்; மற்றும் அவரது நாமத்தை முன்வைக்கும் கொள்கையைத் தவிர, மற்ற அனைத்துக் கொள்கைகளுக்கும் அவர்கள் மரித்தவர்களாய் இருக்க வேண்டும்; மற்றும் நீதியின், நியாயத்தின், உண்மையின் நாமத்திற்குள்ளாக அவர்கள் முற்றும் முழுமையாய் மூழ்கிக் காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவின் சீஷர்கள் மற்ற நாமங்களாகிய லுத்தரன்ஸ் (Lutherans) (அ) கல்வீனிஸ்ட் (Calvinist) (அ) ரோமன் கத்தோலிக்கம் (அ) கிரேக்க கத்தோலிக்கம் (அ) ஆங்கிலிக்கன் கத்தோலிக்கம் (Anglical Catholic) (அ) வெஸ்லியன்ஸ் (Wesleyans) ஆகியவைகளைப் புறக்கணித்துவிட்டு, கிறிஸ்துவின் நாமத்திற்குள்ளாக மூழ்கிட வேண்டும்; மற்றும் அவருடைய நாமத்தையும் அங்கீகரித்திட வேண்டும்; மற்றும் அவருடைய சரீரமாகவும், அவருடைய சபையாகவும், அவருடைய அங்கத்தினர்களாகவும் காணப்பட வேண்டும். இன்னுமாக அவர்கள் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்ளாகவும் மூழ்கிட வேண்டும்; மற்றும் பரிசுத்த ஆவியை அங்கீகரித்திட வேண்டும்; அதாவது, தங்கள் சொந்த ஆவியையும், தங்கள் சொந்த சித்தத்தையும் மரிக்கப்பண்ணி, அவர்கள் பரிசுத்த ஆவியினை அங்கீகரித்திட வேண்டும். அவர்களுடைய சொந்த இலட்சியங்களும், நம்பிக்கைகளும், எதிர்ப்பார்ப்புகளும் புறக்கணிப்பட வேண்டும். தேவனுடைய பரிசுத்தமான சித்தமும், தேவனுடைய மனதும், தேவனுடைய பரிசுத்தமான நோக்கமுந்தான் அவர்களுடைய சித்தமாகவும், நோக்கமாகவும் காணப்பட வேண்டும்.

இப்படியாக எல்லா தேசங்களிலுமுள்ள, எல்லா ஜனங்கள் மத்தியில் நமது செய்தியைக் கேட்கிறதற்குச் செவியுடையவர்களிடத்தில், நமக்கான பணி காணப்படுகின்றது. நாம் அப்படிப்பட்டவர்களைச் சீஷராக்கி, அவர்களைப் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியினுடைய நாமத்திற்குள்ளாக முழுகப் பண்ணிட வேண்டும். இயேசு கட்டளையிட்டவைகளையெல்லாம் கடைப்பிடிக்கும்படிக்கு நாம் அவர்களுக்கு உபதேசத்திட வேண்டும். இதுவே நம்முடைய அதிகாரத்தினுடைய எல்லையாக இருக்கின்றது. நாம் மனித அமைப்புகளை உருவாக்கவுங்கூடாது; மற்றும் உருவாக்கிக் கொண்டு, அதனை இராஜ்யங்கள், சபைகள் என்றோ (அ) வேறு நாமத்திலோ அழைக்கக்கூடாது. நாம் இயேசுவின் பின்னடியார்களை ஆயத்தம் மாத்திரமே பண்ணவேண்டும்; தேவனோடு ஒத்தழைக்க மாத்திரமே வேண்டும்; தமது தயவுள்ள திருவுளத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உண்டு பண்ணுபவராகிய தேவனோடு, நாம் ஒத்துழைக்க மாத்திரமே வேண்டும்.

“உலகத்தின் முடிவு பரியந்தம்” – SUB HEADING

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” இயேசுவின் இந்த வார்த்தைகளானது, உலகம் ஒரு முடிவிற்கு வரும் என்பதைத் தெரிவிப்பதாகப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது; ஆனால் கிரேக்க மொழி அர்த்தத்தின்படி பார்க்கும் போது, ஆண்டவர் யுகத்தின் முடிவு வரையிலும் தம்முடைய ஜனங்களோடு இருப்பார் என்பதே ஆண்டவர் உண்மையிலேயே கூறினவைகளாகும்; அதாவது தெய்வீக நோக்கம் நிறைவேற்றப்படத்தக்கதாக, போதுமான எண்ணிக்கையில் கிறிஸ்துவின் சீஷர்கள் சேர்க்கப்படுவதாகிய தெய்வீக நோக்கத்துடன் கூடிய பணியைச் சுவிசேஷ யுகமானது முடிப்பது வரையிலும், சுவிசேஷச் செய்தியானது, இராஜரிக கூட்டத்தாராகிய, மகிமையிலுள்ள கிறிஸ்துவின் மணவாட்டிக்கான எண்ணிக்கை நிறைவடையத்தக்கதாக, (சீஷர்களை) சத்தியத்திற்குக் கீழ்ப்படியப் பண்ணுவதன் மூலமாக (அவர்களிடத்தில்) பரிசுத்தமாக்கப்படுதலை நிறைவேற்றி முடிப்பது வரையிலும், அவர் தம்முடைய ஜனங்களோடுகூடக் காணப்படுவார். பின்னர் யுகத்தினுடைய முடிவுவரும். பின்னர் ஆண்டவர்தாமே, தம்முடைய தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதற்கும், அவர்களைத் தம்மோடுகூட மகிமைப்படுத்துவதற்கும், தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கும், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அல்லாத மனுக்குலத்தின் உலகத்தாரை ஆசீர்வதிப்பதற்குமென வருவார்.