R1034 (page 4)
விசுவாசிகளுக்குத் தண்ணீரினால் யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம் எனும் இந்த அனுசரிப்புச் சம்மந்தப்பட்ட விஷயத்தில், சபை மாத்திரமே போதிப்பதற்கான அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப் பெற்றுள்ளனர் என்பது தவிர மற்றப்படி வேறெந்த வரையறைகளும் வேதவாக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை. ஞானஸ்நானம் எனும் அனுசரிப்பை நிகழ்த்துபவரின் விசுவாசமும், அறிவும் பொருட்டல்ல, மாறாக ஞானஸ்நானம் எடுப்பவரின் விசுவாசமும், அறிவுந்தான் முக்கியமாய் உள்ளது. சில சமயங்களில் யாருக்காக ஞானஸ்நானம் கொடுக்கப்படுகின்றதோ அவரைக் காட்டிலும், ஞானஸ்நானம் எனும் அனுசரிப்பை நடப்பிப்பவர் எல்லாவிதத்திலும் தகுதியில் குறைந்தவராகக் காணப்படலாம் (யோவான் 3:14) மற்றும் சிலசமயம் இராஜ்யத்தை அல்லது சபை வகுப்பாரைக்குறித்து விசுவாசியாதவராகக்கூட இருக்கலாம் (மத்தேயு 11:11). நிச்சயமாகவே போதிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற யாவரும், ஞானஸ்நானம் கொடுத்திடுவதற்கும் அங்கீகாரம் சமமாய் உடையவர்களாய் இருக்கின்றனர் மற்றும் இது – ஊழியத்திற்கும், நியமனத்திற்கும் (மத்தேயு 28:19,20) மற்றும் யோவான் 17:14-18,23-ஆம் வசனங்களின்படியான ஏற்படுத்துதலுக்குமுரிய பொதுவான அழைப்பின்படியான “யுகத்தின் முடிவுபரியந்தமுள்ள கிறிஸ்துவின் ஒவ்வொரு உண்மையான பின்னடியாரையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. மேலும் இந்த நியமனமானது, “கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள பெண்களை (ஞானஸ்நானம் கொடுக்கும்) இச்சேவைக்கு நிச்சயமாய்த் தடைப்பண்ணுகிறதில்லை (கலாத்தியர் 3:28); அபூர்வமாய்த் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் இத்தகைய ஊழியங்களைச் செய்யலாமே ஒழிய, மற்றப்படி இத்தகைய ஊழியங்கள் புரிவதைத் தன்னடக்கம், சௌகரியம் முதலான காரியங்களினால் அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.