R5789
வகுப்புகளைப் பிரித்தல் தொடர்பாக
அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-
ஜூன் 1, வாட்ச் டவர், 1915 வெளியீட்டின், 2-ஆம் பக்கத்தில் சபையில் இருபது நபர்களுக்கு மேல் காணப்படுகையில் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளைப் பிரித்து நடத்துதல் குறித்தும்,இதே விதியானது, ஜெபகூட்டங்களுக்கும் பிரயோஜனமாயிருக்குமென நீங்கள் எண்ணுவதாகப் பேசியிருந்தீர்கள். எங்கள் சபையிலுள்ள சிலர் புதன்கிழமை கூட்டத்தையும் பிரித்து நடத்திட விரும்புகின்றனர்; ஆனாலும் மற்ற வகுப்புகளைப் பிரித்து நடத்துவது குறித்து எதுவும் பேசிடவில்லை. நாங்கள் அனைவருமே நமது அருமை கர்த்தரின் சித்தத்தையே செய்ய வேண்டுமென்றிருக்கின்றோம் என்பதில் எனக்கு உறுதியே. பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் வகுப்புகள் பிரிக்கப்பட வேண்டும் என்பது உங்களது கருத்தாகக் காணப்படுகின்றதா?
இதழாசிரியரின் பதில்:
வாட்ச் டவரிலும், வேதாகமப் பாடங்கள் முதலானவைகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எல்லாமே, அறிவுரையாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்; எதுவும் கட்டளையாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. கர்த்தரும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் (யூதாசின் இடத்தில் பரிசுத்த பவுல் இடம்பெறுகின்றார்) மாத்திரமே தேவனுடைய ஜனங்களுக்குக் கட்டளையிடுவதற்கான உரிமையினை உடையவர்களாய் இருக்கின்றனர் என்றே நாங்கள் நம்புகின்றோம். இதழாசிரியர் உள்பட மற்றவர்களோ, ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே உரிமை உடையவர்களாய் இருக்கின்றனர். மேலும் அத்தகைய ஆலோசனைகளுக்கு ஆதரவாக வேதவாக்கியம் அல்லது தெளிவான காரணம் எப்போதும் காணப்பட வேண்டும்.
இருபதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைக்கொண்டிருக்கையில், வகுப்புகள் பிரிக்கப்படுவதாக என்று உலகம் முழுவதிலும் காணப்பட்டதான வேதமாணவர்களின் சபைகளுக்கு நாங்கள் பரிந்துரைத்தபோது, நாங்கள் அதே விதியையே பின்பற்றுகிறவர்களாகவே இருக்கின்றோம் – அதாவது ஆலோசனையாக மாத்திரம் தெரிவித்துள்ளோம். இதற்கு எந்த வேதவாக்கிய ஆதாரம் இல்லாதபடியால், நாங்கள் எங்கள் காரணங்களை முன்வைத்திருந்தோம், அவை: பெரிய எண்ணிக்கையில் காணப்படுகின்றதான சபையார் ஆராய்ச்சிப் பாடங்களில் மிகச் சிறப்பாய்ப் பங்கெடுக்க முடியாது மற்றும் அவற்றிலிருந்து அதிக ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளவும் முடியாது. புதன்கிழமை மாலையில் நடைபெறும் சாட்சிக்கூட்டங்களில், அதில் பங்கெடுக்கும் அனைவருக்கும் ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் கடந்துவருகின்றதென நாம் நம்புகின்றோம் மற்றும் இதைப்போலவே பெரோயா வகுப்புகளில் பங்கெடுப்பதினாலும், ஆர்வம் அதிகமாகுகின்றது, பாடங்கள் ஆழப்பதிகின்றது மற்றும் இப்படியான ஆசீர்வாதங்களை அதிகமாக்குகின்றது என்றும் நாம் நம்புகின்றோம்.
எனினும் ஒவ்வொரு விஷயத்திலும் சபையாரே தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தங்கள் சூழ்நிலைக்கு வகுப்பைப் பிரித்திடலாமா அல்லது இல்லையா என்றும் பெரும்பான்மையானவர்களின் வாக்கினால் தீர்மானித்திட வேண்டும். பொதுவான விதியானது சில குறிப்பிட்ட விஷயங்களில் அப்பியாசப்படுத்த முடியாது, காரணம் அது சம்மந்தப்பட்ட வேறே சூழ்நிலைகளாகும். வேதாகமத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான திவ்விய ஏற்பாட்டின்படி, சபையே அதன் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தீர்மானம் எடுத்துக்கொள்கின்றது என்பது எப்போதும் புரிந்துகொள்ளப்படுவதாக. வாக்கெடுக்கப்படுகையில் கலந்து கொண்டிருக்கின்ற அர்ப்பணிக்கப்படாதவர்களின் விருப்பங்களானது, அர்ப்பணிக்கப்பட்டவர்களால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டாலுங்கூட, அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மாத்திரமே சபையாராக இருக்கின்றனர்.
ஒவ்வொரு சபையாரும் / கூடுகையும், எக்ளீஷியாவாக அல்லது சபையாகக் கருதப்படலாம் மற்றும் மற்றச் சபையாரிடமிருந்து முற்றும் சுதந்தரமானவர்களாகக் கருதப்படலாம் என்றாலும், ஒற்றுமையும், ஐக்கியமும் மிகவும் விரும்பத்தக்கவையாகும் மற்றும் ஒரு பட்டணத்திலுள்ள பல்வேறு சபையார் / கூடுகைகளானது ஒரு எக்ளீஷியாவில் அல்லது சபையில், ஆவியில் ஒன்றிணைக்கப்பட்டு, இப்படியாய் அவ்வப்போதான பொதுக்கூட்டங்களின், பொது ஐக்கியத்தின் பலன்களைப் பெற்றுக்கொள்வதும், ஊழியக்காரர்களாகிய – மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் தேர்ந்தெடுக்கும் கூட்டு ஏற்பாட்டில் பங்கெடுப்பதும் மிகவும் சரியானதே. இப்படியாக ஆவியில் ஒன்றிணைகையில் ஒவ்வொரு சபையாரும், தனிப்பட்ட நபர்களும் ஒத்துழைப்பின் பலன்களுக்காகச் சுதந்தரங்களைத் தியாகம்பண்ணுகிறவர்களாய் இருப்பார்கள்.