R5131 (page 347)
வேத மாணவர்கள் அடங்கிய சில சபைகள், class extension work / புதிய வகுப்புகளை உருவாக்கும் ( அறுவடை) பணியில் அருமையாய்ப் பணியாற்றுகின்றனர் மற்றும் தவறாமல் விவரங்களையும் தெரிவித்து வருகின்றனர். புதிய வகுப்புகளை உருவாக்குவதற்கான கூடுகைகளில் கலந்துகொள்பவர்களின் வருகையினுடைய எண்ணிக்கையும் நன்றாகவே இருக்கின்றது. பெரும்பாலும் முதல் மூன்று கூட்டங்களானது, அடுத்த மூன்று கூட்டங்களுக்கும் வழிவகுக்கின்றது மற்றும் பின்னர்ப் புதிய சபையானது நிறுவப்படுகின்றது. கூடுமானமட்டும் இப்படிப் புதிதாய் ஏற்படுத்தப்பட்டுள்ள சபையார் தங்கள் உள்ளூர் கூடுகைகளை வாரத்தினுடைய இரவு வேளைகளில் கொண்டிருக்கவும், ஞாயிற்றுக் கிழமைகளிலாகிலும் அறுவடை பணியினை மேற்கொண்ட, ஏற்கெனவே காணப்படும் சபையாரோடு கூடிட பிரயாசம் எடுக்கவும் நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.
இந்த வேலைகளுக்கான தகுதியுடைய அநேகம் சகோதரர்களைப் பெற்றிருக்கின்ற சில இடங்களில் காணப்படுகின்றதான பெரிய எண்ணிக்கையிலுள்ள சபைகளானது, புதிய வகுப்புகளை உருவாக்கும் பணியில் எதையும் செய்யாமல் இருப்பதை அல்லது கொஞ்சமே ஈடுபடுகிறதைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைகின்றோம். அறுவடை வேலையில் காணப்படுகின்றதான இந்த வைராக்கிய குறைவிற்கான காரணம் என்னவென்று நாங்கள் சிந்தித்துணர முயற்சிக்கின்றோம். இந்த அருமையான சகோதரரர்கள் வைராக்கியம் உடையவர்கள் என்பதை அறிந்தவர்களாகவும், அவர்களது தாலந்துகளானது செயலற்று அடங்கிக்கிடப்பதை அறிந்தவர்களாகவும், நாம் பின்வருமாறு முன்வைக்கும் விஷயங்களே காரணங்கள் என்று எண்ணும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி இருக்கிறோம்: அதாவது இம்மாதிரியான சபைகளில் காணப்படுகின்ற புதிய வகுப்புகளை உருவாக்க திறமைக்கொண்டுள்ளதான சகோதரர்கள் – சபையார் தங்களை மூப்பர்களாக தேர்ந்தெடுக்கத்தக்கதாக மற்றும் புதிய வகுப்புகளை உருவாக்கும் பணியினைத் தாங்கள் மேற்கொள்ளத்தக்கதாக, சபையார் தங்களை அங்கீகரிக்கத்தக்கதாக தாங்கள் முயற்சிப்பவர்களாகச் சபையாருக்குத் தோற்றமளித்திடக்கூடாது என்பதினால், இப்பணியினைக் குறித்து முன்வைக்கும் விஷயத்தில் மிகவும் தன்னடக்கத்துடன் காணப்படுகின்றனர். தன்னடக்கம் என்பது எப்போதுமே அருமையான பண்பாய்க் காணப்படுகின்றது; ஆனால் விசேஷமாக சில தாலந்துமிக்க சகோதரர்களுக்கு, நற்செய்தியைப் பிரகடனம் பண்ணுவதிலிருந்து தங்களைக் கட்டுபடுத்திக்கொள்வதும் – முன்னேறிச்சென்று, தாங்களாகவே சிறு கூட்டங்களை ஏற்படுத்துவதிலிருந்து தங்களைக் கட்டுபடுத்திக்கொள்வதும்; மிகவும் சிரமமான காரியமாய் இருக்கும்.
சில சபையார் மத்தியில், புதிய வகுப்புகளை உருவாக்குவதற்குரிய தாலந்துடையவர்கள் இல்லாமல் இருப்பதும் உண்மையே – அதாவது தாலந்துடைய சகோதரர்கள் அனைவரின், அவசியமுடைய சபையார் காணப்படுகின்றனர். ஆனால் விழித்தெழுவதற்கும், சில தாலந்துடைய சகோதரர்களைக் கவனிப்பதற்கும், இவர்கள் தங்கள் நேரத்தையும், பெலத்தையும் புதிய வகுப்புகளை உருவாக்கும் பணிகளில் பயன்படுத்தத்தக்கதாக இவர்களை உற்சாகமூட்டுவதற்குரிய நிலையில் சில சபையார் காணப்படுகின்றனர். ஆகையால் சபையார் தாங்கள் பெற்றிருக்கின்றதான தாலந்துடையவர்களை, விலையேறப்பெற்றச் சொத்துக்களாகக் கருதவும் மற்றும் இந்தச் சொத்துக்களைப் பயன்படுத்தி, கர்த்தரை மகிமைப்படுத்த நாடவும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
தெய்வீகத் திட்டத்தின் விளக்கவுரைக்கான தாலந்துடைய சகோதரர்கள், புதிய வகுப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளைக் காண்கையில் மற்றும் தாங்களே சமாளிக்கத்தக்கதான நிதி நிலையினைக் கொண்டிருக்கையில், கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படிக்கு நாம் அறிவுரை கூறுகின்றோம். எனினும் கூடுமானால் அனைவரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும், அனைவரும் நற்பணியிலும், அதன் விளைவான சந்தோஷங்கள் மற்றும் ஆசீர்வாதங்களில் இணைந்து கொள்ளத்தக்கதாகவும் முதலாவதாக இவர்கள் காரியத்தினைச் சபையாருக்குத் தெரிவிப்பதற்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.