உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3943 (page 53)

உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

TAKE HEED TO YOURSELVES

“ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தி னாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” (அப்போஸ்தலர் 20:28) எனும் பரிசுத்த பவுலடிகளின் வார்த்தைகளானது, முன்பில்லாதளவுக்கு இப்பொழுது நாம் கவனம் செலுத்திடுவதற்கு மிகவும் பாத்திரமானவைகளாய்க் காணப்படுகின்றது. சீயோன் காவல் கோபுரத்திலிருந்து பார்க்கையில், சத்தியமானது அனைத்துத் திசைகளிலும் பிரம்மாண்டமாய் முன்னேறிக்கொண்டிருக்கையில், “தீங்குநாளும்” – ஏற்கெனவே ஆசீர்வதிக்கப்பட்டு, பிரகாசிக்கப்பட்டவர்களாய்க் காணப்படுபவர்களைச் சோதிக்கும் காலமும் நம்மீது காணப்படுகின்றது என்பதை நாம் தெளிவாய்ப் பார்க்கின்றோம். ஆகையால் தற்கால சத்தியத்தினுடைய செய்தியினைக் கேட்பதற்குரிய செவிகளினால் யார் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது மாத்திரம் கேள்வியாயிராமல், இன்னுமாக யார் “தீங்குநாளிலே எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கும் திராணியுள்ளவர்களாயும் மற்றும் நம்மில் அன்புகூர்ந்தவரும் மற்றும் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே நம்மை வாங்கிகொண்டவருமானவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக” மகிமைப்படுத்தப்படுபவர்களாயும் இருப்பார்கள் என்பதும் கேள்வியாய்க் காணப்படுகின்றது (எபேசியர் 6:13; ரோமர் 8:37).

நம்முடைய தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதான எதிராளியானவனின் தாக்குதலை அனைத்துத் திசைகளிலும் [R3943 : page 54] நம்மால் கவனிக்க முடிகின்றது – நம் மத்தியில் தப்பறை மற்றும் பேராசை எனும் துன்புறுத்தும் ஓநாய்களை நம்மால் கவனிக்க முடிகின்றது. நாங்கள் அபாய அறிவிப்பை விடுத்து, “சோதனை காலமானது” – அதாவது கடந்த முப்பது வருடக்காலமாக நாம் எதிர்க் கொள்வதற்கென ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றதான அந்தச் சோதனை காலமானது வந்துள்ளது என்று நாங்கள் உங்களுக்குக் கூறவேண்டியுள்ளது. நமக்கருளப்பட்டிருக்கும் அறிவின் காரணமாக, இந்த அபாயகரமான தருணத்தில் தூங்கிப்போய்விடாமல் இருப்போமாக; இச்சூழ்நிலையினைத் தெரிந்த நிலையிலும், ஜெபத்துடனும், உண்மையுடனும் எதிர்க்கொள்வோமாக.

நம்முடைய அறிவு என்பது பொறுப்புக் கூட்டப்பட்டுள்ளதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்றும், அறிவானது – பூரணத்தின் நிறைவாகவும், திவ்விய பிரமாணத்தினுடைய அல்லது திவ்விய எதிர்ப்பார்ப்பினுடைய நிறைவேறுதலாகவும் காணப்படுகின்றதான அன்புடன் இணைந்து, செயல்படவில்லையெனில், அறிவினால் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லையென்றும் நாம் நினைவில் கொள்வோமாக. எத்தனை ஆசீர்வாதங்களை நமக்குக் கர்த்தர் அருளியிருக்கின்றார் மற்றும் நம்மீது இப்பொழுது கடந்து வந்துள்ளதான சோதனையை எதிர்த்து நிற்க நமக்கு உதவுகின்றதான தேவனுடைய சர்வாயுத வர்க்கங்களைத் தரித்துக்கொள்வதற்குக் கர்த்தர் எத்தனை வாய்ப்புகளை அருளியிருக்கின்றார் !

“உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று முதலாவது அப்போஸ்தலன் ஞானமாகவே கூறியிருக்கின்றார். இது நம்முடைய முதலாம் பொறுப்பாய் உள்ளது. நாம் பொறாமையினாலோ அல்லது பேராசையினாலோ அல்லது ஏதேனும் சுயநலமான நோக்கங்களினாலோ எவ்வளவேனும் இயக்கப்பட்டிருக்கின்றோமா என்று நம்முடைய சொந்த இதயங்களை நாம் ஒவ்வொருவரும் முதலாவதாக ஆராய்ந்திட வேண்டும். இதை நாம் நன்கு செய்ய வேண்டுமெனில், நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டோ அல்லது நம்முடைய அபூரண நிலையுடன் / அளவுகோலுடன் ஒப்பிட்டோ ஆராய்ந்திடாமல், கர்த்தருடைய தரநிலையுடன் / அளவுகோலுடன் – பூரண அன்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்திட வேண்டும். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்புகூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் (விசேஷமாக கர்த்தருக்குள்ளான உன் சகோதரனிடத்திலும்) அன்புகூருவாயாக.” ஓ! இது – எத்துணைச் சகோதர சிநேகத்தையும், எத்துணை உருக்கமான வார்த்தையையும், கிரியையும், ஒவ்வொருவருடைய பெலவீனங்களில் ஒருவர் இன்னொருவர் மீது எத்துணை அனுதாபத்தையும், ஒருவர் இன்னொருவருடைய சிறந்தப் பண்புகளை எவ்வளவாய்ப் பாராட்டுதலையும், எத்துணை நீடிய பொறுமையுடன்கூடிய இரக்கத்தையும், அன்பில் பொறுமையுடன் சகித்தலையும், தன்னுடையது போன்று ஒருவர் இன்னொருவருடைய நலன்களுக்காக, உரிமைகளுக்காக மற்றும் சுயாதீனங்களுக்காக எத்துணை அக்கறைகொண்டிடச் செய்திடும் மற்றும் இப்படிக் குறிக்கின்றதாய் இருக்கும்!

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” என்று இதே அப்போஸ்தலன்தான் எழுதியுள்ளார் (2 கொரிந்தியர் 13:5). உபதேசத்தில் தெளிவாயிருப்பது மிகவும் அவசியமானதாகும்; ஆனால் இதுமாத்திரம் போதாது; ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் மற்றும் விசேஷமாகக் கர்த்தருடைய சபையின் காரியங்கள் அனைத்திலும் – கர்த்தரிடத்தில் விசுவாசம் கொள்ளும் விதத்திலும்கூட – நாம் “விசுவாச முள்ளவர்களாக” காணப்பட வேண்டும். சூழ்நிலைகளானது சபையின் காரியங்களிலுள்ள வேதவாக்கியங்களின்படியான ஏற்பாடுகளினின்று நம்மைத் திசைமாற்றிட, நாம் எப்போதேனும் அனுமதிப்போமாகில், அது நாம் தேவன் திட்டமிட்டுள்ளபடியான “விசுவாசத்தில்” இல்லையென்பதை வெளிப்படுத்து கின்றதாய் இருக்கின்றது. ஏனெனில் தேவனிடத்திலும் மற்றும் நன்மைக் கேதுவாய் மாற்றிப்போடும் அவருடைய ஞானம் மற்றும் வல்லமை மீதான நம்பிக்கையானது ஒருபோதும் சூழ்நிலையினிமித்தம், “நன்மை உண்டாகத் தக்கதாக நாம் தீமையைச் செய்வோமாக” – “கர்த்தருடைய நோக்கங்களின் விஷயங்களில் சிறந்த நன்மை உண்டாகத்தக்கதாக, வேதவாக்கியம் அங்கீகரியாதக் காரியங்களை நாம் செய்வோமாக” என்று சொல்லிடுவதற்கு அனுமதித்திடாது. பலியைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிதல் உத்தமம் என்றும், அவரை அன்புகூருகிறவர்களுக்கும், அவருக்கு ஊழியஞ் செய்கிறவர்களுக்கும், அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாய்ச் செய்ய வல்லவர் என்றும் விசுவாசமானது உத்தரவிடுகின்றதாய் இருக்கின்றது.

அன்பான சகோதர சகோதரிகளே, இதுவே நமக்கான சோதனை என்றும், இப்பொழுது நம்முடைய சோதனை காலமாய் இருக்கின்றது என்றும் நாம் நினைவில் கொள்வோமாக; மற்றும் கர்த்தருக்காகவும், அவரது சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் அவரது வார்த்தைகளுக்காகவுமான அன்பானது, நம்முடைய உதடுகளுக்கும், நம்முடைய நடத்தைக்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய இருதயங்களுக்கும் எப்போதும் கட்டளையிடுகின்றதாய் இருப்பதாக. “இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்” (2 பேதுரு 1:10,11). இவைகள் அனைவருக்கும் பொருந்துவது போல, சபையில் விசேஷமான உக்கிராணத்துவம் எனும் சிலாக்கியம் பெற்றுக்கொண்டவர்களாகிய – மூப்பர்களுக்கு – முழு உலகத்தின் மீதும் மற்றும் குறிப்பாய்த் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மீதும் காணப்படுகின்றதான இந்தச் சோதனையான வேளையில் – விசேஷித்த விதத்தில் உண்மையாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது (வெளிப்படுத்தல் 3:10).