R5161 (page 14)
என் அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-
நான் கடந்த இளவேனிற் காலத்தின்போதுதான் தற்கால சத்தியத்தினுடைய அறிவிற்குள்ளாக வந்திருந்தபடியால், என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை நான் நீண்ட காலமாகச் சத்தியத்திற்குப் பசியாய் இருந்தபடியால், ஜீவ அப்பம் இல்லாமல் நீண்ட காலம் பட்டினிகிடந்தவர்கள் மாத்திரம் அறிந்திருக்கும் வைராக்கியத்துடனும், பேரார்வத்துடனும் வேதாகமப்பாடங்களிலுள்ள அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன்.
நான் அர்ப்பணம் பண்ணினேன், வாக்குறுதியை எடுத்துக்கொண்டேன் மற்றும் இவை இரணண்டையும் ஞானஸ்நானத்தின் வாயிலாக அடையாளப்படுத்தினேன். நான் சத்தியத்திற்குள்ளாக வந்திருந்த காலக்கட்டத்தில், மக்கள் சமுதாய வாழ்க்கை / சோஷியாலஜி – குறித்து (பெண்கள் மாத்திரமேயுள்ள) ஒரு வகுப்பிற்கு உரையாற்றிக் கொண்டிருந்தேன்; இதற்கு முன்னதாக வரலாறு குறித்தும், வாழ்க்கைக் கோட்பாடு குறித்தும், மனிதநேய பாடங்கள் குறித்தும் விரிவுரை ஆற்றிவந்தேன். கடந்த 25 ஆண்டுகளாக மனித மேம்பாடு தொடர்புடைய பாடங்களில் பெண்களுக்கு விரிவுரை ஆற்றுவதில் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை நான் செலவழித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு காது அவ்வளவுக்குக் கேட்காததினாலும் மற்றும் விரிவுரையாற்றும் பாடங்களைத் தெளிவாய் முன்வைத்திடும் தாலந்தே நான் கொண்டிருக்கும் ஒரேயொரு தாலந்தாய்க் காணப்படுகின்றதினாலும், நான் ஆற்றிடும் பணியானது பிரயோஜனமானதாகவும், மேம்படுத்தும் விதமாகவும் இருக்கின்றதென எனது நண்பர்கள் நம்புகின்றனர். இப்பொழுதோ எங்கள் அருமை சகோதரி கால்கின்ஸ் அவர்களின் அறிவுரையின்படி, தீர்வுகாண வேண்டுமென்றுள்ள எனது பிரச்சனை ஒன்றிற்கு நான் தங்களது அறிவுரையைக் கேட்க விரும்புகின்றேன். நான் அர்ப்பணம்பண்ணின உடனே, என்னுடைய இருளான ஜீவியத்திற்குள்ளாகக் கடந்துவந்திட்டதான ஆச்சரியமான ஒளியைக்குறித்தும் மற்றும் “தேவனுடைய இராஜ்யமே தற்காலத்தின் பிரச்சனைகளுக்கான ஒரேயொரு தீர்வாய் இருக்கின்றது என்றும் என்னுடைய வகுப்பில் நான் சாட்சிபகர்ந்து, இனிமேல் அந்த இராஜ்யத்தைத் தவிர வேறெந்தப் பாடத்தைக்குறித்தும் என்னால் விரிவுரையாற்ற முடியாது எனவும் தெரிவித்தேன்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வண்ணமாக, “சத்தியத்தில் காணப்படும் சகோதரிகளில் சிலரை, என்னுடைய இல்லத்தில் வேதப்பாட வகுப்பிற்கு வரும்படியாக அழைத்தேன் மற்றும் படிப்படியாக நம்முடைய பாடத்தில் விருப்பத்தினைக் கொண்டிருக்கும், வெளியில் காணப்படும் அப்பெண்களை வரவேற்கலாம் என்று நான் எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் சபையில் ஸ்திரீகளின் செயல் எல்லைத் தொடர்பான வேதவாக்கியங்களின் போதனைகளைக் கற்றுக்கொண்டபோது, என்னுடைய எதிர்க்கால வேலை தொடர்புடைய விஷயத்தில் தங்கள் ஆலோசனையைப் பெறவேண்டுமென நான் எண்ணினேன்.
[R5162 : page 15]
அனைத்தையும் அர்ப்பணம்பண்ணிட நான் முழுவதுமாய் விரும்புகின்றபடியால் மற்றும் இதில் எனக்கிருக்கும் ஒரே தாலந்தும் உள்ளடங்குகின்றது என்றே நான் எண்ணியுள்ளேன் – ஆனால் என்னால் அமைதியாயிருக்க முடிகிறதில்லை – நான் சந்திக்கும் அனைவரிடமும், நான் பேசினேன்; கிட்டத்தட்ட 20 பெண்களின் கரங்களில் “தெய்வீகத் திட்டத்தினை நான் கொடுத்தேன்; முன்பு அடர்த்தியான இருளில் காணப்பட அநேக ஜனங்கள், வெளிச்சத்தைக் காணவருகின்றனர்.
ஆனால் கடந்த குளிர்க்காலத்திலும், அதற்கு முன்புள்ள குளிர்க் காலத்திலுமுள்ள எனது வகுப்பிலுள்ள பெண்கள், அவர்களுக்கு நான் மறுபடியுமாக விரிவுரையாற்றும்படிக்குக் கெஞ்சிக் கேட்கின்றனர். நான் எனது சொந்த பாடத்தைத் தெரிந்தெடுத்துக்கொள்ளலாம் மற்றும் நான் “வேதாகமத்தின்மீது சில விளக்கவுரை கொடுக்க விரும்புகின்றேன். இங்குள்ள ஓர் அருமையான சகோதரன் மற்றும் சகோதரியிடம் நான் ஆலோசனை கேட்டேன் மற்றும் விளக்கவுரை கொடுக்கும்படிக்கு அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள் – இது அருமையான ஒரு வாய்ப்பு என்று அவர்கள் எண்ணுகின்றனர். இறுதியில் உங்களிடம் கேள்வியினை முன்வைத்திடலாமென நாங்கள் முடிவுசெய்தோம்.
சூழ்நிலையை முழு விவரங்களுடன் விளக்குவது சிரமமான காரியமாகும். ஆனால் முக்கிய காரியங்களை நான் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன் என்று நான் எண்ணுகின்றேன். நான் பேசுவதற்குச் செவிக்கொடுப்பவர்கள், அவர்களாகவே வேதாகமப் பாடங்களை வாசிக்கப்பண்ணப் பிரயாசம் எடுப்பதே எனது முழு நோக்கமாகும்.
அருமையான சகோதரனே, நீங்கள் முழு நேரமும் வேலையில் காணப்படுகின்ற சகோதரன் என்று நான் அறிவேன் மற்றும் உங்களது விலையேறப்பெற்ற நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; ஆனால் இக்காலத்தில், என்னால் செய்ய முடிகின்ற எந்த வேலையையும் செய்திடுவதற்கு நான் ஆவலாய் இருக்கின்றேன்; ஏனெனில் “ஒருவரும் கிரியைச் செய்ய முடியாத இராக்காலம் வருகின்றது. அதேவேளையில் நான் ஒழுங்கற்று நடக்கிறவளாய் அல்லது சபை மீது நிந்தையைக் கொண்டுவருபவளாய் இருக்க விரும்பவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தயவாய்ச் சொல்லிடுவீர்களா?
நீங்கள் விரும்பினால் என்னுடைய பாடங்களினுடைய பட்டியலையும், அவைகள் ஒவ்வொன்றின் பொருள் சுருக்கத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
இந்த விஷயத்திலும் மற்றும் எல்லா விஷயத்திலும் சத்தியத்தின் ஆவியினால் நான் நடத்தப்படுவதற்கு மாத்திரம் ஜெபம் ஏறெடுக்கின்றேன்.
கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதரி,
Chariotte C. Heineman.
பதில்
கிறிஸ்துவுக்குள்ளான அருமை சகோதரியே:-
உங்கள் கடிதத்தை நாங்கள் பெற்றுக்கொண்டு, முழுவதையும் வாசித்தோம். சத்திய அறிவைப் பெற்றுக்கொள்வதற்குக் கர்த்தர் உங்களைப் பாத்திரமாகக் கருதியுள்ள காரியத்திற்காக உங்களோடுகூட நாங்களும் சந்தோஷப்படுகின்றோம். அவரது வழிகாட்டுதலும், ஆசீர்வாதமும் எப்போதும் உங்களோடு காணப்பட்டு, உங்களுக்கு வரும் ஒவ்வொரு அனுபவங்களினாலும் நீங்கள் பிரயோஜன மடைவீர்களாக.
நீங்கள் பெற்றிருக்கும் தாலந்தை நீங்கள் பயன்படுத்தினால் கர்த்தர் பிரியப்படுவார் என்பது என்னுடைய எண்ணமாகக் காணப்படுகின்றது. நீங்கள் வேலை புரிவதற்கான ஒரு பகுதியினை அவர் உங்களுக்குத் தெளிவாய்க் கொடுத்திருக்கின்றார் மற்றும் அது விஷயத்தில் உங்களுக்கு அவரிடத்தில் பொறுப்புகள் காணப்படுகின்றது. ஆகையால் சத்தியத்தினை நீங்கள் முழுமையாய் அறிந்துகொண்ட பிற்பாடு, பெண்களுக்கான உங்களது விரிவுரையாற்றுதல்களை நீங்கள் மறுபடியுமாகத் துவங்கி, சத்தியத்தைத் தவிர வேறெதையும் விவாதிக்காமல், வேதாகமப் பாடங்கள் தொகுதியினுடைய போதனைகளுக்கு இசைவாய்ச் செயல்படும்படிக்கு நான் பரிந்துரைக்கின்றேன். ஸ்திரீகள் போதித்தல் தொடர்பாக பரிசுத்த பவுலடிகளார் வைக்கும் கட்டுப்பாடானது, சபைகூட்டங்கள் சம்பந்தப்பட்ட தாகும்; இக்கூட்டங்களானது பொதுவாகப் புருஷர்களையும், ஸ்திரீகளையும் உள்ளடக்கும் கூட்டங்களாகும், நீங்கள் பெற்றிருக்கும் கூட்டங்களானது, சபை கூட்டங்களாக இருப்பதில்லை மற்றும் என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி உங்கள் சந்தர்ப்பமானது எந்த விதத்திலும் பரிசுத்த பவுலடிகளால் குறிப்பிட்ப்பட்டுள்ளதான தடையின் கீழ் வருகிறதில்லை. இன்னுமாக ஒருவேளை ஏதேனும் சில புருஷர்கள் ஸ்திரீகளோடு வந்து, உங்களது விரிவுரையாற்றுதல்களில் பங்கெடுத்தாலும், இதுவும் உங்களை எந்தக் குற்றச்சாட்டிற்கும் கீழாய்க் கொண்டுவருகிறதில்லை.
நீங்கள் உங்களது விரிவுரையாற்றுதல்களைத் திரும்பவும் தொடர்வது மாத்திரமல்லாமல், ஒருவேளை உங்களது பொருளாதாரம் அனுமதிக்கும் பட்சத்தில், நீங்கள் முன்பு ஊழியம் புரிந்திட்டதான மற்றப் பட்டணங்களிலுள்ள ஸ்திரீகளை மறுபடியுமாகச் சந்திக்கவும், பேசிடுவதற்காகவுமுள்ள வழி ஒருவேளை திறக்கும்பட்சத்தில், நீங்கள் உங்கள் வேலையை இதற்கேற்ப விரிவாக்கும்படிக்கும் நான் பரிந்துரைக்கின்றேன்.
கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்திடுவதற்கான உங்களுடைய பிரயாசங்களில் கர்த்தருடைய வழிகாட்டுதலும், ஞானமும், ஐசுவரியமான ஆசீர்வாதமும் காணப்படும்படிக்கு உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
கர்த்தருக்குள்ளான உங்களது சகோதரன் மற்றும் ஊழியக்காரன்.