R1902 (page 279)
நியூயார்க்
அன்புக்குரிய சகோதரர் மற்றும் சகோதரி ரசல் அவர்களே:-
எங்களது “வேத ஆராய்ச்சிக்கான டாண் குழு” பற்றிய ஒரு சிறு தகவலை உங்களுக்கு எழுதுகின்றேன். ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கூட்டம் ஒன்றிற்காக நாங்கள் ஏங்கித் தவித்துக் காணப்பட்டோம் மற்றும் இத்தகைய ஒரு கூட்டத்தினைப் பொறுப்பேற்று நடத்தத்தக்கதாக எங்கள் மத்தியில் ஒரு சகோதரன் சத்தியத்தின் ஆவியினால் தொடப்படுவதற்காக நாங்கள் ஜெபம் ஏறெடுத்து வந்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் வேண்டுகோளானது அருளப்படுவதாக இருந்தது; ஆனால் ஆர்வமிக்கவர்கள் என்று நாங்கள் கருதிட்டதான நல்ல மனுஷர்கள் அனைவரின் மத்தியிலும் நாங்கள், விருப்பமின்மையை அல்லது பயத்தைக் கண்டபோது எங்கள் விண்ணப்பத்திற்குக் கிடைத்த பதிலில் எல்லா நம்பிக்கையும் எங்களுக்கு போய்விட்டது. ஆகையால் கூட்டமானது கைவிடப்பட வேண்டும் அல்லது நான் சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது மற்றும் நான் கர்த்தருடைய பெலத்தினால் அதைச் செய்யவும் செய்தேன் மற்றும் யுகங்களுக்கடுத்த திட்டத்தின் மீதான வரைபடம் விளக்கங்களுடன் கூடிய தொடர் வேதாகம ஆராய்ச்சிகளைக்குறித்து அறிவித்திட்டேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குக் காணப்பட்ட பத்துப் பேருடன் நாங்கள் அதைத் துவங்கினோம்; வெற்றிடங்கள் யாவையும் நிரப்பக் கர்த்தர் அங்குக் காணப்பட்டார் மற்றும் நாங்கள் ஆசீர்வாதமாய் அந்த நேரத்தைச் செலவிட்டோம். அனைவரும் தங்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், நன்கு வெளிச்சமூட்டப்பட்டதாகவும், தவறாமல் கலந்துகொள்வதாகவும், மற்றவர்களையும் அழைத்து வருவதாகவும் தெரிவித்தனர். எல்லாமே கர்த்தரால் நடைபெற்றது.
துவங்கும்போது, வேத ஆராய்ச்சி தொடர்பான எனது கடந்தகால மற்றும் தற்கால அனுபவத்தினைப் பகிர்ந்துகொள்ள ஏவப்பட்டேன் மற்றும் அருமையான நண்பர்கள் அதினால் மிகவும் தொடப்பட்டதாகத் தெரிகின்றது.
கூட்டம் நடத்தப்படுகிற இடத்தில் துண்டுபிரதிகள் மற்றும் புத்தகங்கள் மற்றும் டவர் வெளியீடுகள் காணப்படும் மேஜை ஒன்றினை நாங்கள் பெற்றிருக்கின்றோம்; இவைகளை எடுத்துக் கொள்ளுமாறு நாம் கலந்து கொள்பவர்களுக்கு வலியுறுத்தினோம் மற்றும் கடந்த வாரத்தில் அவர்கள் மிகவும் சகஜமாய் நடந்துகொண்டார்கள்; ஆகையால் சத்தியத்தைப் பரப்பிடும் இவ்வழிமுறையின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நீங்கள் இப்பொழுது எங்களை உண்மையிலேயே ஒரு சிறு சபையாகக் கருதிக்கொண்டு, எங்களுக்காகத் தினந்தோறும் ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாகத்தக்கதாக அவர் பயன்படுத்த வேண்டிய பாவப்பட்ட மனித பாத்திரத்தை விசேஷமாய் ஜெபத்தில் நினைவுகூருங்கள். இப்படிக்கு அவரது ஊழியத்தில் உங்கள் சகோதரி,
F. G. BURROUGHS.
[பதில்:- உங்களது “தேவ ஆராய்ச்சிக்கான டாண் முழு பற்றின தகவலை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அங்கு நிலவிய சூழ்நிலைகளில், நீங்கள் முயற்சி எடுத்துத் துவங்க முற்பட்டது சரியே மற்றும் பொது ஊழியங்களில் பொதுவாய்ச் சகோதரரைத் தெரிந்துகொள்ளும் கர்த்தருடைய சித்தத்திற்குச் சகல மரியாதையுடன், சாந்தமான ஆவியிலேயே இவற்றை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று நாங்கள் உணர்ந்துகொள்கின்றோம். ஆனால் ஒரு கூட்டத்தில் வழிநடத்துவதற்குப் போதுமான திறமையுடன் சகோதரர் இல்லை என்பதற்காக, அதுவும் தேவையானத் தகுதிகளையுடைய சகோதரி அர்ப்பணிக்கப்பட்டத் தாலந்துகளுடன், சாந்தத்துடன் மந்தைக்கு உண்மையாய் ஊழியம் புரியத்தக்கதாக ஆயத்தமாய் இருக்கையில், திறமையுள்ள சகோதரன் இல்லை என்பதற்காக மந்தையினுடைய நலனுக்கடுத்த காரியங்கள் கவனிக்கப்படாமல் விடப்படக்கூடாது. இஸ்ரயேலில் தேவன் ஒரு காலத்தில் ஒரு பெண் நியாயாதிபதியை எழுப்பினார் என்பது ஞாபகத்திற்கு வருகின்றது; ஒருவேளை பரவலாய்க் கல்வியறிவும், அறிவும் காணப்படுகின்றதான இந்த நாட்களில், மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் முதன்மையான நிலையில், தமது மந்தைக்கு ஊழியம் புரியத்தக்கதாக அவர் குறிப்பிடத்தக்க சாந்தமும், உண்மையும், தெளிவும், திறமையுமுடைய ஏதோ சில சகோதரிகளை முன்னுக்குக் கொண்டு வருவாரானால், கர்த்தருடைய சித்தத்திற்கான இந்த அடையாளங்களை நாம் அசட்டைப்பண்ணாமல் இருப்போமாக. சத்திய அறிவில் நூதன சீஷனாகவோ அல்லது கிறிஸ்தவ அனுபவத்தில் வெறும் குழந்தையாகவோ காணப்படும் ஒரு சகோதரன், அவர் சகோதரனாய் இருக்கின்றார் என்பதற்காக, வழிநடத்தும் காரியத்தைப் பொறுப்பேற்க கேட்டுக்கொள்ளப்படக்கூடாது. ஒரு சகோதரிக்கு அதிகமான தாலந்துகள் இருக்குமானால், அவர்களைப் பயன்படுத்துங்கள். வரைப்பட விளக்கத்துடன் வகுப்பினைத் துவங்கினதில், நீங்கள் சரியாகவே செயல்பட்டிருக்கின்றீர்கள்.]