நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5474 (page 168)

நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்

WELL-MEANING, BUT HINDERERS

கர்த்தருடைய ஜனங்கள் அனைவருமே நல்நோக்கமுடையவர்களாகவே காணப்படுவார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. நல்நோக்கங்கள் இல்லாமல், வேறானவைகளைப் பெற்றிருந்து, அவர்களால் கர்த்தருடைய அங்கீகரிப்பை எப்படிப் பெற்றிட
முடியும்? சுயநலமானது உள்ளே நுழைந்து, புதுச்சிருஷ்டியினால் கண்டுபிடிக்க முடியாத சில அளவுகளில், செயல்பாட்டில் காணப்படலாம்; ஆனால் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது கட்டுப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட

வேண்டும். கர்த்தருடைய பின்னடியார்களுடைய முழு ஜீவியமே – மனம் மற்றும் சரீரத்தினுடைய தனிப்பட்ட அபூரணங்கள் தொடர்பான மற்றும் மற்றவர்களுடைய வார்த்தைகள், நடத்தைக்குறித்துச் சரியாய்ப் புரிந்துகொள்ளுதல் தொடர்பான
அனுபவமுடைய ஒன்றாயிருக்கின்றது.

பொதுவில் பேசுதல், அறிமுகம்பண்ணுதல், அடக்க ஆராதனைகள் முதலானவைகளில் ஈடுபடும் சகோதரரின் கவனத்திற்கு நாம் இரண்டு காரியங்களைக் கொண்டுவர விரும்புகின்றோம். எங்களுடைய யோசனைகளும், விமர்சனங்களும்,
அச்சகோதரர்களுக்கும், நாம் அனைவரும் ஊழியம் புரிந்திட விரும்பும் அந்தக் காரணங்களுக்கும் உதவியாக இருக்கும்படிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

(1) அடக்க ஆராதனைகள் நடந்திடும்போது, சகோதரரில் சிலர் மரணம் மற்றும் நமது இனத்தின் மீதான பாவத்தின் சம்பளம் குறித்தும், தண்டனையிலிருந்து விடுவிக்கும் மீட்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்துமான நற்செய்தியினைச் சொல்லிட
வேண்டும் என்ற ஆர்வத்தில், எல்லை மீறிப்போய்விடும் அபாயங்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலசமயங்களில் இவர்கள் நீண்ட நேரமாய்ப் பிரசங்கம்பண்ணி – அத்தகைய தருணத்திற்குத் தகுதியாய்
இருப்பவற்றைக் காட்டிலும் அதிகம் பேசிடுவதற்கு முற்படுகின்றனர். இன்னும் சிலசமயங்களில் மரணம் தொடர்பான சுவிசேஷத்தின் செய்தியையும், வேதாகம விளக்கங்களையும் முன்வைத்திட வேண்டும் என்ற மிகுந்த நோக்கத்தில், துன்பத்தில்
காணப்படும் இறந்திருப்பவரினுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளையோ அல்லது இறந்திருப்பவர் குறித்தும், அவரது குணலட்சணம் குறித்தும், தேவனுக்கான அவரது வைராக்கியம் குறித்தும், வேதாகமத்தின்
மீதான அவரது ஈடுபாடு அல்லது இழப்பில் காணப்படும் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தும் உண்மையுள்ள புகழுரை எதையேனும் குறித்தும் குறிப்பிடுவதற்கு மறந்து போய்விடுகின்றனர்.

முழுக்கப் புகழுரையினாலும் மற்றும் மரணம் குறித்த வேதாகமத்தின் போதனைகளுக்குக் கவனம் கொடுக்காமலும் காணப்படும் சாதாரணமான அடக்க ஆராதனை பிரசங்கங்கள் சரியானவை என்று எந்த விதத்திலும் தெரிவித்திடுவதற்கு நாம்
விரும்பவில்லை. தெய்வீகத் [R5475 : page 169] திட்டம் குறித்த சில விளக்கங்கள் கொடுப்பதும், இறந்திருப்பவர் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து சில விஷயங்கள் குறிப்பிடுவதுமாகிய தன்னடக்கமான வழிமுறையானது ஞானமாய்
இருக்குமென நாம் யோசனையாக மாத்திரம் தெரிவிக்கின்றோம்.

(2) பொது ஊழியங்களுக்கான பேச்சாளரை அறிமுகப்படுத்திடும் சகோதரனைத் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் கொடுக்கப்பட வேண்டும். தவறான விதத்தில் அறிமுகம் கொடுத்திடுவதற்குப் பதிலாக, அறிமுகப்படுத்தி
வைக்காமல் இருப்பதே சிறந்ததாயிருக்கும். பொது ஊழியங்களுக்கான பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் தருணத்தை, ஒருவர் தன்னை மிகைப்படுத்தி, தனது பேச்சுத்திறமையை, வேதாகமம் குறித்த தனது அறிவை வெளிக்காட்டிக்கொள்வதற்குப்

பொருத்தமான தருணமெனக் கருதுவாரானால், அவருக்குப் பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் வேலைகள் கொடுக்கப்படக்கூடாது. தெய்வீகத் திட்டம் குறித்து, தான் அறிந்திருக்கும் அனைத்தையும் சொல்லிடுவதற்கும், கூட்டத்தாருக்குப் பேச்சாளர்
என்ன சொல்லவிருக்கின்றார் என்பதை முன்கூட்டியே கூட்டத்தாருக்குத் தெரிவித்திடுவதற்குமான வாய்ப்பாக, பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் தருணத்தினைக் கருதிடும் நபர் பொருத்தமற்ற நபராய் இருப்பார்; அதாவது எப்படித் துவக்க

ஜெபம்பண்ணிடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவர், ஜெபத்தைச் செய்தியாக நீட்டிச் சென்று, விலையேறப்பெற்ற நேரத்தை வீணடித்து, தனது தகுதியின்மையினால் அனைவருக்கும் வெறுப்பூட்டிப் பொருத்தமற்ற நபராய்
இருப்பாரோ, அப்படியே ஆகும். பேச்சாளர் ஒருவரால் இரண்டு மணி நேரங்களில் ஏற்படுத்திடும் பாதகத்தைக் காட்டிலும், பேச்சாளரை அறிமுகப்படுத்துபவரால் இரண்டு நிமிடங்களில் அதிகமான பாதகத்தினை ஏற்படுத்திட முடியும்.

தாழ்மையும், தன்னடக்கமும் மற்றும் சுருக்கமாய்ப் பேசுதல் என்பவைகள் எவ்விடத்தில் காணப்பட்டாலும் அவை பிரம்மாண்டமான பண்புகளாக இருக்கின்றன, ஆனால் புதிய வகுப்புகளை உருவாக்கும் கூட்டங்களிலும், பயண ஊழியர்களின்
வருகையின் போதான கூட்டங்களிலும் அல்லது வேறு ஏதாவது கூட்டங்களிலும் பேச்சாளரை அறிமுகம் செய்திடுபவருக்கு இவை விசேஷமாய்த் தகுதியான பண்புகளாய் இருக்கும்.

இம்மாதிரியான தருணங்களில், ஜெபம் ஏறெடுக்கின்றவர், ஜெபத்தினை வேண்டுதலாக மாத்திரம் ஏறெடுத்திட வேண்டும். அவர் ஜெபம்பண்ணுவதைக் கேட்பதற்காகக் கூடியிருப்பவர்கள் கூடிவரவில்லை, மாறாக பிரசங்கத்தைக் கேட்கவே
வந்திருக்கின்றனர். அவரது ஜெபத்தில் அவ்வேளைக்கான சிலாக்கியத்திற்காகவும், நம்முடைய நாட்களில் அருளப்பட்டிருக்கின்றதான சுயாதீனத்திற்காகவும், சத்தியத்தை அறிந்துகொள்வதற்குரிய இருதய வாஞ்சைக்காகவும், திறக்கப்பட்ட
வேதாகமத்திற்காகவும் தேவனுக்கு நன்றி ஏறெடுத்திட வேண்டும். கூட்டத்திலும், கூட்டத்தார் மீதும், பேச்சாளர் மீதும் தெய்வீக ஆசீர்வாதங்கள் கடந்துவருவதற்கும் மற்றும் கர்த்தருடைய நாமமானது மகிமைப்படுவதற்கும், சத்தியமானது
மேலானதாகக் காணப்படுவதற்கும், நீதியினை விரும்புபவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் என்று விண்ணப்பங்கள் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கப்பட வேண்டும்.

அறிமுகம் செய்தல் சுருக்கமாய் இருத்தல் வேண்டும். கூட்டத்தாருக்கும், கூட்டத்தாரில் போதகர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணுகிற சிறுகூட்டத்தாருக்கும் இடையில் வேறுபடுத்திக் காண்பிக்கும் விதமாக, “நாங்கள் நம்புவற்றைப்
பேச்சாளர் உங்களுக்குச் சொல்லிவிடுவார்” என்று சொல்லிடக்கூடாது. மிகுந்த தாழ்மையுடன், “மதிய வேளைக்கான பேச்சாளரை அறிமுகப்படுத்திடுவது எனக்கான சிலாக்கியமாகவும், கனமாகவும் காணப்படுகின்றது. அவர் International

Bible Students Association சார்பாக நமக்கு வந்துள்ளார் மற்றும் வேதவார்த்தையிலிருந்து செய்தி ஒன்றினைக் கொண்டுவந்திருக்கின்றார் என்று நாம் நம்புகின்றோம். அது திருப்திகரமாகவும், உற்சாகமூட்டுகிறதாகவும், உதவிகரமாகவும்
காணப்படும் என்று நாம் நம்புகின்றோம். நாம் சத்தியத்தினால் பரிசுத்தமாக்கப்படுவோம் என்றும், அவரது வசனமே சத்தியம் என்றுமுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவில்கொண்டு, செய்தியை யதார்த்தமாய்க் கேட்போமாக.
நம்முடைய இருதயங்களுடைய செவிகளினால் கர்த்தருடைய வார்த்தையானது கேட்கப்படும் அளவுக்குத்தக்கதாக நாம் களிகூருவோமாக. இப்பொழுது சகோ _______________ அவர்களை இதோ உங்களுக்கு அறிமுகம் பண்ணிடுகின்றேன்;
இத்தருணத்திற்கான அவரது தலைப்பு __________________ ஆகும் என்பது போன்று காணப்பட வேண்டும்.