R5939 (page 246)
கிறிஸ்தவ ஊழியங்களுக்குப் பொருந்துகின்றதான Ordination / ஏற்படுத்துதல் எனும் வார்த்தையானது, பெரும்பான்மையான ஜனங்களினால் – ஊழியக்காரர்களினால்கூட மிகவும் அரைக்குறையாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. தங்கள் ஊழியக்காரர்களை நியமிக்கையில் கிறிஸ்தவ ஜனங்கள் சிலரால் கடைப்பிடிக்கப்படுகின்றதான சடங்குமுறையாகிய, கைகளை [R5940 : page 246] வைத்தல் முதலானவைகள் ஏற்படுத்துதலாய் இராமல், ஏற்படுத்துதல் தொடர்புடைய ஒரு சடங்காய் மாத்திரமே உள்ளது. Ordination /ஏற்படுத்துதல் என்ற வார்த்தையானது, ஏதோ ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது ஊழியத்திற்காகத் தெரிந்துகொள்ளப்படுவதை, அங்கீகரிக்கப்படுவதை அல்லது நியமிக்கப் படுவதையே குறிக்கின்றதாய் இருக்கின்றது.
அப்போஸ்தலர்கள் “அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தினதாக நாம் வாசிக்கையில், வேதாகமத்தினால் கொடுக்கப்படும் கருத்தே, ஏற்படுத்துதல் சம்பந்தப்பட்ட சரியான கருத்தாகும் (அப்போஸ்தலர் 14:23). இதுபோலவே இன்றும் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில், சபையாருடைய (Vote) வாக்கினால் – சபையார் தங்கள் கைகளை நீட்டுவதன் மூலம், மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அல்லது நியமிக்கப்படுகின்றனர் அல்லது அங்கீகாரமளிக்கப்படுகின்றனர். (கைகளை வைப்பதன் மூலமாக இல்லாமல், மாறாக) “கைகளை நீட்டுதல் எனும் வாக்கினால் வேத வாக்கியங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மூப்பனும் மற்றும் ஒவ்வொரு உதவிக்காரரும், இவ்விதமாய் அந்தந்த ஊழியம் புரிவதற்கென ஏற்படுத்தப்படுகின்றனர் அல்லது நியமிக்கப்படுகின்றனர் அல்லது அங்கீகாரமளிக்கப்படுகின்றனர்.
இப்படியாக மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் ஏற்படுத்திடும் விஷயத்தில், கர்த்தருடைய ஜனங்கள், கர்த்தருடைய மனதை அறிந்துகொள்வதற்கு நாடும்படிக்கு அறிவுறுத்தப்படுகின்றனர். அவர்கள் சகோதரரில் ஒருவரை உதவிக்காரனாகவோ அல்லது மூப்பனாகவோ Vote / வாக்களித்து, தேர்ந்தெடுக்கும் காரியமானது, அந்நபர் தேவனால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளதான அவ்வூழியத்திற்குரிய தகுதிகளை உடையவராய் இருக்கின்றார் என்று அவர்கள் நம்புவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஏசாயா 61:1-ஆம் வசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரகாரம், பிரசங்கிப்பதற்கான அல்லது போதிப்பதற்கான திவ்விய அங்கீரமான பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலை அடைந்துள்ளதற்கான சாட்சியங்களைக் கொணராத எவருக்கும் வாக்களிக்கப்படக் கூடாது.
இந்த ஒரு பொதுவான விதத்தில் – கர்த்தருடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட ஜனங்கள் யாவரும், ஆண்டவருடைய நாமத்தில், அருமையான ஜீவ வார்த்தைகளை, தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு ஏற்ப பேசிடுவதற்கு “ஏற்படுத்தப்பட்டுள்ளனர் . ஆனால் இவ்விதமாய் ஏற்படுத்தப்பட்ட, ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள தேவனுடைய பிள்ளைகள் அடங்கின சபையார், தங்கள் மத்தியிலிருந்து சிலரை மூப்பர்களாகவும், சிலரை உதவிக்காரர்களாகவும் தேர்ந்தெடுக்கும்போது, இது இவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் விசேஷித்த தகுதியுடையவர்களாகவும், “போதக சமர்த்தனாகவும் – வார்த்தையிலும், நடத்தையிலும் சகோதரருக்கு மாதிரியாக இருப்பதாகவும் கருதுவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது (1 தீமோத்தேயு 3:2).
ஏற்படுத்துதல் தொடர்புடைய விஷயத்தில், திவ்விய அபிஷேகித்தலைப் (ஏசாயா 61:1) பொருட்படுத்தாமல், தேர்ந்தெடுக்கப்படுகிறவரின் கல்வியறிவையும், தாலந்துகளையும் மாத்திரமே கண்நோக்குதல் என்பது, ஏற்படுத்துதல் பற்றின தவறான கருத்தாகும். இப்படியாய்த் திவ்விய பரீட்சையினைப் பொருட்படுத்தாமல், இன்று கிறிஸ்துவினுடைய சபையில் – ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதாகத் தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணிக் கொள்ளாதவர்களும், இதற்கு எந்த வெளியரங்கமான சாட்சியினைப் பகராதவர்களுமான அநேகர் ஊழியக்காரர்களாகவும், மூப்பர்களாகவும் ஊழியம் புரிந்துகொண்டு வருகின்றனர். இத்தகையவர்கள் முறையாய் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய ஊழியக்காரர்கள் அல்ல மற்றும் இவர்களின் சபை ஏற்படுத்துதலானது, திவ்விய ஆசீர்வாதத்தினையோ அல்லது அதிகாரத்தினையோ இவர்களுக்கு அருளுகிறதில்லை.
ஏற்படுத்துதல் குறித்த மிகவும் தவறான கருத்தானது, மூன்று பழமை மிக்க கிறிஸ்தவ சபை பிரிவுகளால் முன்வைக்கப்படும் கருத்தாய் இருக்கின்றது; அச்சபைகள் – ரோம கத்தோலிக்க திருச்சபை, இங்கிலாந்தின் எபிஸ்கோப்பல் திருச்சபை மற்றும் கிரேக்க கத்தோலிக்க திருச்சபையாகும். இந்தப் பழமை வாய்ந்த சபைகளைப் பொறுத்தமட்டில், ஏற்படுத்துதல் என்பது முற்றிலும் வேறுபட்ட பொருளை உடையதாய் இருக்கின்றது. இவர்கள் தங்களுக்கு அப்போஸ்தல வாரிசு உரிமையின்படியான அதிகாரம் இருப்பதாக உரிமைப்பாராட்டுகின்றனர் – அதாவது ஆரம்பத்தில் அப்போஸ்தலர்களே போதிப்பதற்கான அல்லது பிரசங்கிப்பதற்கான உரிமையினைக் கொண்டிருந்தனர் என்றும், மற்றப் போதகர்கள் அல்லது பிரசங்கிப்பவர்கள், அப்போஸ்தலர்களுடைய கரங்களிலிருந்து அங்கீகாரத்தையும், திவ்விய அதிகாரத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் இவர்கள் கூறுகின்றனர். அப்போஸ்தலர்கள் மரிப்பதற்கு முன்பு, சபையில் ஒரு விசேஷித்த கண்காணிகள் வகுப்பார் ஏற்படுத்தப்பட்டிருந்தனர் என்றும், அப்போஸ்தல வல்லமையும், அதிகாரமும் அந்தக் கண்காணிகளுக்குக் கடந்து வந்தது என்றும் மற்றும் இவ்விதமாய் நம்முடைய நாட்கள் பரியந்தமும் கடந்துவந்து, இந்தச் சபை பிரிவுகளிலுள்ள கண்காணிகளிடத்தில் இருக்கின்றது என்றும் இவர்களால் வலியுறுத்தப்படுகின்றது. தங்களால் ஏற்படுத்தப்படுபவர்களே, கிறிஸ்தவ ஊழியக்காரர்களாய் இருப்பார்கள் என்றும் இவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்த மூன்று பழமைமிக்க திருச்சபைகளானது, திவ்விய ஏற்படுத்துதலை, பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகித்தலை முற்றிலுமாய்ப் புறந்தள்ளி, இதற்குப் பதிலாக அப்போஸ்தல “வாரிசுரிமையின்படியான வல்லமை மற்றும் அதிகாரம் என்று அழைக்கப்பட்டு வருகின்றதான ஓர் அங்கீகாரத்தினைக் கொண்டுவந்துவிட்டனர். பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மாத்திரமே உண்டு என்று மாத்திரம் இயேசு நம்மோடு கூறாமல், வெளிப்படுத்தல் 2:2-ஆம் வசனத்தில், அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று பொய்யாய் உரிமைப்பாராட்டிடும் இந்தக் கொடிதான தவற்றினைச் சுட்டிக்காட்டவும் செய்கின்றார்.
கிறிஸ்தவ ஊழியக்காரர்களை ஏற்படுத்துதல் என்பதன் உண்மையான பொருள் என்னவென்று விளக்கும் மேற்கூறப்பட்டுள்ளதான சுருக்கமான விளக்கமானது, முழுமையாய்ப் புரிந்துகொள்ளப்படுவது வரையிலும், திரும்பத்திரும்ப வாசிக்கப்பட வேண்டும். பின்னர்க்கீழே இடம்பெறும் கேள்விகளும், பதில்களும் எளிமையாகப் புரிந்துகொள்ளப்படலாம்:
(1)தேவனுடைய ஜனங்கள் அடங்கின சபையாரால் தேர்ந்தெடுக்கப்படும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் யாவரும் திவ்விய ஏற்படுத்துதலின் படியானவர்கள் என்று கருதப்பட வேண்டுமா?
இல்லை, பரிசுத்த ஆவியினாலான ஜெநிப்பித்தலை அடையாத எவரும் தெய்வீக ஏற்படுத்துதலின் படியானவர்கள் என்று கருதப்பட முடியாது. தேவனுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளதாகவும், பரிசுத்த ஆவியினாலான ஜெநிப்பித்தலை அடைந்ததாகவும் தன்னைக்குறித்து அறிக்கைப்பண்ணிடாத ஒருவரைச் சபையார் ஊழியராக ஏற்படுத்திக்கொள்வது என்பது, சபையார் செய்திடுவதற்குக் கர்த்தரால் அங்கீகாரம் அளிக்கப்படாத காரியத்தினை, அவர்கள் செய்வதைக் குறிக்கின்றதாய் இருக்கும். இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அந்நபர், இப்படியாய் இவரை ஊழியராக ஏற்படுத்தின சபையாரின் பிரதிநிதியாகத்தான் இருப்பாரேயொழிய, கர்த்தருடைய பிரதிநிதியாக இருப்பதில்லை.
ஆனால் ஒரு சகோதரன் குறித்த கர்த்தருடைய அங்கீகாரத்தினை ஒரு சபையார் அடையாளம் கண்டுகொள்வார்களானால் மற்றும் இன்னுமாக அச்சகோதரன் போதக சமர்த்தனாய் இருப்பதையும், தெய்வீக வார்த்தைகளுக்கு ஏற்ப ஊழியத்திற்குப் பொருத்தமான பண்புகளை உடையவராய் இருப்பதையும் அடையாளம் கண்டுகொள்வார்களானால், கர்த்தருடைய நாமத்தில் சபையாரின் பிரதிநிதியாகிடுவதற்கு அச்சகோதரனை முறையாய்த் தேர்ந்தெடுத்திட அல்லது ஏற்படுத்திட வேண்டும். கர்த்தருடைய ஜனங்களின் வேண்டுகோளில்லாமல், எந்த ஒரு சகோதரனும், கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒரு கூட்டத்தாருக்கு ஊழியம் புரிந்திட முற்படக்கூடாது; சபையாருடைய வேண்டுகோள் அல்லது அவர்களது Vote /வாக்குகளானது – அந்த ஊழியத்திற்குச் சகோதரனை நியமிக்கின்றதாய் இருக்கின்றது, அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் சகோதரனை அவர்கள் ஊழியத்திற்காக ஒரு நாளோ அல்லது ஒரு வருஷக்காலமோ நியமிக்கின்றதாய் அல்லது ஏற்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
(2) இவ்விதமாய் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் யாவரும் ஏற்படுத்தப்படுவது முறையானது என்றும் மற்றும் ஏற்படுத்தப்படாமல் எவரும் தொடர்ச்சியாய் ஊழியம் புரிந்திட முற்படக்கூடாது என்போமானால், பரிசுத்த பவுல் அடிகளார் “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலேயே அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நான் என்று என்ன அர்த்தத்தில் கூறினார்? (கலாத்தியர் 1:1)
ஓர் அப்போஸ்தலனைத் தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது நியமிப்பதற்கோ எந்த ஒரு மனுஷனோ அல்லது சபையாரோ பொருத்தமானவர்களல்ல. எந்தச் சபையாருடைய வாக்குகளும், சகோதரரில் ஒருவரை அப்போஸ்தலனாக்கிட முடியாது. அது தெய்வீக ஏற்படுத்துதலினால் மாத்திரமேயான ஒரு விசேஷித்த ஊழியம் அல்லது பணியாகும். ஆகவே கர்த்தர் இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களை மாத்திரம் – “ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை ஏற்ப்படுத்தினார்; அப்போஸ்தல ஸ்தானத்தினை இழந்திட்டதான யூதாசின் இடத்தினை, பரிசுத்த பவுல் அடிகளார் எடுத்துக்கொண்டார் (வெளிப்படுத்தல் 21:14; சங்கீதம் 109:8; அப்போஸ்தலர் 1:20). இந்த ஒரு விஷயத்தில்தான் ரோம சபையும், இங்கிலாந்து சபையும் மற்றும் கிரேக்க சபையும், [R5940 : page 247] தேவனுடைய வார்தைகளின் கொள்கையினை மீறுகின்றவர்களாய் இருக்கின்றனர்; அதாவது அப்போஸ்தல அதிகாரமும், வல்லமையும் உடைய கண்காணிகளை – அப்போஸ்தல கண்காணிகளை நியமிப்பதாக வலியுறுத்துகின்றனர்; ஆனால் உண்மையில் இப்படி ஏற்படுத்திட முடியாது.
தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தின் ஏற்படுத்துதல் ஒருபக்கமிருக்க, மற்றபடி தனக்கான பூமிக்குரிய ஏற்படுத்துதலை தான் பொருட்படுத்தவில்லை என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனப் பரிசுத்த பவுல் அடிகளார் சொல்லவில்லை. மாறாக அந்தியோகியாவிலுள்ள சபையார் அநேகமாக தங்களது சொந்த செலவில் சுவிசேஷத்தினை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களது பிரதிநிதியாகக் காணப்படும்படிக்குப் பவுலையும், பர்னபாவையும் ஏற்படுத்தினார்கள் மற்றும் பின்னர்ப்பவுலையும், சீலாவையும் ஏற்படுத்தினார்கள். அப்போஸ்தலனாகிய பவுலை, அந்தியோகியா சபை அப்போஸ்தலனாக ஏற்படுத்தாமல், மாறாக தங்களது சுவிசேஷ ஊழியக்காரனாக அவரை ஏற்படுத்தினார்கள் மற்றும் அவரும் அவர்களது ஏற்படுத்துதலை ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர் நடபடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்று, அவர்களுக்கு அறிக்கை விவரம் கொடுத்தார் என்று பார்க்கின்றோம் (அப்போஸ்தலர் 14:26-28).
(3) வாட்ச் டவர் பைபிள் மற்றும் டிராக்ட் சொசைட்டியானது ( Watch Tower Bible and Tract Society ) அறுவடை வேலைக்காக ஊழியக்காரர்களை அல்லது பிரதிநிதிகளை எப்போதேனும் ஏற்படுத்தினதுண்டா?
ஆம் ஏற்படுத்தினதுண்டு. அனைத்துப் பயண ஊழியக்காரர்களுமே ஊழியத்தின் அந்த விசேஷித்த பணிக்காக இவ்விதம் ஏற்படுத்தப்படுகின்றனர், நியமிக்கப்படுகின்றனர் அல்லது தெரிந்தெடுக்கப்படுகின்றனர். சடங்கு என்பது ஏற்படுத்துதலாய் இராமல், மாறாக நியமித்தலும், கட்டளையிடுதலுந்தான் ஏற்படுத்துலாய் இருக்கின்றது. சொசைட்டியானது, அதனுடைய பிரதிநிதிகளாகவும், அதேவேளையில் கர்த்தருடைய மற்றும் அவரது வார்த்தைகளுடைய பிரதிநிதிகளாகவும் காணப்படும் பயண ஊழியர்களை ஏற்படுத்துகின்றது, அங்கீகரிக்கின்றது, அவர்கள் செல்லும் இடங்களைக் குறித்துக் கட்டளையிடுகின்றது.
(4) வாட்ச் டவர் பைபிள் மற்றும் டிராக்ட் சொசைட்டியிற்கு, ஒரு பயண ஊழியச் சகோதரனுடைய ஏற்படுத்துதலை நீக்கிடுவதற்கான/ Withdraw உரிமை உள்ளதா?
ஆம், நிச்சயமாக! அதற்கு ஏற்படுத்திடுவதற்கும், கட்டளையிடுவதற்கும் அதிகாரம் இருக்குமானால், முந்தைய காலங்களில் அது செய்திட்டதான நியமித்தல்களையும், கட்டளைகளையும் நீக்கிடுவதற்கும் அதற்கு அதிகாரமுள்ளது.
(5) சொசைட்டியின் ஏற்படுத்துதல் அல்லது நியமித்தலானது நீக்கப்படுதல் என்பது, இப்படியாகக் சொசைட்டியினுடைய ஊழியத்தினின்று தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ள பயண ஊழியக்காரன், அதன் பிறகு பிரசங்கம் பண்ணிடுவதற்கு உரிமையற்றவர் என்பதைக் குறிக்குமா?
நிச்சயமாக இல்லை! பயண ஊழியக்காரனிடமிருந்து சொசைட்டியானது அதன் நியமனத்தை நீக்கிடுதல் என்பது, ஏதோ சில காரணங்களினால் அந்தப் பயண ஊழியக்காரன் இனிமேல் சொசைட்டியின் பிரதிநிதியாக இருப்பதில்லை என்பதை, அவருக்கோ அல்லது அவரது போதனைகளுக்கோ அல்லது அவரது நடத்தைக்கோ அல்லது வாழ்க்கை பராமரிப்பிற்கோ இனிமேல் சொசைட்டி பொறுப்பாய் இருக்காது என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். பயண ஊழியக்காரர்களுடைய பட்டியலினின்று இப்படியாக நீக்கப்பட்டுள்ளதான அந்தப் பயண ஊழியச் சகோதரன், தொடர்ந்து சகோதரனாகவே காணப்படுவார் மற்றும் இப்படியாகவே சொசைட்டியினாலும் கருதப்படுவார்; ஆனாலும் – குணலட்சணத்தினுடைய சில பெலவீனங்களை வெளிப்படுத்துவதன் காரணமாகவோ அல்லது போதக சமத்துவத்தில் சில குறைபாடுகளின் காரணமாகவோ அல்லது ஊக்குவிக்கப்படக் கூடாது என்று சொசைட்டியானது எண்ணுகிற சில காரணங்களுக்காகவோ அல்லது சொசைட்டி பொறுப்பேற்க விரும்பிடாத சில விஷயங்களுக்காகவோ அல்லது பல தரப்பட்ட காரணங்களுக்காகவோ, நோய் முதலானவைகள் என்ற காரணங்களுக்காகவோ – அச்சகோதரன் இனிமேல் சொசைட்டியினுடைய பிரதிநிதியாய் இருப்பதற்குப் பொருத்தமான நபராக கருதப்படுவதில்லை.
(6) V.D.M. – என்பதன் அர்த்தம் என்ன? மற்றும் V.D.M. பட்டம் / degree கொடுக்கப்படுவது எதைக் குறிக்கின்றதாய் இருக்கும்?
V.D.M. என்பது மிகவும் பழைய பெயராகும். இப்பெயருடைய பயன்பாடானது நீண்ட காலமாய் வழக்கத்தில் இல்லாதபடியினால், வெகு சிலரே இதன் அர்த்தத்தினை அறிந்தவர்களாய் இருக்கின்றனர். இந்த மூன்று எழுத்துக்களானது, Verbi Dei Minister எனும் இலத்தீன் வார்த்தைகளைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இதன் ஆங்கில வார்த்தை “Minister of Divine word” / “திவ்விய வார்த்தைகளினுடைய ஊழியக்காரன் என்பதாகும். இருண்ட யுகங்களில் திவ்விய வார்த்தைகள் பயன்பாட்டில் இல்லாமல் போய், இதற்குப் பதிலாக விசுவாசப் பிரமாணங்கள் பயன்பாட்டில் காணப்பட்ட போது, இப்பெயரும் பயன்பாட்டில் இல்லாமல் மற்றும் புறக்கணிக்கப்பட்டுப் போயிற்று. திவ்விய வார்த்தைகளுக்கு ஊழியக்காரன் யாரும் இல்லாமல் போயிற்று; காரணம் திவ்விய வார்த்தையானது பிரசங்கிக்கப்படாமல், இதற்குப் பதிலாக மனுஷருடைய விசுவாசப் பிரமாணங்கள் பிரசங்கிக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய பொது ஊழியர்கள் தொடர்புடைய விஷயத்தில், சரியான சிந்தையினை மிக அருமையாய் வெளிப்படுத்துகின்றதான இந்த எளிமையான வார்த்தைகளையுடைய இப்பெயருக்குப் பதிலாக, இன்று வேதவாக்கியங்களின் அடிப்படையில் இல்லாத Reverend /ரெவரண்ட் மற்றும் Doctor pf Divinty / வேதசாஸ்திரி போன்ற பகட்டான பட்டங்கள் காணப்படுகின்றது. திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரன் எனும் பட்டம் கொடுக்கப்படுவது என்பது, ஊழியராக ஏற்படுத்தப்படுதலைக் குறிப்பதாய் இராது; மாறாக சொசைட்டியானது இப்பட்டத்தினைக் கொடுக்கையில், அது அந்நபருடைய நற்பெயரை ஆராய்ந்துள்ளது என்பதையும் மற்றும் முடிந்தமட்டும் அந்நபருடைய குணலட்சணத்தையும், விசேஷமாக அந்நபருடைய உபதேச ரீதியிலான வளர்ச்சியையும் ஆராய்ந்துள்ளது என்பதையும் மற்றும் (V.D.M. கேள்விக்கான பதில்களை) மதிப்பீடு செய்யும் குழுவினுடைய அங்கத்தினர்களின் கணிப்பில், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவராய் இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் மாத்திரமே இருக்கின்றது.
(7) இத்தகைய திவ்விய வார்த்தைக்கான ஊழியர்கள் இப்போது இருக்கின்றார்களா?
ஆம், நிச்சயமாக! சொசைட்டியினால் அனுப்பப்படும் ஒவ்வொரு பயண ஊழியக்காரனும், விசுவாச பிரமாணங்களினுடைய அல்லது “அமைப்புளுடைய /isms” ஊழியக்காரர்களாய் இல்லாமல், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரனாகவே அனுப்பப்படுகின்றான்; உண்மையில் தேவனுடைய வார்த்தைக்கான ஊழியக்காரனாகவே அனுப்பப்படுகின்றான். எந்த ஓர் இடத்திலுமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின சபையார், அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் [R5941 : page 247] ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள ஒரு தேவனுடைய பிள்ளையை, மூப்பராகத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், சபையார் தங்களுடைய தெரிந்துகொள்ளுதலின் வாயிலாக அல்லது தேர்ந்தெடுத்தலின் வாயிலாக, அந்த மூப்பர் திவ்விய வார்த்தைக்கான ஊழியராய் இருக்கின்றார் – அதாவது தேவனுடைய வார்த்தைகளிலுள்ள சத்தியங்களைப் பிரசங்கிப்பவர், பரப்புபவர், பகிர்ந்தளிப்பவராய் இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டுகின்றவர்களாய் இருக்கின்றனர்.
(8) ஒரு கேள்வி பட்டியலைத் தொகுத்து, இக்கேள்விகளுக்குச் சொசைட்டியிடம் திருப்திகரமான விதத்தில் பதிலளிக்கும் நபர், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரனாக கருதப்படுவார் என்று கூறுவதில், சொசைட்டியிக்குக் காணப்படும் நோக்கமென்ன?
அக்கேள்விகளானது, நீண்டகாலமாய் வாஞ்சிக்கப்பட்டதை நிறைவு செய்யும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கேள்விகளானது, மதவெறியின் அடிப்படையானது அல்ல; அவை யாவும் வேதவாக்கியங்களின் அடிப்படையினாலானதாகும். இப்பொழுது ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயண ஊழியர்களிடமிருந்து அல்லது எதிர்க்காலத்தில் சொசைட்டியின் பிரதிநிதிகளாய், பயண ஊழியர்களாய்க் காணப்படப்போகின்றவர்களிடமிருந்து, கிறிஸ்துவின் சுவிசேஷம் தொடர்புடையதான இந்த அடிப்படையான கேள்விகள் பற்றின அவர்களது புரிந்துகொள்ளுதல்களையும், அவர்களது கருத்துக்களையும், அவர்களது சிந்தனைகளையும் அறிந்துகொள்வதற்குக் சொசைட்டியானது விரும்புகின்றது. அக்கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பிடாத எந்தச் சகோதரனும், மனதில் குழப்பம் கொண்டிருப்பவராகவும், உறுதியற்றவராகவும், இதினிமித்தம் போதிப்பதற்குத் தகுதியற்றவராக, “போதகசமர்த்தனாய் இல்லை என்பதாகவும் கருதப்படுவார். இது அவர் தொடர்ந்து சகோதரராக இல்லை என்பதைக் குறிக்கின்றதாய் இராது; மாறாக பயண ஊழியத்திற்குப் பொருத்தமான சகோதரனாக அவர் கருதப்படுவதில்லை என்பதையே குறிக்கின்றதாய் இருக்கும். இன்னுமாக அச்சகோதரன் பிரசங்கிக்கக் கூடாது என்பதைக் குறிப்பதாய் இராது; மாறாக சொசைட்டியானது அவரைத் திவ்விய வார்த்தையின் விரிவுரையாளராய்ப் பரிந்துரைக்காது என்பதை மாத்திரமே குறிக்கின்றதாய் இருக்கும்.
எந்த ஒரு சகோதரன் கேள்விகளுக்குப் பதிலளிக்க விருப்பமுள்ளவனாகக் காணப்பட்டும், ஆனால் தன்னுடைய பதில்களில் கொஞ்சம் குழப்பத்தினை வெளிப்படுத்துகிறவராக இருப்பாரானால், இது அவர் சொசைட்டியிக்கும், தேவனுடைய வார்த்தைத் தொடர்புடையதாக எது சத்தியம் என்று சொசைட்டியினால் நம்பப்படுபவைகளுக்கும் பிரதிநிதியாகிடுவதற்கும் முன்னதாக, இன்னும் அதிகமான போதனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்று எங்களுக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கும். அத்தகைய சகோதரன் அநேகமாக Brooklyn / புரூக்கிளினுக்குக் கொண்டு வரப்பட்டு, கொஞ்சக்காலம் மற்ற ஊழியங்களில் பங்கெடுப்பதற்கு வாய்ப்பு அருளப்படுவார் மற்றும் ஒவ்வொரு மதிய வேளையிலும் நடைபெறும் வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளிலும் பங்கெடுக்கும் வாய்ப்பினை அடைவார்; இன்னுமாக முழுக்காரியமும் முழுமையாய்ச் சரியாகிவிடவும், தெளிவாய்ப் பார்த்து, புரியப்படத்தக்கதாகவும் சத்தியம் தொடர்பான பாடங்களில், எவ்வகையான கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்பினை முழுச்சுயாதீனத்துடன் பெற்றிருப்பார்.
பெத்தேல் குடும்பத்திலுள்ள / Bethel family சகோதரிகளில் அநேகர், இக்கேள்விகளைக் குறித்துக் கேள்விப்பட்டவர்களாக, பயிற்சியாய் இருக்கும் மற்றும் அறிவடைதலாய் இருக்கும் எனும் கண்ணோட்டத்தில், இக்கேள்விகளுக்குத் தாங்கள் பதில் கொடுக்கத்தக்கதாக, தங்களுக்கு அக்கேள்வி பட்டியலைத் தரும்படிக்கு விசேஷித்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதைப்போலவே பல்வேறு சபைகளிலுள்ள மூப்பர்களும், உதவிக்காரர்களும் கேள்விகளுக்காக வேண்டிக்கொண்டுள்ளனர். சொசைட்டியினுடைய V.D.M.degree / பட்டத்திற்குத் தகுதியடையத்தக்கதாக, இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிகின்றவர்களை, மூப்பர் ஊழியத்திற்குத் தேர்ந்தெடுப்பது என்பது, அனைத்து இடங்களிலுமுள்ள வேதமாணவர்கள் அடங்கியுள்ளதான சபையார் யாவருக்கும் நன்மை பயக்கின்றதாய் இருக்கும். இது மூப்பர்கள் மத்தியில் அநேகம் மாற்றங்களைக் கொண்டுவந்திடும்; ஆனாலும் அவை நன்மையான மாற்றமாய் இருக்குமென நாங்கள் நம்புகின்றோம். இன்னுமாகச் சத்தியத்தினை, அதாவது சத்தியத்தினை மாத்திரம் போதித்திட உள்ளப்பூர்வமாய் விரும்புகின்றதான மூப்பர்கள் யாவரும், இக்கேள்விகளால் கிடைக்கப்பெறும் உதவியினைப் பெற்றுக்கொள்வதில் சந்தோஷமடைவார்கள் என்று நாம் நம்புகின்றோம் .
சிலசமயம் அருமையான நண்பர்களில் சிலர், தாங்கள் மூப்பர்களாகத் தெரிந்துகொள்ளும் அல்லது ஏற்படுத்தும் நபர்களின் விஷயத்தில் எவ்வளவு அஜாக்கிரதையாய்க் காணப்படுகின்றனர் என்று பார்க்கையில் – கர்த்தருடைய வார்த்தைகளின் கட்டளைக்கு முரணாகப் பெரும்பாலும் நூதன சீஷர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இப்படியாய் நூதன சீஷனுக்கும், சபையாருக்கும் பாதகம் உண்டாக்குவதைப் பார்க்கையில் – நமக்கு ஆச்சரியமே ஏற்படுகின்றது (1 தீமோத்தேயு 3:1-7). மூப்பர் ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையை மாத்திரமே தேர்ந்தெடுக்கும் விஷயத்திற்கு அடுத்தப்படியாக இருக்க வேண்டிய கேள்வி – எந்தளவுக்கு அச்சகோதரன் ஆராய்ச்சியையும், அறிவடைவதற்கான சிலாக்கியங்களையும் பயன்படுத்தியுள்ளார்? என்பதேயாகும். ஒருமுறையேனும் வேதாகம பாடங்களின் ஆறு தொகுதிகள் / Volume அனைத்தையும் வாசித்திராத அல்லது வாட்ச் டவர் இதழின் தொடர்ச்சியான வாசகனாக இராத, எந்த ஒரு சகோதரனையும் [R5941 : page 248] மூப்பராகத் தேர்ந்தெடுப்பது ஞானமற்ற காரியமாய் இருக்கும் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. சொசைட்டியானது எந்த அதிகாரத்தையும் செலுத்தவில்லை, எந்த விமர்சனமும் செய்யவில்லை, மாறாக கர்த்தருடைய காரணங்கள் மற்றும் கர்த்தருடைய ஜனங்களின் நலனுக்காய், அறிவுரை மாத்திரமே கொடுப்பதாக நினைவில் வைக்கப்படுவதாக.