R5368 (page 381)
I.B. S. A-இன் அன்புக்குரிய நண்பர்கள் சபையாருக்காக மூப்பர்களை மற்றும் உதவிக்காரர்களைத் தாங்கள் தேர்ந்தெடுப்பது தொடர்புடைய விஷயத்திலும் மற்றும் கர்த்தருடைய நாமத்தில் தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்கள் தொடர்புடைய விஷயத்திலும் பொறுப்புணர்வினை முறையாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அநேகமாக பாராளுமன்ற பிரமாணங்களைக் குறித்து வெகு சிலரே நன்கு அறிந்தவர்களாய் இருப்பதினால், சபைகூட்டங்கள் தொடர்புடைய விஷயத்தில் பாராளுமன்ற பிரமாணங்களை நடைமுறைப்படுத்துவது என்பது அன்பற்றதாகவும், ஞானமற்றதாகவும் காணப்படும் என்று ஏற்கெனவே நாம் கருத்துத் தெரிவித்திருந்தோம். பாராளுமன்ற பிரமாணங்களானது உண்மையில் நல்லவைகளாகவும், ஞானமானவைகளாகவும் மற்றும் பொதுவாய் நன்மை பயக்கிறதாகவும் காணப்படுகின்றது. பாராளுமன்ற பிரமாணங்களின் ஆவியானது, எல்லாவிடத்திலும் பொருந்தக் கூடியதாகும்; காரணம் அவைகள் அனைவருடைய நலனுக்கடுத்தவைகளைப் பாதுகாத்தல் எனும் பொன்னான பிரமாணத்தின் அடிப்படையிலும் மற்றும் குறைந்தபட்ச பிணக்குடனும், தாமதத்துடனும் காரியங்களைச் செய்யும் விதத்திலும் இயற்றப்பட்டவைகளாகும்.
கர்த்தருடைய ஜனங்களைப் பொறுத்தமட்டில், அன்பானது எப்போதுமே முதன்மையான இடத்தினைப் பெற்றிருக்க வேண்டும். அன்பானது எப்போதுமே பொன்னான பிரமாணத்திற்கு இசைவாக இருப்பினும், அது நேர்மையான நீதிக்கும் மேலாகச் செய்திடுவதற்கு எப்போதும் சுயாதீனம் உடையதாய் இருக்கின்றது. ஆகையால் கர்த்தருடைய சகோதரர்கள் யாவரும் கொள்கை உட்படாத விஷயத்தில், மற்றவருடைய நலனுக்காக தங்கள் சிறு விருப்பங்களை விட்டுக்கொடுத்துவிடுவதற்கு முற்றிலும் விருப்பமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். [R5369 : page 381] அன்பும், சந்தோஷமும், சமாதானமும் ஒவ்வொரு சபையிலும் மேலோங்கிக் காணப்பட வேண்டும். இவைகள் சார்புடைய யாவும் மற்றும் தேவனுக்கும், அவரது வார்த்தைகளுக்கும் உண்மையாய் இருத்தலுக்கு முழு இசைவுடன் காணப்படும் யாவும் ஆதரிக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் வந்திட்டதான அநேகம் கடிதங்களில், சபை தேர்ந்தெடுத்தல்கள், முன்மொழிதலுக்கான வழிமுறைகள் முதலானவைகள் குறித்த கேள்விகளும் மற்றும் இன்னுமாக வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முன்மொழிதல் முறைமையினின்று சற்று வித்தியாசமான முறைமையைப் பின்பற்றிடுவது முறையாக இருக்குமா அல்லது இல்லையா என்பது பற்றியும் உள்ள கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான விஷயங்கள் அனைத்திலும் சபையாருடைய விருப்பமே பிரமாணமாக இருக்கும் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். கர்த்தர் காரியத்தினைச் சபையினுடைய கரங்களிலேயே விட்டிருக்கின்றார்; மற்றும் சபையின் ஒவ்வொரு சிறுசிறு பாகங்களும், அதன் பகுத்துணர்தலின்படி திவ்விய ஏற்பாட்டினைப் பின்பற்றிடுவதற்கான முழு அதிகாரத்தையும் உடையதாய் இருக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் முன்மொழிதலை, வாக்குச்சீட்டு மூலம் முன்மொழிவது மிகவும் நல்லதொரு திட்டமாயிருக்கும்; இதற்கு முதலில் எத்தனை பேர்கள் அவ்வருஷத்திற்கு ஊழியம்புரிய விரும்பப்படுகிறார்கள் என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒருவேளை சபையாருக்கு இரண்டு மூப்பர்களும், ஐந்து உதவிக்காரர்களும் அவசியம் என்று கருதப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது வாக்குச்சீட்டில் அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொருவனும், தான் முன்மொழிகிற விஷயத்தில் கர்த்தருடைய சித்தத்திற்குக் கருத்தூன்றிட வேண்டும். அவன் மூப்பர்களாக தன்னால் முன்மொழியப்படுகிற இரண்டு பேரின் பெயர்களையும் மற்றும் உதவிக்காரர்களாக தன்னால் முன்மொழியப்படுகிற ஐந்து பேரின் பெயர்களையும் எழுதிடலாம். இல்லையேல் அவன் தனது இரண்டு வாக்குகளை (votes) ஒரு மூப்பருக்கும் மற்றும் தனது ஐந்து வாக்குகளை ஓர் உதவிக்காரருக்கும் அல்லது அவன் விருப்பப்படி அந்த வாக்குகளைப் பங்கிட்டுக் கொள்ளலாம். இந்த விதத்தில் சபையாரிலுள்ள சிறுபான்மையானவர்கள், மூப்பர்கள் மத்தியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பினைப் பெற்றிடலாம்.
வாக்குச்சீட்டு பதிவு முடிந்து, கணக்கிட்ட பிற்பாடு, அதிக எண்ணிக்கையில் முன்மொழிதல் வாக்குச்சீட்டினைப் பெற்றிருக்கும் மூப்பர்களுக்கான இரண்டு பேரும் மற்றும் இப்படியாகவே உதவிக்காரர்களுக்கான ஐந்து பேரும் சபையாரின் தெரிவாகக் கருதப்பட வேண்டும். பின்னர் வாக்களித்தல் (vote) முறையாக இருக்கும். அதிக எண்ணிக்கையில் வாக்குச்சீட்டுகளைப் பெற்றிருப்பவர்களுக்கு, கைகளை நீட்டுதல் மூலம் வாக்களித்து [R5369 : page 382] ஏகமனதுடன் தேர்ந்தெடுப்பது என்பது பொதுவாகவே திருப்திகரமாயும், பொருத்தமாயும் காணப்படும்.
உங்களுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றிடலாம் என்பதல்ல, மாறாக கர்த்தருடைய சித்தம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், ஒவ்வொரு சகோதரன் மற்றும் சகோதரிக்கு உங்களால் எப்படி முழுமையாய் வாய்ப்பினைக் கொடுக்கவும், அதை நீங்களும்கூடப் பெற்றிருக்கவும் முடியும் என்பதுதான் எப்போதும் நோக்கமாகக் காணப்பட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். எவ்வகையில் முடிவுகள் அடையப்பட்டாலும், அவைகள் ஒருவேளை பெரும்பான்மையானவர்களின் அல்லது சபையார் அனைவரின் பகுத்துணர்தலைத் திருப்திகரமாய் வெளிப்படுத்துகிறதாய் இருக்குமானால், அப்போது காரியமானது முற்றிலும் நீதியானதாகவும். வேதாகமத்தின் கொள்கைகளுக்கு இசைவானதாகவும் இருக்கும்.
“சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.” சகோதர சகோதரிகளுக்காக நம்முடைய ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதற்கு நாடிடுவோமாக. நம்மால் கர்த்தருக்கு நேரடியாய் ஊழியம் புரிய முடியாது, ஆனால் சகோதர சகோதரிகளுக்கு ஊழியம் புரிவதன் மூலமும், நம்முடைய பொறுமையையும், அனுதாபத்தையும் மற்றும் அன்பையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலமும், கர்த்தருக்கு மறைமுகமாக நாம் ஊழியம் புரிந்திடலாம்.