R5888
கர்த்தரைத் தொழுதுகொள்வதிலும், அவரது வசனத்தை ஆராய்வதிலும் பவுலும், பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள சபையாரோடு அதிகமான காலம் செலவிட்டனர். இந்த வேதப்பாடங்களின் விளைவாகச் சபையார் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்தனர் மற்றும் சுவிசேஷத்தைப் பரப்பிடுவதற்கான வழிவகைகளைக் குறித்து ஜெபிப்பதற்கும், கருதுவதற்குமுரிய நிலைக்கு வந்தார்கள். சபையில் அநேகத் தீர்க்கத்தரிசிகள் (public orators – பொதுப் பேச்சாளர்கள்) மற்றும் போதகர்கள் காணப்பட்டனர்; மற்றும் இவர்களை எப்படித் தேவனுக்கு மகிமை சேர்க்கும் விதமாகவும் மற்றும் தாங்கள் எப்படிச் சத்தியத்தினால் ஆசீர்வதிக்கப் பட்டார்களோ, அப்படியே மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படும் விதமாகவும் பயன்படுத்திடலாம் என்று சபையார் சிந்திக்கத் துவங்கினார்கள்.
இப்படிதான் சத்தியத்தினை நல்லதும், நேர்மையுமான இருதயங்களில் ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரின் காரியமாக எப்போதும் காணப்படுகின்றது. தாங்கள் போஷிக்கப்படுவதற்கும், கர்த்தரில் பலமடைவதற்கும் விரும்புகின்றனர். சத்தியம் ஏற்றுக்கொள்ளப்படுகையில், அது ஒரு பலத்தையும் மற்றும் அந்தப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான வாஞ்சையையும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது அன்றுபோன்று, இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது. சத்தியம் கொண்டுவருகின்றதான பரிசுத்தமாக்கப்படுதலானது, நம்முடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதலோடு துவங்குகின்றது; மற்றும் ஊழியம் புரிவதற்கான ஆற்றலானது, ஆவியின் உயிர்ப்பிக்கப்படுதலுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது.
அந்தியோகியா சபையில், அவர்களது தேவைக்கும் அதிகமாய்ப் போதகர்கள் காணப்பட்டனர் மற்றும் ஊழியம் புரிவதற்கான பெரிய வாய்ப்புகளைத் தேடிடுவதற்கு அவர்கள் துவங்கினார்கள். அவர்கள் எந்த வழிமுறையைத் தாங்கள் பின்பற்றிட வேண்டும் என்பதைக்குறித்துத் தெளிவற்றுக் காணப்பட்டபடியால், அவர்கள் சபையின் மெய்யான தலையாகிய கர்த்தரை நோக்கிப்பார்த்தார்கள். அவர்கள் உபவாசமிருந்தனர் மற்றும் அவர்கள் ஜெபமும் ஏறெடுத்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு நிச்சயமே. அதன் விளைவாக, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் வேலைக்கான பிரதிநிதிகளெனத் தங்கள் மத்தியில் காணப்பட்ட பர்னபாவையும், பவுலையும் அனுப்பிவைப்பதற்கான முடிவிற்கு வந்தார்கள்.
எப்படி இந்தத் தீர்மானத்திற்கு வரக் கர்த்தர் அவர்களை வழிநடத்தினார் என்பது குறித்து நமக்குத் தெரிவிக்கப்படவில்லை. நாம் இன்று இதே காரியம் போன்ற காரியத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து, ஜெபம்பண்ணி, கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்கு நாடின பிற்பாடு, நம் மத்தியில் காணப்படும் இன்னென்ன நபர்கள் சத்தியத்திற்கடுத்த பொது ஊழியங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது சித்தமாயிருக்கும் என்று நாம் நம்புகின்றோம். பெருமை அல்லது பேராசை அல்லது பணநோக்கத்தினால் இல்லாமல், பரிசுத்த ஆவியினாலேயே இந்த முடிவிற்கு நேராய் நாம் வழிநடத்தப்பட்டிருக்கின்றோம் என்று நாம் நம்புகின்றோம். மற்றவர்களுக்கு வெளிச்சத்தை எடுத்துச் செல்வதற்கு இந்தப் பிரதிநிதிகளைச் சபையாராக நாம் அனுப்பிவைப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்” என்று கூறுவது போன்றே – அன்று அவர்களது காரியம் காணப்பட்டிருந்திருக்க வேண்டும்.
இது தங்கள் கடமை மற்றும் சிலாக்கியம் என்று ஏதோ விதத்தில் அந்தியோகியாவின் சபையாருக்குப் பலமாய்த் தோன்றியுள்ளது. இந்த ஊழியத்திற்குச் சபையார் தங்கள் சிறந்த பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து, இப்படியாகச் சுயத்தைப் பலிச்செலுத்தும் ஆவியினை வெளிப்படுத்தினது கவனிக்கப்படத்தக்கது. இதற்கேற்ப கர்த்தர் சபையாரை ஆசீர்வதித்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் ஊழியத்திற்கென்று மிகவும் தாலந்துமிக்க இந்த இரண்டு சகோதரர்களைச் சபையார் கொடுத்ததில் அடைந்திட்ட இழப்பினைக் கர்த்தர் ஈடுகட்டியிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
காரியம் முடிவுபண்ணப்பட்டிருக்க, சபையார் உபவாசமிருந்து, ஜெபம்பண்ணி, பவுல் மற்றும் பர்னபா மீது கைகளை வைத்து, வாழ்த்துக்களுடன் இருவரையும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் அவர்களது சுற்றுப் பயணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். சபையாருடைய பிரதிநிதிகளாகிய மூப்பர்கள் வாயிலாகவே அநேகமாக கைகளை வைத்தலானது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்படிச் செய்யப்பட்டது, இன்று பரவலாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றதான “ஏற்படுத்துதல்” / ordination அல்ல; ஏனெனில் பவுலும், பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள சபையில் காணப்பட்ட பிரதானமான போதகர்கள் மற்றும் தீர்க்கத்தரிசிகள் மத்தியில் அடங்குபவர்களாக நீண்டகாலமாய் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருந்தனர். அது இன்று பல்வேறு பிரிவினர்களிலுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல் குறித்துப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது போன்று, பிரசங்கிப்பதற்கான அதிகாரம் வழங்குதலைக் குறிக்கிறதில்லை.
அவ்வனுசரிப்பின் எளிமையான அர்த்தமாவது: “அந்தியோகியா சபையாராகிய நாங்கள், எங்களது பிரதிநிதிகளாகிய மூப்பர்கள் இப்படிக் கைகளை வைப்பதன் வாயிலாக, பவுல் மற்றும் பர்னபாவாகிய இவ்விரண்டு மனுஷர்களையும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான சுற்றுப் பிரயாணமாக அனுப்பி வைக்கின்றோம்; அவர்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாக மாத்திரமல்லாமல், அந்தியோகியாவிலுள்ள கர்த்தருடைய சபையின் பிரதிநிதியாகவும்கூடக் கடந்துசெல்கின்றனர்; மற்றும் இவர்களுக்குரிய பராமரிப்பிற்கான வழிவகைகளை நாங்களே பொறுப்பேற்றுக்கொள்கின்றோம். அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை நாங்கள் சந்தித்திடுவோம் மற்றும் இப்படியாக உடன் வேலையாட்களாக, அவர்களது பிரயாசங்களில் பங்கெடுத்து, அவர்களது சிரமங்களிலும், சோதனைகளிலும் பரிவுகொண்டு, அவர்களது தேவைகளில் உதவிபுரிந்து, அவர்களது பிரயாசங்களின் விளைவாக வரும்பலன்கள் எதிலும்கூட நாங்கள் பங்கெடுத்திடுவோம்” என்பதேயாகும்.
சமயத்தைப் பரப்பிடுவதற்கான இந்தச் சுற்றுப்பயணத்திற்குப் பிற்பாடு, இவ்விரண்டு சகோதரரும் அந்தியோகியாவிற்குத் திரும்பி, தகவல் அறிக்கையினைக் கொடுத்திட்டார்கள் என்று நாம் பார்க்கின்றோம். ஆனால் பிற்பாடு அந்தியோகியாவிலுள்ள சபையைச் சார்ந்திராமலும் – இப்படியான எந்த ஜெபித்தல்களும் மற்றும் கைகள் வைக்குதல் இல்லாமலும் மற்றும் பிரயாசங்களுக்கான பலன் குறித்த அறிக்கைகள் கொடுக்காமலும் அப்போஸ்தலன் பவுல் பிரயாணம் மேற்கொண்டார் என்பதாகத் தெரிகின்றது – ஆனாலும் நாம் நிதானிக்க முடிந்தவரை அச்சபையார் மீது அன்பும், அவர்களிடத்தில் பரிவும் அவர் தொடர்ந்து வைத்தவராகவே இருந்தார்.