கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5888

கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்

Missionaries Sent Forth

கர்த்தரைத் தொழுதுகொள்வதிலும், அவரது வசனத்தை ஆராய்வதிலும் பவுலும், பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள சபையாரோடு அதிகமான காலம் செலவிட்டனர். இந்த வேதப்பாடங்களின் விளைவாகச் சபையார் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்தனர் மற்றும் சுவிசேஷத்தைப் பரப்பிடுவதற்கான வழிவகைகளைக் குறித்து ஜெபிப்பதற்கும், கருதுவதற்குமுரிய நிலைக்கு வந்தார்கள். சபையில் அநேகத் தீர்க்கத்தரிசிகள் (public orators – பொதுப் பேச்சாளர்கள்) மற்றும் போதகர்கள் காணப்பட்டனர்; மற்றும் இவர்களை எப்படித் தேவனுக்கு மகிமை சேர்க்கும் விதமாகவும் மற்றும் தாங்கள் எப்படிச் சத்தியத்தினால் ஆசீர்வதிக்கப் பட்டார்களோ, அப்படியே மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படும் விதமாகவும் பயன்படுத்திடலாம் என்று சபையார் சிந்திக்கத் துவங்கினார்கள்.

இப்படிதான் சத்தியத்தினை நல்லதும், நேர்மையுமான இருதயங்களில் ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரின் காரியமாக எப்போதும் காணப்படுகின்றது. தாங்கள் போஷிக்கப்படுவதற்கும், கர்த்தரில் பலமடைவதற்கும் விரும்புகின்றனர். சத்தியம் ஏற்றுக்கொள்ளப்படுகையில், அது ஒரு பலத்தையும் மற்றும் அந்தப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான வாஞ்சையையும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது அன்றுபோன்று, இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றது. சத்தியம் கொண்டுவருகின்றதான பரிசுத்தமாக்கப்படுதலானது, நம்முடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதலோடு துவங்குகின்றது; மற்றும் ஊழியம் புரிவதற்கான ஆற்றலானது, ஆவியின் உயிர்ப்பிக்கப்படுதலுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது.

அந்தியோகியா சபையில், அவர்களது தேவைக்கும் அதிகமாய்ப் போதகர்கள் காணப்பட்டனர் மற்றும் ஊழியம் புரிவதற்கான பெரிய வாய்ப்புகளைத் தேடிடுவதற்கு அவர்கள் துவங்கினார்கள். அவர்கள் எந்த வழிமுறையைத் தாங்கள் பின்பற்றிட வேண்டும் என்பதைக்குறித்துத் தெளிவற்றுக் காணப்பட்டபடியால், அவர்கள் சபையின் மெய்யான தலையாகிய கர்த்தரை நோக்கிப்பார்த்தார்கள். அவர்கள் உபவாசமிருந்தனர் மற்றும் அவர்கள் ஜெபமும் ஏறெடுத்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு நிச்சயமே. அதன் விளைவாக, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் வேலைக்கான பிரதிநிதிகளெனத் தங்கள் மத்தியில் காணப்பட்ட பர்னபாவையும், பவுலையும் அனுப்பிவைப்பதற்கான முடிவிற்கு வந்தார்கள்.

எப்படி இந்தத் தீர்மானத்திற்கு வரக் கர்த்தர் அவர்களை வழிநடத்தினார் என்பது குறித்து நமக்குத் தெரிவிக்கப்படவில்லை. நாம் இன்று இதே காரியம் போன்ற காரியத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து, ஜெபம்பண்ணி, கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்கு நாடின பிற்பாடு, நம் மத்தியில் காணப்படும் இன்னென்ன நபர்கள் சத்தியத்திற்கடுத்த பொது ஊழியங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது சித்தமாயிருக்கும் என்று நாம் நம்புகின்றோம். பெருமை அல்லது பேராசை அல்லது பணநோக்கத்தினால் இல்லாமல், பரிசுத்த ஆவியினாலேயே இந்த முடிவிற்கு நேராய் நாம் வழிநடத்தப்பட்டிருக்கின்றோம் என்று நாம் நம்புகின்றோம். மற்றவர்களுக்கு வெளிச்சத்தை எடுத்துச் செல்வதற்கு இந்தப் பிரதிநிதிகளைச் சபையாராக நாம் அனுப்பிவைப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்” என்று கூறுவது போன்றே – அன்று அவர்களது காரியம் காணப்பட்டிருந்திருக்க வேண்டும்.

இது தங்கள் கடமை மற்றும் சிலாக்கியம் என்று ஏதோ விதத்தில் அந்தியோகியாவின் சபையாருக்குப் பலமாய்த் தோன்றியுள்ளது. இந்த ஊழியத்திற்குச் சபையார் தங்கள் சிறந்த பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து, இப்படியாகச் சுயத்தைப் பலிச்செலுத்தும் ஆவியினை வெளிப்படுத்தினது கவனிக்கப்படத்தக்கது. இதற்கேற்ப கர்த்தர் சபையாரை ஆசீர்வதித்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் ஊழியத்திற்கென்று மிகவும் தாலந்துமிக்க இந்த இரண்டு சகோதரர்களைச் சபையார் கொடுத்ததில் அடைந்திட்ட இழப்பினைக் கர்த்தர் ஈடுகட்டியிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஏற்படுத்துதலும், கைகளை வைக்குதலும்

காரியம் முடிவுபண்ணப்பட்டிருக்க, சபையார் உபவாசமிருந்து, ஜெபம்பண்ணி, பவுல் மற்றும் பர்னபா மீது கைகளை வைத்து, வாழ்த்துக்களுடன் இருவரையும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் அவர்களது சுற்றுப் பயணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். சபையாருடைய பிரதிநிதிகளாகிய மூப்பர்கள் வாயிலாகவே அநேகமாக கைகளை வைத்தலானது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்படிச் செய்யப்பட்டது, இன்று பரவலாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றதான “ஏற்படுத்துதல்” / ordination அல்ல; ஏனெனில் பவுலும், பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள சபையில் காணப்பட்ட பிரதானமான போதகர்கள் மற்றும் தீர்க்கத்தரிசிகள் மத்தியில் அடங்குபவர்களாக நீண்டகாலமாய் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருந்தனர். அது இன்று பல்வேறு பிரிவினர்களிலுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல் குறித்துப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது போன்று, பிரசங்கிப்பதற்கான அதிகாரம் வழங்குதலைக் குறிக்கிறதில்லை.

அவ்வனுசரிப்பின் எளிமையான அர்த்தமாவது: “அந்தியோகியா சபையாராகிய நாங்கள், எங்களது பிரதிநிதிகளாகிய மூப்பர்கள் இப்படிக் கைகளை வைப்பதன் வாயிலாக, பவுல் மற்றும் பர்னபாவாகிய இவ்விரண்டு மனுஷர்களையும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான சுற்றுப் பிரயாணமாக அனுப்பி வைக்கின்றோம்; அவர்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாக மாத்திரமல்லாமல், அந்தியோகியாவிலுள்ள கர்த்தருடைய சபையின் பிரதிநிதியாகவும்கூடக் கடந்துசெல்கின்றனர்; மற்றும் இவர்களுக்குரிய பராமரிப்பிற்கான வழிவகைகளை நாங்களே பொறுப்பேற்றுக்கொள்கின்றோம். அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை நாங்கள் சந்தித்திடுவோம் மற்றும் இப்படியாக உடன் வேலையாட்களாக, அவர்களது பிரயாசங்களில் பங்கெடுத்து, அவர்களது சிரமங்களிலும், சோதனைகளிலும் பரிவுகொண்டு, அவர்களது தேவைகளில் உதவிபுரிந்து, அவர்களது பிரயாசங்களின் விளைவாக வரும்பலன்கள் எதிலும்கூட நாங்கள் பங்கெடுத்திடுவோம்” என்பதேயாகும்.

சமயத்தைப் பரப்பிடுவதற்கான இந்தச் சுற்றுப்பயணத்திற்குப் பிற்பாடு, இவ்விரண்டு சகோதரரும் அந்தியோகியாவிற்குத் திரும்பி, தகவல் அறிக்கையினைக் கொடுத்திட்டார்கள் என்று நாம் பார்க்கின்றோம். ஆனால் பிற்பாடு அந்தியோகியாவிலுள்ள சபையைச் சார்ந்திராமலும் – இப்படியான எந்த ஜெபித்தல்களும் மற்றும் கைகள் வைக்குதல் இல்லாமலும் மற்றும் பிரயாசங்களுக்கான பலன் குறித்த அறிக்கைகள் கொடுக்காமலும் அப்போஸ்தலன் பவுல் பிரயாணம் மேற்கொண்டார் என்பதாகத் தெரிகின்றது – ஆனாலும் நாம் நிதானிக்க முடிந்தவரை அச்சபையார் மீது அன்பும், அவர்களிடத்தில் பரிவும் அவர் தொடர்ந்து வைத்தவராகவே இருந்தார்.