சுவாரசியமான கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5954

சுவாரசியமான கடிதங்கள்

Interesting Letters

எப்போது விவாகரத்துப் பெற்றுக்கொண்டவர்கள் திருமணம் பண்ணிடுவதற்குச் சுதந்தரமாய் இருக்கின்றனர்?

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-

வேதாகம பாடங்களுடைய 6-ஆம் தொகுதியானது, ஒவ்வொரு அனுபவங்கள், சிரமங்கள் மற்றும் புதுச்சிருஷ்டியாகிய கர்த்தருடைய ஜனங்களுக்கான சரியான வழிமுறைகள் குறித்துத் தெரிவிக்கின்றது என நான் நன்கு அறிவேன்; எனினும் ஒரு குறிப்பிட்ட கேள்வியானது எழும்பி, எங்களது சபையில் சில குழப்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது மற்றும் பிரிவினையை உண்டுபண்ணிவிடும்போன்று தோன்றுகின்றது. எங்கள் சபையின் அங்கத்தினர்களாகிய ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் எங்கள் ஐக்கியத்தினை அனுபவித்து வந்தனர்; ஆனால் அச்சகோதரிக்கு முன்பும் ஒரு திருமணம் நடந்திருக்கின்றது என்றும், அவளது முதலாம் கணவன் இன்னமும் ஜீவனோடு காணப்படுகின்றார் மற்றும் மறுமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் எங்களுக்குத் தெரியவந்தது.

எங்கள் சபையாரில் சிலர் இந்தச் சகோதரனையும், சகோதரியையும், கூடுகைகளில் கலந்து கொள்வதற்குத் தடைப்பண்ணிட வேண்டுமென்று விரும்புகின்றனர். மத்தேயு 19:9-ஆம் வசனத்தில் இடம்பெறும் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளின் அடிப்படையிலேயே முக்கியப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” இவ்விஷயத்தில் அச்சகோதரியுடைய முதலாம் கணவன் வேசித்தனம் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்று வலியுறுத்தப்படுகின்றது; ஆனால் இது அவள் மறுமணம் செய்துகொள்வதற்கு அவளை விடுவித்துவிடுகிறதில்லை என்று மற்றவர்கள் வலியுறுத்துகின்றனர்; ஏனெனில் (முறையே விவாகரத்துப்பண்ணியோ அல்லது இல்லாமலோ இருக்கும்) விவாகரத்தான ஸ்திரீயைத் திருமணம் பண்ணும் எவனும், வேசித்தனம் புரிந்தவனாய் இருப்பான் என்று இயேசு கூறியிருக்கின்றார். இது விஷயமாக எங்களுக்குக் கொஞ்சம் அதிகமான வெளிச்சத்தினைத் தயவாய்க் கொடுத்தருளவும்.

உங்கள், உண்மையுள்ள சகோ,___________________

[பதில்:- இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்காரியமானது பிரிவினையை அல்லது குழப்பத்தை உண்டுபண்ண அனுமதிப்பதில் சபையார் நிச்சயமாகவே தவறே செய்கின்றனர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூடுகையில் கலந்துகொள்வதற்குத் தடைப்பண்ண அவர்களுக்கு எந்த முகாந்தரமும் இல்லை. அதிகப்பட்சமாக சபையாரால், சம்மந்தப்பட்டவர்களுக்கு ஐக்கியத்தினை மறுப்பதும் மற்றும் சம்மந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதற்கு அல்லது சபையாரின் இல்லங்களில் அவர்களை வரவேற்பதற்கு மறுப்பதும் மற்றும் அச்சகோதரனை மூப்பர் அல்லது உதவிக்காரன் ஊழியத்திற்கு நியமிப்பதற்குச் சபையார் மறுப்பதும் கூடும். ஆனால் பொதுக்கூடுகைகளில் கலந்துகொள்ளும் சிலாக்கியங்களை அவர்களுக்கு மறுப்பது என்பது மிகவும் முரண்பாடான காரியமாய் இருக்கின்றது; ஏனெனில் எல்லா வகையான பாவங்களில் வாழும் அனைத்து வகையான ஜனங்களும் கூடுகைகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர் மற்றும் இப்படியாக வருகையில் அவர்கள் பிரயோஜனமடைந்து, குணமடைவார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இவ்விஷயத்தில் வேசித்தனமே விவாகரத்திற்கான அடிப்படையாக இருக்கின்றது என்றும், தவறு கணவனிடத்தில்தான் இருந்துள்ளது என்றும் ஒப்புக்கொள்ளப்படுகின்றபடியால், இவ்விஷயமானது “வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி” என்று நமது கர்த்தரினால் குறிப்பிடுகின்ற விதி விலக்கிற்குள்ளாகவே வந்துள்ளது. அன்றியும் ஒருவேளை இது உண்மையிலேயே பிரிதலுக்கான காரணமாய் இல்லாமல் இருப்பினும், முன்னாள் கணவன் மறுதிருமணம் செய்துள்ள காரியமானது, அவர் திருமண பந்தம் முறிக்கப்பட்டதாகக் கருதியுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது; ஆகையால் அவனது முதல் மனைவி, அதன் கடமைகளினின்று விடுதலைப்பண்ணப்பட்டுள்ளாள். இக்கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சகோதரியானவள் அவள் பக்கத்தில் இந்த இரண்டு நிரூபணங்களையும் பெற்றிருக்கின்றாள் மற்றும் மறுமணம் செய்வது ஞானமான மற்றும் சரியான காரியமாய் இருக்குமென அவள் எண்ணும்பட்சத்தில், மறுமணம் செய்வதற்குரிய எல்லா உரிமையையும் உடையவளாய் இருக்கின்றாள்.

கணவன் மற்றும் மனைவியின் இடையிலான ஒரு பிரிவினையை மாத்திரமே நமது கர்த்தர் குறிப்பிட்டார் என்று எண்ணிக்கொள்ள முடியாது; ஏனெனில் ஒருவேளை அவிசுவாசி பிரிந்துபோனால், பிரிந்துபோகட்டும் – அதைத் துன்பமாகக் கருதாமல், அதை ஓர் ஆசீர்வாதமாய்க் கருதுங்கள் என்று பரிசுத்த பவுலடிகளார் ஆலோசனை கூறுகின்றார். கணவனோ அல்லது மனைவியோ இப்படிப் பிரிந்து போவது, விவாகரத்தாகுவதாகும் என்று அவர் கூறவில்லை. விவாகரத்து என்பது உண்மையான திருமண ஒப்பந்தத்தை முழுமையாய் முறித்துப் போடுவதாகும். திருமண பந்தத்தை மிகவும் அக்கறையற்ற விதத்தில் கையாளப்படுவதை இயேசு குறையாய்க் கூறி, கண்டனம்பண்ணினார். வேசித்தனத்தினால் மாத்திரமே தவிர மற்றப்படி திருமண ஒப்பந்தமானது முழுமையாய் முறிக்கப்பட முடியாது.

நம்முடைய நாட்களில் இக்காரியங்களானது நீதிமன்றங்களினால் நடத்தப்படுகின்றது. இதோடுகூட வேதமாணவர்கள் தேவவசனத்தினால் தங்களைச் சரிப்படுத்திக்கொள்கின்றனர். ஆண்டவரால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே காரணம் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே தவிர, மற்றப்படி நீதிமன்றமானது விவாகரத்து அளிக்கும் காரியமானது, திருமண ஒப்பந்தத்திலிருந்து விடுதலையாக்குவதாக ஒரு வேதமாணவனால் கருதப்படக்கூடாது. ஆனால் வேசித்தனத்தின் காரணமான நீதிமன்ற விவாகரத்தானது அல்லது பிரிந்திருப்பவரின் இரண்டாம் திருமணம் காரணமான நீதிமன்ற விவாகரத்தானது மதிக்கப்பட வேண்டும்].