சுவாரசியமான கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5122 (page 330)

சுவாரசியமான கடிதங்கள்

INTERESTING LETTERS

சபை ஒழுங்குத் தொடர்பான கேள்விகள்

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:–

எங்களில் சிலர் பின்வரும் இரண்டு காரியங்களில் உங்களது ஆலோசனை வேண்டுமென விரும்புகின்றனர்; அவை:

(1) சபையால் அங்கீகரிக்கப்படாத அல்லது நியமிக்கப்படாத சிறு கூட்டங்களை நடத்திடும் அச்சபையின் சகோதரர்கள்பால் நாம் எத்தகைய மனோநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?

(2) சாட்சிக்கூட்டங்கள் நடத்துவதற்கான உங்களது பரிந்துரையையும், அவைகள் குணலட்சணத்தின் வளர்ச்சியில் பிரயோஜனமாய் உள்ளன என்று நீங்கள் தெரிவித்துள்ளதையும் நாங்கள் கவனித்திருக்கின்றோம். ஆனால் இத்தகையக்கூட்டங்கள் நடத்திடுவதற்கு மூப்பர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கையிலும், சபை இக்கூட்டங்களைப் பெற்றிருக்க விரும்புகையிலும், நாங்கள் என்ன செய்திட வேண்டும்?

இதழாசிரியரின் பதில்:

சபையில் ஓர் அங்கத்தினனாக உரிமைபாராட்டிடும் ஒரு சகோதரன், கூட்டங்கள் நடத்துவது தொடர்புடைய விஷயத்தில் அச்சபையாரை முற்றிலும் புறக்கணிப்பது என்பது ஞானமற்றக் காரியமாயிருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். அவர் கூட்டங்களைத் துவங்குவதும், அது குறித்து விளம்பரமிடுவதும், மற்றும் சபைகூட்டம் வழக்கமாய் நடைபெறும் நேரங்களில் அவைகளை நடத்துவது என்பதும், சபையைப் புறக்கணிப்பதாகும்; மற்றும் ஒரே மணி நேரத்தில் கூட்டங்களை நடத்துவது என்பது எதிர்ப்பாகவே கருதப்படலாம்.
இப்படியெல்லாம் நடைபெற்றாலும் கூட, இவை குற்றத்திற்கான அல்லது சபையில் நீக்கப்படுவதற்கான காரணமாகாது. இராஜ்யத்தின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறதினால், அது பரிசுத்த பவுலடிகளார் தெரிவிப்பதுபோன்று, சுவிசேஷமானது விரோதமான மற்றும் எதிர்க்கிற விதமாய் பிரசங்கிக்கப்பட்டாலும், அது பிரசங்கிக்கப்படுகிறதினால் சபையார் களிகூர வேண்டும் (பிலிப்பியர் 1:15-18). எந்த ஒரு கிறிஸ்தவ பிரிவிலுள்ள கிறிஸ்தவ ஊழியக்காரனையும், அவரது பிரயாசத்தையும்குறித்துத் தீமையாய்ப் பேசிடுவதற்கு அல்லது சிந்திப்பதற்கு உரிமையில்லாததுபோல, அச்சகோதரனையும், அவரது பிரயாசங்களையும் குறித்துத் தீமையாய்ப் பேசிடுவதற்கு அல்லது சிந்தித்திடுவதற்கு சபையாருக்கு உரிமையில்லை.

ஒருவேளை வழக்கமான கூட்டமாக இல்லாமல், எதிர்க்கும் விதமான கூட்டமாக இல்லாமல், ஒரே கால நேரங்களில் நடத்தப்படும் கூட்டமாக இல்லாமல், மாறாக தனிமையில் ஒருவரைச் சந்திக்கையில் அல்லது கொஞ்சம் பேரைச் சந்திக்கையில், சிலருக்குச் சிறு உரைக்கொடுப்பதற்கென ஒரு சகோதரன் அழைக்கப்படுவாரானால், இதில் கண்டனம்பண்ணுகிறதற்கு எந்த முகாந்தரமுமில்லை. மாறாக நாம் அனைவரும் அவருடைய அன்பையும், வைராக்கியத்தையும் பாராட்டிட வேண்டும் மற்றும் சகோதரனுக்குக் கிடைத்த சிலாக்கியங்களுக்காகக் கர்த்தரை ஸ்தோத்திரிக்க வேண்டும் மற்றும் நமக்கான நன்மைகளை நாடிட வேண்டும்.

கர்த்தருடைய வேலையை மேற்பார்வையிடுவதற்கான மற்றும் சுவிசேஷத்தை இன்னொருவர் பிரசங்கிப்பதைத் தடுப்பதற்கான உரிமையினை, அவர் நம்மில் யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். முற்காலத்துச் சீஷர்கள் ஒருமுறை இப்படிச் செய்தார்கள் மற்றும் அவரோ: “அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்” (மாற்கு 9:39) என்று கூறிக் கடிந்துகொண்டார் (மாற்கு 9:38-40). மீண்டுமாக “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்தேயு 18:20) என்றும் கூறினார். அவர் அந்த இரண்டு அல்லது மூன்று பேர், மனிதரால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும், அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆகையால் அன்பின் அடிப்படையில், ஞானத்தின் அடிப்படையில், திவ்விய சித்தம் மற்றும் சபையின் ஒருமைப்பாட்டிற்கான மதிப்பின் அடிப்படையில் மாத்திரமே, சபையினுடைய எந்த ஒத்துழைப்பும் காணப்பட வேண்டும்.

நாம் மிகவும் வலியுறுத்தியுள்ளதான வாராந்தர சாட்சிக்கூட்டங்களுக்கு எதிர்ப்பவர்கள் இருக்கின்றார் என்று கேள்விப்படுகையில், நமக்கு ஆச்சரியமே ஏற்படுகின்றது. இவ்வகையான கூட்டமானது, எங்களுடைய அனுபவத்தின்படி, ஆவிக்குரியவற்றில் மிகவும் உதவிகரமானவைகளில் ஒன்றாகும். அநேகம் இடங்களில் ஒரு கூட்டம் நடத்தப்படும் அவசியம் என்று கருதப்பட்டால், சபையார் சந்தேகத்திற்கிடமின்றி வாராந்தர சாட்சிக் கூட்டத்தையே அனைத்திலும் சிறந்தது மற்றும் மிகவும் உதவிகரமானது என்பார்கள். புதன்கிழமை மாலை வேளையானது இவ்வகைக் கூட்டங்களுக்கு மிகப் பொருத்தமானதாக இருக்குமென்று நாம் பரிந்துரைக்கின்றோம். முந்தின வியாழக்கிழமைக்கான மன்னாவானது வாராந்தர ஆய்வுபொருளாக இருக்கும்படிக்கு நாம் ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கிறோம். இதைக் கடைப்பிடிக்கையில், உலகமெங்குமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் ஒரே விஷயத்தின் அடிப்படையில் ஆராய்ந்திட முடியும் மற்றும் சிந்தித்திட முடியும் மற்றும் அதே அடிப்படையிலான அனுபவங்களைப் பகிர கேட்டிடலாம் மற்றும் இதனால் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

எங்குமுள்ள சபையார் இம்முறையை நடத்திப்பார்க்க நாங்கள் பரிந்துரைக்கின்றோம். ஜீவியத்தின் அனுபவங்களில் கர்த்தருடைய வழிநடத்துதலை எதிர்ப்பார்க்கும் பழக்கம் வந்திடுமானால் மற்றும் அனுபவங்களையும், படிப்பினைகளையும் கவனித்து, அவைகளைத் திவ்விய வார்த்தைகளுடைய அறிவுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்திடும் பழக்கம் வந்திடுமானால், அவர்கள் சாட்சி பகிர்ந்திடுவதற்கு அநேகவற்றைப் பெற்றிருப்பார்கள். இவ்வழிமுறையினைப் பின்பற்றுபவர்கள், முந்தையக் காலங்களைக் காட்டிலும் இப்பொழுது எப்படி ஒவ்வொரு நாளும் மிகவும் விலையேறப் பெற்றதாய் உள்ளது என்று கவனிக்கையில் ஆச்சரியமே அடைவார்கள்.

அநேகருக்கு வாழ்க்கை என்பது அன்றாடக் கடமையாக அல்லது ஒரு கனவாகக் காணப்படுகின்றது. புதுச்சிருஷ்டிகளென நாம் ஒவ்வொரு நாளையும், கிறிஸ்தவ அனுபவங்களினாலும் மற்றும் திவ்விய வார்த்தைகளினால் வழிநடத்தப்படும் மற்றும் வனையப்படும் எண்ணங்களினாலும் நிரம்பினவையாகப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றோம். இந்தப் பாக்கியமான நிலைமையானது, நாம் சுட்டிக்காட்டியுள்ளதான வழிமுறையினால் பெரிதும் அடையப்பெறுகின்றது. நாம் வாசித்திருக்கும் வசனங்களின் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கிருபையிலுள்ள நம்முடைய வளர்ச்சியானது காணப்படாமல், மாறாக தேவனுடைய சித்தம் குறித்து நாம் ஏற்கெனவே அறிந்திருப்பவைகளை மற்றும் தினந்தோறும் கற்றுக் கொண்டிருப்பவைகளை நம்முடைய இருதயங்களும், மனங்களும், சித்தங்களும் செயல்படுத்துவதின் அடிப்படையிலேயே காணப்படுகின்றது.

மூப்பர்கள் அல்ல, சபையாரே, தாங்கள் என்ன கூட்டங்கள் நடத்த விரும்புகின்றார்கள் என்பதைத் தீர்மானித்திட வேண்டும். மேலும் சபையார் தீர்மானித்திடும் போதும்கூட, மூப்பர்கள் ஊழிய பொறுப்பினின்று விலகுவதற்குரிய (resigning) உரிமையினை உடையவர்களாகவே நிச்சயமாகக் காணப்படுகின்றனர். கர்த்தருடைய வீட்டாருக்கு ஊழியஞ்செய்ய விரும்புவதற்குப் பதிலாக, அதை ஆளுவதற்கு விரும்பிடும் இத்தகைய மூப்பர்கள் ஊழியத்தினின்று விலகுவது என்பது மூப்பருக்கும், சபையாருக்கும் நலம் பயக்கின்றதாய் இருக்கும்.

எங்களது அனுபவங்களின்படி, பெரும்பாலும் எதிர்ப்புகள் என்று தோன்றுகிறவைகள், தவறான புரிந்துகொள்ளுதல்களாய்க் காணப்படுகின்றன. மீண்டுமாக வேதாகம பாடங்களின் ஆறாம் தொகுதியினைக் கவனமாய் ஆராய்ந்திடும்படிக்கு நாம் ஆலோசனைக் கூறுகின்றோம். நம் அனைவரின் ஞாபகங்களானது எத்தனை ஓட்டை ஒழுக்காக இருக்கின்றது என்பதை அருமையான நண்பர்களே, உங்களுக்கு நினைப்பூட்டுகின்றோம்; வேதாகம பாடங்களினுடைய முழு ஆறு தொகுதிகளையும், ஒவ்வொரு வருடமும், நாளொன்றிற்குப் பன்னிரண்டு பக்கங்கள் வைத்து வாசிப்பதாகிய அநேகரால் பின்பற்றப்பட்டுவரும் வழிமுறையின் ஞானத்தை அருமையான நண்பர்களே, உங்களுக்கு நினைப்பூட்டுகின்றோம். இவ்வழிமுறையினைப் பின்பற்றுபவர்கள் மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தகவல் கொடுத்துள்ளனர் மற்றும் சத்தியத்தில் மிகுந்த தெளிவாகியுள்ளதற்கு இவர்கள் சான்றும் பகர்கின்றனர்.