R2924 (page 392)
தேவனுடைய ஆவியின் பரிசுத்த அபிஷேகித்தலுடைய தாக்கத்தின் கீழ் வந்திருப்பதற்கான சான்று பகருகின்றவர்களை மாத்திரமே வழிநடத்துபவர்கள் முதலானவர்களாகத் தேர்ந்தெடுப்பதற்கு கர்த்தருடைய ஆடுகள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். வழிநடத்துபவராக விரும்புபவர் எவ்வளவுதான் திறமைகள் கொண்டிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல; அவர் அதிகமாய்த் திறமைகள் கொண்டிருக்கும்போது, அவரது வழிநடத்துதலிலிருந்தும் மிகுந்த ஆபத்து வருகின்றதாய் இருக்கும். கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் மாத்திரமே, எவ்விதத்திலும் தலையானவருடைய வாய்க்கருவிகளெனவும், பிரதிநிதிகளெனவும் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். நமது கர்த்தராகிய இயேசுவின் மீதான தேவனாகிய கர்த்தரின் ஆவியானது, சுவிசேஷத்தினைப் பிரசங்கிப்பதற்கு அவரை அபிஷேகித்தது அல்லது தகுதிப்படுத்தினதுபோல, அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்டதான அதே அபிஷேகம்தான் கர்த்தரினால் அங்கீகரிக்கப்படுகிற விதத்திலும், அவரது மந்தைக்குப் பிரயோஜனமாய் இருக்கும் விதத்திலும், சாட்சிபகரும் அல்லது பிரசங்கிக்கும் இவ்வூழியத்திற்காக ஒருவரைத் தகுதிப்படுத்துகின்றதாய் இருக்கும் (ஏசாயா 61:1). கர்த்தருக்கு முழு அர்ப்பணம் பண்ணியுள்ள, தெய்வீகச் சித்தத்திற்கு முழுமையாய்க் கீழ்ப்படிதலுள்ள மனநிலையில் காணப்படாத யாவரும், ஒருவகையில் எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள்; மற்றும் அவர்கள் எந்தளவுக்கு எதிர்ப்பவர்களாய் இருப்பார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் தவறானவர்களாக அல்லது பொல்லாதவர்களாகக் காணப்படுவார்கள். “சிட்சையை நீ பகைத்து (கர்த்தருடைய ஏற்பாடுகளுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்த மறுத்து), என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக (அலட்சியமாய்) எறிந்துபோடுகிறாய் (சங்கீதம் 50:17).