R3014 (page 159)
பெயர்க்கிறிஸ்தவ அமைப்புகளில், சபையார் மத்தியிலுள்ள ஒரே அங்கத்தினனைக் கொண்டு பிரசங்கம் அனைத்தையும், போதித்தல்கள் அனைத்தையும் செய்திடும் வழக்கமானது, மிகுதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒன்றாய் இருக்கின்றது; இது சபை இரண்டு வகுப்பினராய் – குருமார் வகுப்பார் மற்றும் சாதாரணமானவர்கள் வகுப்பாரென்று பிரிவுப்படுவதற்கு ஏதுவாயிற்று; இன்னுமாக இது இந்தத் தற்கால ஜீவியத்தின் காரியங்கள் மீது கவனம் செலுத்த முடியாத அளவுக்கும், மனுஷர் முன்பாக யோக்கியமானவைகளைச் செய்யமுடியாத அளவுக்கும் சொற்ப எண்ணிக்கையில் காணப்படும் குருமார் வகுப்பார் மீது அதிகப்படியான வேலையினைக் குவித்துவிட்டதாய்; இருக்கின்றது; மற்றும் பெரும்பான்மையான கர்த்தருடைய ஜனங்களிடமிருந்து, அவர்களது பொறுப்பினையும், ஊழியத்தில் அவர்களுடைய பங்கினையும் எடுத்துப்போடுவதினால் – அவர்களை ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதத்தினை இழக்கவும் செய்து மற்றும் சத்தியத்தின் ஊழியக்காரர்களென அவர்கள் வளர்ச்சியடைவதையும், கிருபையில் வளர்வதையும் தடைப்பண்ணுகின்றதாய் இருக்கின்றது.
சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதற்குரிய தாலந்துடையவர்களால், அது பிரசங்கிக்கப்படுவதை நாம் எதிர்த்திடவில்லை மாறாக கர்த்தர் தம்முடைய ஜனங்களின் கூட்டங்கள் அனைத்துமே பிரசங்கிக்கும் வகையாக இருப்பதற்கு ஒருபோதும் நோக்கம் கொள்ளவில்லை என்பது நம்முடைய எண்ணமாக இருக்கின்றது. இப்படியாக ஆதி திருச்சபையில் இருக்கவில்லையென்று அப்போஸ்தலன் 1கொரிந்தியர் 12; 1தெசலோனிக்கேயர் 5:11-ஆம் வேதவாக்கிய பகுதிகளில் விவரிக்கின்றார். எந்தவொரு சிறு கூட்டத்தார் மத்தியிலும் காணப்படும் தாலந்துகள் எதுவாயினும், அது வளர்க்கப்படுவதற்குப் பிரயாசம் எடுக்கப்பட வேண்டும் – அதாவது வேதவாக்கியங்களில் முன்வைக்கப்பட்டுள்ளதான தெய்வீகத் திட்டம் தொடர்புடையதாகக் கருத்துகள் சொல்ல, விளக்கம் சொல்ல தூண்டிடுவதற்கும், இவைகளை வெளிக்கொணர்வதற்கும் பிரயாசங்கள் எடுக்கப்பட வேண்டும். பிரசங்கிக்கத் தாலந்துடையவர்கள், தன்னடக்கத்துடன் பிரசங்கிப்பார்களாக இவர்கள் மற்றவர்களுக்குச் சத்தியத்திற்கான ஊழியத்திலுள்ள பல்வேறு பங்குகளில் உதவியும் செய்வார்களாக. ஒவ்வொருவரும் கிருபையில் வளர்வதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு உதவிடுவதற்கும் நாடுகையில் – அநேகமாக அருகாமையிலுள்ள ஊர்களிலோ அல்லது அதே பட்டணத்திலுள்ள ஏதோ ஒரு பகுதியிலோ – வாய்ப்புகளுக்கான கதவினை இன்னுமாகவும், அகலமாகவும் – கர்த்தர் திறந்தருளுவார். அறுவடையோ மிகுதி மற்றும் வேலையாட்களோ குறைவாய்க் காணப்படுகின்றனர் மற்றும் கர்த்தருக்கும், அவரது நோக்கங்களுக்கும் உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்கள் யாவரும், ஒருவருக்கொருவர் ஊழியம் புரிந்திடுவதற்கு மாத்திரமல்லாமல், மற்றவர்கள் ஊழியம் புரியத்தக்கதாக, அவர்களுக்கு உதவி புரிந்திடுவதற்கும் ஒருவருக்கொருவர் எப்போதும் பிரயாசம் எடுப்பவர்களாகக் காணப்பட வேண்டும்.