R1900
செப்டம்பர் 15-இன் நமது வெளியீட்டில், வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களானது – வேதாகம வாக்கியங்களை நிதானமாய்ப் பகுப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் ஒரே சாத்தியக்கூறாய் உள்ள யுகங்களுக்கடுத்த ஒட்டுமொத்த திட்டங்களின் பொதுவான அம்சங்களில், ஒவ்வொருவரையும் உறுதிபடுத்துவதன் வாயிலாகச் சபையைக் கட்டியெழுப்புவதற்குப் பிரயோஜனமானவைகள் என்று நாங்கள் பரிந்துரைத்திருந்தோம். இந்த வழிமுறைக்கு நான்கு வரவேற்கத்தக்க விசேஷித்த அம்சங்கள் காணப்படுகின்றன; அவை: (1) இது ஓர் அதிகாரத்திலுள்ள ஒரு சில வசனங்கள் மீது கவனத்தை எல்லைக்குட் படுத்துவதற்குப்பதிலாக, ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தல் விசேஷம் வரையிலுமான வேதவாக்கியங்கள் மொத்தத்தையும் ஆராய்வதற்கும், பயன்படுத்திடுவதற்கும் வழிவகுக்கின்றது. இது வேதாகமத்தினுடைய ஒரு வசனம் மற்றும் அதிகாரத்தின் ஆராய்ச்சியாக இராமல், தலைப்பின் கீழான ஆராய்ச்சியாக இருக்கும். (2) இது ஆண்டவருடைய பண்டகசாலையிலிருந்துள்ள ஐசுவரியமான மற்றும் சத்தான ஆகாரமென நாம் கண்டுகொண்டுள்ளதானவைகளில் மனங்களையும், இருதயங்களையும் புத்துணர்வடையத்தக்கதாக வழிநடத்திடும் மற்றும் இருதயத்தைத் திருப்தியோ அல்லது பலப்படுத்திடவோ செய்திடாத வீணான மனித கற்பனைகளிலிருந்து தூர வழிநடத்திடும். (3) இது ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கும், ஆராயப்படும் விஷயம் குறித்து வேதவாக்கியங்கள் கூறும் அனைத்திற்கும் இசைவாய்ச் சத்தியம் பற்றின தனது கருத்தினைத் தொகுத்திட கற்றுக்கொள்வதற்கும் மற்றும் தான் காண்கின்றதான சத்தியங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திடுவதற்கும்கூடப் பழக்குவிக்கின்றது. (4)
இவைகளே சபையிலுள்ள சகல போதித்தல்களுக்குமான நோக்கங்களாகும், அதாவது அப்போஸ்தலன் குறிப்பிடுவது போன்று, “பரிசுத்தவான்கள் பக்திவிருத்தி அடைவதற்காகவும், சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் ஆகும் (எபேசியர்4:12). எனினும் இவ்வகைக் கூட்டங்கள் தொடர்பான யோசனைகளைச் சிலர், வெகு சிலர் முற்றிலும் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளனர் மற்றும் வேதாகமம் வாசிப்பதைக் கைவிடவும், அதற்குப் பதிலாக மில்லேனியல் டாண் வெளியீட்டை வாசிக்கவும் நாம் அறிவுரை வழங்கினதாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் கவனித்தோம்; அவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான் என்று சொல்வதற்கு நாம் மகிழ்கின்றோம். அவர்கள் புரிந்திருப்பதுபோல் எங்கள் கருத்துகள் இருந்ததில்லை. வேதாகமத்தையோ, டாண் வெளியீட்டினையோ வெறுமனே வாசித்தல் என்பது, ஒவ்வொருவனாலும் தனக்கென்று தனிப்பட்ட விதத்தில் வாசித்துக்கொள்ளப்படலாம்.
இதற்கு மாறாக வேத ஆராய்ச்சிகளை வரையறையற்றதாக்கிடுவதே யோசனையாகும்; மற்றும் டாணில் முன்வைக்கப்பட்டுள்ளதான தேவனுடைய ஒழுங்கின்படியான திட்டத்தைப் படிக்கையில், வெளிச்சம் நமக்குக் கடந்து வந்திருக்கிறதென்றால், நாம் அதே கண்ணோட்டத்தில் தொடர்ந்து ஆராய்கையில் அத்திட்டமானது, அதன் நுட்பமான விவரங்கள் அனைத்திலும் அதிகமதிகமாய்த் தெளிவாகிடும். ஒருவேளை யுகங்களுக்கடுத்த திட்டமானது மாத்திரமே, தெய்வீகத் திட்டத்தினுடைய மெய்யான முக்கிய பொதுவான அம்சங்களைத் (outline) தெரிவிக்கிறதென்றால் மற்றும் அந்த முக்கிய பொதுவான அம்சங்களை (outline) நாம் முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளோமானால், யுகங்களுக்கடுத்த தேவத்திட்டத்தினுடைய நுட்பமான விவரங்களைத் தொடர்ந்து ஆராய்வதிலும் அதே உதவிக்கரங்களை நாம் பயன்படுத்திடுவோமாக, அதே தெய்வீகத் திட்டத்தினைக் கவனிப்போமாக.
இந்த நோக்கத்திற்காகத்தான் நாம் “வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களை ஆலோசனையாகத் தெரிவித்தோம் மற்றும் பரிந்துரைத்திட்டதான இம்முறைமைக்கு உதாரணமாக, டாண் – ஒன்றாம் தொகுதியின் முதல் பத்தியினுடைய மாதிரி ஆராய்ச்சியினை வழங்கியுள்ளோம்:
• திவ்விய வெளிப்படுத்தல் என்றால் என்ன? – 2 பேதுரு 1:21; 2 தீமோத்தேயு 3:16,17.
• எப்போது மற்றும் எப்படிப் பாவம் உலகத்திற்குள் வந்தது? – ரோமர் 5:12; etc.
• நீதியின் சூரியன் யார்? – மல்கியா 4:1,2; மத்தேயு 13:43; தானியேல் 12:3.
• இந்தச் “சூரியன் எப்போது உதிப்பார்? – அப்போஸ்தலர் 3:19-21; கொலோசெயர் 3:4.
• அதன் பிரகாசத்தின் விளைவு என்ன? – மல்கியா 4:1,2; ஏசாயா 60:18,19; 25:7-9; அப்போஸ்தலர் 3:23.
• அதன் குணமாக்குதல் என்னவாக இருக்கும் மற்றும் அது எப்படி நிகழ்த்தப்படும்? – ரோமர் 5:18,19.
• பாவமும், மரணமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்காலத்தின் அழுகையையும், உபத்திரவத்தையும் உண்டுபண்ணினதா? எப்படி? எதன் அடிப்படையில் “விடியலையும் மற்றும் அதன் சந்தோஷங்களையும் நாம் எதிர்ப்பார்த்திடலாம்? – ரோமர் 5:6-8; 14:9; 1 கொரிந்தியர் 15:3,21; 2 பேதுரு 1:16,19; நீதிமொழிகள் 4:18; யோபு 14:13-15; சங்கீதம் 49:14,15.
• இரவைத் தொடர்ந்து அந்த “மகிமையான நாள் வருமா? –வெளிப்படுத்தல் 21:21-25; ஏசாயா 60:20,21.
பிரயோஜனம் உண்டாகத்தக்கதாக, வேறு வேதவாக்கியங்கள் முன்கொண்டுவரப்படலாம்; எனினும் மிக அதிகளவிலான சுதந்தரமானது அனுமதிக்கப்படக்கூடாது என்பதின் அவசியத்தினை அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் கூட்டத்தை வழிநடத்துபவர் தனது பகுத்துணர்தலைப் பிரயோகித்து, ஒருவர் அதிகமாய் வேறொன்றை விவரித்துக்கொண்டிருக்கையில் அவருக்கு அன்போடு அதைக் குறித்து நினைப்பூட்டிட வேண்டும். சபையார் பல்வேறு வேதாகமங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்தக் கூட்டங்கள் யாவும் துதித்தலோடும், ஜெபத்தோடும் துவங்கி, முடிக்கும்படிக்கு நாம் பரிந்துரைக்கின்றோம். எழுதுகோலை / பென்சிலைப் பெற்றிருந்து, தங்கள் டாண் புத்தகத்தின் ஓரத்தில் (margin) ஓரக்குறிப்புகளைக் குறித்துக்கொள்ளலாம் எனும் சிலருடைய திட்டமிடுதல்கூட வரவேற்கத்தக்கது. சத்தியத்தினைச் சந்தேகமுடையவர்களுக்கு மெய்ப்பித்துக் காண்பிப்பதற்கு மீண்டுமாகப் பிரயாசம் எடுப்பது என்பது, அனைவருக்குமே மிக உதவியாகக் காணப்படும்.
இந்த ஒரு பத்தியிலுள்ள காரியங்களிலிருந்து, மூன்றுபேர் கொண்ட ஒரு வகுப்பிற்குத் திரளான மற்றும் ஐசுவரியமான வேதாகம உணவினை ஒரு மணி நேரம் பெற்றுக்கொள்ளலாம்; மற்றும் பன்னிரண்டு பேருள்ள ஒரு பெரிய கூட்டத்தார் ஒரு கூடுகையில் அனைத்தையும் பார்த்து முடிக்க முடியாது. கர்த்தருடைய மந்தையின் இந்தச் சிறு சிறு கூட்டத்தார்கள், வாரத்தில், ஒருமுறை இந்த “வேத ஆராய்ச்சிக்கான டாண் குழுக்களை பெற்றிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம். இது “சுவிசேஷவேலையினை மற்றவர்களுக்குச் செய்திடுவதற்கு நிபந்தனையாகக் காணப்படும் வேதவசனத்தினுடைய புரிந்துகொள்ளுதலில் அனைவரையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக்கிடும் (எபேசியர் 4:12). இது – ஒன்றுகூடி, ஊகங்கள் செய்திடுவதற்கும், வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான ஒவ்வொரு நபரைக்குறித்தும் மற்றும் ஒவ்வொரு காரியத்தைக்குறித்தும் நிழல்களை உருவாக்கிடுவதற்கு முயற்சிப்பதற்கும் – அதாவது புதுக் கருத்துக்களை உண்டுபண்ணும் திறமையின் காரணமாகப் பெருமைக்குள்ளாக (மற்றும்) “புறம்பான இருளுக்குள்ளாக அநேகரை வழிநடத்திட்டதான ஒரு திட்டத்தை முயற்சிப்பதற்கும் பதிலாக, இது – மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாகும். இது – தற்செயலாக ஏதோ ஒரு தலைப்பை அல்லது முன்கூட்டியே நியமிக்கப்படாத எந்த ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வதைப் பார்க்கிலும், மிகவும் பிரயோஜனமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடமும் அனைவராலும், அதிலும் விசேஷமாக வழிநடத்துபவரால் அல்லது மூப்பரால் நன்கு சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். கலந்துகொள்பவர் யார் ஒருவராலும் யோசனையாகத் தெரிவிக்கப்படும் வேறு எந்த ஒரு வேதாகம தலைப்பையும், கருத்தில் எடுத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு கூட்டத்தாரும் விருப்பத்துடன் காணப்பட வேண்டும் மற்றும் பிரயோஜனமான தலைப்பாக இருக்குமென அக்கூட்டத்தாரில் பெரும்பான்மையானவர்களால் கருதப்பட வேண்டும். இந்தக் காரணத்தின் நிமித்தம் (வேறு வேதாகம தலைப்புகள் ஆராயப்படுவதற்காக) டாண் பாடங்களானது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது கூடுதலாக ஒரு கூடுகை நியமிக்கப்படலாம்.