R5396 – உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5396 (page 44)

உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ

WHERE YOUR TREASURE IS

லூக்கா 12:13-34

“”உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (வசனம் 34)

இயேசு யூதர்கள் கூட்டத்தாரால் சூழப்பட்டிருக்க, அவர்களில் ஒருவர் இயேசு செல்வாக்கு மிக்கவர் என்பதை உணர்ந்துக்கொண்டு, தன்னுடைய குடும்ப ஆஸ்தியில் தனக்கு ஒரு பாகம் கொடுத்துவிடும்படிக்கு, தன்னுடைய சகோதரனுக்குக் கட்டளையிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அதற்கு, தாம் நியாயாதிபதியாகவும், பங்கிடுகிறவராகவும்இல்லை என்று இயேசு மறுத்தார். இந்த விஷயத்திலும், வேறு விஷயங்களிலும் இயேசுவின் பின்னடியார்கள், தங்களுடைய ஆண்டவரைப் பின்பற்றுவார்களானால் நலமாயிருக்கும். அநேகர், மற்ற மனுஷர்களின் விஷயங்களில் தலையிடுகிறவர்களாக இருந்து, தாங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே தங்களுக்கான கர்த்தருடைய கட்டளை எனும் காரியத்தைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

சமுதாயமானது சில சட்டதிட்டங்களையும், விதிகளையும் ஏற்படுத்தி வழங்கியுள்ளது. இந்த அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டங்களில் எவையெல்லாம் நமக்கு இசைவாக இல்லையோ, அவைகள் விட்டுவிடப்பட வேண்டும். நமக்கு இருப்பவைகளிலும், தெய்வீக ஞானமானது நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பவைகளிலும் நாம் திருப்திக்கொண்டிருக்க வேண்டும். இயேசு செய்வதற்கு வேறொரு வேலை இருந்தது போன்று, அவருடைய பின்னடியார்களுக்கும் வேறொரு வேலை இருக்கின்றது. மகிமையான மேசியாவின் இராஜ்யத்திற்காக ஆயத்தம் செய்வதே, அந்த வேறொரு வேலையாகும். நமக்கு வாக்களித்துள்ள இந்த ஐசுவரியங்களானது, காணப்படும் பூமிக்குரிய ஐசுவரியங்கள் அனைத்தைக் காட்டிலும் மேலானதாகும்; மேலும் பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிட்டுள்ளப்படி பூமிக்குரிய ஐசுவரியங்களானது குப்பையாகவும், தூசியாகவும் காணப்பட்டு, நமது கர்த்தர் வாக்களித்துள்ள ஆசீர்வாதமான காரியங்களோடு ஒப்பிடுவதற்குப் பாத்திரமானவைகள் அல்ல.
இயேசு மறுப்புத் தெரிவிக்கும் வண்ணமாக, பண ஆசைக்கு எதிராக எச்சரித்துப் பேசினார். இதிலிருந்து ஆஸ்தி, அச்சகோதரனுக்கே நியாயப்படிச் சொந்தமானது என்பதும், இயேசுவிடம் வேண்டிக்கொண்ட மனுஷனோ தன்னுடைய நியாயமான உரிமைகளுக்கும் மிஞ்சி ஆசைப்பட்டான் என்பதும் தெரிகின்றது. மற்றவருக்குச் சட்டப்படிச் சொந்தமானதை, இம்மனுஷன் அடைய ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றான். பூமிக்குரிய உடைமைகள், ஆஸ்திகள் திரளாய் இருப்பது என்பது ஜீவன் ஆகாது என்பதை அம்மனுஷனும், நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளவும் இயேசு விரும்பினார். ஒரு மனுஷன் ஐசுவரியத்தை மிகுதியாய்க் கொண்டிருந்தாலும், அவன் துக்கமாய் இருக்கலாம்; அதேசமயம் ஒருவன் தரித்திரத்தில் இருந்தும், அவன் சந்தோஷமாய்க்காணப்படலாம். ஒருவனுடைய ஆத்துமா தேவனிடத்தில் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையிலும், தேவனிடத்தில் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலுந்தான், சந்தோஷம் காணப்படும்.

இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள ஆவிக்குரிய இஸ்ரயேலருக்கு, மாம்சீக இஸ்ரயேலர்கள் நிழலாய் இருந்தார்கள். மாம்சீக இஸ்ரயேலர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வார்களானால், அவர்கள் ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்ளலாம் என்பதாகவும், அவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கெனப் பயன்படுத்தப்படுவார்கள் என்பதாகவுந்தான் மாம்சீக இஸ்ரயேலர்களுக்குத் தேவனால் பண்ணப்பட்ட வாக்குத்தத்தம் காணப்பட்டது. மாம்சீக இஸ்ரயேலர்களும், மீதமான மனுஷர்களைப் போலவே பாவிகளாக இருந்தபடியால், அவர்களால் தெய்வீகப் பிரமாணங்களைக் கைக்கொள்ள முடியவில்லை, என்பதே அவர்களுக்கு இருந்த பிரச்சனை; ஆகவே அனைத்து ஜாதிகள் மீது, தேவன் தம்முடைய இராஜ்யத்தில், ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கு அவர்களைப் பயன்படுத்துவதற்கு, மாம்சீக இஸ்ரயேலர்கள் தகுpயற்றவர்கள் ஆனார்கள். எனினும் இராஜ்யம் பற்றின நம்பிக்கையே அவர்களுடைய மனங்களில் எப்பொழுதும் மேலோங்கி காணப்பட்டு, அவர்கள் அனைவராலும் நாடப்பட்டதாகவும் இருந்தது.

அனைவருக்குமான மீட்கும்பொருளைக் கொடுப்பதற்கும், மேசியாவின் இராஜ்யத்தில் தம்முடன் உடன் அங்கத்தினராய் இருக்கத்தக்கதாக ’உத்தம இஸ்ரயேலர்களை” அழைத்து, இழுத்துக்கொள்ளும் வேலையை ஆரம்பிப்பதற்கும் இயேசு உலகத்திற்கு வந்தார் (1 தீமோத்தேயு 2:6). இயேசுவினால் நியாயப்பிரமாணத்தைப் பூரணமாய்க் கைக்கொள்ள முடியும், மற்றும் அவர் கைக்கொள்ளவும் செய்தார் மற்றும் இதனோடுகூட ஆதாமுக்காகவும், அவருடைய சந்ததிக்காகவும் இயேசு தம்முடைய ஜீவனைப் பலியாக ஒப்புக்கொடுத்தார். இந்தப் பலியானது, மாய்மாலமற்ற, “”உத்தம இஸ்ரயேலர்கள்” அனைவரின் வேண்டுமென்றே செய்யப்படாத தவறுகளுக்காக, அவர் நன்மை செய்ய (அவருக்கு) அனுமதியை உண்டாக்கிற்று. அவர்களால் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு இராஜ்யத்தை அடைய முடியாவிட்டாலும், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதின் மூலமாக, நீதியினால் தரிப்பிக்கப்பட்டு, இவ்வாறாகத் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும். ஆகவேதான் அந்த இராஜ்யத்தின் அங்கத்தினராகும்படிக்கு, பல நூற்றாண்டுக் காலமாக, தேவனால் அங்கீகரிக்கப்படத்தக்கதாக முயன்று கொண்டிருக்கும் ஜனங்களுக்கு இயேசுவின் பிரசங்கங்கள், இராஜ்யத்தின் அடிப்படையில் இருந்தது. இராஜ்யத்தின் வகுப்பாரில் அங்கத்துவம் அடைவதற்காக முதலாவது வாய்ப்பு, யூத ஜனங்களுக்கே அருளப்பட்டது; மேலும் இவர்கள் கிருபையைப் புறக்கணித்த போதுதான் வாய்ப்பானது யூதர்களை விட்டு, புறஜாதிகளிடம் சென்றது. “”அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்” (அப்போஸ்தலர் 13:46). இந்த உண்மைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இயேசுவின் போதனைகள் உலகத்திற்குக் கொடுக்கப்படாமல், மாறாக உலகத்தினின்று தாங்கள் பிரிந்திருப்பதாகவும், மேசியாவின் இராஜ்யத்தில் உடன் சுதந்தரத்துவத்தை அடைவதற்கு தாங்கள் நாடிக்கொண்டிருப்பதாகவும் கூறிக்கொண்ட ஜனங்களுக்காகவே கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்டவர்களுக்கே உண்மையில் புதிய ஏற்பாட்டின் முழுப் போதனைகளும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாத்திரமே கேட்கிற செவிகள் இருந்தது; மேலும், “”கேட்கச் செவியுள்ளவன் கேட்கக்கடவன்” என்று நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. இன்னுமாக சாந்தமுள்ளவர்களுக்கும், தாழ்மையுள்ளவர்களுக்கும், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கும் இராஜ்யத்தின் சுவிசேஷம் பிரசங்கிக்கும்படிக்கு நாம் போதிக்கப்பட்டிருக்கின்றோம்; ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமான நிலைமையில் காணப்படுகின்றனர். மற்றவர்கள் அனைவரும் இராஜ்யத்தின் சுவிசேஷத்திற்குக் குருடர்களாகவும், செவிடர்களாகவும், காணப்படுகின்றனர். இப்பொழுது கேட்கவும், பார்க்கவும் முடியாதவர்கள், மேசியாவின் ஆளுகையின் போது, தங்களுடைய கண்களையும், செவிகளையும் திறக்கப் பெற்றிருப்பார்கள், ஏனெனில் அவர் ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தை ருசி பார்த்திருக்கின்றார். எனினும் இவர்கள் இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய மகிமையான பரம அழைப்புத் தொடர்புடைய விஷயத்தில், இழந்துப் போகிறவர்களாக இருப்பார்கள்.

ஆத்துமாவே, நீ இளைப்பாறி இரு

சகல பூமிக்குரிய இலட்சியங்களிலுள்ள முட்டாள்தனத்தை விவரிக்கும் உவமை ஒன்றை நமது கர்த்தர் கூறினார். ஆனால் அதற்கென்று பூமிக்குரிய இலட்சியங்கள் என்பது, மோசமானவைகள் என்பதாக இல்லை; மாறாக இவைகள் இராஜ்யத்திற்கு முன்பு ஒப்பிடுகையில் ஒன்றுமில்லாதவைகளாய் இருக்கின்றது. இராஜ்யம் மிகுந்த விலையேறப்பெற்ற முத்தாகும்; இதை அடையும்படிக்கு, மற்ற அனைத்து முத்துக்களும், அதாவது மற்ற அனைத்து விலையேறப்பெற்றவைகளும், மற்ற அனைத்து இலட்சியங்களும், மற்ற அனைத்து நம்பிக்கைகளும் ஒதுக்கி வைக்கப்பட்டு, குப்பை என்று கருதப்பட வேண்டும்.

உவமையானது, ஓர் ஐசுவரியமான விவசாயி இருந்ததாகவும், அவன் தன்னுடைய ஐசுவரியங்களைக்கொண்டு நன்மையைச் செய்வதற்குப் பதிலாக கஞ்சனாக இருந்தான், அதாவது சேர்த்துக் குவித்து வைத்துக்கொள்வதில் பிரியமாய் இருந்தான் என்பதாகவும் கூறுகின்றது. அவன் மாபெரும் களஞ்சியங்களையும், பண்டகசாலைகளையும் கட்டிக்கொண்டு, தனக்கு அநேகமானவைகள் இருக்கிறது என்றும், போதுமானதுக்கும் அதிகமாக இருக்கிறது, ஆதலால், தான் இளைப்பாறி இருக்கலாம் என்ற எண்ணத்தினால் தன்னை மகிழ்வித்துக்கொண்டிருந்தான். சீக்கிரத்தில் அம்மனுஷன் மரித்துப்போனதாக உவமை சுட்டிக்காட்டுகின்றது. இவ்வளவாய் அதிகம் ஆஸ்தியைப் பயன்படுத்தாமல், சேர்த்துக் குவித்துக் கொண்டதினால் உண்மையில் அம்மனுஷனுக்கு என்ன நன்மை கிடைத்தது? என்பது நமது கேள்வியாகும். மற்றவர்கள் போட்டிப் போட்டுக்கொள்ளத்தக்கதாக அம்மனுஷன் மற்றவர்களுக்குத்தான் தனது ஆஸ்திகளை விட்டுச் சென்றுள்ளான். அவன் மதிக்கெட்ட ஐசுவரியமான மனுஷனாக இருந்தான். இப்படியாக அம்மனுஷன் தன்னுடைய ஆஸ்திகளை விட்டுச்செல்வதற்குப் பதிலாக, (உயிரோடு இருக்கும்போது) அவன் மற்றவர்களுடைய நன்மைக்காவும், தேவனுடைய மகிமைக்காகவும் ஞானமாய்ச் செலவழித்து, சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தானானால், அவன் தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இருந்திருப்பான். மாறாக இம்மனுஷன், தேவனிடத்தில் ஐசுவரியமற்றுக் காணப்படுபவர்களுக்கு உதாரணமாய்க் காணப்பட்டான். இவன் சுயத்திற்காகவே, தன்னுடைய பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருந்தான்.

அநேகர் இவ்வுமையில் குறிப்பிடப்படாத காரியங்களை, உட்புகுத்திக் கூறிவிடுகின்றனர். அந்த ஐசுவரியமான மனுஷன் நித்தியமான சித்திரவதைக்குள் கடந்துப்போனதாக அனுமானித்துக் கூறுகின்றனர்; ஆனால் இப்படியாக எதையும், கர்த்தருடைய வார்த்தைகள் தெரிவிக்கவில்லை. “”உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும்” எனும் வார்த்தைகளானது, “”இந்த இரவில் நீ உன்னுடைய ஜீவனை இழக்கப் போகிறாய் . . . நீ தரித்திரனாய் மரிக்கப் போகின்றாய்; எதிர்க்காலத்தில் உன்னை ஐசுவரியவானாக இருக்கப்பண்ணுவதற்கு ஏதுவாக நீ உன்னுடைய இருதயத்தில், மனதில் மற்றும் நற்கிரியைகளில் ஆவிக்குரிய ஐசுவரியங்களைச் சேர்த்து வைக்கவில்லையெனில் பூமிக்குரிய ஐசுவரியங்கள் உனக்கு எதிர்க்காலத்தில் ஒன்றும் உதவாது” என்பதையே குறிக்கின்றதாய் இருக்கின்றது.

அந்த ஐசுவரியவான் தனக்கு என்று குவித்துக்கொண்ட ஐசுவரியங்களினால் நன்மையடைவதற்குப் பதிலாக, எதிர்க்கால ஜீவியத்தில் அனுகூலமற்றவனாக இருப்பான். அவன் தன்னுடைய ஐசுவரியங்களைப் பலிச் செலுத்தயிருக்கலாம் அல்லது தன்னுடைய முழு ஜீவியத்தையும் கிறிஸ்து மூலம் தேவனுக்கு அர்ப்பணம் பண்ணி, பின்னர் நேரத்தையும், தாலந்தையும், வாய்ப்புகளையும், ஆஸ்தியையும் உண்மையாய் ஒப்புக்கொடுத்திருக்கலாம். இப்படியாக அவன் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கலாம்; இப்படியாக உயிர்த்தெழுதலில் அவன் உண்மையுள்ள பின்னடியாராக, அவருடைய இராஜ்யத்தின் வகுப்பாரில் அங்கத்தினராக, அவருடைய மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் பங்கடையத்தக்கதாக கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பான். இந்த இராஜ்யத்தின் வகுப்பார், இயேசுவின் மரணமானது ஆதாமின் சந்ததி அனைத்திற்காகச் சுதந்தரித்துக்கொண்ட தெய்வீக ஆசீர்வாதங்களை, ஆயிரம் வருடங்கள் அருளுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். [R5396 : page 45]

தனக்கான வாய்ப்புகளை இழந்த அந்த ஐசுவரியவான் கிறிஸ்துவின் ஆயிர வருட இராஜ்யத்தில் வருவான், ஏனெனில் பிரேத குழிகளில் உள்ளவர்கள் எல்லாரும் அவருடைய சத்தம் கேட்டு வருவார்கள் என்று நாம் வாசிக்கின்றோம். அம்மனுஷன் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையத்தக்கதாக அங்கீகரிக்கப்பட்டவனாக வராமல், தேவனால் அங்கீகரிக்கப்படாதவனாகவே (பிரேத குழியிலிருந்து) வெளிவருவான், மற்றும் அவனுடைய உயிர்த்தெழுதலின் வாய்ப்புகளானது, யோவான் 5:29-ஆம் வசனத்தின்படியாக இருக்கும். அவன் நிந்தனைக்கும், இகழ்ச்சிக்கும் எழுந்திருப்பான்; மேலும் இந்த இகழ்ச்சியானது அவன் அந்த நியாயத்தீர்ப்பின் காலங்களுக்குக் கீழாக, தனக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டு நல்ல குணலட்சணத்தை வளர்த்துக்கொள்வது வரையிலும், அல்லது கற்கவும், குணலட்சணத்தை வளர்க்கவும் மறுத்து, இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுப் போவது வரையிலும் நீடித்திருக்கும்.

முதலாவதாக இராஜ்யத்தைத் தேடுங்கள்

பூமியின் இராஜ்யங்களைப் பார்த்து, அதில் ஒன்றாக அவருடைய இராஜ்யம் இருக்குமென நாம் எதிர்ப்பார்க்கலாம் என்பதாக நல்ல போதகர் கூறினதாக நாம் புரிந்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அவருடைய இராஜ்யம் எதிர்க்காலத்திற்கு உரியது என்று அவர் நமக்கு அறிவிக்கின்றார். “”இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யுதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்” (யோவான் 18:36). அவருடைய இராஜ்யத்திற்காக, தேவனுடைய இராஜ்யத்திற்காக நாம், “”உம்முடைய இராஜ்யம் வருவதாக” என்று ஜெபம் பண்ணுகின்றோம். “”ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுக்குரிய சுதந்தரத்தை” அடையத்தக்கதாக நம்மை ஆகச்செய்வதற்கு ஏதுவானவைகளை நாம் செய்ய நாடுவதே, அவருடைய இராஜ்யத்தை நாம் நாடுவதாகும். நாம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்க்க வேண்டும். இரட்சகரின் இரண்டாம் வருகையின்போது, அவர் முதலாவதாகத் தம்முடைய ஊழியர்களை அழைத்து, கணக்கு விசாரிக்கும் போது, நாம் அவருடைய ஊழியர்கள் மத்தியில் காணப்படுவது மட்டுமல்லாமல், “”நல்லது உத்தமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள், இராஜ்யத்தின் சந்தோஷத்திற்குள் பிரவேசி; இரண்டு பட்டணங்கள் அல்லது ஐந்து பட்டணங்கள் மீது அதிகாரம் பெற்றுக்கொள் என்று அவர் கூறுவதைக் கேட்கவுந்தக்கதாக, நமது தாலந்துகளையும், நமது ராத்தல்களையும் நாம் மிகவும் ஞானமாய்ப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இராஜ்யத்தின் சுதந்தரர்களாகுவதற்கு ஒரு வழிமுறை காணப்படுகின்றது. (1) இவர்கள் தங்களைப் பாவிகள் என்றும், தெய்வீகக் கவனம்/பார்வைப் பட தாங்கள் பாத்திரமற்றவர்கள் என்றும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். (2) இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டி என்று இவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். (3) இறுதியில் உலகமானது சுத்திகரிக்கப்படுவதற்கும், விருப்பமுள்ளவர்களையும், தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களையும் தேவனுடன் ஒப்புரவாகுவதற்கும், அவருடைய பலிதான் அடிப்படையாக இருக்கின்றது என்றாலும், அந்த வேலை இன்னமும் ஆரம்பமாகவில்லை என்றும், அந்த வேலையானது அவருடைய இராஜ்யத்தின் ஆயிர வருட ஆளுகையின் போது அவரால் நிறைவேற்றப்படும் என்றும் இவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். (4) இப்பொழுது இராஜ்யத்தின் வகுப்பாருக்கான அங்கத்தினர்களைக் கர்த்தர் தேடிக்கொண்டிருக்கின்றார் என்பதும், அங்கத்துவமாவதற்கான வழி, இடுக்கமான வழி என்பதும், “”ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23) என்பதுமான கர்த்தருடைய செய்தியை இவர்கள் கேட்க வேண்டும். இந்த வகுப்பாருக்கான பரீட்சைகள், மிகுந்த உபத்திரவத்தின் வழியாக இருக்கும் என்றும், தேவன் வெறுமனே பரிசுத்தவான்களை அழைக்காமல், மாறாக தேவன் மற்றும் சகோதரரிடத்தில் அன்பு தொடர்பான விஷயத்திலும், மரணம் வரையிலுமான நேர்மை/உண்மை தொடர்பான விஷயத்திலும் கடுமையான பரீட்சைகளையும், சோதனைகளையும் சகித்து நிற்கும் பரிசுத்தத்துவம் உடையவர்களாகிய பரிசுத்தவான்களை அழைக்கின்றார் என்றும் இவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தங்களை கர்த்தருடைய ஊழியக்காரர்களாக, நீதிக்கடுத்த ஊழியங்களில் மரணம் வரையிலும் உண்மையுள்ளவர்களாக இருப்பதாக முழுமையாய் அர்ப்பணித்தது முதல் இவர்கள், மதிப்புடைய எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோக இராஜ்யத்தை மாபெரும் பொக்கிஷமாக எண்ணுவார்கள். இவர்கள் இதனை தினந்தோறும், ஒவ்வொரு மணி நேரமும் தேடுவார்கள. பொக்கிஷம் இருக்கும் இடத்தில், இவர்களுடைய இருதயம் காணப்படும். இதுவே இவர்களுக்குப் பகலின் சிந்தனைக்கும் மற்றும் இரவின் தியானத்திற்குமான பொருளாக இருக்கும். இவர்களுடைய தேவைகள் மற்றும் நியாயமான அவசியங்கள் சந்திக்கப்படுவதற்கு, பூமிக்குரிய தொழில்கள் இவர்களுக்கு அவசியமாகவே காணப்படும்; எனினும் இவர்களுடைய கணிப்பில், பரலோக பரிசுக்கு ஒப்பாக எந்தப் பூமிக்குரிய பரிசும் காணப்படுவதில்லை. இப்படிப்பட்டவர்களே, தேவனைத் தங்களுடைய வீடுகள் (அ) நிலங்கள், பெற்றோர்கள் (அ) பிள்ளைகள் (அ) தங்களைக் காட்டிலும் அன்புகூருகிறவர்களுக்கென்று, தேவனால் வாக்களிக்கப்பட்ட இராஜ்யத்தின் சுதந்தரர்களாக, நிச்சயமாய் ஆகுவார்கள்.