R3779 – அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3779 (page 156)

அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்

HE GIVETH FOOD TO THE HUNGRY

மாற்கு 6:30-44

“”என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.” – யோவான் 6:32

இரண்டிரண்டு பேராகக் கர்த்தர் அனுப்பி வைத்திருந்த ஊழியத்திலிருந்து, பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் திரும்பினார்கள். அவர்கள் ஐயத்திற்கு இடமின்றி குறிப்பிட்ட காலம் நியமிக்கப்பட்டுத் திரும்பியிருக்க வேண்டும். அநேகமாக கப்பர்நகூமே ஒன்றுகூடிச் சேரும் இடமாக இருந்திருக்க வேண்டும். இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் வந்திருத்தல், ஜனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினது. ஏனெனில், அச்சமயம் நமது கர்த்தருடைய கீர்த்திப் பரவலாய் பரவி காணப்பட்டது. இயேசுவின் ஆலோசனையின்படி, பன்னிரண்டு பேரும், அவர்கள் தங்கள் காரியங்களைக்குறித்துத் தொந்தரவுகளின்றி பேசுவதற்கும், அதாவது தங்களது ஊழியத்தில் ஏற்பட்ட தங்களது அனுபவங்களைக்குறித்துப் பேசுவதற்கும், அவர்களது அனுபவம் தொடர்பாக தாம் கொடுக்க விரும்பும் பாடங்களை இயேசு அளிப்பதற்குமெனப் பன்னிரண்டு பேரும் அவருடன்கூட வனாந்தரமான இடத்திற்குப் போனார்கள். அவர்களுக்கு இந்த இளைப்பாறுதல் பயனுள்ளதாக இருக்கும் என நமது கர்த்தர் கூடக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடம் இன்று வாழும் நமக்குப் பொருந்தும் அல்லவா?

ஜனங்கள் எதிர்ப்பார்ப்பில் காணப்பட்டார்கள்

ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளுக்குப் பசியாக இருந்தபடியால், படகு சென்ற திசையைக் கவனித்து, அநேகர் கால்நடையாய் நடந்து, படகு சென்ற திசைக்குச் சென்றனர். மேலும், சிலர் ஓடிச் சென்றபடியால் ஆண்டவர் சென்ற படகு கரையை எட்டுவதற்கு முன்பாக இடத்தையடைந்து அவருக்காகக் காத்திருந்தனர். ஏற்கெனவே அநேக காரியங்களைத் தம்மிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஜனங்கள், தாம் தனிமையில் இருப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் எடுத்திட்ட முயற்சியைக் குறிக்கிட்டதினிமித்தம், கர்த்தர் கோபம் அடைந்தாரா? இல்லை! கோபங்கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய இருதயம், அனுதாபத்தினால் நிறைந்திருந்தது. அவர் ஜனங்களைக் கண்டு மனதுருகினார்; காரணம், அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக இருந்தார்கள். யோவான் ஸ்நானன், தேவனுடைய இராஜ்யம் வருவதைக்குறித்து அறிவித்துக் கொண்டு வந்தார். இயேசுவும் இராஜ்யத்தைச் சித்தரிக்கும் [R3780 : page 157] உவமைகளைக் கூறினார். இதை ஜனங்கள் பூரணமாய்ப் புரிந்துக்கொள்ளவில்லை. கர்த்தர் இரண்டிரண்டு பேராக அனுப்பி வைத்திட்ட சீஷர்களும் மனந்திரும்புதலைக்குறித்தும், இராஜ்யத்திற்காக ஆயத்தப்படுவதுகுறித்தும் அறிவித்தார்கள். பொல்லாப்பான ஜீவியம் பண்ணி வந்த ஏரோது இராஜா, தீர்க்கத்தரிசிகளில் பெரியவர்களில் ஒருவரான யோவானைச் சிரைச்சேதம் பண்ணினான். பின்னர், அவன் தள்ளிவிட்ட மனைவியின் தகப்பனாகிய, அரபிய தேசத்து இராஜாவாகிய அரேத்தாவுடன் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான். ஏரோதின் சேனை தோற்றது. மேலும், ஜனங்கள் மத்தியில் கொந்தளிப்பும், கிளர்ச்சியும் காணப்பட்டது. இந்தக் குழப்பங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்றும், தேவனுடைய இராஜ்யம் எப்பொழுது மற்றும் எப்படி ஸ்தாபிக்கப்படும் என்றும், ஜனங்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இயேசு உண்மையில் மேசியாவா (அ) இல்லையா என்றும், அவர் சீக்கிரத்தில் தம்மை இராஜாவாக அறிவிப்பாரா என்றும், முன்வந்து தங்களை ஒப்புக்கொடுக்கும் போர்ச்சேவகர்களை அழைப்பாரா என்றும், ஜனங்களுக்குள் கேள்விகள் எழும்பியது. இக்காரியம் குறித்து ஜனங்கள் மிகவும் உற்சாகமடைய ஆரம்பித்தார்கள். மேலும், இப்படியாக இருந்த சில நாட்களுக்குள்ளாகத் தெய்வீகத் திட்டம் மற்றும் கர்த்தருடைய ஏற்பாட்டிற்கு எதிர்மாறாக, ஜனங்கள் தம்மை வலுக்கட்டாயமாக, இராஜாவாக்கி விடாதபடிக்கு, கப்பர்நகூமில் கர்த்தர் தம்முடைய பொதுப்படையான ஊழியத்திலிருந்து விலகினார் என்றும் நாம் அறிவோம்.

நமது கர்த்தர் இளைப்பாற விரும்பினாலும், ஜனங்களுக்குப் போதிப்பதை அவரால் செய்யாமலும் இருக்கமுடியாது. அவர் உண்மையான மேய்ப்பர் ஆவார்; மற்றும் கல்வாரியில் மாத்திரமல்லாமல் மாறாக, அனைத்து மணி நேரங்களிலும், தினமும், தம்முடைய பலியின் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமது ஊழிய வருடங்களிலும், தமது ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும், ஆடுகளுக்காகத் தமது ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்கும் எப்பொழுதும் ஆயத்தமாகவே இருந்தார். இதுவே கர்த்தருடைய உண்மையான சீஷர்கள் அனைவரின் ஆவியாக/சிந்தையாகக் காணப்பட வேண்டும்; இந்த ஆவி/சிந்தையானது, அவருடைய வார்த்தைகளை உட்கொண்டு, அவருடைய வழிகாட்டிகளைப் பின்பற்றி, கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளர்வதன் மூலம், ஆண்டவருடைய பரிசுத்த ஆவியில் பங்கடைகையில் அதிகமடையும்.

உம்முடைய இராஜ்யம் வருவதாக

பாபிலோனிலுள்ள அநேக கர்த்தருடைய ஜனங்கள், இதே நிலையில் காணப்படுகின்றனர்; அதாவது, நாம் குறிப்பிடத்தக்க காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும், மாபெரும் சில யுக மாற்றங்கள் நடைபெறவிருக்கின்றது என்றும் எளிதில் ஒத்துக்கொள்கின்றனர். ஆயிர வருட இராஜ்யம் சமீமாய் இருக்கின்றது எனவும், அது வாசலருகே வந்துவிட்டது எனவும் சில காரியங்களைக்குறித்து அநேகர் கேட்டிருக்கின்றனர்; மற்றும் அந்த ராஜ்யம் எப்படி, எப்பொழுது, எங்கு, ஏன் ஸ்தாபிக்கப்படும் என்றும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அரசியல் தலைவர்களை உற்று நோக்குகையில் ஏறக்குறைய குழப்பத்தையே காண்கின்றனர்; மற்றும் யுத்தங்கள் பற்றியும், யுத்தங்கள் பற்றின வதந்திகளையும் கேள்விப்படுகின்றனர் மற்றும் சீக்கிரத்தில் அனைத்துக் காரியங்களும் சரியாகிவிடும் என்ற பொதுவுடைமைக் கொள்கைவாதிகளின் குரல்களையும் கேட்கின்றனர். இவர்கள், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமிடையே சீக்கிரம் பிரச்சனைக்குரிய காலம் வரவிருக்கின்றது என்றும் கவனிக்கின்றனர்; மேலும், இவர்கள் தங்களுக்கான சரியான நடத்தை என்னவாகக் காணப்பட வேண்டும் என்பது தொடர்பான தகவலுக்காக, வழிகாட்டிக்காக, வழிநடத்துதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போன்றே இவர்கள் காணப்படுகின்றனர்.

பாபிலோனில் அநேக மேய்ப்பர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், இந்த மேய்ப்பர்களோ, தங்களை அவநம்பிக்கைக்கு நேராகவும், பரிணாமகொள்கைகளுக்கு நேராகவும், வேதாகமத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் தன்மைக்கும் நேராகவும் வழிநடத்துகின்றனர் என எந்தளவுக்கு மந்தைகள் கவனிக்கின்றார்களோ, அவ்வளவாய் இந்த மேய்ப்பர்களுடைய வழிநடத்துதலில் ஆடுகளுக்கு பயமும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுள்ளது. யாரிடம் செல்ல வேண்டும் என்று தெரியாமல் (பாபிலோனுக்குள் இருக்கும் இந்த) ஆடுகள் காணப்படுகின்றனர். இவர்களுடைய செவிகளுக்கு எட்டும் மிகவும் திருப்திகரமான பாகம், நாம் அறிவிக்கின்ற இராஜ்யத்தின் செய்தியாகும். எனினும், பயத்தின் மூலமாகவும், மூடநம்பிக்கைகள் மூலமாகவும், பாதிரியார்களின் சூழ்ச்சி மூலமாகவும் இவர்களை அடக்கி வைத்துள்ள, இவர்களுடைய மேய்ப்பர்களின் வெளிப்படையான கண்டனம் மற்றும் பழிப்புரை மத்தியில் இச்செய்தியை ஏற்றுக்கொள்ள பயப்படுகின்றனர். கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அங்கமும், தாங்கள் கர்த்தருக்காக ஸ்தானாதிபதியாக இருக்கிறார்கள் என்றும், சகல ஜனங்களுக்கும் மகா சந்தோஷமாயிருக்கும் நற்செய்தியை அறிவிப்பதிலும், ஆடுகளைச் சரியான வழியில் உண்மையான மேய்ப்பனிடம் வழிநடத்துவதற்கு உதவுவதிலும் கர்த்தருடைய வாய்க்கருவியாக பயன்படுத்தப்படுவதில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஓரளவுக்குப் பசியாய் இருக்கும் அனைவரையும் வழிநடத்திவிடலாம் என நாம் எதிர்ப்பார்க்க முடியாது; அந்நியர்களின் சத்தத்திற்குச் செவிக்கொடுக்காமல், மாறாக தேவனுடைய குமாரனுடைய சத்தத்தை அதாவது, சத்தியத்தின் குரலைப் பின்தொடரத்தக்கதான இருதய நிலையில், ஒரு சிறு மந்தையினர் மாத்திரமே காணப்படுவார்கள் என்பது நிச்சயமே. எனினும் ஆண்டவர்போல, நாமும் அனைவர் மேலும் மனதுருக்கங்கொண்டு, தற்காலத்தில் தெளிவாகக் கேட்க முடியாதவர்கள், வெகு சீக்கிரத்தில், இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, செவிடான காதுகள் அனைத்தும் திறக்கப்பட்டு, தேவனுடைய மகிமை பற்றின அறிவு முழுப் பூமியையும் நிரப்பும்போது, தெளிவாகக் கேட்பார்கள் என்பதினால் களிக்கூர வேண்டும்.

அநேக விசேஷங்கள் அவர்களுக்குப் போதித்தார்

ஆண்டவருடைய மாதிரியிலிருந்து, நாம் ஒரு படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும். திரளான ஜனங்களுடைய நன்மைக்கு ஏதுவானதும், ஆறுதலுக்கு ஏதுவானதும் மற்றும் போகப்போக ஆழமான காரியங்களை அவர்கள் புரிந்துக்கொள்ளத்தக்கதாக (அவர்களை ஆயத்தம் பண்ணுகிறதுமான) அநேக காரியங்களை அவர் ஜனங்களுக்குக்கூட போதித்திருக்க முடியும். அவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கும், அவருடைய விசேஷித்த அர்ப்பணிக்கப்பட்ட சீஷர்களாய் இருந்தவர்களுக்குங்கூட, அவர் கூறுவதற்கு இன்னும் அநேக காரியங்கள் இருந்தது. “”தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது” (மாற்கு 4:11). எனினும் சீஷர்களுக்குக் கூடச் சொல்லப்படாமல் விட்டுவிடுவதற்கு ஏதுவான சில விஷயங்கள் இருந்தது. “”இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:12-13).

அப்போஸ்தலர் கூறுகிறதுபோல, தேவனுடைய ஆழமான காரியங்களையும், இரகசியங்களில் மறைக்கப்பட்டுள்ள தேவனுடைய ஞானத்தையும், அவரைப்பற்றின அறிவில் வளர்ந்துள்ளவர்களிடத்திலும், ஆழமான சத்தியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இருதயத்தில் ஆயத்தமாய்க் காணப்படுபவர்களிடத்திலும் நாம் பேசலாம். கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக இருப்பவர்களை, பலமான ஆகாரத்தினால் மூச்சுத் திணற செய்துவிடுவதற்கு எதிராக, நாம் விசேஷித்த விதமாக ஜாக்கிரதையுடன் காணப்பட வேண்டும். எனினும், நாம் அவர்களைப் பட்டினியும் போடக்கூடாது. மாறாக, அவர்கள் வளரத்தக்கதாக, அவர்களுக்குப் பால் ஆகாரத்தை நாம் கொடுத்திட வேண்டும். நமது கர்த்தருடைய வார்த்தைகளையும், அவருடைய முன்மாதிரியையும் நாம் நினைவில் கொள்வோமாக அவர், “”சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்தேயு 10:16) என்றார். இந்த அவருடைய வார்த்தைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், கர்த்தருக்காகவும், அவருடைய நோக்கத்திற்காகவும், ஊழியம் புரிவதற்கு ஆரம்ப காலங்களில் நீங்கள் எடுத்திட்ட பிரயாசங்களில், நன்மைக்குப் பதிலாகப் பாதிப்பையே உண்டு பண்ணினீர்கள் என்று கண்டிப்பாக உணர்ந்துக்கொள்வீர்கள்; இப்படியாக நன்மைக்குப்பதிலாக பாதிப்பு ஏற்படுத்தினதற்குக் காரணம் ஞானமின்மையும், முன்யோசனையற்ற தன்மையும், கர்த்தருடைய அறிவுரைகளுக்குச் செவிக்கொடுக்கத் தவறிப்போன நிலையும், குழந்தைகளுக்குப் பாலும், புருஷர்களுக்குப் பலமான ஆகாரமும் கொடுக்கும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றத் தவறிப்போன நிலையுமே ஆகும்.

இன்னொரு சுவிசேஷ புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவின்படி, ஜனங்களுக்குப் போதித்தப் பிற்பாடு, நமது கர்த்தர் ஜனங்களைவிட்டு, மலைப்பகுதியில் தம்முடைய சீஷர்களுடன் சென்றார் என்றும், அங்கு அவர்களுடைய ஊழியங்களைக்குறித்து சிந்தனைச் செய்தார்கள் என்றும் பார்க்கின்றோம். இப்படியாக ஐக்கியம் கொள்வதற்கும், பிரயாணத்தின்போது படகிலிருக்கையில் அனைத்தையும் எண்ணிப்பார்ப்பதற்குமுரிய வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்தது என்பதில் ஐயமில்லை. அந்நாளின் பிற்பகுதியில், மத்தியான வேளையில், அவர் மலையிலிருந்து இறங்கி கீழே வந்தார்; மற்றும் அங்கு ஏற்கெனவே கூடியிருந்த கூட்டத்தாருடன், அதிகமான வழிப் பிரயாணிகளும் பெருமளவில் சேர்ந்தனர், அதாவது, பஸ்கா பண்டிகைக்காக எருசலேமை நோக்கி அவ்வேளையில் அவ்வழியாகப் பிரயாணம் பண்ணிக்கொண்டு வந்த பிரயாணிகளும் சேர்ந்துக்கொண்டார்கள். மொத்தமாக பல்லாயிரம் பேர்கள் இருந்தார்கள். அங்குப் புதிதாய் வந்தவர்களுங்கூட அநேக கேள்விகளுடனும், நாட்டத்துடனும் இருந்திருப்பார்கள்; மற்றும் நமது கர்த்தர் போதனைகளையும், விரிவான விளக்கங்களையும் கொடுத்திருக்க வேண்டும்.

அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்

இரவு நெருங்கியது; மேலும், ஜனங்களைக் கர்த்தர் அனுப்பிவிடும்படி சீஷர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், அவர்கள் அறியாத நோக்கம் ஒன்றை அவர் கொண்டிருந்தார். அதாவது, அவருடைய முழு ஊழியத்திலும், செய்யப்பட்ட மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றைச் செய்ய அவர் அப்போது நோக்கம் கொண்டிருந்தார். எனினும் இதைப்பற்றி அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக, ஜனங்களை அவர்கள் பந்தியிருக்கச் சொல்லி, பின்னர் அவர்களது [R3780 : page 158] இயலாமையில் அவர்களுக்குத் தாம் உதவுவதன் மூலம், இயல்பான விதத்தில் அற்புதத்தை அரங்கேற்ற சித்தங்கொண்டார். அவர்களிடம் என்ன உணவு இருக்கின்றது எனக் கர்த்தர் கேட்டார்; ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் கொண்டிருந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்; இது நமது கர்த்தருடைய நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டது; திரளான ஜனங்களை ஆசீர்வதிக்கும் வேலையில், ஒத்துழைப்பதற்கான தமது விருப்பத்தைக் கர்த்தர் வெளிப்படுத்த விரும்பினார். மேலும், இப்படியாக அவருடைய சொந்த ஜனங்கள் மற்றும் உலகத்துடனான அவருடைய கையாளுதலின் பொதுவான ஓர் அம்சத்தைச் சித்தரித்துக் காட்டினார். அவர் நம்முடைய நேரத்தையும், தாலந்துகளையும் எடுத்துக் கொள்கின்றார். மேலும், இவைகள் சிறியதாகவும், அற்பமானதாகவும் இருப்பினும், இவைகளை ஆசீர்வதித்து, இவைகளைத் தம்முடைய ஊழியத்தில் பயன்படுத்தி, மாபெரும் காரியங்களைச் செய்துமுடிக்கின்றார். இப்படியாகக் கர்த்தர் தம்முடைய ஜனங்களைத் தம்முடன் இணைத்துக்கொண்டு, தம்முடைய பூமிக்குரிய மற்றும் ஆவிக்குரிய இரக்கங்களைச் சுமந்துச் சென்றவர்களிடமிருந்து, இரக்கங்களைப் பெற்றுக் கொண்டவர்களை அவர் ஆசீர்வதிப்பதைக் காட்டிலும், இந்த அனுபவங்கள் மற்றும் படிப்பினைகள் மூலம், சுமந்துச் சென்றவர்களையே மிக அதிகமாக கர்த்தர் ஆசீர்வதிக்கின்றார்.

ஆண்டவர் கட்டளையிடும் காரியங்கள் தொடர்பான விஷயங்களில், கீழ்ப்படிவதற்கு சீஷர்கள் கற்றுக்கொண்டிருந்தனர்; ஆகவே, பரிமாறுவதற்கு உணவு இல்லாமல் இருந்த போது, விருந்து உண்பதற்கென ஐம்பது, ஐம்பது பேராக அங்கிருந்த ஜனங்களை அவர்கள் பந்தி அமரச் செய்வதின் மூலம், அவர்கள் ஜனங்களின் முன்பு தங்களை முட்டாளாக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காணப்பட்ட கர்த்தருடைய கட்டளைக்கு, அவர்கள் எந்த மறுப்பும் தெரிவித்ததாகப் பதிவுகள்காணப்படவில்லை. தங்கள் வலைகளை மீன்களினால் நிரம்பப்பண்ணினவர், மரண நித்திரையிலிருந்து விழித்து எழப்பண்ணினவர், தொடாமலேயே, ஒரு வார்த்தை மூலமாக சுகப்படுத்தினவர், சூம்பின கரங்களைச் சரி பண்ணினவர், தங்களிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்டவர் என அப்போஸ்தலர்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அப்போஸ்தலர்கள் கீழ்ப்படிந்தார்கள்; மீதியைக் கர்த்தர் பார்த்துக்கொண்டார்.

அப்பத்தை ஆசீர்வதித்தல்

நம்முடைய பாடத்தின் ஆதார பகுதியானது, கர்த்தர் அப்பத்தை ஆசீர்வதித்தார் என வழங்குகின்றது; இதே சம்பவம் குறித்த யோவான் சுவிசேஷத்தின் பதிவானது, “”அவர் ஸ்தோத்திரஞ் செய்தார்” எனக் காணப்படுகின்றது. இரண்டுமே இசைவாகவே உள்ளது. அதாவது, தேவனுக்கு ஸ்தோத்திரம்/நன்றி செலுத்திய காரியமானது, அப்பத்தின் மேல் ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது. ஒருவேளை பிதாவினுடைய ஒரே பேறான குமாரனே சாதாரணமான உணவிற்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அதன்மேல் தெய்வீக ஆசீர்வாதத்தைக் கேட்பது தகுதியானதாய் இருக்குமானால், அவருடைய பின்னடியார்களெனத் தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்ளும் ஒவ்வொருவரும் இக்காரியத்திலும் சரி, மற்றக் காரியங்களிலும் சரி, அவரது முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். உணவானது, நமக்கான தேவனுடைய ஏற்பாடு என்றும், தாராளம்/இரக்கம் என்றும் நாம் உணர்கையில், நம்முடைய நன்றிகளைச் செலுத்தாமல் அல்லது அதனை ஒப்புக்கொள்ளாமல், நம்மால் எப்படி உணவை உட்கொள்ள முடியும்? இப்படியாக நன்றிச் செலுத்துபவர்கள் அனைவரும், தங்கள் உணவின் மீது விசேஷித்த ஆசீர்வாதத்தையும், இந்த உணவைப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்கள் பெற்றுக்கொள்ளத் தவறும் விசேஷித்த ஞானத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. நன்றியுடன் கர்த்தரை நோக்கி/ஏறெடுத்துப்பார்ப்பதன் விளைவாகவும், அவருடைய ஏற்பாடுகளை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதன் விளைவாகவும் வரும் இருதயத்தின் சமாதானம் மற்றும் இளைப்பாறுதலானது, இயற்கையாகவே உணவு செரிமானத்திற்கு அனுகூலமாய் இருக்கும் அமைதியான நிலையை உருவாக்குகின்றது. இனிமையான மற்றும் நன்றியுணர்வுடன் கூடிய மனப்பான்மை இருக்கும்போது, புசிக்கப்படும் உணவானது நன்றியற்ற மனப்பான்மையில் (அ) கோபத்தில் (அ) அதிருப்தியில் புசிக்கப்படும் இதே உணவளிக்கும் ஊட்டத்தைப் பார்க்கிலும் அதிகம் ஊட்டமளிக்கின்றதாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

[R3781 : page 158]

நமது கர்த்தர் நன்றி ஏறெடுத்த விருந்து, ஆடம்பரமான ஒன்றல்ல என்பதையும் கவனிக்கவும்; அது மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட விதத்திலும் பரிமாறப்படவில்லை; அது உயர்தரமான உணவும் அல்ல அது எளிமையான வாற்கோதுமை அப்பமாகவும், உலர்ந்த மீன்களாகவும்தான் இருந்தது. நம்முடைய கர்த்தருடைய நாட்களிலிருந்த உணவு முறையிலுள்ள எளிமையை நாம் எண்ணிப்பார்க்கும்போதும், இன்றும் கிழக்கத்திய நாட்டு ஜனங்கள் மத்தியில் காணப்படும் எளிமையான உணவு முறையை நாம் எண்ணிப்பார்க்கும்போதும், ஜப்பான் தரைப்படையினருக்கு அளிக்கப்படும் உணவிலும், ஜப்பான் குடும்பத்தார் வழக்கமாகப் பயன்படுத்தும் உணவிலுமுள்ள எளிமையை நாம் எண்ணிப்பார்க்கும்போதும், தரத்திலும் சரி, அளவிலும் சரி நம்முடைய நாட்களில் அநேக ஜனங்கள் அதிக உணவுகள் எடுத்துக் கொண்டும், எவ்விதமான நன்மையை அடையவில்லை என்ற பாடத்தையும் நாம் அடைகின்றோம்; மற்றும் உணவில் எளிமை என்பது அதிகம் ஆரோக்கியமாய் இருப்பதற்கு மாத்திரம் உதவாமல், ஆவிக்குரிய புத்துணர்வு அடைவதற்கும், பரத்திலிருந்து அப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களுக்கு சத்திய சேவை செய்வதற்கும், அதிகமான நேரத்தை ஒதுக்கியும் கொடுக்கின்றது என்ற பாடத்தையும் நாம் அடைகின்றோம். ஒவ்வொருவரும் இக்காரியத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்து, தனது சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும், அவன் சிந்திப்பதற்குக் கண்டிப்பாகக் கடமைப்பட்டுள்ள மற்றவர்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்பவும் செயல்பட வேண்டும்.

நம்முடைய பணச் செலவுகள் எவ்வளவு எளிமையாக இருப்பினும், தேவனுக்கு நன்றி ஏறெடுப்பது தகுதியானது என்ற பாடத்தை அனைவராலும் ஒப்புக்கொள்ளலாம். இந்த வெளியீட்டை வாசிக்கும் வாசகர்கள், தங்களுடைய குடும்பத்தில் இப்படியாக நன்றி ஏறெடுக்கும் சிலாக்கியத்தை முடிந்தமட்டும் புறக்கணித்துப் போடவில்லையென்று அதாவது, குடும்பத்தின் காரியங்களில் அதிகாரமுடைய நபர்களாக இருந்து, இப்படி நன்றி ஏறெடுக்கும் சிலாக்கியத்தைப் புறக்கணித்துப் போடவில்லை என்று நாம் நம்புகின்றோம். குடும்பத்தில் நன்றி ஏறெடுக்கும் நமது வழக்கத்தை, விருந்தினர் அல்லது அந்நியர் வந்திருக்கையில் தடைப்பண்ணிட முடியாது. அதேசமயம் உணவகம், சிற்றுண்டிச் சாலைகளிலுள்ள பொது மேஜைகளில் காணப்படும்போதெல்லாம், கர்த்தருக்கு வெளிப்படையாக நன்றி ஏறெடுப்பதும் எப்பொழுதும் தகுதியானதே எனவும் நாம் எண்ண முடியாது. இப்படியாகப் பொது இடங்களிலுள்ள உணவு பரிமாறப்படும் மேஜைகளில் நாம் காணப்படுகையில், நாம் கர்த்தரிடம் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொள்வது நமக்கு நலமாக இருப்பினும், ஒருவேளை நாம் இப்படிச் செய்வது என்பது நம்மைப் பரிசேயர் முறைபோன்று தவறாக வெளிக்காட்டும் வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், நாம் இப்படிச் செய்வதைத் தவிர்ப்பது நலமாக இருக்கும். இப்படியான சூழ்நிலைகளில் நாம் உணவு உண்பதற்கு முன்னதாக நாம் நன்றியை, நம்மைச் சுற்றியிருப்போருக்கு வெளிப்படையான செய்கைகள் (அ) வார்த்தைகள் மூலம் காட்டாதவிதத்தில், இருதயத்திற்குள் ஏறெடுக்க வேண்டும்.

சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்

வேறொரு பதிவில் கர்த்தர் அப்பத்தைப் பிட்டு, தம்முடைய சீஷர்களிடம் கொடுத்தார் என்றும், சீஷர்கள் அதை ஜனங்களிடத்திற்கு எடுத்துச் சென்றார்கள் என்றும் காணப்படுகின்றது. இப்படியாக, நமது கர்த்தர் காரியங்களை ஒழுங்குப்படுத்தியதில் எவ்வளவு கிருபையுள்ளவராகக் காணப்பட்டிருந்திருக்கின்றார்! இப்படியாகச் சீஷர்களே அற்புதத்தின் வல்லமைக்கு மேலான சாட்சியாளர்களாகக் காணப்பட்டார்கள்; மற்றும் ஜனங்களுக்கும், அப்போஸ்தலர்கள் ஏறக்குறைய பரிச்சயமானார்கள்; அப்போஸ்தலர்கள் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிற்பாடு இந்த ஜனங்களில் அநேகரை, அநேகமாகச் சந்தித்திருக்க வேண்டும்; மற்றும் அப்போஸ்தலர்கள் ஆண்டவருடைய பிரதிநிதிகளாக இவர்களுக்குப் பரலோக அப்பத்தை வழங்கினவர்கள் ஆனார்கள். இன்றும் இப்படியாகவே உள்ளது. ஏனெனில், “”கர்த்தர் தம்முடையவர்களை அறிந்துள்ளபடியினால்” அவர் தம்முடையவர்களைக் கண்டுபிடித்து, அவர்களைப் போஷித்துப் பலப்படுத்துவார் (2 தீமோத்தேயு 2:19). பசியாய் இருக்கும் ஜனங்களிடத்தில் தற்கால சத்தியத்தை எடுத்துச் செல்லும் விஷயத்தில், அவர் ஒன்றும் நம்மைச் சார்ந்திருக்கவில்லை. மாறாக, நம்முடைய நன்மைக்காகவே, நாம் அவருடன் உடன்வேலையாட்களாக இருப்பதற்கான சிலாக்கியத்தை நமக்குக் கொடுக்கின்றார். இதனை நாம் எவ்வளவாய் உணர்ந்துக்கொள்ள வேண்டும்! நம்மிடத்தில் காணப்படும் ஏதேனும் கொஞ்சம் வாற்கோதுமை அப்பங்கள், ஏதேனும் சிறு மீன்கள், ஏதேனும் டாலர்கள் மற்றும் நாணயங்கள், ஏதேனும் செப்புக் காசுகள் மற்றும் வெள்ளி நாணயங்கள், நம்முடைய எந்த நேரங்களும், செல்வாக்குகளும் கர்த்தருடைய பாக்கியமான வேலைகளில் பயன்படுத்தப்படத்தக்கதாக நாம் எவ்வளவு பேராவலுடன் காணப்பட வேண்டும்!

நம்முடைய பங்கில் இப்படியாகச் செய்வதென்பது வேதவாக்கியங்களில் பலி என்ற பெயரில் மேன்மையாய் வழங்கப்பட்டாலும், இச்சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துக்கொள்பவர்கள் இதனை நேர்மாறாக, ஓர் ஆசீர்வாதமாக, ஒரு சிலாக்கியமாக, ஒரு தயவாகவே கருதிக்கொள்வார்கள். இந்தச் சிலாக்கியமானது, இன்று தற்கால சத்தியத்தில் களிகூர்ந்து கொண்டிருப்பவர்களால் மிகவும் மேன்மையாகக் கணிக்க/மதிப்பிடுவதைப்பார்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இவர்களிடத்தில், அறுவடை செய்தியைப் பிரகடனப்படுத்துவதற்குரிய (பண) வளத்தில் ஒருபோதும் குறைவில்லாமல் இருப்பது குறித்தும், அதுவும் இவர்கள் பண்டிகைகள், கண்காட்சிகள் முதலியவைகள் மூலம் உலகத்தாரிடமிருந்து உதவிகள் கேட்காமலும், மற்றும் பணத்திற்காக அல்லது காணிக்கைப் பெட்டிகள் மூலம் இவர்கள் கர்த்தருடைய ஜனங்களைத் தொந்தரவு செய்து கேட்காமலும் காணப்படுவது குறித்தும், சத்தியத்திற்கு எதிரிகளாகவும், சத்தியத்தை அவமதிக்கிறவர்களாகவும் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் வியப்பாகவே இருந்துள்ளது; சத்தியத்துடன் கூடக் கர்த்தருடைய ஆவியும் காணப்படுவதினால், சத்தியத்தையும், கர்த்தருடைய ஊழியத்திற்கும் பயன்படுத்தப்படும் ஏதாகிலும் விதத்திலுள்ள தாலந்தையும் பெற்றிருப்பவர்கள், அவைகள் பயன்படுத்தப்படுவதில் சொல்லமுடியாதளவு சந்தோஷத்தினால் களிக்கூருகின்றனர், மற்றும் இவர்கள் அனுபவிக்கும் இந்தச் சிலாக்கியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றியும் ஏறெடுக்கின்றனர்.

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்

சுவையான உணவை மாத்திரமல்லாமல், திருப்திகரமாக அதாவது, அனைவரும் நிரம்பப் பெற்றுக்கொள்ளத்தக்கதான உணவைக் கர்த்தர் அளித்தார். ஒருவேளை ருசி கூட்டும் பொருள்கள், காரச்சுவைப் பொருள்கள், குழம்புகள், இனிப்புகள், முதலியவைகள் அளிக்கப்பட்டிருந்தால் [R3781 : page 159] அதிகமாய்க் கட்டுப்பாடற்றுப் புசிக்குமளவுக்கு ஏற்ப, இந்த வாற்கோதுமை அப்பங்களும், காய்ந்த மீன்களும் அடங்கிய உணவு புசிக்கப்படுவதில்லையென நாம் நியாயமாக அனுமானிக்கலாம். ஒருவேளை நாம் எளிமையான உணவுகளில் ஜீவித்து, நம்முடைய உணவின் மீதுள்ள விருப்பங்களை அதிகமாக ஊட்டிவிடாமலும், பசிக்கான திருப்திபடுத்தும் எல்லையை மிஞ்சிச் சாப்பிடுவதற்கும் நம்மையே நாம் உற்சாகமளிக்காமலும் இருந்திருப்போமானால், நம் அனைவருக்குள்ளும் காணப்படும் இயல்பானது, நாம் போதுமானளவு சாப்பிட்டுவிட்டோம் என்பதை நாம் அறியத்தக்கதாக அநேகமாகச் செயல்படும்.

இங்குக் காணப்படும் திரளான ஜனக்கூட்டத்தார் சில விதத்தில், ஆயிரவருஷம் யுகத்தில் காணப்படும் உலகத்திற்கு அடையாளமாக இருக்கின்றார்கள். இப்பொழுது அவருடைய விசேஷித்த சீஷர்களாக அவரைப் பின்பற்றுகின்றவர்கள், ஆயிரவருஷம் யுகத்தின்போது நித்திய ஜீவனுக்குரிய அப்பங்களை ஆண்டவரிடத்திலிருந்து அதிகமாய்ப் பெற்றிருப்பார்கள், மற்றும் அவைகளைப் பூமியின் சகல குடிகளுக்கும் அளிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றுக்கொள்வார்கள். ஜனங்கள் அனைவரும் நிரம்பப் பெற்றுக்கொள்வதற்கும், புத்துணர்வு அடைவதற்கும், பெலப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புப் பெற்றுக்கொள்வார்கள். இன்று இக்காரியத்தில் உலகம் எவ்வளவு குறைவுப்பட்டிருக்கின்றது என நாம் காண்கின்றோம்; ஆனால், எதிர்க்காலத்திற்காகக் காணப்படும் திரளான தேவனுடைய ஏற்பாடுகளை நாம் அறியும்போதும், அனைவரும் இலவசமாய் ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாகவும், திருப்திக்கொள்ளுமளவுக்கு ஜீவ அப்பத்தைப் புசிக்கத்தக்கதாகவும், ஒவ்வொரு சிருஷ்டிக்கும் நம்முடைய மீட்பருடன், நாம் உடன்வேலையாட்களாகப் பகிர்ந்து கொடுக்கும் வேலையிலுள்ள நமது பங்கைக்குறித்து அறியும் போதும், நமது இருதயங்கள் களிக்கூருகின்றன் இந்த அற்புதத்திற்குப் பிற்பாடுதான், ஜீவ அப்பம் குறித்து நமது கர்த்தர் பேசினார் (யோவான் 6:26-58).

மீதியானவைகளைச் சேகரித்தல்

ஜனங்கள் விருந்தைப் புசித்து, மீதியாய் விட்டிருந்ததைச் சேகரிப்பதற்கெனக் கர்த்தர் தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்பி வைப்பது என்பது கடுமையான சிக்கனம் போன்று தோன்றலாம். ஐயாயிரம் ஜனங்களால் தொட்டுச் சாப்பிடப்பட்டு, மீதி கிடந்த துண்டுகளைப் பயன்படுத்த, தம்முடைய உண்மையுள்ள பன்னிரண்டு அப்போஸ்தலர்களை ஆளாக்குவதும் கடுமையான சிக்கனம் எனத் தோன்றலாம். ஜனங்களால் சாப்பிட்டு விடப்பட்ட துண்டுகள் பறவைகள் மற்றும் அணில்கள் சாப்பிடும்படிக்கு விடப்பட்டது என்றும், அப்போஸ்தலர்களால் சேகரித்துச் சேர்க்கப்பட்ட துண்டுகள், நமது கர்த்தருடைய கரங்களினால் உடைக்கப்பட்ட துண்டுகள் என்றும் அனுமானிப்பது, அதிகம் நியாயமாய்க் காணப்படுகின்றது. அவர் அப்பங்களையும், மீன்களையும் பிட்டுக் கொடுத்தபோது, அவைகள் திரளாய்ப் பெருகின. ஆகவே, அவர் மீண்டும், மீண்டுமாக சீஷர்களிடம் உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் அதை ஜனங்களுக்கு எடுத்துச் சென்றார்கள்; மற்றும் நமது கர்த்தர் அருகில் கொஞ்சம் உணவு இன்னும் காணப்பட்டது. இவைகள் பன்னிரண்டு கூடைகள் நிரம்பத்தக்கதாகவும், நல்லதாகவும், சுத்தமானதாகவும், பிற்பாடு பயன்படுத்துமளவுக்கு நல்ல நிலைமையிலும் காணப்பட்டது.

சிக்கனம் குறித்த பாடம் நம் அனைவருக்கும் பொருத்தமானதேயாகும். ஆனால், நம்முடைய அனுபவத்தின்படி, உலகத்திலேயே தரித்திரராய் இருப்பவர்களாகிய கர்த்தருடைய ஜனங்களுக்கும் அடிக்கடி இந்தப் பாடம் மிகவும் அவசியமாய்க் காணப்படுகின்றது. (உணவுகளை) உண்டாக்குவதற்குரிய வல்லமையைக் கர்த்தர் அதிகமாய்ப் பெற்றிருந்தாலும், தம்முடைய சீஷர்கள் சிக்கனத்தின் கோட்பாடு குறித்து அறியவும், அதை அவர்கள் நடைமுறைப்படுத்தவும் விரும்பினார்.

அவருடைய வல்லமையின் ஐசுவரியமானது, அவருடையவர்களாய் இருக்கும் எவரும் ஊதாரிச் செலவாளிகளாய் இருப்பதற்கான காரணமாய் இருக்கக்கூடாது. எந்த ஒரு காரியத்திலும் ஊதாரித்தனம் என்பது, நமது கர்த்தருடைய பின்னடியார்கள் மத்தியில் புறம்பாகவே காணப்பட வேண்டும். ஒருவேளை நம்முடைய தேவைக்கும் மிஞ்சி நமக்கு இருக்குமாயின், தேவைகளைக் காட்டிலும் குறைவாகப் பெற்றிருக்கும் நிலையில் காணப்படும் மற்றவர்கள் இல்லையோ? ஒருவேளை நாம் ஆண்டவருடைய ஆவியைப் பெற்றிருப்போமானால், பெருந்தன்மை/தாராளமனம் மற்றும் உதவியின் ஆவியையும் நாம் பெற்றிருப்போம், இதுவும் நாம் அவருடைய குணலட்சணத்திற்கு ஒப்பான சாயலை அதிகமதிகமாய் அடைகையில், பெருகுகின்றதாய் இருக்கும்.

இதே பாடம், அறுவடை வேலை தொடர்புடையதாகவும் நம்மிடத்தில் வருகின்றது. “”நமது கர்த்தர் ஐசுவரியவானாக இருக்க, அவருடைய பின்னடியார்களில் எவரேனும் ஏன் ஏழையாக இருக்க வேண்டும்?” என்று நாம் சில சமயம் நமக்குள்ளாகவே கேட்டிருக்கின்றோம். அவருடைய வேலைக்குத் தேவையானதை மாத்திரம் கொடுத்துவிட்டு அதற்கு மேலாக கர்த்தர் கொடுக்காத காரியமானது, சந்தேகத்திற்கிடமின்றி நம்முடைய நன்மைக்கேதுவானதேயாகும். இச்சம்பவத்திலுள்ள பாடமானது, அவருடைய ஊழியம் தொடர்பான காரியங்களில் அவர் தம்முடைய பின்னடியார்களுக்குப் பலிச் செலுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்க விரும்புகின்றார், மற்றும் இப்படியாக நம்மை ஆசீர்வதித்து, நமக்கான சிலாக்கியங்களைக்குறித்து அதிகமதிகமாக நாம் புரிந்துக்கொள்ள உதவுவதும் ஆகும். ஒருவேளை ஐசுவரியமுள்ள நண்பர்களினாலும், திரளான பணங்களினாலும் அறுவடை வேலை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இது அதிகபடியான உலகப்பிரகார ஆவியையும், அதிகமான பெருமையையும், வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதையும் வளர்த்துவிடும். மேலும், இது (கர்த்தருடைய) நோக்கத்திற்கு அனுகூலமற்றதாகவும், நம்முடைய சொந்த வளர்ச்சிக்குச் சாதகமற்றதாகவும் காணப்பட்டுவிடும். நாம் பெற்றுக்கொண்டிருப்பவைகளில் நாம் திருப்திக் கொள்வோமாக. அதாவது, எளிமையான அப்பம் மற்றும் மீனுடன், நமது கர்த்தருடைய ஆசீர்வாதத்துடன் திருப்திக்கொள்வோமாக. நம்முடைய உக்கிராணத்துவம் குறித்த உண்மையுள்ள கணக்கை நாம் ஒப்புவிக்கத்தக்கதாகவும், நம்மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தாலந்துகளை, நிலத்தடியில் புதைத்து வைக்காமல் மாறாக, நம்மால் முடிந்தமட்டும், நம்முடைய இராஜாவினுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா என்பதைப் பார்த்துக்கொள்ளத்தக்கதாகவும் அப்பத்துண்டுகள் குறித்தும் நாம் கவனமாய் இருப்போமாக.

நம்முடைய பாடத்தின் ஆதார வசனம் கூறுகின்றதுபோல, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நன்மைக்காக அதாவது, ஜீவனுக்கான அப்பத்திற்காகவும், இயேசுவுக்காகவும், இயேசு அளிக்கும் இரட்சிப்பிற்காகவும், இவர் மூலமாகவும், இவரோடு தொடர்புள்ள சிலாக்கியங்கள் மூலமாகவும் வரவிருக்கும் இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களுக்காகவும், பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவுக்கு நாம் நன்றி ஏறெடுக்க வேண்டும். அனைத்தும் பிதாவிடமிருந்து வந்துள்ளது, மற்றும் நமக்கான அனைத்து ஈவுகளும் குமாரன் மூலம் வந்துள்ளது. நன்றியுணர்வு என்பது மிகச் சிறிய கைமாறாகும்; இது சுயத்தைப் பலிச் செலுத்தும் ஆவியை உள்ளடக்கிய பூரண அன்பிற்கு நேராக வழிநடத்துகின்றது.