R4164 – வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4164 (page 135)

வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி

THE HOLY SPIRIT PROMISED

யோவான் 16:4-15

“”நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்.” யோவான் 14:16

நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் அவர் கெத்செமனேக்குப் போகின்ற வழியில், நாம் இப்பாடத்தில் பார்க்கவிருக்கிற காரியங்களை, தம்முடைய சீஷர்களுக்குக் கூறினார். தம்முடைய சீஷர்களாக அவர்கள் எதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாம் என்றும், தமக்கும் மற்றும் சகோதரர்களுக்கும் காண்பிக்கும் உண்மையினிமித்தம் அவர்கள் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, நிந்திக்கப்படுவார்கள் என்றும் கர்த்தர் அவர்களுக்குக் கூறினார். “”அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை” (யோவான் 16:4). “”இன்னும் அநேகக் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்” என்று கர்த்தர் கூறி அவர்கள் எதிர்ப்பார்த்திருக்க வேண்டியவைகள் அனைத்தையும் குறித்து, தாம் அவர்களுக்குக் கூறவில்லையென்று தெரிவித்தார் (12- ஆம் வசனம்). இப்படியாகவே, கர்த்தருடைய சீஷர்களாகும் அனைவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. அந்தந்த நேரத்தில் ஓர் அடி எடுத்துவைப்பதற்குப் போதுமான வெளிச்சத்தைப் பார்க்கின்றனர். ஆனால் எதிர்க்காலத்தில் வரும் சோதனைகள் மற்றும் சிரமங்களானது, இவைகளினிமித்தம் அவர்கள் அமிழ்த்தப்பட்டுப் போகாதபடிக்கு கிருபையாக மறைத்து வைக்கப்படுகின்றது. “”அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”” இப்படிச் செய்வதென்பது, சீஷர்களுடைய சித்தங்களுக்கு எதிராக, சீஷர்களை ஏதோ ஒன்றைச் செய்ய வைப்பதற்கென அவர்களை வசீகரிப்பதாகவும், ஏமாற்று, சதி பண்ணுவதற்காகவும் இல்லை. ஆரம்பத்திலேயே நாம் நமது சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்றி வரவில்லையெனில், நாம் அவருடைய சீஷர்களாய் இருக்கமுடியாது என்று நமக்கு உறுதியாய்த் தெரிவித்துள்ளார். இந்த ஓர் அடியை நாம் [R4164 : page 136] உண்மையுடனும், நேர்மையுடனும் எடுத்து வைத்திருந்திருப்போமானால், இது தொடர்பாக வரப்போகின்ற உபத்திரங்களுடைய விவரம் தெரியாமல் இருந்தாலும், பல சிரமங்கள் இருப்பதை நாம் காண்போம். ஒருவேளை நமக்கு எதிர்க்காலத்தில் வரும் சோதனைகளை நாம் அறிந்துக்கொள்வோமானால், நாம் மிகவும் அமிழ்த்தப்பட்டுவிடுவோம். காரணம் ஆரம்பத்தில், “”என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”” மற்றும் “”உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்”” என்ற நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகள் மற்றும் வாக்குத்தத்தங்களின் அர்த்தத்தை நாம் குறைவாகவே புரிந்துக் கொண்டிருப்பவர்களாகவே காணப்படுவோம் (2 கொரிந்தியர் 12:9 மற்றும் 1 கொரிந்தியர் 10:13). கர்த்தருடைய ஜனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு அடியை எடுத்துவைக்கும்போது, இந்த வாக்குத்தத்தங்கள் உண்மையாய் இருப்பதைக் காண்பார்கள், தாங்கள் நிலைநிறுத்தப்படுவதை உணர்வார்கள். தங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றவைகளே தங்களுக்கு இருக்கின்றது என்பதை உணர்வார்கள்; மற்றும் கடந்துவந்த பாதையில், முன் காலங்களில் வந்ததைக் காட்டிலும், (இப்பொழுது வரும்) தங்களுடைய சோதனைகள் கடுமையானதாக இருப்பினும், இவைகள் கிருபையிலும், அறிவிலும் உள்ள வளர்ச்சியின் காரணமாக, ஜெயங்கொள்ளப்படலாம் என்றும் உணர்வார்கள்.

கர்த்தர் தம்முடைய சொல்லர்த்தமான, கூட இருத்தல் இல்லாத நாட்களில், தம்முடைய துன்புறுத்தப்படும் பின்னடியார்களுக்கு ஒரு வல்லமையின் மூலம் தம்முடைய உதவியை அளிக்கக்கூடிய காரியமானது, அவர்கள் புரிந்துக் கொள்வதற்குக் கடினமாக இருந்தது. அவர்கள் பொருட்டு, ஆண்டவர் தாம் செயல்படுத்தும் வல்லமையை, செல்வாக்கை, பரிசுத்த ஆவி என்று, தேவனுடைய ஆவி என்று, கிறிஸ்துவினுடைய ஆவி என்று அழைப்பதன் மூலம் விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றார். சீஷர்கள் மீது செயல்படுத்தப்படப்போகிறதான செல்வாக்கானது, ஆறுதல்படுத்துகின்றதாயும், தாங்கி நிலைநிறுத்துகின்றதாயும் இருக்கப்போவதினால், இந்த வல்லமையை அல்லது ஆவியைக் கர்த்தர், ஒரு தேற்றரவாளனாக, தாங்கி நிறுத்துபவராக, ஓர் உதவியாளராகக் கூறினார். அவர்களை நடத்துவதற்கென்று வேறொரு நபரை அனுப்புவதாகக் கர்த்தர் கூறவில்லை. அவரைக் காட்டிலும் வேறெந்த ஒரு நபராலும், அவர்களைச் சிறப்பாக நடத்த முடியாது. அவர் அனுப்பப்போவது ஓர் ஆவி, ஒரு செல்வாக்கு, ஒரு வல்லமையே ஆகும். மேலும் இந்த ஆவி பிதாவையும், தம்மையும் முழுமையாக அடையாளப்படுத்துகின்றதாயிருக்கின்றது. ஆகவே பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதன் வாயிலாக, அவர்கள் பிதாவுடன் உறவையும், குமாரனுடன் உறவையும் பெற்றிருப்பார்கள். பிதாவும், குமாரனும் ஆண்பாலில் கூறப்படுகிறது போன்று, இந்தப் பரிசுத்த ஆவியும் கூட ஆண் பாலில் பேசப்படுகின்றது.

பரிசுத்த திரித்துவம்

“”இருண்ட யுகங்களினுடைய”” காலப்பகுதியில், அநேக குழப்பமான கருத்துக்கள் நிலவியிருந்தது மற்றும் வேதவாக்கியங்களுடைய தெளிவான போதனைகளும் மறைந்துபோயிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும், வேதாகமம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது (பயன்படுத்தப்படவில்லை). “”அப்போஸ்தலர் மரபு வம்சாவழி,”” எனும் உபதேசத்தின் கீழ், கண்காணிகள் அப்போஸ்தலர்களுக்குச் சமமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆகவே இவர்கள் ஆலோசனை குழுவில் கூடும்போது, ஓர் உபதேசம் பற்றின விஷயத்தில் இவர்களது முடிவு அல்லது வாக்களிப்பானது, அப்போஸ்தலர்களுடைய முடிவு என, அதிகாரப்பூர்வமானதென ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது கர்த்தர் பன்னிரண்டு [R4165 : page 136] அப்போஸ்தலர்களைத்தான் தெரிந்தெடுத்தார் என்பதும், அந்த 12-பேருக்குப் பின்னர் வருபவர்கள் எவர்களையும் குறித்தும் கர்த்தர் பேசவில்லை என்பதும், வெளிப்படுத்தின விசேஷத்தில் பன்னிரண்டு அஸ்திபாரங்களை மாத்திரம் கொண்டுள்ள புதிய எருசலேமைக் குறித்தும், அந்தப் பன்னிரண்டு அஸ்திபாரங்களில், ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய நாமங்கள் காணப்படுவதைக் குறித்தும் கூறினதின் வாயிலாக, இந்தப் பன்னிரண்டு பேருக்குப் பின் வேறு அப்போஸ்தலர்கள் இல்லையெனத் தெரிவித்துள்ளார் என்பதும், கவனிக்கத் தவறப்பட்டது (வெளிப்படுத்தல் 21:14).

இரண்டாம் நூற்றாண்டினுடைய ஆரம்பக்கட்டத்தில், சபை மீதான கிரேக்க தத்துவத்தின் செல்வாக்கானது, குறிப்பிடத்தக்க நிலையில் காணப்பட்டது; மற்றும் பல்வேறு தப்பறைகளும் பிரபலமாய்க் காணப்பட்டது. இவைகளில் ஒன்று, விசேஷமாக நமது கர்த்தரைக் கிரேக்க தத்துவ ஞானிகளுடனும், சாக்ரடீஸ் உடனும், பிளோட்டோவுடனும் சரிசமமாக வைத்துவிட்டு, நமது கர்த்தருடைய விசேஷித்த பிறப்பையும், அவர் மனிதனாக வருவதற்கு முன்னதாகவே காணப்பட்டார் என்பதையும் மறுப்பதாகவும் இருந்தது. இந்தத் தப்பறைகளுக்கு எதிர்த்துப் போராடும் வண்ணமாக, கர்த்தருக்கு உண்மையாய்க் காணப்பட்ட சிலர் எதிர்முனைக்குச் சென்று இயேசுவினுடைய சொந்த வார்த்தைகளுக்கு எதிராக அவரைப் பிதாவுக்குச் சரிசமமாக்கினார்கள் (யோவான் 10:29; 14:28). அடுத்ததாகப் பரிசுத்த ஆவி தொடர்பாக வாக்குவாதம் எழும்பிற்று. பின்னர் இயேசுவின் விஷயத்தில் எதிர்முனைக்குச் சென்றவர்கள், மூன்று கடவுள்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர்கள் பிதா மற்றும் குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்றும், இவர்கள் மூவரும் “வல்லமையிலும், மகிமையிலும் சரிசமமானவர்கள்” என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் சரிசமமான ஆற்றல் உள்ள, வெவ்வேறு நபர்களாய் இருக்கின்றார்கள் என்று விநோதமாய்க் கூறிக்கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக இவர்கள் நபரிலும் ஒன்றாக இருக்கின்றனர் என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட வேதவாக்கியங்கள் தெரிவிக்காததும், காரணகாரியத்துக்கு உட்படாததுமான கருத்தானது, அதற்கே ஆதரவு அளித்திட முடியாது. ஆகவே இக்கருத்தையுடையவர்கள் பல்வேறு விதமான திருக்குமறுக்கான வாதங்களுக்குள் வழிநடத்தப்பட்டுள்ளனர். சில சமயம் இவர்களில் சிலர், ஒரு நபரில் உண்மையில் மூன்று கடவுள்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஒரு கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் இந்தப் பொருளற்ற சொற்களுக்கு இவர்கள் விளக்கம் கொடுக்கமுடியாததினால், தவறையும், மூட நம்பிக்கையையும் மூடி மறைப்பதற்கு, வழக்கமாக பயன்படும் “”இரகசியம்”” எனும் வார்த்தையை கூறிவிடுகின்றனர். திருத்துவம் பற்றின காரியமானது, அவர்களும் சரி, மற்றவர்களும் சரி புரிந்துக்கொள்வதற்கு மிகவும் இரகசியமானதாக, மறைப்பொருளாக இருக்கின்றது என்று நம்மிடம் கூறுகின்றனர். ஒருவேளை இது அவர்களுக்குப் புரியவில்லை என்றால், அவர்கள் அதை விவாதிக்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் அதற்கென்று இதைப் புரிந்துக்கொள்பவர்கள், அதாவது திரித்துவம் பற்றின முழு இரகசியமும், சொந்த கற்பனை என்பதை மிகத் தெளிவாய்க் காண்பவர்கள், அதாவது இவ்விஷயம் தொடர்பான வேதாகமத்தின் போதனையானது மிகத் தெளிவாயும், எளிமையாயும், இசைவாயும், திருப்திகரமாயும் இருப்பதைக் காண்ப விவாதிப்பதிலிருந்து தடுக்கப்படக்கூடாது.

தேவனைப் பற்றி அப்போஸ்தலர் கூறும்போது, ஒரே ஒரு ஜீவனுள்ள, உண்மையான தேவன் இருக்கின்றார் என்று கூறுகின்றாரே ஒழிய, மூன்று என்று கூறவில்லை! இந்த ஜீவனுள்ள மற்றும் உண்மையுள்ள ஒரே தேவனைப் பிதா என்றும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் இருக்கிறார் என்றும், அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 8:6). மேலும் கர்த்தர் இயேசுவைப் பிதா உயர்வாக உயர்த்தினார் என்றும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குக் கொடுத்தார் என்றும், பிதாவைக் கனம் பண்ணுவது போன்று, அனைவரும் குமாரனையும் கனம் பண்ணும்படிச் செய்தருளினார் என்றும் இதே அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார் (பிலிப்பியர் 2:9-10; யோவான் 5:23). அப்படியென்றால், இரண்டு நபர்கள் இருக்கின்றார்கள்; இல்லையேல் வேறெந்த விதத்திலும் ஒருவர் மற்றொருவரை உயர்த்தி, கனப்படுத்த முடியாது. பிதாவைப் போன்று குமாரன் கனப்படுத்தப்பட்டதானது, வேறு வேதவாக்கியங்களினால் காட்டப்படுகின்றது. அதாவது இப்பொழுது இயேசு திவ்வியச் சுபாவத்தில் பங்கடைந்தவராக இருக்கின்றார்; மற்றும் தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக, அவருடைய சொந்த ஜீவனை ஒப்புக்கொடுத்து மனுக்குலத்தை மீட்கும்படிக்கு, உலகத்திற்கு வந்ததின் வாயிலாக, பிதாவின் சித்தத்திற்கு அவர் காட்டின கீழ்ப்படிதலுக்குப் பரிசாக அவர் தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார் என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றது. நாம் ஏற்கெனவே யோவான் 1:1-ஆம் வசனத்தில் பார்த்திருக்கின்றபடி, நமது கர்த்தர் உலகத்திற்கு வருவதற்கு முன்னதாக மற்றும் பிதாவின் பிரதிநிதியாகிய அவரால் உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்னதாக, அவர் லோகோஸாக, வார்த்தையாக, யேகோவா தேவனின் செய்தியாளராக இருந்தார் மற்றும் ஒரு தேவனாகவும், வல்லமையுள்ளவராகவும், தேவத்தூதர்களுக்கு மேலானவராகவும், இருந்தார் மற்றும்… “”சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.””

பிதாவையும், குமாரனையும் பற்றிக் கூறுகையில், அவர்கள் இருவரையும் தனித்தனி நபர்கள் என்று அப்போஸ்தலர் தெரிவிக்கையில், அவர் பரிசுத்த ஆவியை இன்னொரு தேவன் என்றோ அல்லது தேவனுடைய மூன்றாவது பாகமென்றோ குறிப்பிடாதது கவனிக்கப்பட வேண்டும். இன்னுமாக, அப்போஸ்தலர் பரிசுத்த ஆவியைப் புறக்கணிக்கவுமில்லை. அவருடைய நிரூபங்கள் எங்கும் இந்தப் பரிசுத்த ஆவியை, பிதாவினுடைய ஆவி என்றும், குமாரனுடைய ஆவி என்றும், சபைக்குப் பிதாவையும், குமாரனையும் அடையாளப்படுத்துகின்றதாய்க் காணப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். “”தேவன் ஆவியாயிருக்கின்றார்”” என்பதை வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவி ஓர் ஆவிக்குரிய ஜீவி என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. மாறாக ஆவி என்னும் வார்த்தையானது, ஓர் ஜீவியின் ஆவியை, அதாவது ஒரு நபரிடத்திலிருந்து வெளிப்படும் வல்லமையை, செல்வாக்கை, சித்தத்தை, நோக்கத்தை, பலத்தைக் குறிக்கின்றதாக இருக்கின்றது. பரிசுத்த ஆவி என்பது, பிதா மற்றும் குமாரனிடத்திலிருந்து வெளிப்படும் செல்வாக்கு அல்லது வல்லமையாகும். மேலும் அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகள் அடங்கிய சபையிடத்திலான இந்தச் செல்வாக்கு அல்லது வல்லமையானது, இவர்களுடன் ஒன்று சேர்பவர்களிடத்திலும் செயல்படுகின்றதாய் இருக்கின்றது. இது எப்பொழுதும் நல்லதும், பரிசுத்தமானதுமான ஆவி அல்லது செல்வாக்காக இருக்கின்றது. ஆகவே இது உலகத்தின் ஆவியிலிருந்தும், உலகத்தின் மனப்பான்மையிலிருந்தும், உலகத்தின் [R4165 : page 137] செல்வாக்கிலுமிருந்தும், பாவத்தின் ஆவியிலிருந்தும், அந்தி கிறிஸ்து முதலானவைகளின் ஆவியிலிருந்தும் வேறுபட்டதாயிருக்கின்றது.

பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை

துக்கத்துடனும், திகைப்புடனும், குழப்பத்துடனும் காணப்பட்டிருந்த தம்முடைய சீஷர்களிடம் நமது கர்த்தர் கனிவுடன், நிதானமாய், தம்மை அனுப்பிவைத்த பிதாவினிடத்திற்குத் தாம் திரும்பச் செல்வதைக் குறித்துக் கூறினார். எங்கே போகிறார் என்று அவர்கள் கேட்கவில்லை, காரணம் அவர் பிதாவினிடத்திலிருந்து வந்தார் என்பதும், தம்மை அனுப்பின பிதாவினிடத்தில் அவர் திரும்பப் போவார் என்பதுமான அவருடைய வார்த்தைகளை அவர்கள் நம்பினார்கள். ஆனால் துக்கம் அவர்களுடைய இருதயங்களை நிரப்பிற்று. தங்களுடன் கூடக் கர்த்தர் இல்லாமல், அவர்கள் என்ன செய்வார்கள்! ஒருவேளை கர்த்தர் போய்விடுவாரானால், இராஜ்யம் குறித்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும்! மூன்று வருடங்களாக அவர்கள் மாய்மாலத்தைத்தான் பின்தொடர்ந்திருக்கின்றார்களா? அவர்கள் கர்த்தரைச் சந்தேகிக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் குழம்பிப்போய் இருந்தார்கள். ஆகவே காரியத்தைச் சரியாக அவர்கள் புரிந்துக்கொண்டார்களானால், அவர்கள் கலக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதையும், உண்மையில் அவர்களுடைய நன்மைக்காகவும், அவர்களுடைய அனுகூலத்திற்காகவும், தாம் கடந்துப்போக வேண்டியுள்ளது என்பதையும் நமது கர்த்தர் அவர்களுக்கு விவரித்தார். தாம் போகவில்லையெனில், பிதா அவர்களை ஆவியில் ஜெநிப்பிப்பதும், அவர்களைத் தேவனுடைய பிள்ளைகள் என்று அங்கீகரிப்பதும் கூடாததாய் இருக்கும். இவைகள் கூடாது என்றால், அவர்கள் மனிதர்களைவிட மேலானவர்கள் ஆகுவதும், ஆவிக்குரிய ஜீவிகள் அல்லது திவ்விய சுபாவத்தையும், அதனோடு கூட அதன் மகிமைகளிலும், கனங்களிலும் பங்காளிகளாகுவதும் கூடாததாக இருக்கும். நமது கர்த்தர் பிதாவினிடத்திற்குப் போகவில்லையெனில், அவர்களால் மனிதர்களுக்குரிய திரும்பக்கொடுத்தலைக் அடையமுடியாது. காரணம் சபைக்கும், கூட உலகத்திற்குமான இரட்சிப்பின் முழு வேலையும், நமது கர்த்தர் நீதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைச் சார்ந்துள்ளது. அடுத்த நாள் ஆதாமின் சந்ததி மேல் காணப்பட்ட ஆதாமின் பாவத்திற்காக கர்த்தர் தேவனுடைய ஆட்டுக்குட்டியாக மரித்தார் மற்றும் மூன்றாம் நாளில், பிதா தம்முடைய சொந்த வல்லமையினால் அவரை உயிர்த்தெழுப்பினார். நம்முடைய சார்பில் நிகழ்த்திய இந்த மாபெரும் நிகழ்வில், மிகவும் முக்கியமான வேலை ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் தெய்வீக ஏற்பாட்டின் கீழ் இந்த வேலையின் பலனானது, முதலில் நமது கர்த்தர் பரத்திற்கு ஏறி, பிதாவின் முன்னிலையில் தோன்றி, தம்முடைய ஜனங்களின் சார்பாகத் தம்முடைய பலியின் புண்ணியத்தை ஒப்படைப்பதுவரையிலும், சபைக்கும் மற்றும் உலகத்திற்கும் வரமுடியாது. (இயேசு 40 நாட்கள் சீஷர்களுடன் காணப்பட்டதுபோல) இயேசு ஓர் ஆவிக்குரிய ஜீவியாக, இந்த யுகம் முழுவதும் அவருடைய பின்னடியார்களுடன் கூடவே காணப்பட்டிருந்தால், ஒருவரும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புத்திரச் சுவிகாரம் அடைவதற்கு முன்னதாக, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, கிறிஸ்து பரத்துக்கு ஏறி, தம்முடைய பலியின் புண்ணியத்தை ஒப்படைப்பது அவசியமாயிருந்தது.

பெந்தெகொஸ்தே அன்று அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட போது, அவர்கள், “”இதுவே தீர்க்கத்தரிசியாகிய யோயேலினால் உரைக்கப்பட்டது,” அதாவது “”தீர்க்கத்தரிசியாகிய யோயேலினால் உரைக்கப்பட்ட படியே இது நடந்தேறுகிறது”” (அப்போஸ்தலர் 2:16) என்று கூறினார்களே ஒழிய, “”இவரைப் பற்றியே தீர்க்கத்தரிசியாகிய யோயேலினால் உரைக்கப்பட்டது” என்று கூறவில்லை. இதை அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்று அழைத்தனர்! ஒரு நபரினால் ஞானஸ்நானம் என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒரு கருத்தாக உள்ளது. பரிசுத்த ஆவி எனும் நபர், ஒவ்வொரு விசுவாசியினுடைய இருதயத்திலும், தனிப்பட்ட விதத்தில் தங்குகின்றார் என்பதும் சரியான கருத்தல்ல! ஆனால் பரிசுத்த ஆவியை நாம் தனி நபராக, பிதா மற்றும் குமாரனிடமிருந்து தனி நபராகப் பேசுவதில்லை. பரிசுத்த ஆவியானது வேதவாக்கியங்களில் தேவனுடைய ஆவியாக, தேவனுக்குரிய ஆவியாக, தேவனிடமிருந்து வருவதாகவும், கிறிஸ்துவிடமிருந்து வரும் கிறிஸ்துவின் ஆவியாகவும், அனைத்து இடங்களிலும் ஊடுருவக்கூடியதும், எந்த இடத்திலும், எத்தனை இடங்களிலும், எந்த நேரத்திலும், எவ்விதமான வேலையையும் செய்யக்கூடிய ஓர் ஆவி அல்லது செல்வாக்கு அல்லது வல்லமை என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த உண்மையான கருத்தானது, வேதவாக்கியங்கள் அங்கீகரிக்காததும், அர்த்தமற்றதுமான கருத்துக்களைக்காட்டிலும் எத்துணை திருப்தியை அளிக்கின்றதாய் இருக்கின்றது. யோவான் 16:7-ஆம் வசனத்தில் ஆங்கிலத்தில் இடம்பெறும் “”him”” (அவரை) என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையானது it (அதை) என்றும் மொழிப்பெயர்க்கப்படலாம். அதாவது “”அதை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.’ எனினும் அவரை என்ற வார்த்தை இடம்பெறுவதற்கும் நாம் மறுப்புத் தெரிவிப்பதில்லை. காரணம் இந்தப் பரிசுத்த ஆவி அல்லது செல்வாக்கானது பிதாவிடமிருந்தே வருகின்றது. இதுபோலவே 8-ஆம் வசனத்தில் இடம்பெறும் அவர் என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையானது (it) அது என்றும் மொழிப்பெயர்க்கப்படலாம்.

உலகத்தின் ஆவி அல்ல

பரிசுத்த ஆவியின் செயல்பாடு குறித்த பல்வேறு தவறான கருத்துக்களில் ஒன்று, அந்தப் பரிசுத்த ஆவி என்னும் நபர், பாவத்தில் இருக்கும் ஜனங்களை நம்ப வைப்பதிலும், அவர்களை நீதியினிடத்திற்கு மாற்றுவதிலும், இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் இங்குமங்குமாகச் செல்லும் வேலையில் காணப்படுகின்றார் என்பதாகும். இதையும் தாண்டிச் சிலர் நம்மிடம் தெரிவிப்பது என்னவெனில், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அற்புதகரமான விதத்தில் பாவியின் மேல் செயல்படாதது வரையிலும், எவனும் மனம்மாற்றம் அடையான் என்பதாகும். இவைகள் உண்மை என்றால், உலகம் இன்று மனம்மாற்றம் அடையாமல் இருப்பதற்குத் தேவனே பொறுப்பாளியாக இருப்பார்; காரணம் பரிசுத்த ஆவியானது மனமாற்றுவதும், கண்டித்துத் திருத்துவதுமாகிய அதன் பாகத்தைச் செய்யத் தவறிவிட்டதாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் கடுமையான தப்பறைகள் ஆகும்.

பரிசுத்த ஆவி உலகத்தாருடைய இருதயங்களில் செயல்படுவதில்லை. மாறாக நமது கர்த்தர் கூறுகின்றபடி, அந்தப் பரிசுத்த ஆவியானது, பிதாவின் ஆவியானது, குமாரனுடைய ஆவியானது, சத்தியத்தின் ஆவியானது, தெளிந்த புத்தியின் ஆவியானது, கர்த்தருடைய பரிசுத்தத்தின் ஆவியானது, அவருடைய சீஷர்களாகிய உங்களிடத்திலே காணப்படும். பரிசுத்த ஆவியினுடைய இந்தத் தன்மைகள் எதுவும் பாவமுள்ள உலகத்தாரிடம் காணப்படுவதில்லை. பரிசுத்த ஆவியின் இத்தன்மைகளானது, “”கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு”” மாத்திரமே உரியதாகும் மற்றும் இவர்களுக்கே திட்டமிடப்பட்டுள்ளது. தேவனுக்கென்று தங்களை முழுமையாய் அர்ப்பணித்துள்ளவர்களுடைய இருதயங்களில் தேவனுடைய வல்லமையானது செயல்பட்டு, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை உலகத்தின் ஆவியிடமிருந்து பிரித்து, அவர்களைத் தெய்வீக ஊழியங்களில் பயன்படுத்துகின்றது. உலகத்தின் ஆவி என்பது, பாவம் மற்றும் சுயநலத்தின் ஆவியாக இருக்கின்றது. கர்த்தருடைய ஆவி என்பது, தெய்வீகச் சித்தத்திற்கு என அர்ப்பணம் பண்ணும் ஆவியாகவும், பரிசுத்தத்தின் ஆவியாகவும் இருக்கின்றது.

அவர் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்

நம்மிடத்தில் இருக்கும் பரிசுத்த ஆவியானது எப்படி உலகத்தைக் கண்டித்து உணர்த்தும்? உலகத்தைக் கண்டித்து உணர்த்தத்தக்கதாக, சபை அதாவது பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு வெளிச்சமூட்டப்பட்ட அனைவரும், மனுஷர்கள் முன்பு தங்களது வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ண வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பது நமது பதிலாகும். சபையினுடைய பரிசுத்தமே, உலகத்தைக் கண்டித்து உணர்த்துகின்றதாய் இருக்கும். கர்த்தருடைய ஆவியும், [R4166 : page 137] கர்த்தருடைய ஜனங்களிலுள்ள அவருடைய பண்புகளும், பாவத்தில் ஜீவிப்பவர்களைக் கண்டித்து உணர்த்துகின்றதாய் இருக்கும். நம்முடைய கர்த்தருடைய விஷயத்திலும் இப்படியாகவே இருந்தது. நமது கர்த்தருடைய ஞானஸ்தானத்தின்போது, பிதாவின் ஆவி அவருக்கு அளிக்கப்பட்டது. அவர்மேல் பரிசுத்த ஆவியானது இறங்கி தங்கினதை, யோவான் சாட்சிக் கொடுக்கின்றார். அவர் பிதாவின் ஆவியை அளவில்லாமல் பெற்றுக்கொண்டார். காரணம் அவர் தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் பூரணமானவராய் இருந்தபடியினால், அவர் பரிசுத்த ஆவியை முழுமையாய்ப் பெற்றுக்கொள்ள முடிந்தது. விழுகையின் காரணமாக பூரணமில்லாமல், குறைப்பாடுடன் காணப்படும் நாம், நம்முடைய குறைப்பாடுகளின் காரணமாகக் குறிப்பிட்ட அளவிலேயே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் அதிகமதிகமாய் நிரப்பப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவது ஒவ்வொருவருக்கும் உரிய சிலாக்கியமாக இருக்கின்றபடியினால் தேவனுக்கு நன்றி. மனுஷர் முன்பு கர்த்தரினால், பிரகாசிக்கப்பட்ட அவருடைய ஒளியானது மாபெரும் ஒளியாக இருந்தது. அதற்கு ஒப்பிடுகையில் நம்முடைய ஒளிகளானது மங்கலானதாகத்தான் காணப்படுகின்றது. எனினும் நமது கர்த்தருடைய உதாரணத்தைப் பின்பற்றுகின்றவர்களாக நாம் காணப்பட வேண்டும்; மற்றும் அதிகமதிகமாகச் சத்தியத்தின் ஆவியினால், சத்தியத்தின் ஒளியினால் நிரப்பப்பட வேண்டும்; மற்றும் நம்முடைய [R4166 : page 138] செல்வாக்கின் கீழ் வருகின்றவர்கள் அனைவர் மீதும் ஞானத்துடன் அவ்வொளியைப் பிரகாசிக்கப்பண்ணுகிறவர்களாய்க் காணப்பட வேண்டும்.

வசனங்கள் 8-11-இல் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் மூன்று விதமான பலன்கள் காணப்படும்:

(1) “”அது பாவத்தைக் குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்தும்,” அதாவது உலகத்திற்கு அதன் பாவநிலையைக் குறித்து உணர்த்தும். பாவத்தினுடைய, மிகுதியான பாவத்தன்மையை அதிகமதிகமாய் உலகத்திற்குக் காண்பிக்கும். நேர்மைக்கும் நேர்மையின்மைக்கும், உண்மைக்கும் போலித்தனத்திற்கும், நீதிக்கும் பாவத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை வேறுபடுத்திப்பார்க்க முடியாத அளவுக்கு, உலகத்திலுள்ள அநேகர் தேவனுடைய சாயலை மிகவும் இழந்துள்ளனர்; மற்றும் மனசாட்சியையும் மிகவும் இழந்துள்ளனர். உலகமானது, அதனை கொண்டே அதனை நிதானிக்கின்ற பழக்கத்தைக்கொண்டிருக்கின்றதாய் இருக்கின்றது. ஆனால் கிறிஸ்துவிலும், அவருடைய சபையிலும் இன்று உலகத்திற்கெனத் தேவன் புதிய கொள்கையை/நியமத்தை/அளவுகோலை நிறுவியுள்ளார். நீதி மற்றும் அன்பு தொடர்புடைய தேவனுடைய வார்த்தைகளாகிய மகிமையான நியமத்தை/ அளவுகோலை/ கொள்கையை சபையானது அதன் வார்த்தைகளினால் மாத்திரமல்லாமல், அதன் கிரியைகளினாலும் உயர்த்திப்பிடிக்க வேண்டும்.

(2) பாவம் விஷயத்தில் உலகமானது குற்றவாளி எனத் தீர்க்கப்படுவது மாத்திரம் போதுமானதாகாது. உலகம் பாவத்திற்கு எதிரான நீதியைக் குறித்துக் கொஞ்சம் புரிந்துக்கொள்வதும் அவசியமாகும். ஓரளவுக்கு நீதியை நிறைவேற்றுவது கூடுகிற காரியம் என்றும், நீதியை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமம் என்பது விழுந்துபோன சுபாவத்தினாலேயே என்றும் உலகம் புரிந்துக்கொள்வது அவசியமாகும். நீதிதான் சரியான கொள்கை என்றும், நீதியை மாத்திரமே தேவன் அங்கீகரிப்பார் என்றும், தேவனுடைய அருமையான திட்டத்தில், நீதியாய் நடப்பவர்களுக்கு மாத்திரமே நித்தியஜீவன் அருளப்படுவதற்கு அவர் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும், உலகமானது நம்ப வைக்கப்பட வேண்டும். இது தொடர்புடைய விஷயத்ததில் போதிப்பவர்களாகிய ஆவியில் வெளிச்சமூட்டப்பட்டவர்கள் என்பவர்கள், ஒருவனும் தன்னுடைய சொந்த நீதியின் கிரியைகளினால் பிதாவுக்கு இசைவாய் வர முடியாது என்றும், கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியம் அருளுகின்ற, பாவங்களுக்கான மன்னிப்பும், பாவங்கள் மூடப்படுதலும் அவசியம் என்றும் தெளிவுப்படுத்திக் கூற வேண்டும்.

(3) கர்த்தருடைய ஜனங்களின் செய்திக்கும், வெளிச்சத்திற்கும், தொடர்புக்குள் வரும் அயலார்களை, கர்த்தருடைய ஜனங்களிடத்திலிருக்கும் கர்த்தருடைய ஆவியானது, தற்கால ஜீவியத்துடன் அனைத்தும் முடிவடைவதில்லை என்றும், முழு மனுக்குலத்திற்குமான ஒரு நியாயத்தீர்ப்பு, ஒரு பரீட்சையானது தேவனுடைய ஏற்பாட்டில் ஏற்பாடுபண்ணப்பட்டுள்ளது என்றும் நம்பவைத்திடும். இந்தச் செய்தியைக் கேட்கின்ற எவனும், இதிலுள்ள நியாயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் இப்படி ஒப்புக்கொள்வது என்பது நித்தியஜீவனை வாஞ்சிப்பவர்கள் அனைவரின் சந்தோஷத்திற்கும், நம்பிக்கைக்கும் அடித்தளமாய் இருக்கும். இப்படியான நம்பிக்கைகளால் சரியாகவும், ஆழமாகவும் செயல்படுத்தப்படுபவர்கள், தாங்களும் சபையுடன் கூடத் தங்களுடைய நியாயத்தீர்ப்பையும், பரீட்சையையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாகக் கர்த்தரை நாடித்தேடி, தற்காலத்திலுள்ள கிருபைக்கான பல்வேறு வழியைத் தேடுகிறவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் இப்படியான நம்பிக்கையினால் தாக்கம் அடையாதவர்கள், சபை மூலம் அறிவுறுத்தப்பட வேண்டும்; அதாவது எந்தளவுக்கு அவர்கள் ஒளியை அல்லது அறிவைப் பெற்றிருக்கின்றார்களோ, அவ்வளவாய் அவர்களுக்குப் பொறுப்பு உள்ளது என்று அறிவுறுத்தப்பட வேண்டும். தேவனுடைய திட்டத்தில், கர்த்தரிடத்திலான உண்மைக்கு ஏற்ப, பரீட்சிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்படத்தக்கதாக அனைவருக்கும் முழுமையான வாய்ப்பு அளிக்கப்படும் விதத்தில், உலகத்திற்கு எதிர்க்காலத்தில் ஒரு நியாயத்தீர்ப்பின் நாளை தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார். தற்காலத்திலுள்ள உலகத்தாரின் நடக்கையானது, எதிர்க் காலத்திலுள்ள அவர்களுக்கான நியாயத்தீர்ப்பு அல்லது பரீட்சையுடன் தொடர்பு பெற்றிருக்கின்றது. தற்காலத்தில் உலகத்தார் எந்தளவுக்குத் தங்களுடைய மனசாட்சிக்குக் கீழ்ப்படிய தவறி, சத்தியத்தின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதற்குத் தவறுகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்கள் எதிர்க்காலத்தில் ஜெயங்கொள்வதற்கு சிரமம் உண்டு; மற்றும் அடிகளும் அடிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் எந்தளவுக்குத் தற்காலத்திலேயே நீதிக்கு ஏற்ப வாழ்வதற்கு நாடுகின்றார்களோ, அவ்வளவாய் அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளில் தங்களுக்கு உதவிடும் வண்ணமாக தங்களுக்கென ஓர் ஆசீர்வாதத்தைச் சேர்க்கின்றவர்களாய் இருப்பார்கள்.

ஏனெனில் அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை

கிறிஸ்துவையும், பாவத்திற்கான அவருடைய கிருபாதார பலியையும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாததினாலேயே உலகத்தார் இன்னமும் பாவிகளினுடைய தன்மையிலேயே, கோபாக்கினையின் பிள்ளைகளாகத் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சபையிலுள்ள சத்தியத்தின் பரிசுத்த ஆவியானது, உலகத்தாருக்கு அறியச்செய்திடும். இயேசு தம்முடைய பலியை, பிதாவிடம் ஒப்படைத்தபோது, நமது கர்த்தர் இயேசுவால் பெற்றுத்தரப்பட்ட நீதி ஒன்று, அதாவது தரிபிக்கப்படும் நீதி ஒன்று உள்ளது என்று உலகத்தாருக்குச் சபையினிடத்திலுள்ள பரிசுத்த ஆவியானது அறியச் செய்திடும். தற்காலத்தின் ஏற்பாடுகள்/ஒழுங்குகள் தொடராது என்றும், நம்முடைய கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது, புதிய ஒழுங்குகள்/ஏற்பாடுகள் கொண்டுவரப்படும், காரணம் கர்த்தர் உலகத்தை ஏற்கெனவே மீட்டுக்கொண்டதன் வாயிலாக, தீமையின் தற்போதைய ஏற்பாட்டிற்கு அதிபதியாக இருக்கும் சாத்தானைப் புறம்பாக்கிப்போடுவதற்குரிய உரிமையைச் சுதந்தரித்துள்ளார் என்றும், சபையினிடத்திலுள்ள பரிசுத்த ஆவியானது உலகத்திற்கு அறிவுறுத்தும்.

அவர் வரப்போகிறகாரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்

நமது கர்த்தர் தம்முடைய பின்னடியார்களுடன் கூடக் காணப்பட்ட சமயத்தைக் காட்டிலும், அவர் பரத்திற்கு ஏறிப்போன பிற்பாடே, இன்னும் அதிகமான அறிவுரைகளைக்கொடுத்து, தம்முடைய பின்னடியார்களை ஆயத்தப்படுத்தினார். இதற்குக் காரணம் பரத்திலிருந்து ஆவி வருவதுவரையிலும், அவர்கள் ஆயத்தமற்றே காணப்பட்டார்கள் என்பதே ஆகும். அதுவரையிலும் அவர்கள் சுபாவத்தின்படியான மனிதனைப்போன்றே காணப்பட்டனர். மேலும் அப்போஸ்தலர் சுட்டிக்காட்டினது போன்று “”ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”” (1 கொரிந்தியர் 2:14). இதன் காரணமாகவே, பிற்காலங்களில் ஆவிக்குரிய விஷயம் தொடர்புடைய ஆழமான போதனைகளைச் சில அப்போஸ்தலர்கள் கொடுத்ததுப்போன்று, இயேசு (சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்) கொடுக்கவில்லை என்று பார்க்கின்றோம். இப்படியாக ஆழமானப் போதனைகளை இயேசு கொடுக்காதது, அவருடைய சார்பிலான இயலாமையாக இராமல், மாறாக அந்தச் சத்தியங்கள் அப்பொழுது அவருடைய சீஷர்களுக்கு ஏற்றக் கால உணவாய் இராமல், அவர்களைத் திணறச்செய்து, அவர்களைப் பாதித்திருக்கும் என்பதினாலேயே ஆகும். ஆகவேதான் நம்முடைய கர்த்தருடைய போதனைகளிலுள்ள ஆழமான விஷயங்கள் உவமை பாணியில் முன்வைக்கப்பட்டது. இப்படி உவமை பாணியில் முன்வைக்கப்பட்டதின் காரணமாக, அது சீஷர்களுக்கு அச்சமயத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தாது மற்றும் பிற்பாடு அதன் காரியங்களை உணர்ந்து, புரிந்துக்கொள்ளப்பட முடியும். ஆகவேதான் அவர், “”பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லை (உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை) பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்”” என்றார் (யோவான் 3:12).

“சத்தியத்தின் ஆவி வரும்போது, அது உங்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும்”. எனினும் அது ஒரு கால்வாயாக மாத்திரமே இருக்குமே ஒழிய அதிகாரி போன்று இருப்பதில்லை. காரணம் அது உங்களுக்குத் தெய்வீகத் திட்டத்தினுடைய பல்வேறு அம்சங்களைத் தெரியப்படுத்தும். அதாவது உங்களுக்கு இன்னமும் வெளிப்படுத்தப்படாதவைகள் ஏற்றவேளையில் வசனத்தின் வாயிலாகவும், பரிசுத்த ஆவியினுடைய செல்வாக்கின் வாயிலாகவும் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும். இந்தப் பரிசுத்த ஆவியின் மூலம் (இயேசு) நான் மகிமைப்படுத்தப்படுவேன். ஏனெனில் இந்தப் பரிசுத்த ஆவியானது, உங்களுக்குக் காண்பிப்பவைகள் என்னுடையவைகளாய் இருக்கின்றது. காரணம் பிதாவினுடையவைகள் அனைத்தும் என்னுடையவைகளாய் இருக்கின்றது. ஆகவேதான் (இயேசு) நான், ‘அவர்/அது என்னுடையதில் எடுத்து, உங்களுக்கு அறிவிப்பார்/அறிவிக்கும்’ என்று கூறினேன்”” என்ற விதத்தில் இயேசு கூறுகின்றார் (15-ஆம் வசனம்). இவ்வசனத்தில் பிதாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள்; அனைத்தும் பிதாவினுடையவைகள். ஆனால் பிதா, குமாரனைத் தம்முடன் உடன்சுதந்திரராக, தம்முடைய உடன்பங்காளியாக ஆக்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்த ஆவிக்கு எதுவும் சொந்தமெனச் சொல்லப்படவில்லை. காரணம் பரிசுத்த ஆவி என்பது தொடர்பு வைத்துக் கொள்வதற்குரிய, ஆசீர்வாதங்கள், அறிவுரைகள் வழங்கிடுவதற்குரிய, தெய்வீகக் கால்வாயாக மாத்திரமே இருக்கின்றது. பரிசுத்த ஆவி ஒரு நபரல்ல, மாறாக சர்வ வல்லமையுள்ள தேவன் மற்றும் அவருடைய நித்திய குமாரனுடைய ஆவி அல்லது செல்வாக்கு அல்லது வல்லமையாக மாத்திரமே இருக்கின்றது. பரிசுத்த ஆவி பற்றின விரிவான விளக்கங்களுக்கு வேதாகம ஆராய்ச்சி பாடங்களின் 5-ஆம் தொகுதியில்/volume-இல், 8-ஆம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.

வேறொரு தேற்றரவாளனை உங்களுக்குத் தந்தருளுவார்

நம்முடைய பாடத்தின் ஆதார வசனமானது அருமையானதாகவும், உதவிகரமானதாகவும் காணப்படுகின்றது. இடுக்கமான பாதையிலுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்குத் தேற்றும் ஆவியாக, வழிக்காட்டியாக, போதிப்பவராக, உதவியாளராகக் கொடுக்கப்பட்டுள்ள பரிசுத்த ஆவியானது, பிதாவிடமிருந்ததான அன்பளிப்பு என்று நமது கர்த்தர் விவரிக்கின்றார். இது பெந்தெகொஸ்தே [R4166 : page 139] ஆசீர்வாதம் குறித்த பதிவிலுள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு இசைவாகவே இருக்கின்றது. இவ்விஷயம் குறித்து, தெய்வீக வல்லமையின் வலது கரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள நமது கர்த்தர் இந்தப் பரிசுத்த ஆவியை/வல்லமையை பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டு, பெந்தெகொஸ்தே நாளன்று தம்முடைய பின்னடியார்கள் மீது பொழியப்பண்ணினார் என்று அப்போஸ்தலர் பேதுரு விவரிக்கின்றார். இவைகள் அனைத்தும் பரிசுத்த ஆவி தொடர்புடைய சரியான கண்ணோட்டத்திற்குப் பொருந்துகின்றது. ஆனால் பரிசுத்த ஆவி ஒரு நபர் எனும் தவறான கண்ணோட்டத்திற்கு மிகவும் பொருத்தமற்றதாய் இருக்கின்றது. எப்படி ஒரு நபரைப் பொழியப்பண்ண முடியும்! அதிகாரத்தில் சரிசமமாய் இருக்கும் இருவரில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, இவர்கள் இருவருக்கும் சரிசமமாக இருக்கும் மூன்றாவது ஒரு நபரை, ஓர் அன்பளிப்பாக/வரமாகப் பொழியப்பண்ணுவதற்கென ஜெபம் பண்ணிட முடியும்! இந்தத் தப்பறைக்கு நம்முடைய கண்கள் திறக்கப்படும்போது, இதிலுள்ள முரண்பாடுகள் நமக்கு அருமையாய் வெளிப்படுகின்றது. ஆனால் நமது கர்த்தர் இயேசு நம்பொருட்டு, பிதாவின் முன் தோன்றி, நம் பொருட்டான அவருடைய பலியின் புண்ணியத்தைக் கிருபாசனம் மீது வைத்தவுடன், பிதா தம்முடைய பரிசுத்த ஆவியை, தம்முடைய பரிசுத்தமான செல்வாக்கை நம்மீது அனுப்பி, நம்மை அவருடைய குடும்பத்திற்குள் தத்தெடுத்து, நம்மை அவருடைய பிள்ளைகளென நடத்த பிரியப்பட்டதான உண்மையான கருத்து எத்துணை அருமையானதாய் இருக்கின்றது!

பெந்தெகொஸ்தே நாளன்று வந்த ஆசீர்வாதங்கள் அன்று பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமல்லாமல், நிழலில் காண்பிக்கப்பட்டுள்ளது போல முழுச்சபைக்கும் உரியது என்ற கருத்து எத்துணை அருமையானதாய்க் காணப்படுகின்றது! முற்காலங்களில் இராஜாக்களும், ஆசாரியர்களும் அபிஷேகம் பண்ணப்பட்டு, விசேஷமான ஊழியத்திற்கெனப் பிரித்து வைக்கப்படுகின்றனர். கிறிஸ்துவும், அவருடைய சபையும், மெல்கிசெதேக்கின் முறைமையின் கீழ் உண்மையான இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருக்கின்றனர்; மற்றும் இவர்களுடைய ஊழியங்களின் கீழ்ப் பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும். நமது கர்த்தர் தலையாக இருக்கின்றார்; மற்றும் நாம் அவருடைய அங்கங்களாக இருக்கின்றோம். கர்த்தரை இராஜாவாக ஆக்குவதற்கும், ஆயத்தப்படுத்துவதற்கும் மற்றும் மெல்கிசெதேக்கின் முறைமையின்படி அவரை ஆசாரியர் ஆக்குவதற்கும், ஆயத்தப்படுத்துவதற்குமென அவர் மீது பரிசுத்த ஆவி வருவதானது, எண்ணெயினால் அபிஷேகித்தல் எனும் நிழலினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆகவேதான் அவருடைய அபிஷேகத்தைக் குறித்து, அது ஆரோனின் தலையில் ஊற்றப்படுகிறதும், அவருடைய தாடியில் வழிந்தோடி, அவருடைய அங்கிகளின்மேல் இறங்கியிருக்கிறதான தைலமெனத் தீர்க்கத்தரிசி கூறுகின்றார். இது நமது தலையாகிய கர்த்தர் இயேசுவின் ஞானஸ்தானத்தின் போது, அவர்மீது பரிசுத்த ஆவி வந்ததையும், அவருடைய அங்கங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கென ஆயத்தத்துடன், காத்திருந்தவர்கள் அனைவர் மீதும் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி பொழியப்பட்டதையும், அதுமுதல் அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகள் மூலம் அவரை நம்பி, அதே சரீரத்தின் அங்கத்துவத்திற்குள் வந்துள்ள நாமும், அதே அபிஷேகத்தைப் பெற்றுள்ளதையும் அடையாளப்படுத்துகின்றது. “”நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது” (1 யோவான் 2:27). இந்த அபிஷேகித்தல் என்பது, ஒரு நபரைக்குறிக்காமல், மாறாக செல்வாக்கையும், ஆசீர்வாதத்தையும் குறிக்கின்றது.

நாம் கர்த்தரால் பயன்படுத்தப்படுவதும், பரிசுத்த ஆவியின் ஜெநிபித்தல் மூலமாக அவருடைய குடும்பத்திற்குள் தத்தெடுக்கப்படுவதுமாகிய சிலாக்கியத்தின் மூலமாக, எத்துணை திருப்தியும், எத்துணை ஆறுதலும் கர்த்தருடைய ஜனங்களுக்குக் கடந்துவந்துள்ளது. பரிசுத்த ஆவியின் [R4167 : page 139] அபிஷேகமும், பிதா மற்றும் குமாரனுடைய பரிசுத்தமான செல்வாக்கும், ஆசீர்வாதமும், நம்முடைய கணிப்புகளையும், நம்முடைய இருதயங்களையும் வழிநடத்தி, வேதவாக்கியங்களை நமக்குத் திறந்துகாட்டி, பூமியின் சகல குடிகளுக்குமான நமது பிதாவின் இரட்சிப்புக்கு அடுத்த மகிமையான திட்டத்தினுடைய ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும், உயரத்தையும் அதிகமாய் உணர்ந்துக்கொள்ளும் நிலைக்கு நம்மைக்கொண்டுவந்து, நம்முடைய இருதயங்களைக் கொழுந்துவிட்டு எரியச்செய்கின்றது.

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நிலைத்திருப்பது என்பது தற்காலிகமானதல்ல. ஒரு நாளுக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு நிலைத்திருக்கக்கூடியதாய் அல்லாமல், யுகத்தின் முடிவுவரையிலும் காணப்படும். இப்படியாக இருப்பதின் நிமித்தம் நாம் எத்துணை மகிழ்ச்சியடைகின்றோம்! நாம் அனுபவிக்கும் போதனைகளும்/அறிவுரைகளும் மற்றும் வழிநடத்துதல்களும் எவ்வளவு ஆசீர்வாதமாய் இருக்கின்றது! நமது கர்த்தர் சொன்னதுபோல, உண்மையில் பரிசுத்த ஆவியானது, நமக்கு வரப்போகும் காரியங்களைக்காட்டி, நடந்து முடிந்தவைகளை நமக்கு விவரிக்கின்றதாய்க் காணப்படும். நம்முடைய எத்தனை ஆசீர்வாதங்கள், வரப்போகின்ற காரியங்களின் உணர்ந்துக்கொள்ளுதலாய்க் காணப்படுகின்றது. அதாவது ஆயிரவருட இராஜ்யம், பூமியின் குடும்பங்களைச் சீர்ப்பொருத்தி, தூக்கிவிட்டு, பலப்படுத்துவதற்குரிய காலங்களாகிய, வரப்போகின்ற காரியங்ளைப்பற்றின உணர்ந்துக்கொள்ளுதலாய்க் காணப்படுகின்றது.