R5134 – ஏழெழுபது தரம் மன்னித்தல்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5134 (page 358)

ஏழெழுபது தரம் மன்னித்தல்

FORGIVE SEVENTY TIMES SEVEN

மத்தேயு 18:15-35

“”ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” – எபேசியர் 4:32

இன்றைய பாடமானது, ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் மிகவும் ஆசீர்வாதமானதாய்க் காணப்படும்; இன்னுமாக, இப்பாடமானது அவன் தெய்வீக எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப முழுமையாய்க் காணப்படுவானானால், அவனுக்கு நித்தியத்திற்குரிய ஜீவனையும் உறுதிப்படுத்துகின்றது. இப்பாடமானது மற்றவர்களுக்கும் நன்மை கொடுக்கிறதாக இருப்பினும், விசேஷமாக இது அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களுக்கு அதாவது, கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டிருக்கும் சபைக்கு அதாவது, கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கு உரியதாகும்.

ஆண்டவருடைய பின்னடியார்களுக்குரிய அவரது சட்டம் பின்வருமாறு… ஒருவேளை ஒரு சகோதரன், உனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அவ்விஷயத்தில் ஒரு முடிவுக்கு வரத்தக்கதாக, ஓர் புரிந்துகொள்ளப்படுதலுக்குள் வருவதற்கென இவ்விஷயத்தோடு, அவனிடம் தனிமையில் சென்று முயற்சிக்க வேண்டும். ஆனால், இது போதுமானதாக இராமல், விஷயம் அலட்சியம் செய்ய முடியாதது என நீ கருதினால், காரியம் எதையும் விவரிக்காமல், உன்னோடு கூட இரண்டு நபர்களை அழைத்துக் கொண்டு, குற்றம் புரிந்தவரிடத்தில் செல்ல வேண்டும்; அதாவது, உனக்கும் அவனுக்கும் அறிவுரைக் கூறத்தக்கதாக, காரியத்தை அந்த இரண்டு நபர்களும் கேட்கத்தக்கதாக, முன்கூட்டியே அவர்களிடம் விஷயத்தைக் கூறாமல் அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த இரண்டு நபர்களின் முடிவும், இவர்களின் அறிவுரையும் உன்னாலும், அவனாலும் பின்பற்றப்பட வேண்டும். ஒருவேளை இந்த இரண்டு நபர்களும் நீ தவறு செய்துள்ளதாகக் கூறினால், தவறு செய்துள்ளதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீ தவறு செய்யவில்லை என்று இந்த இரண்டு நபர்கள் கூறியும், உனக்குப் பாதகம் பண்ணினவன், இவர்களது ஆலோசனைக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டு, உனக்குப் பாதகம் செய்வதில் தொடர்ந்துக் கொண்டிருந்தால், மேலும் இதனை சபைக்குத் தெரிவிக்குமளவு முக்கியமானதாகக் கருதினால், அதைத் தெரிவிக்கும் சுயாதீனத்தில் நீ காணப்படுகின்றாய். உங்கள் இருவர் மீதான சபையின் முடிவே இறுதியானதாகும். சபைக்குச் செவிசாய்க்க மறுப்பவர் வெளியாளாகக் கருதப்பட வேண்டும். அதுவும் இப்படிச் செய்வது அவனுக்குப் பாதகம் பண்ண வேண்டும் என்றில்லாமல் மாறாக, அவனது போக்கு மாற்றப்படுவது வரையிலும் சபையில் அவன் ஏதேனும் ஸ்தானங்களில் நியமிக்கப்படுவதிலிருந்து அவன் விலக்கி வைக்கப்படுகின்றான். தெய்வீக வழிநடத்தல் எவ்வளவு எளிமையாய் உள்ளது. இதனை பின்பற்றுகையில் எத்துணை ஆசீர்வாதம் கடந்து வரும்!

ஏழெழுபது தரம் மன்னித்தல்

ஒரு சகோதரன் எத்தனைமுறை மீறுதல் பண்ணி மன்னிப்பைக் கேட்கலாம் என்றும், அவன் எத்தனைமுறை மன்னிக்கப்படலாம் என்றும், ஏழுமுறை மன்னித்தல் வரையறையாக [R5134 : page 359] வைத்துக்கொள்ளலாமா என்றுமுள்ள கேள்வியைப் பரிசுத்தவானாகிய பேதுரு கேட்டார். எவ்விதமான வரையறையும் இல்லை என்றும், தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கும் எந்தச் சகோதரனும் மன்னிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவேளை 490 முறை மன்னிப்பு மீண்டும் மீண்டுமாகக் கேட்கப்பட்டாலும், மன்னிக்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவர் கூறினார். வேறு எதுவும் வழியில்லை; மன்னிப்புக் கேட்கப்பட்டால், அது வழங்கப்படுவது கடமையாகும். ஆண்டவருடைய இந்த அறிவுரையைப் பின்பற்றுவதினால் வரும் பின்விளைவுகளைக்குறித்து நாம் மிகவும் பயந்தவர்களாகக் காணப்படக்கூடாது; அவருடைய ஞானம் நம்மைத் தவறாய் வழிநடத்தவில்லை என்ற உறுதியுடன் பொறுப்பை நாம் அவர் மேல் வைத்துவிட வேண்டும்.

பின்னர் நமது கர்த்தர், பரலோக வகுப்பாராகிய இராஜ்யம் குறித்து அதாவது, தற்போது கருநிலையில் காணப்படும் சபை தொடர்பான விஷயத்தில், இக்காரியத்தை விவரிக்கும் வண்ணமாக ஓர் உவமையைக் கூறினார்; ஒரு குறிப்பிட்ட இராஜா தம்முடைய ஊழியக்காரர்களிடம் கணக்கை விசாரித்தார். இப்படிக் கணக்குப் பார்த்தபோது, ஒருவன் பதினாயிரம் தாலந்துகள் தனக்குக் கடன் பட்டிருப்பதை அறிந்தார். ஆகையால், அவனையும் அவனுடைய பெண் ஜாதியையும், அவனுக்குண்டான யாவற்றையும் கடனைத் தீர்க்கத்தக்கதாக விற்கும்படி, அவனுக்கு இராஜா கட்டளையிட்டார். அந்த ஊழியக்காரனோ, இராஜாவின் பாதங்களில் விழுந்து, தம்மிடத்தில் இரக்கம் காட்ட வேண்டும் என்று கேட்டு, தான் கடனை அவருக்குக் கொடுத்துத் தீருவதாகக் கூறினான். இராஜா மனமிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டார்.

தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்த…

இப்படியாக விடுதலையாகி வெளிவந்த அந்த ஊழியக்காரன், அவனிடத்தில் கடன்பட்டிருந்தவர்களைத் தேடிச் சென்றான்; இவ்வூழியக்காரன் இராஜாவினிடத்தில் கடன்பட்டிருந்த தொகையோடு ஒப்பிடுகையில், மிகவும் குறைவான தொகையாகிய நூறு வெள்ளிப்பணம் தன்னிடத்தில் கடன்பட்டிருந்த தன்னுடைய சக ஊழியக்காரனைக் கண்டுபிடித்தான். “”அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காராகள்கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்” (மத்தேயு 18:28-34).

இங்குள்ள முக்கியமான படிப்பினை

இங்கு என்ன பாடம் உள்ளது? கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மீது மனமிரங்க வேண்டுமென நாம் விரும்புவதுபோன்று, நாமும் ஒருவர் மீதொருவர் மனமிரக்கம் கொண்டிருக்க வேண்டும் [R5135 : page 359] என்பதே பாடமாக உள்ளது. நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தில், நமக்கான இந்தப் படிப்பினை உள்ளது. நாம், “”ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32) என்ற வசனத்தின்படி நாம் காணப்பட வேண்டும். நம்முடைய குற்றங்களை அவர் தினந்தோறும் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருப்பதுபோன்று, நாமும் ஒருவருக்கொருவர் காணப்பட வேண்டும். நாம் கர்த்தருக்குட்பட்டிருக்கும் கடனுக்கு முன்பாக, மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், அவைகள் அற்பமானவைகளாகவே காணப்படுகின்றன. ஆகவே, நம்மிடத்தில் மன்னிப்புக் கேட்கும் யாவருக்கும் நாம் “”ஏழெழுபது தரம்” மன்னிப்பதற்கு விருப்பமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். இப்படியாக, நாம் இரக்கத்தைக் காட்டும்போது, நாம் தெய்வீகக் குணலட்சணத்தைப் பின்பற்றுகிறவர்களாகக் காணப்படுவோம். மேலும், நம்முடைய இருதயங்கள் மற்றும் ஜீவியங்கள் மீதான இதன் தாக்கம் நம்மைக் கண்ணியப்படுத்தக் கூடியதாகக் காணப்படும். நமது கர்த்தர் இயேசு, பிதாவின் தற்சொரூபமாக இருக்கின்றார்; மேலும், நாம் அன்பு, பெருந்தன்மை எனும் பண்புகளைப் பின்பற்றுகையில், நாம் அதிகமதிகமாய்க் கிறிஸ்துவின் சாயலில் காணப்படுவோம் மற்றும் இப்படியாகத் தேவனின் சாயலிலும் காணப்படுவோம்.

தேவனும் உங்களுக்கு இப்படியே செய்வார்

கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கங்களாகிய சபையின் விஷயத்தில், பரம பிதா கையாளும் கொள்கையை அவருடைய உவமை போதிப்பதாக நமது கர்த்தர் இயேசு விவரிக்கின்றார். இவர்கள் அனுதாபமற்றவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஒருவேளை காணப்பட்டார்களானால், ஒருவேளை இவர்கள் நீதியின் விஷயங்களில் தங்களது சகோதரர்களைக் கடுமையாகக் கையாளுவார்களானால், பரம பிதாவும் இவர்களை இப்படியே கையாளுவார் மற்றும் இவர்களுடைய குறைவுகள் அனைத்திற்கும் இவர்களைக் கணக்கு விசாரிப்பவராகக் காணப்படுவார். இப்பாடத்தின் முக்கியத்துவத்தைக்குறித்து, தேவனுடைய ஜனங்கள் உணர்ந்துக்கொள்வார்களானால், சகோதரர்களின் குற்றங்களையும், குறைபாடுகளையும் மன்னிக்கும் தன்மையானது அவர்களுக்கு மிகவும் தாராளமாகவும், மிகவும் சர்வ சாதாரணமான பழக்கமாகவும் ஆகிவிடும். பரம பிதாவிடம் இருந்து கடந்துவரும் நம்முடைய ஒவ்வொரு பரிபூரணமின்மைக்கான முழுமையான தண்டனையையும், அத்தண்டனையை இரத்துச் செய்யப் பிதா மறுத்துவிடுவதையும் நம்மில் எவரால் சகிக்கக்கூடும்?

தேவனுடைய குணலட்சணத்தில் நாம் பயிற்சி பெறுவதன் மூலமாகவும், விசுவாச வீட்டார் அனைவரிடமும் நாம் அதிகமதிகமாக இரக்கமும், தயாளமும் கொண்டவர்களாக ஆகுவதன் மூலமாகவும், நம்மீது பாராட்டப்பட்ட தேவனுடைய இரக்கத்தை நாம் உணர்ந்துள்ளதைத் தெரிவிக்கின்றவர்களாகக் காணப்படுவோம். நாம் சகோதர சகோதரர்களிடத்தில் இரக்கமுள்ளவர்களாகக் காணப்படும்போது, இயல்பாகவே நாம் சகல மனுஷர்களிடத்திலும் பெருந்தன்மையுள்ளவர்களாகக் காணப்படுவோம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நம்முடைய பெலவீனங்களையும், குறைவுகளையும் நாம் உணர்ந்து, நினைவில் கொண்டிருக்கையில், இது நம்மை, சகோதரர்களிடத்திலும், சகல மனுஷர்களிடத்திலும் அனுதாபம் கொள்ளச் செய்திடும். இரக்கத்திலும், தாராளத்தன்மையிலும்/ பெருந்தன்மையிலும், அனுதாபத்திலுந்தான் தேவன் பிரியப்படுகின்றார். இந்த ஆவியின் கிருபைகளை விருத்திச் செய்கின்றவர்கள், கர்த்தருடைய பார்வையில் பிரியமாய்க் காணப்படுவார்கள்; மற்றும் இயேசுவோடு, அவருடைய மகிமையின் சிங்காசனத்தில் பங்கடைவதற்கும் ஆயத்தப்படுத்தப்பட்டுத் தகுதியாக்கப்படுவார்கள்; ஏனெனில், தெளிவான அறிவின் கீழ் மற்றும் இராஜ்யத்தில் அருளப்படும் உதவியுடன் தெய்வீகக் கிருபை மற்றும் ஆசீர்வாதத்திற்குள் திரும்பிடும் ஆயிரமாயிரமான மனுக்குலத்திற்கு இரக்கம் காட்டுவதே, மாபெரும் மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படப் போவதற்கான நோக்கமாகும்.

ஆதாமின் பாவம் குறிப்பிடப்படவில்லை

இந்த உவமையானது, ஆதி பாவத்திற்கான தெய்வீக மன்னிப்பைக் குறிப்பிடுவதாக நாம் புரிந்துக்கொள்ளக் கூடாது. இரக்கத்திற்காக நாம் கூக்குரலிடுவதற்கென, ஆதாமின் பாவம் ஒன்றும் மன்னிக்கப்படுவதில்லை. ஆதாமும், முழுச் சந்ததியும் இரக்கத்திற்காகக் கேட்டாலும், தெய்வீக வழியாகிய இயேசுவின் மூலம் அதாவது, அவருடைய இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் மூலமாக அல்லாமல், மற்றபடி எந்த இரக்கத்தையும் அடைந்திருக்க முடியாது. இயேசு தம்முடைய பலியை நிறைவேற்றி, பரத்திற்கு ஏறி, தம்முடைய புண்ணியத்தின் வாயிலாகப் பிதாவிடத்திற்கு வருபவர்கள் சார்பாக அவர் பிதாவின் முன்னிலையில் தோன்றாதது வரையிலுங்கூட, இந்த மன்னிப்பு (ஆதாமின் பாவத்திற்கான மன்னிப்பு) அருளப்படவும் முடியாது.

“”நாங்கள் எங்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட தப்பிதங்களை மன்னிக்கிறதுபோல, எங்களுடைய தப்பிதங்களையும் மன்னியும்” என்று ஜெபத்தில், நமது கர்த்தரால் குறிப்பிடப்பட்டுள்ள பாவங்கள் குறித்தே அதாவது, பின்னர் ஏற்படும் பாவங்கள் குறித்தே இவ்வுமையானது குறிப்பிடுகின்றது. இவ்வுமையில் இவர்கள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்; ஆனால், பாவிகளாகிய உலகத்தாரோ, தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றில்லாமல், அந்நியர்கள், பரதேசிகள் என்று அழைக்கப்படுகின்றனர். விசுவாசத்தின் மூலமாகவும், அர்ப்பணிப்பின் மூலமாகவும், இயேசுவின் வழியாகவும், தேவனுடன் மீண்டும் உறவிற்குள் வந்தவர்களையே, தேவன் ஊழியக்காரர்கள் என்று கருதுகின்றார். இந்தத் தேவனுடைய ஊழியக்காரர்களே, தங்களது சகல ஊழியர்களாகிய, மற்றச் சகோதர சகோதரிகளிடத்தில் இரக்கம் பாராட்டுவதற்கென எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.

இயேசுவின் புண்ணியத்தின் வாயிலாக, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தேவனுடைய புத்திரர்கள், புதிய சிருஷ்டிகள் ஒவ்வொருவரும் தனது பெலவீனங்களுக்குப் பொறுப்பாளியாகக் கருதப்படுகின்றனர்; ஆயினும், இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கும் பொழுதோ, கிறிஸ்துவினிமித்தமாக இவர்களுடைய தப்பிதங்கள் இலவசமாய் இரத்துச் செய்யப்படுவதற்கென, தெய்வீக வல்லமையானது ஏற்பாடு பண்ணியுள்ளது. ஆனால், தேவனுடைய பிள்ளைகளுடைய இந்தத் தப்பிதங்கள் மன்னிக்கப்படுதல் என்பது, இவர்கள் தங்களது சகோதரர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஆவியைக் கொண்டிருப்பதைச் சார்ந்துள்ளது; ஏனெனில், “”நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.” ’ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத்தேயு 18:35; 7:2). தெய்வீக ஏற்பாடுகள் எத்துணை அருமையாய் உள்ளது! இவைகள் எத்துணை ஆசீர்வாதமாகவும், இராஜ்யத்திற்கான நமது ஆயத்தமாக்குதல்களில் நமக்கு எத்துணை நன்மையாகவும், எத்துணை உதவியாகவும் உள்ளது!