R3325 – விலை அதிகமுள்ள பேரம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3325 (page 60)

விலை அதிகமுள்ள பேரம்

BARGAINS THAT WERE COSTLY

மத்தேயு 14:1-12

“ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” – வெளிப்படுத்தல் 2:10

யோவான் ஸ்நானன் சுமார் ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சுமார் ஒரு வருட காலந்தான் பிரசங்கமும் பண்ணினார்; ஆனால் அக்காலத்தில் இவருடைய பிரசங்கம் பாலஸ்தீனியா முழுவதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது; எனினும், வியக்கத்தக்க விதத்தில் இத்தாக்கமானது யோவான் கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது. அதாவது, பாவத்திற்காக மனம் வருந்தி, மனந்திரும்புவதன் மூலம், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஜனங்களுடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது. ஜோசப்பஸ் எனும் வரலாற்று ஆசிரியர், யோவான் ஸ்நானன் மக்கீரஸ் கோட்டையிலுள்ள நிலத்தடியில் கட்டப்பட்ட சிறையில் வைக்கப்பட்டதாக அனுமானிக்கின்றார். கெய்கீ (Geike) என்பவர், இருட்டறை/சிறைகளின் வகைகள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “”அநேகமாக இது நான் காசாவில் பார்த்திட்ட இரும்புப் பட்டைகளினாலான கூண்டாக இருக்கலாம்; இங்குச் சிறையில் அடைக்கப்பட்டவருடைய நண்பர்கள் உணவு கொண்டு வருவதற்கோ (அ) பேசுவதற்கோ வரலாம். ஆனால், வாழ்வதற்கோ (அ) உறங்குவதற்கோ எவ்விதமான சௌகரியங்களும் இல்லை; வெறும் தரைதான் காணப்படும்.” கெய்கீ அவர்கள் கூறின விஷயம், யோவான் தன்னுடைய சீஷர்களிடம், “”வரவிருக்கின்றவர் நீர் தானோ அல்லது வேறொருவர் வர காத்திருக்க வேண்டுமோ?” என இயேசுவிடம் கேட்கும்படி, சீஷர்களிடம் அவரால் சொல்லியனுப்ப முடிந்த காரியத்திற்கிசைவாகக் காணப்படுகின்றது. யோவான் ஸ்நானனுக்கு வந்திட்ட அனுபவங்கள் சிலவிதங்களில் அவருக்கு ஏமாற்றம் அளிப்பதாக [R3325 : page 61] இருப்பினும், நம்முடைய கண்ணோட்டத்தின்படி பிதா நோக்கம் கொண்டிருந்தவைகளை, அவர் செய்தார் என்றே நாம் காண்கின்றோம். இங்கு நமக்கு ஒரு பாடம் உள்ளது. நாமுங்கூட நாம் செய்ய வேண்டிய நமக்குரிய பாகத்தைக் கர்த்தருக்கு உண்மையாய்ச் செய்துவிட்டு, அவருடைய கிருபையான நோக்கங்கள் இறுதியில் நிறைவேற்றத்தக்கதாக அவருடைய வல்லமையும், ஞானமும் அனைத்துக் காரியங்களையும் நடத்தும் என்ற நிச்சயத்தில், பலன்களை அவருடைய கரத்தில் விட்டுவிடுவோமாக.

யோவானுக்கும், எலியாவின் நிழலுக்குமிடையே கவனத்தை ஈர்க்கும் ஒற்றுமைகள் காணப்படுவதுபோல, யோவானுடைய அனுபவங்களுக்கும், மாபெரும் நிஜமான எலியாவாகிய உண்மையுள்ள சபை அங்கங்களுடைய அனுபவங்களுக்கும் இடையேயும் பலமான ஒற்றுமை காணப்படுகின்றது. எலியா, ஆகாபுக்குத் தப்பி ஓடினாலும், எலியாவை உண்மையாய்த் துன்பப்படுத்தியது, அவரது உயிருக்காக நாடின யேசபேலே ஆவாள். யோவான் ஸ்நானனும், ஏரோதினால் கைதுச் செய்யப்பட்டு, இறுதியில் கொல்லப்பட்டாலும், யோவானுடைய உண்மையான எதிராளி, ஏரோதின் மனைவியாகிய ஏரோதியாளே ஆவாள். இதுபோலவே, மாரும் எலியாவாகிய மாம்சத்திலுள்ள கிறிஸ்துவின் உண்மையான சபையானது, அரசியல் வல்லமையின் கரங்களில் இதுவரை பாடுகள் அனுபவித்தாலும், இனிமேலும் அரசியலின் கரங்களிலிருந்து பாடுகள் அனுபவிக்கப் போகிறதாயிருப்பினும், அரசியல் வல்லமைகளுக்குப் பின்னாலிருந்து, இவர்களை உண்மையாய்த் துன்பப்படுத்துவது வெளி 2:20-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிஜமான யேசபேல் அதாவது, நிஜமான ஏரோதியாள் அதாவது, கிறிஸ்துவுக்குப் பெயரளவில் நிச்சயிக்கப்பட்டு, இவ்வுலகத்தின் இராஜ்யங்களுடன் விபச்சாரம் பண்ணும் பெயர்ச்சபையே ஆவாள். இக்காரியம் குறித்து வெளிப்படுத்தின விசேஷத்தில், பல்வேறு அடையாளங்களில் காணப்படுவதை அனைத்து வேதத்தின் மாணவர்களும் அறிவார்கள்; இந்தப் பல்வேறு அடையாங்களுக்கிடையேயுள்ள ஒற்றுமை தெள்ளத் தெளிவாகப் புரிகின்றதோ இல்லையோ ஆனால் இதனை வேதத்தின் மாணவர்களும் அறிவார்கள்.

ஏரோது, ஏரோதியாள் மற்றும் சலோமி – SUB HEADING

மாபெரும் ஏரோதுக்குப் பின்னர், அவர் பதவியை அடைய வேண்டும் என்று அதிகமான ஆசைக் கொண்டிருந்த அநேக குமாரர்கள் அவருக்கு இருந்தார்கள். இக்குமாரர்களில் மூத்தவரை, ஏரோதியாள் மணம் முடித்தாள்; இவ்வாறாக ராணி ஆகலாம் என எதிர்ப்பார்த்தாள். ஆனால், ரோம சக்கரவர்த்தியோ, வேறுவிதமாக முடிவெடுத்து, இப்பாடத்தில் இடம்பெறும் அந்திப்பாவை ஏரோதாக தெரிந்துக்கொண்டார். ஆகவே, இன்னமும் ராணியாக வேண்டும் என்ற மிகுந்த ஆசையும், உறுதியும் கொண்டிருந்த ஏரோதியாள், அந்திப்பாவை வசீகரப்படுத்தி, அந்திப்பா தனது மனைவியைத் தள்ளிவிடச் செய்து, அவளுக்குப்பதிலாக தன்னை ராணியாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தாள். பாவத்திற்கு எதிராக பிரசங்கித்துக் கொண்டிருந்த யோவான் ஸ்நானன், நியாயப்பிரமாணத்திற்கு விரோதமான இந்தச் சேர்தலுக்கு எதிராக பொது ஜனங்கள் மத்தியில் நிச்சயமாய்ப் பேசியிருந்திருக்க வேண்டும்; அதாவது அந்திப்பாவும், அவன் மனைவியாகிய ஏரோதியாளும் விபச்சாரத்தில் வாழ்கின்றனர்; அதாவது, அந்திப்பா தனது சொந்த மனைவியைத் தள்ளிவிட்டு அவனுடைய சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியுடன் தகாதவிதமாய் இணைந்துள்ளான் என்று நிச்சயமாய்ப் பேசியிருந்திருக்க வேண்டும். ஏரோது, ஏரோதியாள் போன்று பேராசையும், கர்வமும், பிரமாணமற்ற நிலையிலும் இருப்பவர்கள் எவரும், ராஜ தம்பதிகளின் தொடர்பைக் குறித்துக் கேள்வி எழுப்பத் துணியும் எந்தப் பிரசங்கிக்கும் எதிராக கோபமடைவதில், நமக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. இதன் விளைவாக யோவான் சிறையில் அடைக்கப்பட்டார். யோவானுடைய பிரசங்கத்தின் மீதான பயத்தினிமித்தமே, ஏரோதியாள் பின்னிருந்து அனைத்தையும் தூண்டிவிட்டாள். ஒருவேளை ஏரோதுக்கு மனசாட்சி குத்தப்பட்டால் அல்லது ஏரோது தனது மனசாட்சிக்கு ஏற்ப செயல்படுமளவிற்கு, ஒருவேளை ஜனங்கள் கொந்தளித்து எழுந்தால், இதன்விளைவு நிச்சயமாக அவளுக்கான நன்மைகளை அழிக்கக்கூடியதாகவே இருக்கும்; அவள் அடைய வேண்டுமெனத் தன்னுடைய ஜீவியத்தையே தியாகம் பண்ணின, சமுதாயத்தின் மத்தியிலான அந்த உயர் ஸ்தானத்தை இழப்பதோடல்லாமல், அவள் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; மற்றும் வீடும் அற்ற கீழான நிலைக்கும் ஆளாவாள். யோவானைச் சிறையிலடைத்த உடனே, அவரைக் கொன்றும் போடும்படிக்கு அவள் தனது கணவனை நிச்சயமாய்த் தூண்டியிருந்திருக்க வேண்டும்; ஆனால், யோவானைக் கொன்று போட்டால், அவரை ஒரு தீர்க்கத்தரிசியாக மதிக்கும் ஜனங்கள் மத்தியில் ஏற்படும் விளைவுகளினிமித்தமாக ஏரோது கொண்டிருந்த பயத்தினால், அவள் தூண்டுவதற்கு எடுத்த முயற்சி தடைப்பட்டது.

இன்னமும் திட்டம் போட்டுக்கொண்டிருந்த ராணி, இராஜாவின் ஜனன விழாவை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தாள்; ராஜாவின் குணத்தை அவள் அறிந்திருந்தாள்; மற்றும் அப்படியான கொண்டாட்டங்களில் மிகுந்த களிப்புக் காணப்படும் என்றும், பொதுவான சுதந்தரத்தை மிஞ்சி போதையூட்டும் பானங்கள் பயன்படுத்தப்படும் என்றுமுள்ள வழக்கத்தை அவள் அறிந்திருந்தாள். அக்கால வழக்கத்தின்படி, இப்படியாகக் கூடியிருக்கும் ஆண்கள், உடல் இன்பத்தைத் தூண்டும் நடனங்களை, மெல்லிய வஸ்திரமணிந்து ஆடும் நடன பெண்களால் மகிழ்விக்கப்படுவார்கள். மேலும், இராஜாவின் விருந்தை, ராணி தன்னுடைய முன்னாள் கணவனுடன் பெற்றுக்கொண்ட மகளாகிய சலோமி மூலம் கௌரவிக்கத்தக்கதாக ஏற்பாடு பண்ணினாள். அவளது திட்டமானது பயங்கரமாய் வெற்றியடைந்தது; இராஜாவும் அவருடைய அரச சபை உறுப்பினர்களும் மயக்கப்பட்டார்கள்; மற்றும் மதுபானத்தினாலும், தன்னுடைய தத்தெடுக்கப்பட்ட மகளின் மீதான பாசத்தினாலும், பொதுவாக வழங்கப்படும் சிறு அன்பளிப்பிற்குப் பதிலாக, சலோமி விரும்பியது எதையும் கேட்டுக்கொள்ளும்படி கூறினான். அவனது இராஜ்யத்தில் பாதி வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளும்படி கூறினான் என்று மாற்கு பதிவு செய்துள்ளார்.

இராஜாவின் மோசமான பேரம்

இங்குப் பார்க்கிறபடி, மதுபானத்தினாலும், உணர்ச்சிகளின் தூண்டுதலினாலும் ஏற்பட்ட தன்னிலை மறந்த ஒரு கணிப்பே, இப்படி அவசர அவசரமான உறுதிமொழியை (promise), அநேக சூளுரைகளுடன் செய்ய, வழிநடத்தியிருக்க வேண்டும். இங்கிருந்து, கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் அனுகூலங்களில் ஒன்றை நாம் பார்க்கின்றோம். இவர்கள் தங்களுடைய இயல்பான/இயற்கையான கணிப்புக் கெடுக்கப்படுவதிலிருந்தும், மிஞ்சி காணப்படுவதிலிருந்தும் மாத்திரம் பாதுகாக்கப்படாமல் இன்னுமாக, இவர்கள் அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ள வண்ணமாக “”தெளிந்த புத்தியின் ஆவியையும்” பெற்றிருக்கின்றார்கள் (2 தீமோத்தேயு 1:7). கிறிஸ்துவின் மனமானது, கிறிஸ்துவின் பண்பானது, இப்படியான அறிவீனமான காரியங்களினின்று, மிகவும் நியாயமான [R3326 : page 61] காரியங்கள் மீது இருதயத்தைக் கொண்டுச் செல்கின்றது. கிறிஸ்துவின் மனமானது, காரியங்கள் குறித்த உண்மையான மதிப்பை நமக்குக் கொடுக்கின்றது. ஆனால், பொறாமையின் ஆவி போன்று, உலகத்தின் ஆவியானது, பெருமையின் ஆவியானது, பேராசையின் ஆவியானது, காரியங்கள் குறித்த தவறான மதிப்பைக் கொடுக்கத்தக்கதாக, கணிப்பைத் தவறாய்த் திருப்பக் கூடியதாய் இருக்கின்றது.

இங்கு இப்படியாக பல்வேறு மோசமான பேரங்களைச் செய்தவர்களை நாம் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். ஏசா ஒரு பானை கூழுக்காக, ஆபிரகாமின் வாக்குத்தத்தத்தினுடைய சுதந்தரவாளியாகிய ஈசாக்கின் முதல் குமாரனாகிய தனக்குரிய சேஷ்ட புத்திரப் பாகத்தை விற்றுப்போட்டான்; யூதாஸ் தனது ஆண்டவரை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விற்றுப்போட்டதும், அவனுடைய அனைத்தையும் இழக்கப் பண்ணினதுமான மோசமான பேரத்தைக் குறித்தும் நாம் நினைவுகூருகின்றோம். இவ்விதமான மோசமான அல்லது அதிகம் விலையுள்ள பேரங்களைச் செய்தவர்களில் ஒருவன் ஏரோதாவான். “”இராஜா துக்கமடைந்தான்” என்று பதிவுகள் தெரிவிக்கின்றபடி, ஏரோது தனது மனதின் சமாதானத்தை இழந்துவிட்டான். ஏரோது தனது அநீதி குறித்து அநேகமாக மனக்கிலேசம், அடிக்கடி அடைந்திருப்பான் என்பதிலும், அதுவும் கர்த்தருடைய விசேஷித்தவர்களாகிய ஒரு தீர்க்கத்தரிசிக்கு எதிரான தனது குற்றம் குறித்து, அநேகமாக மனதுக்கம் அடிக்கடி அடைந்திருப்பான் என்பதிலும் நமக்கு நிச்சயமே. யோவானின் மரணத்திற்குப் பிற்பாடுதான், [R3326 : page 62] இயேசுவைப் பொதுமக்கள் அதிகமாக அறிந்தார்கள். பிற்பாடு ஏரோது, இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்ட போது, கிரேக்கர்களின் கூற்றாகிய மரித்தவர்கள் மரிக்கவில்லை மாறாக, (நம்முடைய நாட்களில் ஆவியுலக ஊடகங்கள் மூலம் தொடர்புகொள்வதுபோன்று) மரித்தவர்கள், உயிரோடிருக்கிற மற்ற நபர்கள் மூலம் தொடர்புகொள்ளும் வல்லமை கொண்டுள்ளார்கள் என்பது உண்மையாக இருக்குமோ, இல்லையோ என ஏரோது யோசித்துக் குழப்பமடைந்தான். ஏரோதின் மனம் துக்கமடைந்தது, எனினும் அவன் தவறுக்காக வருந்தவில்லை.

இதே நிலை இன்றும் நிலவுகின்றது; ஜனங்கள் தாங்கள் தவறு என அறிகின்ற காரியங்களை, தங்களுடைய மனசாட்சியையும் மீறிச் செய்கின்றனர், துக்கமும் அடைகின்றனர்; எனினும், இது தேவனுக்கேற்ற துக்கமல்ல ஏனெனில் அப்போஸ்தலர் தெரிவிக்கின்றது போல, தேவன் அங்கீகரிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் துக்கங்கொள்ளும் வகையான தேவனுக்கேற்ற துக்கமானது, மனந்திரும்புதலை உண்டாக்குகின்றது. மற்றவிதமான துக்கங்கள், பாதிப்பையே உண்டாக்குகின்றது. ஆனால், தேவனுக்கேற்ற துக்கமானது, நன்மைக்கு ஏதுவானதாக இருக்கின்றது. தேவனுக்கேற்ற துக்கமானது, மனந்திரும்புதலுக்கும், சீர்த்திருந்துவதற்கும், தேவன் இயேசுவுக்குள் நியமித்துள்ள ஏற்பாட்டின் மூலம் தேவனுடன் ஒப்புரவாகுதல் அடைவதற்கும் வழிநடத்துகின்றது. ஆகவே, நாம் கர்த்தருடைய ஜனங்களாகக் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருப்போமாக மற்றும் கர்த்தருடைய ஆவியினால் நிரப்படுவதற்கேற்ப, உலகத்தின் ஆவியையும், சுயசித்தத்தின் ஆவியையும், மயக்கத்தின் ஆவியையும் வெளியேற்றி விடுவோமாக மற்றும் புதிய மனதின் ஆவியை, தெளிந்த புத்தியுள்ள ஆவியைக் கொண்டிருப்போமாக. ஒருவேளை எவன் மாம்சத்தின் ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்ததின் காரணமாக, தான் பாவத்தில் இருப்பதை உணர்கின்றானோ, இப்படியாக கீழ் நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியிரும் ஏதேனும் நன்மை உண்டாகுமோ என நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதை நினைவுக்கூரக்கடவன். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் கர்த்தரைத் தேடுவதற்கும், விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தினால் துப்புரவாக்கப்படுவதற்கும், கழுவப்படுவதற்கும், சுத்திகரிக்கப்படுவதற்கும், பிற்பாடு பாவத்திற்கெதிராக அதிக ஜாக்கிரதையுடன் காணப்படுவதற்குமென எதையும் இழக்கவும் துணிந்துத் துரிதமாய்ச் செயல்பட வேண்டும்.

யோவான் விவேகமற்றுச் செயல்பட்டாரா?

யோவானின் செயல்பாடு குறித்துத் தீர்ப்புச் சொல்வதும், இராஜா மற்றும் ராணியைக் குற்றப்படுத்தியதில், யோவான் தனக்கான வேலையை மிஞ்சி செயல்பட்டாரா அல்லது இல்லையா என்று தீர்ப்புச் சொல்வதும் நமக்கடுத்த காரியமல்ல. எனினும், யோவான் தனது கடமையையும்/வேலையையும் மிஞ்சி செயல்பட்டார் என்றே நமக்குத் தோன்றுகின்றது. நம்முடைய கணிப்பின்படி, அக்காலத்தில் இயேசுவினாலும், அப்போஸ்தலர்களினாலும் கடுமையாய்க் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவாக அநேக அதிகாரிகள் காணப்பட்டார்கள். எனினும், யோவான் செய்ததுபோல, இயேசுவும், அப்போஸ்தலர்களும் செய்ததாக எவ்விதமான சான்றும் நமக்கு இல்லை. இயேசு, பிலாத்துவுக்கு முன்பும், இந்த ஏரோதுக்கு முன்பும் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், யோவான் பேசினது போன்று, எந்த ஒரு வார்த்தையையாகிலும் இயேசு பேசினதாக நமக்கு எந்தப் பதிவும் இல்லை. பவுலுங்கூட அகிரிப்பா, மற்றும் பேலிக்ஸ் மற்றும் அக்காலக்கட்டத்தில் முன்னிலை வகுத்தவர்கள் முன்புக் கொண்டுச் செல்லப்பட்டார்; இவர்களில் சிலர், வரலாற்றின்படிக் கெட்ட பெயர்களையுடைய மனிதர்களாகவும் காணப்பட்டனர்; எனினும், இவர்களைத் தனிப்பட்ட விதத்தில் எவ்விதமான கடுமையான சொற்களினால் பவுல் தாக்கவில்லை; பவுல் அகிரிப்பாவிடம், “”இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றார்;” (அப்போஸ்தலர் 26:29) அதுவும், “”நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்ற அகிரிப்பாவின் வார்த்தைகளுக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கே அவ்வார்த்தைகளைப் பவுல் கூறினார்.

நாம் புரிந்திருக்கின்றவரையிலும் உலகத்துக்குள் சென்றுப் பாவத்தைக் கண்டிப்பதாக இல்லாமல், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே கர்த்தருடைய ஜனங்களுக்கான வேலையென வேதவாக்கியங்கள் போதிக்கின்றன. நம்முடைய வார்த்தைகளினாலும், நம்முடைய ஜீவியங்களினாலும் நாம் பிரசங்கிக்கும் சுவிசேஷமானது, “”விசுவாசிக்கிறவனெவனோ, அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது.” கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இப்படியான காரியங்களில், கர்த்தர் இயசுவையும், அப்போஸ்தலர்களையும் பின்பற்றுவதற்குப்பதிலாக, யோவானின் நடவடிக்கையைப் பின்பற்றுவது தங்களது கடமை என்று எண்ணுவதினாலும், இதில் அவர்கள் தவறு புரிவதினாலும், மேற்கூறிய காரியங்களை நாம் வலியுறுத்துகின்றோம். மனிதனுடைய இருதயங்களை நொறுக்குவதற்கல்லாமல், மாறாக நொறுக்கப்பட்ட இருதயங்களைக் கட்டுவதற்கு அதாவது, ஏற்கெனவே நொறுக்கப்பட்டிருக்கும் இருதயங்களை உடையவர்களைச் சுகப்படுத்துவதற்கே சுவிசேஷம் அனுப்பப்பட்டுள்ளது. பாவமும், அதன் இயல்பான தண்டனைகளும், மனிதனுடைய இருதயங்களை நொறுக்கும் சுத்தியல்களாக இருக்கின்றது. வரவிருக்கும் மகா உபத்திரவக் காலமானது, முழு உலகத்தினுடைய இருதயங்களை நொறுக்குவதற்கான தேவனுடைய வழிமுறையாகக் காணப்படுகின்றது; அதாவது, கீலேயாத்தின் பிசின் தைலத்திற்கும், மற்றும் பின்வரும் ஆயிரவருட யுகத்திற்குரிய பொதுவான ஆசீர்வாதங்களுக்கும் ஜனங்களை ஆயத்தப்படுத்துவதற்குமான, தேவனுடைய வழிமுறையாக மகா உபத்திரவக் காலம் காணப்படுகின்றது. சுவிசேஷத்தைச் சுத்தியலாகப் பயன்படுத்துகின்றவர்கள், தனது வேலையைக் குறித்துத் தவறாய்ப் புரிந்துக்கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த கிறிஸ்துவுக்குள்ளான வேலையைக் குறித்துக் “”கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறுவதுமாகும்” என்று வாசிக்கின்றோம் (ஏசாயா 61:1).

நன்மைக்கு அல்லது தீமைக்கு வழிநடத்தக்கூடிய பெற்றோரின் செல்வாக்கு – SUB HEADING

ஏரோதியாள், ஏரோது மீது கொண்டிருந்த அதிகாரமானது, அவளுடைய மகளாகிய சலோமியின் மீது அவள் கொண்டிருந்த அதிகாரத்தில் விளங்குகின்றது. இராஜாவின் தாராளமான கொடை, இளம் பெண்ணாகிய சலோமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஐசுவரியங்கள், அரண்மனைகள், பகட்டுகள் அவளுடைய மனதிற்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும்; ஆனால், அவள் தாயின் அறிவுரையின்படி வழிநடத்தப்பட்டிருக்கிறபடியால், இப்பொழுதும் அவள் தாயின் ஆலோசனையை நாடி, “”நான் என்ன கேட்க வேண்டும்” என்று கேட்டாள் (மாற்கு 6:24). இங்குப் பெற்றோருடைய செல்வாக்குக் குறித்துக் காட்டப்படுகின்றது. பொல்லாத ஸ்திரீயாகிய ஏரோதியாள், தனது மகளுடைய பாசத்தையும், அவளுடைய முழுமையான நம்பிக்கையையும் மற்றும் கீழ்ப்படிதலையும் தன்வசமாகக் கொண்டிருந்தாள். நன்மை (அ) தீமை வழியில் அந்த வாலிப பெண்ணின் மனதை வழிநடத்துவது, ஏரோதியாளின் கரங்களில் இருந்தது. இது ஓரளவுக்கு ஒவ்வொரு பெற்றோரின் விஷயத்திலும், அதிலும் விசேஷமாக ஒவ்வொரு தாய்மாருடைய விஷயத்திலும் உண்மையாகவே காணப்படுகின்றது. பிள்ளைகளின் நடத்தை/வாழ்க்கை விஷயத்தில் தாய், தகப்பன்மாருடைய பொறுப்பு எவ்வளவு அதிகமாய்க் காணப்படுகின்றது! கர்த்தருடைய ஜனங்களுடைய தெளிந்த புத்தியின் ஆவியானது, மாம்ச உறவுமுறை மற்றும் வாய்ப்பினடிப்படையில் பெற்றோர்களுக்குச் சொந்தமான இந்த வல்லமையான செல்வாக்கை, தங்களுடைய வழிநடத்துதலின் கீழிருப்பவர்களைச், சரியானப் பாதையில் வழிநடத்துவதற்கு ஏதுவாக பயன்படுத்த நிச்சயமாய்த் தூண்டும்.

அந்தோ பரிதாபம், கிறிஸ்தவ தாய்மார்களில் சிலர்கூட இப்படியான வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு, தங்களது பிள்ளைகளை, பரலோக வழிகளில் நடத்துவதற்குத் தவறிவிடுகின்றனர். இவர்கள் கர்த்தருடைய நோக்கத்திற்காக தங்களுடைய பூமிக்குரிய நன்மைகளைத் தியாகம் செய்திடவும் மற்றும் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்க விரும்பினாலும், இவர்களுக்குள்ளாகவே அதிகமான உலகத்தின் ஆவி இருப்பதினால், இவர்கள் ஞானத்தின் வழிகளே இனிமையான வழிகள் என்பதையும், மற்ற அனைத்துப் பாதைகளும் தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும் உபத்திரவத்திற்கே வழிநடத்தும் என்பதையும் உணர தவறிப்போய், தங்களது பிள்ளைகளையும் (இந்த ஞானமான வழிகளில்) பங்கெடுக்க வைப்பதில் விருப்பமற்றுக் காணப்படுகின்றனர். “”அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளை இவர்கள் புரிந்துக்கொள்ள தவறிவிடுகின்றனர் (ரோமர் 12:1). மற்ற அனைத்துப் பாதைகளும் புத்தியற்றதும், ஞானமற்றதும், பகுத்தறிவில்லாததுமாக இருக்கின்றது. [R3326 : page 63]

இராஜாவினால் முன்வைக்கப்பட்ட பெரிய காரியங்கள் மீதான மகள் சலோமியின் விருப்பங்களுக்கு, தாய்க்கொடுக்கும் பதிலை, பின்வருமாறு ஒருவர் சித்தரித்துள்ளார். “”முட்டாளே நீ என்ன கேட்கின்றாய் என்பது உனக்குப் புரியவில்லை. யோவான் ஸ்நானன் உயிரோடு இருக்கும் பொழுது, என்றாவது ஒருநாள் நான் ராணி ஸ்தானத்திலிருந்து விலக்கப்பட்டு, தள்ளப்படும் போது, இந்த ஆடம்பரமும், அரண்மனையும், உனக்கும், எனக்கும் எப்படிப் பயனாக இருக்கும்?” தீர்க்கத்தரிசி அகற்றப்பட்டால், அனைத்து நன்மைகளும் தனக்கும், தன் மகளுக்கும் கிடைக்கும் எனத் தாயானவள் நிச்சயமாய் எண்ணியிருந்திருக்க வேண்டும். தீர்க்கத்தரிசியின் தலை வேண்டும் என்றும், அதுவும் உடனடியாக, இப்பொழுதே ஒரு தாலத்திலே (விருந்துகளில் பயன்படுத்தப்பட்ட பெரிய தட்டு) தரும்படிக்குக் கேட்க, ஏரோதியாள் தன்மகளிடம் கூறினாள். இராஜாவின் உணர்வுகள் தணிந்து, அவர் நிதானமாக முடிவெடுத்துவிடுவார் என்ற பயத்தினால், துரிதமாய்ச் செயல்படுவது ஏரோதியாளுக்கு அவசியமாய் இருந்தது. இராஜா பானத்தின் மயக்கத்தில் இன்னமும் இருக்கும் போதும், மற்றும் இராஜாவின் சூளுரையைக் கேட்ட அவருடைய அரண்மனை ஆலோசனை உறுப்பினர்கள் அங்கு இன்னமும் கூடியிருக்கும்போதும் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற துரிதம் ஏரோதியாளுக்கு இருந்தது. (ஒரு கைதி தொடர்பான விஷயத்தில், இராஜாவினுடைய தீர்ப்பு மாற்றங்கள் அவனை மற்றவர்களுக்கு முன்பு அவநம்பிக்கைக்குரியவராகக் காட்சியளிக்கும்). இராஜா ஒப்புக்கொடுத்துவிட்டார்; எனினும், ஏரோதியாள் தனக்கு வருமெனப் பயந்த அபாயத்தினின்று தப்பிக்க முடியவில்லை; ஏனெனில், பத்து வருடங்களுக்குள்ளாக அவளுடைய பேராசைகள், ஏரோதைக் கூடுதலான மதிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, ரோமிடம் மன்றாடும்படிக்கு, அவனுடைய கணிப்பிற்கு எதிராக தூண்டினது என்றும், கோரிக்கை மறுக்கப்பட்டது என்றும், ஏரோது பதவி நீக்கப்பட்டு, கவுலில் உள்ள லையான்சில் நாடு கடத்தப்பட்டான் என்றும், அங்குச் செத்துப்போனான் என்றும் சரித்திர பதிவுகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்காலத்தில் நமக்கு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறு

யோவான் ஸ்நானன், எலியாவின் நிஜமாக இருக்கின்றார் என்ற உண்மையையும், சுவிசேஷ யுக சபையாகிய சரீரமும், தலையும், அதாவது மாம்சத்தில் இருக்கும் கிறிஸ்துவும், இன்னும் மேலான, பிரம்மாண்டமான நிஜமாக இருக்கின்றார்கள் என்ற உண்மையையும், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். பதினெட்டு நூற்றாண்டுக் காலமாக (அ) இதற்கு அதிகமான காலங்களாக இந்த மாபெரும் எலியா (வகுப்பார்), உலகத்தில் நீதியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் மனந்திரும்பும்படி அழைத்துக் கொண்டிருக்கின்றனர்; கிறிஸ்து மற்றும் மகிமையடைந்த சபையின் வருகை என்பது, உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்குமான தேவனுடைய இராஜ்யமாக இருக்கின்றது என அறிவித்தும் கொண்டிருக்கின்றனர். இஸ்ரயேலில் சிலர் மாத்திரமே தேவனுக்கு உண்மையாய் இருந்ததை எலியா கண்டதுபோல இரண்டாம் எலியாவும் (யோவான்), மாம்சத்தில் இருந்த இயேசுவைச் சந்திக்க சொற்பமானவர்களே ஆயத்தமாய் இருந்ததைக் கண்டார்; மற்றும் இதுபோலவே மாபெரும் நிஜமான எலியாவும் (மாம்சத்தில் இருக்கும் சபையும்) சொற்பமானவர்களே, அதாவது சிறு மந்தையினரே செவிசாய்ப்பதையும், இராஜ்யத்திற்குச் சரியாய் ஆயத்தமாய் இருப்பதையும் கண்டனர். இப்படியாகவே இந்த வேலை திட்டமிட்டு/வடிவமைக்கப்பட்டுள்ளது; மேலும், மல்கியா தீர்க்கத்தரிசி மூலம் முன்னுரைக்கப்பட்டது போல, அதிகமான/பெரிய பலனைக் கொடுக்கத் தவறியது என்பது இராஜ்யம் சமாதானமாய் அறிமுகப்படுத்தப்படாமல், பலவந்தமாவே அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் குறிக்கின்றது; அதாவது, மகிமையின் இராஜாவை, பூமியின் அதிபதியாக நிறுவுவதற்கும், புறஜாதிகள் அனைவரும் கர்த்தரை நாடுவதற்கும் மற்றும் கர்த்தரைப் பற்றின அறிவு முழுப் பூமியையும் நிரப்புவதற்கும் மற்றும் அவருடைய இராஜ்யம் வருவதற்கும் மற்றும் பரலோகத்தில் செய்யப்படுவது போல அவர் சித்தம் பூமியில் செயல்படுத்தப்படுவதற்குமென, தேசங்கள் இருப்புக் கோலால் அடிக்கப்படுவதும், குயகலத்தைப் போல் அவர்களை உடைத்துப் போடுவதும் அவசியமாய் இருக்கும்.

மற்றுமொரு கருத்துப் பின்வருமாறு: முதல் யேசபேல், முதல் எலியாவை துன்பப்படுத்தினபடியால், அவர் வனாந்தரத்திற்குத் தப்பிப்போனார்; மற்றும் எலியா மீண்டும் திரும்பி வந்து, மாபெரும் அற்புதம் செய்து, சிலரின் இருதயங்களைக் கர்த்தர் பால் திருப்பினார்; அவர் உயிரை எடுக்க நாடின யேசபேலிடமிருந்து தப்பி ஓடும் நிர்ப்பந்தம் அவருக்கு இரண்டாம் முறையும் ஏற்பட்டது. இரண்டாம் எலியாவாகிய, யோவான் ஸ்நானனின் விஷயத்திலும், அனுபவங்கள்/நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றது, மற்றும் ஏரோதியாளாகிய யேசபேல் தீர்க்கத்தரிசியை அழிக்கும் விஷயத்தில் இறுதியில் வெற்றிக் கொண்டாள். மூன்றாம் எலியாவின் (மாம்சத்தில் உள்ள சபை) விஷயத்திலும், யேசபேல் எனும் பெயருள்ள ஸ்திரீ வெளிப்படுத்தல் 2:20-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாள்; மற்றும் அவளுடைய பெரும் கேடு விளைவிக்கும் வேலையும், சபை வனாந்தரத்திற்குத் தப்பி ஓடுவதும் (வெளிப்படுத்தல் 12:6) மற்றும் வனாந்தர நிலையிலிருந்து சபை, சீர்த்திருத்தலின் காலங்களில் திரும்பினதும் நன்கு அறிந்த காரியங்களேயாகும். இப்பொழுது (பெயர்ச்சபையின் மீதல்ல) உண்மையான சபையின் மீது இரண்டாம் தாக்குதலை நாம் எதிர்ப்பார்க்கின்றோம்; மேலும், யோவான் ஸ்நானனுடைய விஷயத்தில் நடந்ததுபோன்றே, மாம்சத்திலுள்ள கிறிஸ்துவின் சரீரத்தில் அடங்கும் உண்மையுள்ள அங்கங்கள் மீதான, பாபிலோனிய ஸ்திரீ மற்றும் அவளுடைய கள்ளக்காதலனாகிய உலகத்தின் இரண்டாம் தாக்குதல் முழுமையாய் வெற்றியடைவது போன்று காணப்படும். இப்படியாக நடக்குமாயின், நாம் நிச்சயமாய் ஆச்சரியமடைவதில்லை; இதுவும் அனைத்துக் காரியங்களும் கர்த்தரை அன்புகூருகின்றவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும். திரைக்கு அப்பாலுள்ள [R3327 : page 63] நமக்கான பரிசை நாம் அடைய வேண்டுமெனில், நாம் அனைவரும் மரிக்க வேண்டும். திரையின் இப்பக்கத்தில் காணப்படும் எலியா வகுப்பார் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும், மற்றும் வெற்றியடையவும் செய்வார்கள். ஆனால், பார்வைக்குத் தோல்வி போன்றுத் தோன்றும், இந்தத் தோல்வியானது இராஜ்யத்தின் மகிமைகளையும், வல்லமைகளையும், வாக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களையும் துரிதமாக மேப்படுத்துகின்றது. “”ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளிப்படுத்தல் 2:10).

இயேசுவிடம் போய்ச் சொல்லுங்கள்

யோவான் ஸ்நானனுடைய சீஷர்கள், அவருடைய மரணம் குறித்த செய்தியுடன் எங்குச் செல்ல வேண்டும் என்று அறிந்திருந்தார்கள். அதாவது, தங்களது இந்த இழப்புத் தொடர்பாக எங்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் அடையலாம் என்று அறிந்திருந்தார்கள். சோதனைகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள், துக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களுடன் நாம் யாரிடத்தில் போக வேண்டும்? நமக்கு மிகவும் பாரமாயிருக்கும் யாவற்றையும் கர்த்தரிடத்தில் கொண்டு வரும்படிக்கு கர்த்தர் நம்மை அழைக்கின்றார். அவர் நம்மைப் பராமரிப்பார், மற்றும் நம்பிக்கையுள்ள ஆத்துமாக்களுக்கு அவர் ஆசீர்வாதம் அருளுவார். இயேசுவிடம் சென்ற யோவானுடைய சீஷர்கள் சந்தேகத்திற்கிடமின்றி, அவருடைய சீஷர்கள் ஆனார்கள்; மற்றும் இவ்விதமாக அவர்களுடைய தலைவரும், குருவுமாயிருந்த யோவான் ஸ்நானனுடைய மரணம் தொடர்பாக, அவர்களுக்கு நேரிட்ட சோதனைகள், அவர்களை மாபெரும் போதகர் குறித்த நெருக்கமான அறிவிற்குள்ளாகவும், உறவிற்குள்ளாகவும் கொண்டு வந்தது. இப்படியாகவே, தற்காலத்தில் கர்த்தருடைய ஜனங்களின் தோழர்களாய் இருப்பவர்களின் விஷயத்திலும் காணப்படும். அதாவது, நிஜமான எலியாவின் மீதான நிஜமான யேசபேலின் பழிவாங்குதல், நிஜமான எலியாவினுடைய நண்பர்களை இன்னும் அதிகமான அன்பிற்குள்ளும், நன்மைக்கு ஏதுவாகவும் வழிநடத்தும்; அதாவது, “”திரள் கூட்டத்தினர்” மிகவும் நெருக்கமாக கர்த்தரிடத்தில் ஈர்க்கப்படுவார்கள்.

நம்முடைய ஆதார வசனம்

யோவான் ஸ்நானனுக்கு ஜீவகிரீடம் வாக்களிக்கப்படவில்லை. இந்த வாக்குத்தத்தமானது, சுவிசேஷ யுக சபை அதாவது, அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாகிய நமக்கே உரியதாகும். எனினும், யோவான் ஸ்நானன் மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார். ஏனெனில், அவரைக் குறித்து, “”ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய இராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று நமது கர்த்தருடைய வார்த்தைகள் காணப்படுவதாகப் பார்க்கின்றோம் (லூக்கா 7:28).