R4668 – பெரியவன் ஊழியக்காரன்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4668 (page 265)

பெரியவன் ஊழியக்காரன்

THE GREATEST—THE SERVANT

“R 4668 (page 265)

THE GREATEST – THE SERVANT
பெரியவன்-ஊழியக்காரன் – MAIN HEADING

மத்தேயு 20:17-34

“”அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.” (வசனம் 28)

குறிக்கோள், அதாவது சுயநலமான குறிக்கோள் உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றது. தேவனைப் பிரியப்படுத்துவதும், அவருடைய பலன்களைப் பெற்றுக்கொள்வதுமாகிய ஒருவகையான குறிக்கோளுக்கு/ஆசைக்குத் தேவனுடைய வார்த்தைகளிலுள்ள மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் ஊக்கமூட்டுகின்றன. இயேசுவின் அர்ப்பணம் பண்ணியுள்ள மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்துகிறதுமான பின்னடியார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தைச் சிந்தித்துப் பாருங்கள்; அதென்னவெனில் அவர்கள் மரணம் வரை உண்மையுள்ளவர்களாய் இருந்தால், ஜீவகிரீடத்தையும், அழியாமையையும், அவருடைய இராஜ்யத்தின் மகிமையையும், [R4669 : page 265] கனத்தையும் அவர்கள் பங்கடைகின்றவர்களாக, தங்களுடைய ஆண்டவரோடு கூட அவருடைய சிங்காசனத்தில் ஓர் இடத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதேயாகும். சிருஷ்டிகரிடமிருந்து, விசுவாசத்தின் கேட்கும் செவிகளை உடையவர்களிடத்தில் வரும் இந்தக் காரியத்தைக் காட்டிலும், குறிக்கோள் கொள்ளத்தக்கதாக இதுபோல் மிகப் பலமாய், வேறு எந்தப் பூமிக்குரிய காரியத்தினாலும் நமது கவனத்தை ஈர்க்க முடியாது. எனினும் இந்த வாக்குத்தத்தங்களினால் எழுப்பப்பட்ட இந்தக் குறிக்கோள்கள்/ஆசைகள், நமக்குக் கண்ணிகளாகக்கூட மாறலாம் என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கின்றோம். அவமானம், தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுதல் மற்றும் இகழ்ச்சியை நாம் உண்மையாய் சகித்து முன்னேறுதல் மற்றும் இறுதிவரையிலும் தாழ்மையை, தேவனிடத்திலான முழுமையான நேர்மையை, அவருடைய வழிநடத்துதல்களுக்கு நாம் முழுமையாய் ஒப்புக்கொடுத்தலை நிரூபித்தல் ஆகிய நிபந்தனைகளின் கீழ்தான் நாம் இராஜ்யத்தை அடைய முடிகின்றவர்களாய் இருப்போம். “”உம்முடைய இராஜ்யம் வருவதாக, உமது சித்தம் பரமண்டலத்தில் செயல்படுவது போன்று பூமியிலும் செயல்படுவதாக” என்று நாம் ஜெபம் பண்ணுகிறதான வரவிருக்கின்ற இராஜ்யத்தில் மேசியாவோடு கூட ஆள வேண்டுமெனில், ஒருவர், “”ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என்ற வசனத்தின்படிக் காணப்பட வேண்டும் (1 பேதுரு 5:6).

இயேசு தம்முடைய அவமானத்துடன் கூடிய பாடுகளையும், மரணத்தையும் பற்றி முன் அறிவித்த போதிலும், அப்போஸ்தலர்களுடைய மனங்களுக்கு முன்னதாக இராஜ்யத்தைப்பற்றின [R4669 : page 266] நம்பிக்கை பிரகாசமாகவே காணப்பட்டது; ஆகையால்தான் இயேசுவுக்குப் பிரியமாய் இருந்த பின்னடியார்களில் இருவரான யாக்கோபும், யோவானும், தங்களுடைய தாயார் வாயிலாக, அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது, மாபெரும் இராஜாவாகிய அவருடைய வலது பக்கத்தில் ஒருவரும், இடது பக்கத்தில் இன்னொருவரும் உட்காரத்தக்கதாக ஒரு வாக்கை அடையும்படிக்கு வேண்டிக் கொண்டார்கள்.

இந்த ஒரு விண்ணப்பத்தின் மூலமாய், இப்படிப்பட்ட உயர்வான நிலையை அடைவதற்குரிய விலையைக் குறித்து அன்பும், குறிக்கோளும் கொண்டுள்ளவர்களாகிய சீஷர்கள் முழுமையாய்க் கணக்குப் பார்க்கவில்லை என்று மாபெரும் போதகர் கருத்துத் தெரிவிக்க ஏதுவாயிற்று. அவர்கள் தம்முடைய அவமானம் மற்றும் நிந்தனையின் பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கு விரும்புகின்றார்களா என்றும், அவர்கள் தம்முடைய மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தில் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விரும்புகின்றார்களா என்றும், அனைத்துப் பூமிக்குரிய நன்மைகளையும் பலிச்செலுத்திட விரும்புகின்றார்களா என்றும் கர்த்தர் அவர்களிடம் கேட்டார். அவர்கள் விலையைக் கணக்குப்பார்த்து விட்டனர்; மற்றும் உடனடியாக தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்கள் மாபெரும் போதகருடைய பாடங்களை நன்கு கற்றிருந்தனர். அவர்கள் இத்தகைய மனவிருப்பம் கொண்டதினால், அவருடைய அவமானத்திலும், அவருடைய மரணத்திலும் பங்கடைவதற்கும் மற்றும் அவரோடு கூட அவருடைய சிங்காசனத்தில் உட்காருவதற்கும் உரிய சிலாக்கியம் அவர்களுடையதாய் இருக்குமெனக் கர்த்தர் அவர்களுக்கு நிச்சயம் அளித்தார். அவருடைய ஜனங்களின் பரீட்சைகள் நிறைவடையும்போது, பிதா ஆயத்தம் பண்ணினதும், ஏற்படுத்தினதுமான நியாயமான நியமனத்தின்படி /அளவுகோலின்படி/கொள்கையின்படி, கர்த்தருடைய வலது, இடது பக்கத்தில் இருக்கும் இராஜ்யத்தின் உயர்வான கனத்திற்குரிய ஸ்தானம் அருளப்படும். அப்போஸ்தலர்களோடு கூட நாமும், அவர்களுடைய முழுமையான அர்ப்பணிப்பிலும், ஆண்டவருடைய நிச்சயத்திலும்/வாக்கிலும் எவ்வளவாய்க் களிக்கூரலாம்! ஆண்டவரோடு கூட, அவருடைய சிங்காசனத்தில் அவருடைய சரீரமாகிய சபையின் அங்கத்தினராக இடம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக நாமும் உண்மையாய் நாட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

யாக்கோபு மற்றும் யோவானுடைய குறிக்கோளானது/ஆசையானது, கர்த்தரிடம் மிகவும் விசேஷித்த நெருக்கமான இடத்தை அடைய வேண்டுமென்றதான அவர்களது விருப்பத்தைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. கர்த்தர் இயேசு அவர்களைக் குறிப்பாய்க் கடிந்துக்கொள்ளாமல், மறைமுகமாகக் கடிந்துக்கொள்கின்றார். இந்த இருவரும் எவ்வாறு கனத்திற்குரிய பிரதான இடங்களை அடைய நாடினார்கள் என்பதை, மற்றவர்கள் கேட்டபோது மிகவும் எரிச்சலடைந்தார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மனிதனுடைய கணிப்பிலிருந்து, தேவனுடைய கணிப்பு எவ்வளவு வேறுபாடாக இருக்கின்றது என்பதை ஆண்டவர் காட்டினார். மனுஷர்கள் மத்தியில், ஆக்கிரமிக்கிறவர்களும், வல்லமையுள்ளவர்களுந்தான் மற்றவர்கள்மேல் ஆளுகையையும், அதிகாரத்தையும் கொண்டிருக்கின்றனர், ஆனால் தெய்வீக ஏற்பாட்டிலோ, இது முற்றிலும் தலைக்கீழாக இருக்கின்றது. தேவன் தாழ்மையுள்ளவர்களையும், சாந்தமுள்ளவர்களையும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பவர்களையுந்தான், மிகவும் கனப்படுத்தி, உயர்வான ஸ்தானத்தில் அமர்த்துவார்;. இந்தச் சம்பவத்தில், தாழ்மையின் அவசியத்தைக் குறித்துத் தம்முடைய பின்னடியார்களுக்குப் போதித்தார்; நாமும் தெய்வீகக் கண்ணோட்டத்தின்படிச் செயல்படுகிறவர்களாய் இருந்து, சபையில் யார் அதிகமாய் ஊழியம் புரிகிறார்களோ, அவர்களையே நாம் மிகவும் கனப்படுத்த வேண்டுமே ஒழிய, ஊழியம்கொள்வதற்கும், கனங்களை அடைவதற்கும், தன்னைத்தான் உயர்த்துவதற்கும் நாடுபவர்களுக்கும் அல்ல. “”அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்,” அதாவது தேவனுடைய ஏற்ற வேளையாகிய, மேசியாவின் இராஜ்யத்தில் ஜனங்கள் பாவம் மற்றும் மரணத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்குத் தம்முடைய ஜீவனை ஈடுபலியாகக் கொடுக்க வந்தார் (மத்தேயு 20:28).

குருடர்களையும், ஏழைகளையும் ஆசீர்வதித்தல் – SUB HEADING

பிரயாணம் பண்ணிக்கொண்டு போகையில், ஆண்டவருக்குத் தம்மை வேலைக்காரனாக முன்மாதிரிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இயேசு அவ்வழியாய்ப் போய்க் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்துக் கொண்ட இரண்டு குருடர்கள், அவர் தாவீதின் குமாரனாகிய மேசியா என்று விசுவாசித்து, இரக்கத்திற்காக, உதவிக்காகக் கூக்குரலிட்டனர். நீங்கள் குருடர்களாகப் பிச்சை எடுப்பவர்கள்தானே என்று கூறி, பொருட்படுத்தாமல் செல்வதற்குப்பதிலாக, ஆண்டவர் நின்று, அவர்களைத் தம்மிடம் கொண்டு வரச்சொல்லி, அவர்களுடைய விண்ணப்பத்தின்படி, அவர்களுடைய கண்களைத் தொட்டார், மற்றும் அவர்கள் உடனடியாகப் பார்வை அடைந்தார்கள். அவருக்கு இழப்பு இல்லாமல், அவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை என்று மற்ற வேதவாக்கியங்களும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. “”அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கிற்று” (லூக்கா 6:19).

ஐசுவரியவானாய் இருந்த அவர், மிகவும் தரித்திரரும், கீழானவர்களுமான நமக்கு ஊழியம் புரியும்படிக்கு, நமக்காக தரித்திரர் ஆனார்! இங்கு நம்முடைய இருதயத்தில் காணப்பட வேண்டிய சாந்தத்தின் ஆவிக்கும், ஊழியம் புரிவதற்கான ஆவிக்கும் எடுத்துக்காட்டைப் பெற்றிருக்கின்றோம்; இது ஓரளவுக்கு, மாபெரும் போதகருடைய சீஷர்களாகிய, உண்மையான பின்னடியார்களின் ஜீவியங்களைக் கட்டுப்படுத்துகின்றதாய்/ஆளுகின்றதாய் இருக்க வேண்டும். ஒருவேளை மாம்ச குருடான கண்களைத் திறப்பதற்கான வல்லமை நமக்கு இராவிட்டாலும், மாம்ச கண்கள் காணாததும், மாம்ச காதுகள் கேட்டிராததும், தேவன் தம்மை அன்புகூருகிறவர்களுக்கும், தம்மை அன்புகூர்ந்து, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் வைத்திருக்கிறதுமான காரியங்களை அநேகர் தெளிவாய்ப் பார்க்க உதவுவதற்கான வல்லமை, நமக்குக் கொடுக்கப்பட்டதாய் இருக்கின்றது (1 கொரிந்தியர் 2:9). இந்த உண்மையான குறிக்கோளை அடைய நாடுவேமாக் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதாவின் சித்தத்தை அறிவதற்கும், செய்வதற்கும் நாம் விசேஷமாக நாடுவோமாக!