R4635 – கோதுமை மற்றும் களைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4635 (page 203)

கோதுமை மற்றும் களைகள்

THE WHEAT AND THE TARES

மத்தேயு 13:24-43

“”அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.” – மத்தேயு 13:43

இங்கு நாம் “”இராஜ்யத்தின் மற்றொரு உவமைக்கு,” ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசனத்திற்கு அறிமுகமாகுகின்றோம். கடந்த பாடத்தில் சத்தியத்தைக் கேட்கும் பல்வேறு வகுப்பாரைக்குறித்து நாம் பார்த்தோம். இன்றைய நாளின் பாட ஆராய்ச்சியானது, “”நல்ல நிலமாகிய” சத்தியத்தைக் கேட்டவர்களை மாத்திரமே கருத்தில் எடுத்து, மற்றவைகளையெல்லாம் புறக்கணித்து விடுகின்றது. மேலும், நமது கர்த்தர் சுவிசேஷ யுகத்தின் வரலாற்றை முன்னறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. கர்த்தரும், அவருடைய அப்போஸ்தலர்களும் நல்ல விதைகளையே விதைத்தார்கள் என்றும், அப்போஸ்தலர்கள் மரண நித்திரைக்குள் போன பிற்பாடு, மாபெரும் எதிராளியானவனாகிய சாத்தான் கோதுமை வயலில், களைகளின் விதையை/புல்லை விதைத்தான் என்றும் நமக்குக் கூறப்படுகின்றது. கிழக்கத்திய நாடுகளிலுங்கூட இப்படியான கெட்ட எண்ணத்துடனான வேலைகள், வழக்கத்திற்கு மாறானதல்ல என்று நமக்குக் கூறப்படுகின்றது. “”புல்லின்” விதைகள் கோதுமையினின்று முற்றிலும் வேறுபட்டது ஆகும். ஆனால், இவைகளில் வளர்ந்து வரும் தண்டுகள் ஒன்று போலவே காணப்படும்; கதிர்கள் முதிர்வது வரையிலும் கைத்தேறினவர்களைத் தவிர, மற்றபடி எவர் கவனித்தாலும், இரண்டும் ஒன்று போன்றே தோன்றும்; கதிர்கள் முதிர்ந்த பிற்பாடு, கோதுமையின் கதிர்கள் பாரம் கூடினதாகக் காணப்படும். ஆனால், களை/புல் மிகவும் பாரம் குறைந்ததாக இருப்பதினால், இவைகள் நேராக நிற்கும். கைத்தேறினவர்களுக்கே கோதுமை வளரும் போதே கோதுமையினின்று களைகளை வேறுபடுத்தத் தெரியும்.

சாத்தானால், சபைக்குள் எப்படித் தப்பறைகள் கொண்டு வரப்படும் என்பது குறித்தும், தப்பறைகள் மூலம் உருவாகும் பிள்ளைகள், சத்தியத்தினால் உருவாகும் பிள்ளைகள் போலவே அநேகவிதத்தில் காணப்படுவார்கள் என்பது குறித்தும் விவரிக்கவே ஆண்டவர் இந்த உவமையைக் கொடுத்தார். இயேசுவினாலும், அப்போஸ்தலர்களாலும் விதைக்கப்பட்ட சத்தியத்தின் விதைகளை அழிப்பது என்பது எதிராளியானவனால் கூடாத காரியமாகும். இயேசுவும், அப்போஸ்தலர்களும் விதைத்ததை, எதிராளியானவன் குறுக்கிடுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோதுமைகளுக்குள் களைகளை விதைத்திட, எதிராளியானவன் அனுமதிக்கப்பட்டான். அநேகமாக கோதுமையை நெருக்கிப் போடுவதற்கும் மற்றும் கோதுமையின் அதாவது, இராஜ்யத்தின் பிள்ளைகளினுடைய உண்மையான குணலட்சணம் தொடர்பான விஷயத்தில் வெளி உலகத்தை ஏமாற்றுவதற்கும் ஏதுவாக எதிராளியானவன் கோதுமைகளுக்குள் களைகளை நடுகின்றான்.

சாத்தானைத் தடைபண்ணக் கூடியதும், அவனுடைய திட்டங்களின் நிறைவேறுதலை எக்காலத்திலும் தடுப்பதற்குரியதுமாகிய தேவனுடைய சர்வவல்லமையை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தேவன் அங்கீகரிக்காததும், அவருடைய வார்த்தைகள் கண்டிக்கிறதுமான அநேக காரியங்களை, யுகங்களைக் குறித்த தெய்வீகத் திட்டமானது அனுமதிக்கின்றது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தெய்வீகத் திட்டமானது பல யுகங்கள் அடங்கிய காலளவு கொண்டது என்பதையும், திட்டம் நிறைவடையும் போது மாத்திரமே தெய்வீக ஞானம், நீதி, அன்பு மற்றும் வல்லமையை முழுமையாக வெளிப்படுத்தும் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். பிசாசுகள் மற்றும் மனுஷனுடைய கோபம் தேவனுடைய நோக்கங்களை எதிர்க்கத்தக்கதாக அனுமதிக்கின்றார். அதுவும் இவைகளையெல்லாம் தம்முடைய சொந்த மகிமைக்காகவும், தம்மோடு இசைவாக உள்ள அனைவரின் நன்மைக்காகவும் தம்மால் மாற்ற முடிகிற மற்றும் மாற்றும் அளவுக்குத் தக்கதாகவே அனுமதிக்கின்றார் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இரண்டையும் வளரவிடுங்கள்

வேலைக்காரர்கள், தாங்கள் போய்க் கோதுமையினின்று களைகளைப் பிடுங்கிப் போட உமக்கு சித்தமா? (அ) இல்லையா? என்றும், இவ்வாறாகச் சத்துருவின் வேலை அழிக்கப்படுமே என்றும் கேட்பதாக உவமையில் இடம்பெறுகின்றது. பதில் இல்லை என்று வருகின்றது. ஏனெனில், இப்படியாகச் செய்வது என்பது அனைத்துக் கோதுமைகளையும் துயரப்படுத்தத்தக்கதாக, கோதுமை நிலத்தில் அப்படி ஒரு குழப்பத்தை/அமைதியின்மையை ஏற்படுத்திவிடும். உண்மையானவர்களும், போலியானவர்களும் மிகவும் நெருக்கமாக வாழ்வில் பிணைந்துக் காணப்படுகின்றனர். இவர்களுடைய வேர்கள் சமுதாயத்திலும், குடும்பங்களிலும் ஒன்றோடொன்றாகப் பின்னிப் பிணைந்துக் காணப்படுகின்றது. ஆகவே, யுகத்தின் முடிவாகிய அறுப்பின் காலம் வரையிலும், இரண்டுமே சேர்ந்து வளர விடப்பட வேண்டும் என்று ஆண்டவர் கூறினார். அப்போது இந்த இரண்டு வகுப்பரைச் சேகரிப்பதும், பிரிப்பதும் தொடர்பான அறிவுரைகள் “”அறுக்கிறவர்களுக்கு” [R4635 : page 204] அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவர் கூறினார். கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படும், களைகளோ சுட்டெரிக்கப்படுவதற்காகக் கட்டப்படும். அதாவது, எதிர்க்கால விளைச்சலை, எந்தக் கெட்ட விதைகளும் பாதிக்காத அளவுக்குச் சுட்டெரிக்கப்படுவதற்காகக் கட்டப்படும்.

சீஷர்களுடைய விசேஷமான வேண்டுகோளுக்கு இணங்க ஆண்டவர் இந்த உவமையினுடைய அர்த்தத்தையும் விளக்கினார். இயேசு தாமே இராஜ்யத்தின் சுவிசேஷம் எனும் நல்ல விதையை விதைத்தவர் ஆவார். தவறான உபதேசம் மற்றும் வஞ்சனையின் விதைகளை விதைத்தவன் சாத்தான் ஆவான். “”அறுப்பின் காலம்” என்பது கிறிஸ்துவின் ஆயிரம் வருஷம் இராஜ்யத்தின் புதிய யுகம் ஆரம்பிப்பதற்கு முன்னர், இடம்பெறும் இந்த யுகத்தின் முடிவாகும். கோதுமை வகுப்பார் என்பவர்கள் கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருஷம் இராஜ்யத்தில் அவரோடு மகிமையில் பங்கடைவதற்கெனப் பாத்திரமாய்க் கருதப்படுபவர்கள் ஆவர்; மற்றும் “”களஞ்சியத்தில்” சேர்க்கப்படுதல் என்பது இந்தக் கோதுமை அனுபவிக்கும் உயிர்த்தெழுதலின் மாற்றத்தைக் குறிக்கின்றது. “”கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.” “”முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்.” (1 கொரிந்தியர் 15:43-44; வெளிப்படுத்தல் 20:6).

களைகள் வகுப்பார், இராஜ்யத்திலிருந்துச் சேர்த்து வெளியே எடுக்கப்படுவதாக 41–ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் காணப்படும் சபையானது, கரு நிலையில் இருக்கும் தேவனுடைய இராஜ்யமாக உள்ளது; அதாவது, எதிர்க்கால வேலை மற்றும் மகிமைக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது வளர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் காணப்படுகின்றது. இராஜ்ய வகுப்பார் அனைவரும் தேவனுக்கென்று முழுமையாய் அர்ப்பணம் பண்ணினவர்களாகவும், உயிர்த்தெழுதலில் தெய்வீக ஆவியின் ஜீவிகளாக மாறுவது தொடர்பாக ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறாக, ஆவியில் ஜெநிப்பிக்கப்படாதவர்கள் “”கோதுமை” என்று தங்களை உரிமைப் பாராட்டிக்கொள்வதற்கோ, தங்களை இராஜ்யத்தின் சுதந்தரர்கள் என்று கருதிக்கொள்வதற்கோ உரிமையற்றவர்களாவர். [R4636 : page 204] இவர்கள் கிறிஸ்துவினுடைய சபைக்குள் காணப்படுவது என்பது, முறையற்ற விஷயமேயாகும். இவர்கள் நூற்றாண்டு காலங்களாக கோதுமையுடன் சேர்ந்துக் காணப்படும்படிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், யுகம் முடியும் போது அதாவது, ஆயிரம் வருஷம் யுகத்தின் ஆரம்பம் சம்பவிக்கும்போது, யுக மாறுதல்கள் நடைபெறும்.

இந்தக் களை வகுப்பாரில் திருடர்கள், கொலைக்காரர்களாகிய குற்றவாளிகளில் மிகவும் இழிவானவர்கள் உள்ளடங்குகின்றார்கள் என்று அனுமானிப்பது தவறாகும். எனினும், மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகளை நடப்பிக்கின்றவர்கள் என அப்போஸ்தலரால் விவரிக்கப்படுகின்றவர்கள், இதில் உள்ளடங்குகின்றனர், அதாவது கோபம், பகை, வன்மம், பொறாமை, விரோதம் கொண்டவர்கள் ஆவர். ஆனாலும் பெரும்பாலான களைகள், பெருந்தன்மையான குணமுடைய நல்ல ஜனங்களாக இருக்கின்றனர், எனினும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான “”புதிய சிருஷ்டிகள்” அல்ல. இவர்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்படவில்லை என்பதற்காக அல்லாமல் பெயர்ச்சபையில், கிறிஸ்தவர்களெனத் தங்களைக் காட்டிக்கொள்வதினாலேயே குற்றஞ்சாட்டப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். இந்தக் காரணத்தினாலேயே இவர்கள் ஆண்டவருடைய பார்வையில் குற்றத்திற்குரியவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்களையே கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொண்ட குற்றத்திற்கு முழுமையாக இவர்கள் பொறுப்பாளிகளும் அல்ல. இப்படியாக, இவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்வதற்கும், செயல்படுவதற்கும், இவர்கள் பிரசங்கிமார்களாலும், போதகர்களாலும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போலவே இந்தப் பிரசங்கிமார்களும், போதகர்களும் கூட இராஜ்யத்தைப் பற்றின அறிவோ (அ) இராஜ்யத்தில் அங்கத்துவம் பெற்றிட உதவும் ஆவியில் ஜெநிப்பிக்கப்படுதலின் வல்லமையைக்குறித்தோ அறியாதவர்கள்தான். இவர்கள் கட்டுகளாகக் கட்டப்படுதல் அதாவது சமுதாயங்களென, புகலிடங்களென, சபைகளென, சபை பிரிவுகளெனக் கட்டுகளாகக் கட்டப்படுதல் என்பது, “”அறுப்பு” வேலை நடந்து கொண்டிருப்பதற்கான விசேஷமான நிரூபணமாகக் காணப்படும். உண்மையுள்ள வகுப்பார், கிறிஸ்துவானவர் அவர்களை விடுவித்துக் கொண்டு, அளித்துள்ள சுயாதீனத்தில் உறுதியாய்த் தரித்து நிற்கும்படிக்கும், அவர்கள் சபை பிரிவுகளின் கட்டுகளுக்குள் வரக்கூடாது என்று புத்திமதிக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் “”கட்டுகளுக்குள்” அங்கத்துவம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, உண்மையான “”கோதுமை” வகுப்பாரிலுள்ள அனைவருடனான முழுமையான ஐக்கியத்தில் நிலை நிற்கின்றவர்களாகக் காணப்பட வேண்டும்.

இந்தக் கட்டுக்கள் அக்கினியில் போடப்படுவது என்பது, இவர்களின் அழிக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆனாலும் அக்கினிச் சூளை என்பது, சொல்லர்த்தமான அக்கினிச் சூளை என்றோ, களைகளைப் பட்சித்துப் போடும் அக்கினி என்பது, சொல்லர்த்தமான அக்கினி என்றோ நாம் புரிந்துக்கொள்ளக் கூடாது. இந்த யுகம் நிறைவடையும்போது வரும் அக்கினியானது, வேதவாக்கியங்கள் முன்னறிவிக்கின்றபடி ஆயிரம் வருஷம் இராஜ்யத்தை அறிமுகப்படுத்தும் “”மகா உபத்திரவக் காலமாகும்.” “”யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்” (தானி 12:1). இந்த மகா உபத்திரவக் காலத்தில், இப்பொழுது தாங்கள்தான், உண்மையான சபை எனக் களைகளை எண்ணிக் கொண்டிருக்கச் செய்திட்ட தவறான நம்பிக்கைகள் யாவும் கரைந்துவிடும். இவர்கள் தங்களுக்குரிய சரியான தளம், பூமிக்குரிய தளமே என்று புரிந்துக்கொள்வார்கள். தாங்கள் வெறும் பூமிக்குரியவர்களே என்றும், எவ்விதத்திலேயும் அழைக்கப்பட்டு, ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டு, ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையில் தாங்கள் அங்கங்கள் ஆகவில்லை என்றும் புரிந்துக்கொள்வார்கள்.

தங்கள் பிதாவின் இராஜ்யத்தில்

இந்த யுகத்தின் முடிவில், சபையினுடைய எதிர்ப்பார்ப்பு நிறைவேறும் என்பது தொடர்பான ஆண்டவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள், “”அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (மத்தேயு 13:43). அனைவரிடமும் கேட்கக்கூடிய செவிகள் இல்லை. ஆனால், இவ்வசனத்திலுள்ள கர்த்தருடைய செய்தியானது, சரியான இருதய நிலையைக் கொண்டிருப்பவர்களுக்கே அதாவது, ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துக்கொள்ளக் கூடியவர்களுக்கேயாகும். இப்படிப்பட்டவர்கள், இந்த யுகத்தின் முடிவில் பூமிக்குரிய சபை அமைப்புகள் எவ்வளவு இருந்தாலுங்கூட, கர்த்தருடைய பரிசுத்தவான்களே, மீட்பருடைய ஆயிரம் வருஷம் அரசாட்சியிலுள்ள மகிமையில் பங்கடைந்து, மனித குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்கும், சத்தியத்தினால் வெளிச்சமூட்டுவதற்கும் தூக்கிவிடுவதற்குமெனச் சூரியனைப் போன்று பிரகாசிப்பார்கள் என்பதைப் புரிந்துக்கொள்வார்களாக.