R3702 – நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3702 (page 14)

நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்

GIFTS TO OUR KING

மத்தேயு 2:1-12

“”என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா.” – நீதிமொழிகள் 23:26

யூதர்களுக்கு இராஜாவாக புதிதாய்ப் பிறந்த குழந்தையாகிய இயேசுவை, வெள்ளைப்போளம், தூபவர்க்கம் மற்றும் பொன்னாகிய பரிசுப் பொருட்களோடு பார்க்க நாடி முயற்சித்த கிழக்கிலுள்ள சாஸ்திரிகள் பற்றியே நம்முடைய இன்றைய பாடம் அமைகின்றது. இச்சம்பவத்திலிருந்து மாபெரும் மேசியாவிற்குரிய நம்முடைய கடமைகள் மற்றும் அவைகளைப் புதுப்பித்தல் பற்றியும், அவைகளைப் பெருக்கிக் கொள்வது பற்றியும் சில விலையேறப்பெற்ற ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாரம்பரிய கண்ணோட்டத்தின்படி மூன்று நபர்கள் என அனுமானிக்கப்படும் சாஸ்திரிகள், எருசலேமுக்கு வந்தார்கள், மேலும் இவர்கள் வந்து, யூதர்களுக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். செய்தி பரவினபோது, பரிசுத்த நகரம் முழுவதும் பரவசம் உண்டாயிற்று; காரணம் பல நூற்றாண்டுகளாக வாக்களிக்கப்பட்டுள்ள மேசியா, தீர்க்கத்தரிசனங்களின்படி வருவதற்குரிய சமயமாய் அக்காலம் இருந்தது. மேலும் மனுஷர்கள், மேசியாவின் வருகைக்காக அப்போது காத்திருந்தார்கள் என்றும் வாசிக்கின்றோம். இந்த எதிர்ப்பார்ப்பு, பெர்சியாவிலிருந்து மேசியாவுக்கு வணக்கம் செலுத்த வந்த சாஸ்திரிகளினால் உச்சக்கட்டம் அடைந்தது. செய்தி பரவி, இறுதியில் அரண்மனை வட்டாரத்துக்குள் வந்து, பின்னர் ஏரோதின் செவிகளுக்கு எட்டினது. தன்னுடைய முக்கியத்துவத்தைப் புறம்பாக்கிப் போடுபவராகவும், இராஜாவுக்குரிய கனத்தைப் பங்குப்போடுபவராகவும் இருக்கும் யார் மீதும் பொறாமை கொண்டவராகவும் ஏரோது இருந்தார் என்பதில் ஐயமில்லை. மேலும் ஏரோது, தான் இராயனுடைய அரசாட்சியில் அவருடைய பிரதிநிதி போன்று இருப்பதினாலும், தான் ரோம சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதினாலும், தன்னுடைய கட்டுப்பபாட்டின் கீழ் இருக்கும் தேசத்தில், இராயனுக்கு எதிரான நாமத்தில் எவ்விதமான இராஜாவும் எழும்பாமல் பார்த்துக் கொள்வது தனது கடமையெனக் கருதியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்

ஆகவே ஏரோது, சாஸ்திரிகளை வரவழைக்க ஆள் அனுப்பினார். அவர்களுடைய தேடுகையில் தனக்கும் ஆர்வம் உள்ளதுபோல போலியாக பாவனை பண்ணி, இத்தனை தொலைதூரத் தேசத்தில் இருக்கும் அவர்கள், மேசியாவைக் குறித்து எப்படி அறிய வந்தார்கள் என்றும், குழந்தையைக் கண்டுபிடிக்கும் இடத்தை அவர்கள் எப்படி அறிந்துக்கொண்டார்கள் என்றும் அவர்களிடம் கேள்வி கேட்டார். அவர்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் [R3703 : page 14] கண்டதாகக் கூறினார்கள். கிழக்கில் உள்ள மாகிகள் வான சாஸ்திரிகளாக இருந்தபடியால் அவர்கள் தனிப்பட்ட நபர் மற்றும் தேசத்தினுடைய வரலாற்றை நட்சத்திரத்திலிருந்து அறியக்கூடியவர்களாக இருந்தார்கள். மனுஷர்கள் மற்றும் தேசங்களுடைய சரித்திரத்தை எந்த அளவுக்குக் கர்த்தர் நட்சத்திரங்களுடைய ஏற்பாடுகளில் எழுதியிருப்பார்/வைத்திருப்பார் என்பதைக் குறித்து நாம் முடிவு எடுக்க வேண்டாம். ஆனால் உலகத்தாரைப் பொறுத்தமட்டில் நட்சத்திர மண்டலங்கள் சங்கீதக்காரன் விவரிப்பது போன்று தேவனுடைய மாபெரும் புத்தகமாக இருக்கின்றது; “”இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கின்றது” (சங்கீதம் 19:2). நம்மிடத்தில் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தைகள் இருக்கிறபடியால் நாம் மனுஷனுடைய பாரம்பரியத்தையோ, கட்டுக்கதைகளையோ, வான சாஸ்திரிகளின் உதவியையோ நாட அவசியமில்லை; காரணம், “”அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனமும் நமக்கு உண்டு: பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19).

வான சாஸ்திரத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை நாம் அறிய முற்படாமல், கிழக்கிலுள்ள சாஸ்திரிகள் மேசியாவின் பிறப்பை அறிந்துக்கொள்வதற்கும், அவர் எந்த நாட்டை சார்ந்தவர் என்று அறிந்துக்கொள்வதற்கும் அவர்களை வழிநடத்தின அந்த விசேஷமான நட்சத்திரத்தின் தோன்றுதலில் உண்மை உள்ளது என்று மாத்திரம் உறுதியடைகின்றோம். கர்த்தர் அவர்களை, சொப்பனத்தில் தோன்றி எச்சரித்தது போன்று, வேறு விதங்களிலும் இக்காரியங்களைக் குறித்ததான கூடுதல் விவரம் கொடுத்திருக்க வேண்டும். சாஸ்திரிகளுடைய மேசியாவின் தேடுதலில் ஆர்வம் கொண்டுள்ளது போன்று, ஏரோது போலித்தனம் பண்ணினான். ஏரோது தனக்கு உதவி செய்யும்படி, யூதேயாவின் ஞானிகளை அழைப்பித்தார். இவர்கள் வானசாஸ்திரிகள் அல்ல, இவர்கள் நியாயப்பிரமாணத்தையும், தீர்க்கத்தரிசனங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களாகிய பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் ஆவர். அவர்களிடம் மேசியா எங்கே பிறப்பார் என்று தீர்க்கத்தரிசிகள் முன்னுரைத்துள்ளார்கள் என்று ஏரோது கேட்டார். இதற்கு “”யூதேயாவின் பெத்லகேம்” என்பது அவர்களுடைய பதிலாக இருந்தது. இந்தப் பட்டணம் ஆறு மைல் தூர தொலைவில் இருந்தபடியால், கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் புறப்பட்டுச் சென்றார்கள். சாஸ்திரிகள் தாங்கள் குழந்தையைக் கண்ட பின்பு, இராஜாவும் வந்து குழந்தையைப் பணிந்து கொள்ளத்தக்கதாக, குழந்தையைப் பார்த்த இடத்தைத் திரும்பி வந்து அறிவிப்போம் என்று வாக்களித்துச் சென்றார்கள். ஆனால், ஏரோதோ இந்தத் தகவலைப் பயன்படுத்தி குழந்தையாய் இருக்கும் இயேசுவை அழிக்க முற்படப் போகின்றார்.

பெத்லகேமுக்குப் போகும் வழியில், அவர்களுக்கு கிழக்கில் தோன்றின வியக்கத்தகு நட்சத்திரம், மீண்டும் தோன்றி குழந்தையும், அதன் தாயும் இருக்கும் வீட்டிற்கு வழிகாட்டினது. அந்த நட்சத்திரம் வெளிச்சம் அல்லது தீபந்தம் போன்று தோன்றியிருக்கும். பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சார்லஸ் ஏ. யங் அவர்கள், நட்சத்திரங்கள் திடீரென வானத்தில் தோன்றி, பின்னர் மிகவும் பிரகாசமடைவதும், பின்னர் ஓரிரு வருடங்களில் மங்கி போவதும் அரிதான சம்பவம் அல்ல என்று குறிப்பிடுகின்றார். இப்படியான நட்சத்திரம் 1901-ஆம் ஆண்டில் கூடத் தோன்றியுள்ளது. ஆனால் ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றினது என்பதே நம்முடைய கருத்தாக இருக்கின்றது.

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள்

“”டேக்டியஸ், சுய்டோஜஸ் மற்றும் ஜோசப்பஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள், கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் அச்சயமத்தில், யூதேயாவில் ஒரு வல்லமையான முடியரசு தோன்றி, உலகம் முழுவதையும் ஆளுகை செய்யும் என்ற கருத்துத் தீவிரமாகக் காணப்பட்டது என்று நமக்கு தெரிவிக்கின்றார்கள்” – பரரார்.

“”இக்காலக்கட்டத்திற்குச் சற்று முன்பு வாழ்ந்த வரலாற்று ஆசிரியராகிய விர்ஜில் அவர்கள், பரலோகத்திலிருந்து ஒரு குழந்தை வந்து, பாவத்தை எடுத்துப்போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது என்று தெரிவிக்கின்றார்” – ஜேகோபஸ்

“”கன்பியுசியஸ் என்பவரும் இத்தகைய இரட்சகர் தோன்றுவார் என்று தீர்க்கத்தரிசனம் உரைத்துள்ளார், மேலும், இவருடைய பின்னடியார்களின் பிரதிநிதி இரட்சகரைத் தேடிப் போவார் என்றும் கூறியுள்ளார். இதுவே புத்த மதம் சீனாவில் அறிமுகமாவதற்கான காரணமாயிற்று.” – ஆபோட்.

“”இவர்கள் அனைவரையும் காட்டிலும் சொராஸ்டர் என்பவர் மிகவும் தெளிவாகத் தீர்க்கத்தரிசனம் உரைத்துள்ளார். சொராஸ்டர் எரேமியாவின் சீஷனாக இருந்தபடியால், அவரிடமே இவர் மேசியாவைக் குறித்த விஷயங்களை அறிந்து, அவரைக் குறித்துத், தன்னுடைய சீஷர்களிடம் பேசியுள்ளார் என்று நெஸ்டோரியர்கள் கூறுகின்றார்கள்” – பெர்சிய சமயப் பிரச்சாரர்.

பெர்சியா, உலகத்தின் பிரதான நாடாக இருக்கும் சமயத்தில் தானியேலும், அவருடன் கூட இருந்த மற்ற மூன்று எபிரெயர்களாகிய அனனியா, மீஷாயேல் மற்றும் அசரியா பெர்சியாவில் பிரபுக்களாகவும், அங்குள்ள ஞானிகளுடன் நெருக்கமான தொடர்பும் கொண்டிருந்தார்கள் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். இவர்கள் வாயிலாக, இயேசுவைக் குறித்த தீர்க்கத்தரிசனம் வம்சாவழியாக வந்தது என்பதையும் நாம் புரிந்துக்கொள்ளலாம். ஆகவே, மேசியாவினுடைய பிறப்பின் காலம் தொடர்பான தானியேலின் தீர்க்கத்தரிசனங்கள் சொராஸ்டரின் சீஷர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். இன்னுமாக யூதர்கள் சிதறடிக்கப்பட்டுப் பல்வேறு இடங்களில் காணப்பட்டார்கள். இவர்களிடம் தேவனால் நீண்ட காலத்திற்கு முன்பு வாக்களிக்கப்பட்டுள்ள, மாபெரும் மேசியாவைக் குறித்த நம்பிக்கையும் இருந்தது. மேலும், இஸ்ரயேலுக்கு மாத்திரம் அல்லாமல் பூமியின் குடிகள் அனைத்தின் மேலும் ஆசீர்வாதம் கொண்டு வருபவர் என்று இந்த மேசியாவைக் குறித்துத் தீர்க்கத்தரிசனம் வழங்கப்பட்டிருந்தது.

[R3703 : page 15]

வெள்ளைப்போளம், தூபவர்க்கம் மற்றும் பொன்

தேவன் தம்முடைய நற்செய்தியை அறிவிப்பதற்கு தூதுவர்களாகத் தெரிந்துக்கொண்டவர்கள், ஞானிகளாய் மாத்திரம் இராமல் பயபக்தியுள்ள, விசுவாசமுள்ள புருஷர்களாகவும் இருந்தார்கள். மேலும், யூதேயா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களை விழித்தெழுப்பப்பண்ணுவதற்கும், மாபெரும் இராஜாவைக் குறித்து அறிவிப்பதற்கும் தேவன் கிழக்கிலிருந்து, தூதுவர்களைத் தெரிந்துக்கொண்டது, விதிவிலக்கான விஷயமல்ல. அவர்கள் புறஜாதி மனுஷர்களாகவும், தேவன் வழிநடத்தினவர்களாகவும், வாக்களித்த ஜனங்களைச் சார்ந்தவர்களாகவும் இல்லாதிருந்தும், அவர்களும் நல்ல மனுஷர்களாகவும், பயபக்தியுள்ள மனுஷர்களாகவும், பூமியின் மீது வரவிருக்கின்ற சமாதானத்தின் ஆசீர்வாதத்தைக் குறித்து அறிய விரும்புகிறவர்களாகவும் இருந்தார்கள். எந்த ஜாதியராய் இருந்தாலும், மனுஷர்கள் மத்தியிலேயே நல்ல சித்தம் கொண்ட மனுஷர்களைக் கர்த்தர் தமது பிரதிநிதிகளாக, தூதுவர்களாகத் தெரிந்துக்கொள்ள பிரியம் கொள்வார்.

கிறிஸ்துவ மண்டலத்தில் உள்ள அநேகர், இந்த ஞானமுள்ள சாஸ்திரிகளாகிய புறஜாதி மனுஷர்களிடமிருந்து அநேக முக்கியமான பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மனுப்புத்திரர்களுக்கு வெளிப்படும் தேவனுடைய இரக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு, தவறான தேசப்பற்று எதுவும், இந்தச் சாஸ்திரிகளுக்கு இடையூறாக இருக்கவில்லை. மேலும், அவர்கள் இரட்கசரைக் கண்டபோது, அவரைச் சூழ்ந்திருக்கும் எளிமையான சுற்றுச்சூழலைக் கண்டும் அவர்கள் ஐயங்கொள்ளவில்லை. அவர்கள் மூன்று விதத்தில் அவரை வணங்கினார்கள், அதாவது, 1) அவர்கள் அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து சரீரப்பிரகாரமாகத் தங்களுடைய பயபக்தியை வெளிப்படுத்தினார்கள். 2) அவர்கள் தங்களுடைய இருதயத்தில் அவரை வணங்கி, தங்களுடைய சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் நாவினால் வெளிப்படுத்தினார்கள். 3) அவர்கள் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, இராஜாவுக்குப் பொருத்தமான மூன்று அன்பளிப்புகளை அவருக்குக் கொடுத்தார்கள். வெள்ளைப்போளம், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கும் தன்மையையும், தூபவர்க்கமானது துதியையும், பொன்னானது கீழ்ப்படிதலையும் அடையாளப்படுத்துகின்றது.

“”உங்கள் சரீரங்களைத் தேவனுக்கேற்ற ஜீவபலியாக ஒப்புக் கொடுப்பதே,
உங்கள் புத்தியுள்ள ஆராதனையாக இருக்கும்””

மாபெரும் மேசியாவைக் குறித்தும், அவருடைய ஊழியத்தைக் குறித்தும் மிகக் குறைவான அறிவும், வெளிச்சமும் கொண்டிருந்த அந்த உண்மையான புறஜாதி மனுஷர்களிடம் காணப்பட்ட பயபக்தியின் ஆவியை நம்மோடு ஒப்பிடும்போது நமக்கு வெட்கம் வருகின்றது. ஏனெனில், தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரைக் காண்பதற்கு அவர்களைக் காட்டிலும் பிரகாசமான வெளிச்சத்தை நாம் பெற்றிருக்கின்றோம்; மேலும், அவருடைய நட்சத்திரத்தை மிகத் தெளிவாக நாம் கண்டிருக்கின்றோம்; மேலும், தீர்க்கத்தரிசனங்களின் வாயிலாக நாம் அவரிடம் வழிநடத்தப்பட்டிருக்கின்றோம். மேலும், நாம் அவரைக் குழந்தை பருவத்தில் பார்த்ததோடு அல்லாமல், நம்முடைய பாடுகள், கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு சுமப்பதற்கும், தம்முடைய ஆத்துமாவைப் பாவத்திற்கான பலியாக ஒப்புக்கொடுப்பதற்குரிய பூரணராக அவரைப் பார்த்திருக்கின்றோம்; அதாவது, அவருடைய தழும்புகளினால் நாம் குணமாவதற்கு உரிய பூரணராக அவரைப் பார்த்திருக்கின்றோம். நம்மை இப்படியாக நேசித்து, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மைச் சம்பாதித்தவரின் பாதங்களில் எவ்விதமான பலிகளைச் சமர்ப்பிக்கப் போகின்றோம்? மேலும், பரலோகத்தில் இருப்பவரின் சத்தத்தின் வாயிலாக, மனுக்குலத்திற்கும், நமக்கும் மகா கிருபைகளை அருளின மாபெரும் இராஜாவிற்கு – எவ்விதத்தில் நம்முடைய சரீரங்களை முழுமையாய் அர்ப்பணித்து, எவ்விதத்தில் ஆழமான பயபக்தியோடு நம்முடைய முட்டுகளை மடக்கி வணக்கம் தெரிவிப்போம்? நாம் நம்முடைய வெள்ளைப்போளத்தை அவருக்கு அர்ப்பணித்துள்ளோமா? கசப்பான அனுபவத்தின் பட்சத்திலும் அவருக்கு ஊழியம் செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளோமா? அவரோடுகூடப் பாடு அனுபவிக்கும் பட்சத்தில், இராஜாவாகிய அவரைக் கனப்படுத்துவதில் சந்தோஷத்தை வெளிக்காட்டியுள்ளோமா? வெளித்தோற்றமாய் இல்லாமல், இருதயத்தில் அவரை வணங்கி உள்ளோமா? வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இருதயப்பூர்வமான நன்றியை, துதியைத் தூபவர்க்கமாக அவருக்கு செலுத்தியுள்ளோமா?

நம்முடைய பூமிக்குரிய பொருட்களாகிய, நம்முடைய பொன்னை அவருடைய பாதங்களில் சமர்ப்பித்துள்ளோமா? நம்மிடத்தில் உள்ள அனைத்தும் மற்றும் நாம் பலிச்செலுத்தும் அனைத்தும், மகா இராஜாவாகிய இம்மானுயேல் ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் குறைவானவைகள் என்பதை நாம் உணர்ந்துள்ளோமா? இப்படியாக நம்முடைய தற்போதைய மனப்பான்மை காணப்படுகின்றதா? மேலும், இதே மனப்பான்மை இனிவரும் நாட்களிலும் நம்முடைய தற்கால பயணம் முடியும் வரையிலும் நீடித்து நம்மிடம் காணப்படுமா?

“”உங்கள் சரீரங்களை, பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள ஆராதனை” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகள், கர்த்தரிடத்தில் நாம் முதலாவதாகச் செய்துகொண்ட அர்ப்பணிப்பை மாத்திரம் குறிக்காமல், தினந்தோறும் சுயத்திற்கு மரிப்பதையும், நாளுக்குநாள், கர்த்தருடைய ஊழியங்களில் ஜீவித்து, நம்முடைய சரீரத்திலும், ஆவியிலும் அவரை மகிமைப்படுத்துவதையும் குறிக்கும் பலியின் உடன்படிக்கையாக இருக்கின்றது. ஆரம்பத்தில் நம்மிடம் காணப்பட்ட இந்த மனப்பான்மை எதிர்க்காலத்திலும் காணப்படுமா? ஞானத்திலும், அன்பிலும், ஊழியத்திலும், ஆராதிப்பதிலும், வளருவதில் நாம் தொடருவோமா? நம்முடைய கிருபையான பரலோக இராஜாவுக்கு, அதாவது, சீக்கிரத்தில் தமது இராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகிறவருக்கு, அவருடைய சிங்காசனத்தில் நாம் உட்காருவதற்கும், அவருடைய மகிமையில் பங்கடைவதற்கும், நாம் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாக மனுக்குலத்தின் மீது ஆசீர்வாதங்கனைப் பொழியும் மாபெரும் வேலையில் அவரோடு பங்கடைவதற்கு நம்மை அழைத்தவருக்கு, நம்மிடத்தில் உள்ள கொஞ்சமானவைகளை அவர் பாதத்தில் வைக்கும் சிலாக்கியத்தில் நாம் வளருவோமா?

என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குத் தா

நம்முடைய பொன்னான ஆதார வசனத்தை இங்கு நினைவுகூருவது நல்லது. இது குமாரர்கள் ஸ்தானத்தில் வராத பாவிகளுக்குப் பொருந்துவதில்லை. பாவிகளுக்கு ஒரு செய்தி உள்ளது; அதாவது, மனந்திரும்புவதற்கான ஒர் அழைப்பு உள்ளது; அதாவது, பாவத்தைத் துறந்து, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வரும் நீதிமானாக்கப்படுதலை ஏற்றுக்கொள்வதற்கான அழைப்பு உள்ளது. ஆனால் யார் பாவங்களுக்காக மனம் வருந்தி, பின்னர் மனந்திரும்பின ஓர் ஜீவியம் வாழ முயற்சித்து, முந்தைய தவறுகளிலிருந்து மீண்டு வந்து, கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசம் வைத்து, தேவனுடைய குமாரனின் மரணம் மூலம் தேவனோடு ஒப்புரவாகிக் காணப்படுகின்றார்களோ, அத்தகையவர்களுக்கே, “”என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா” என்ற நம்முடைய ஆதார வசனம் பொருந்தும்.

நாம் நம்முடைய இருதயங்களைக் கொடுப்பது என்பது நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையாகக் கொடுப்பதை அடையாளப்படுத்துகின்றது. சாஸ்திரிகள் கொடுத்த மூன்று அன்பளிப்புகளும், “”என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா” என்ற சுருக்கமான வாக்கியத்திற்குள் அடங்கிவிடுகின்றது. யார் ஒருவர் தனது இருதயத்தைக் கர்த்தருக்கு முழுமையாகவும், தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் கொடுக்கின்றார்களோ, அவர்கள் இராஜாவுக்கு மகிமை சேரும் வண்ணமாக அவருடைய ஊழியத்தில் பயன்படும்படி தன்னுடைய சரீரத்தை, தன்னுடைய ஆராதனையை, பயபக்தியை, துதியை, தனது பூமிக்குரிய பொக்கிஷங்களை, நேரத்தை, திறமையை, செல்வாக்கை, பணத்தை மற்றும் எல்லாவற்றையும் கொடுக்கின்றவாகளாக இருக்கின்றனர்.

[R3704 : page 15]

இவ்விதமான முயற்சிகளை எடுக்காதவர்கள், உடனடியாக எடுக்கும்படி வலியுறுத்துகின்றோம். அப்போஸ்தலர் கூறுகின்றதுபோல, இதுவே நம்முடைய புத்தியுள்ள ஆராதனையாக இருக்கின்றது. தேவன் நம்முடைய ஊழியங்களை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பமுள்ளவராக இருக்கின்றார் என்றும், நம்முடைய அன்பான மீட்பரின் நீதியின் வஸ்திரத்தினால் மூடப்பட்டுள்ள நாம், நம்மையே ஒப்புக்கொடுக்கும் நமக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியும்போது, புத்தியுள்ள ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
கர்த்தருடைய கிருபையை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு, தங்களுடைய சரீரங்களை ஜீவபலியாக ஏற்கெனவே ஒப்புக்கொடுத்து, தங்களுடைய இருதயங்களை ஏற்கெனவே கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறவர்களுக்கு நாம் நினைப்பூட்ட விரும்புவது என்னவெனில், பலிப்பீடத்தின் மேல் ஒருமுறை வைக்கப்பட்ட உங்கள் பலி, அங்கேயே காணப்பட வேண்டும். மேலும், அது பலிப்பீடத்தின் மீது காணப்படுவது வரையிலும், அதிகமதிகமான சந்தோஷத்தோடு ஊழியம் செய்யப்பட வேண்டும். பலிச் செலுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்புகளும் அதிகமதிகமாக உணர்ந்துகொள்ளப்படவும் வேண்டும் மற்றும் புத்திக்கெட்டாத தேவ சமாதானமானது இருதயத்தை ஆளும் அனுபவங்கள் அதிகமதிகமாய்க் காணப்படவும் வேண்டும். மேலும், தேவன் தம்மையும், தமது குமாரனையும் அன்பு செய்கிறவர்களுக்கென்று வைத்திருக்கம் மகிமையான விஷயங்களுக்கு, ஆவியின் கிருபைகள் மூலம் அதிகமதிகமாய் நாம் ஆயத்தம்பண்ணப்படவும் வேண்டும் என்பதேயாகும்.”