R4701 – அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4701 (page 330)

அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?

WILT THOU THAT WE COMMAND FIRE?

லூக்கா 9:51-56

“”பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார்.” – வசனம் 51,52

நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் கலிலேயாவிலிருந்து, எருசலேமை நோக்கி மேற்கொண்ட பிரயாணத்தின்போது நடந்திட்ட சம்பவத்தையே இப்பாடத்தில் நாம் பார்க்கப் போகின்றோம். தம்முடைய வேளை சமீபித்துவிட்டது என்றும், தம்முடைய அர்ப்பணிப்பு ஜீவியத்தினுடைய மூன்றரை வருடங்கள் நிறைவடைய போகின்றது என்றும் கர்த்தர் அறிந்திருந்தார். மாபெரும் போதகர் முழுமையாய்த் தைரியம் கொண்டிருந்தார். “”ஜனங்களில் ஒருவனும் அவரோடிருந்ததில்லை” (ஏசாயா 63:4) என்ற வார்த்தைகள் அனுதாபத்திற்குரிய அவருடைய நிலைமையைக் காட்டுகின்றது. தம்முடைய வேலை முழுவதும் பட்சிக்கப்படுவது/நிறைவேற்றுவது குறித்தும், அதற்கான வேளை சமீபித்துள்ளதைக் குறித்தும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு அவர் தெரிவித்தது உண்மையே. ஆனால், அவரைக்குறித்து நியாயப்பிரமாணங்களிலும், தீர்க்கத்தரிசனங்களிலும் எழுதியிருப்பவைகள் அனைத்தையும் நம்புவதில் அப்போஸ்தலர்கள் தாமதமாகக் காணப்பட்டார்கள். மேசியாவைக்குறித்துப் பேசப்பட்ட மகிமையான காரியங்களையே அப்போஸ்தலர்களின் மனங்கள் இயல்பாகக் கிரகித்துக் கொண்டன. அவருடைய மகிமையான இராஜ்யம் குறித்தும், அந்த இராஜ்யத்தில், அவரோடு கூடத் தங்களுடைய மகிமையான இணைதலைக் குறித்தும், எண்ணுவதிலேயே அப்போஸ்தலர்கள் மூழ்கிக் காணப்பட்டதினால், அவருடைய பாடுகளையும், அவருக்கு ஏற்படும் அவமானங்களையும் பற்றிப் பேசும் மற்றத் தீர்க்கத்தரிசனங்களைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படியே, தம்முடைய மரணம் குறித்து ஆண்டவராலேயே பேசப்பட்ட வார்த்தைகளையும், அப்போஸ்தலர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர் ஏதோ அடையாளமாக, உருவகமான விதத்தில் பேசுகின்றார் என எண்ணிக்கொண்டார்கள். மேலும் பேதுரு, “”ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று சொல்லி அவரைக் கடிந்துக்கொள்ளவும் முற்பட்டார். (மத்தேயு 16:22)

சமாரியர்களால் நிராகரிக்கப்படுதல்

அப்போஸ்தலர்களுடைய கூட்டத்திற்கென அப்பங்களை வாங்கும்படிக்கு யாக்கோபும், யோவானும், சமாரியா பட்டணத்திற்குச் சென்றதாக மற்றுமொரு பதிவு தெரிவிக்கின்றது. இவர்களைச் சமாரியர்கள் அடையாளம் கண்டுபிடித்து, மாபெரும் போதகர் சமாரியர்களாகிய தங்களை அங்கீகரித்து, தங்களுடைய வியாதிகளைச் சொஸ்தப்படுத்துவாரா அல்லது யூதர்கள் தங்களை நடத்துவது போன்று, அன்பற்ற விதத்தில் போதகர் நடத்துவாரா? என்று விசாரித்தார்கள். மாபெரும் போதகரும், யூதர்கள் தங்களை நடத்துவது போன்றே நடத்துவார் என்று சமாரியர்கள் நம்பினார்கள். மாபெரும் போதகர் யூத தேசத்தாருக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளார் என்றும், சமாரியர்களின் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தும்படிக்கு (சமாரியாவில்) நிற்கமாட்டார், காரணம் “”அவர் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கே” அனுப்பப்பட்டுள்ளார் என அப்போஸ்தலர்கள் சமாரியர்களிடம் வெளிப்படையாகக் கூறினார்கள்.

சமாரியர்கள் கோபமடைவதற்கு இதுவே போதும். “”நல்லது நீங்கள் போதிக்கிறவர்களிடமிருந்தும், நீங்கள் சொஸ்தப்படுத்துகிறவர்களிடமிருந்தும் போய் அப்பம் வாங்கி கொள்ளுங்கள்” என்றார்கள் சமாரியர்கள்.

இதனிமித்தம் பரிசுத்தவானாகிய யோவானும், பரிசுத்தவானாகிய யாக்கோபும் ஆத்திரம் அடைந்தார்கள். இயேசு மாபெரும் போதகர் அல்லவா? அவர் மேசியா அல்லவா? யார் தம்முடைய நன்மைகளை அடைய வேண்டும், அடையக் கூடாது தொடர்பான விஷயத்தில் தேவனுடைய சித்தத்தைத் தீர்மானிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது அல்லவா? இவ்விஷயத்தோடு அவர்கள் இருவரும் இயேசுவினிடத்திற்கு வந்து, நடந்ததை விவரித்துக் கூறி, “”வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று கேட்டார்கள்.

இன்ன ஆவியுள்ளவர்கள்?

ஆண்டவருடைய பதிலை நாம் ஆவலாய்ப் பார்க்கின்றோம். மாபெரும் போதகர் அப்போஸ்தலர்களை நோக்கி, “”எனது அருமையான சீஷர்களே, இதை விட்டுவிடுங்கள்; கொஞ்சம் காத்திருங்கள்; இந்தச் சமாரியர்கள் அனைவரும் மரிக்கும்போது, இவர்கள் நித்திய சித்திரவதை அடையும்படிக்கு பரம பிதா இவர்களைப் பிசாசினிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுவார். அந்த நித்திய [R4702 : page 330] சித்திரவதைக்கு முன்னதாக, நீங்கள் அக்கினியை இறங்க செய்து, இப்பட்டணத்தைச் சில நிமடங்களில் எரித்துப்போடுவது என்பது ஒன்றுமில்லாததாக இருக்கும். உங்களுடைய ஆவியை, என் அன்பு சீஷர்களே நான் அங்கீகரிக்கின்றேன்; இது தேவன் போன்ற தன்மைதான்; இப்படியாக, உங்களது வல்லமையினால் இவர்களை நீங்கள் எரிக்கவும், பொரிக்கவும் நீங்கள் விரும்பினதற்காக நான் உங்களைப் பாராட்டுகின்றேன். இப்படியான உங்களது தேவனை நீங்களும் தொடர்ந்துப் பின்பற்றுங்கள். உங்களை யார் என்று சரியாகப் புரிந்துக்கொள்ளாத சக மனிதர்களை உங்களால் முடிந்தமட்டும் உபத்திரவப்படுத்துங்கள்” என்று (ஒருவேளை) கூறியிருப்பாரானால், இது, முன்பொருக் காலத்தில் தெய்வீக ஏற்பாடுகளைப் பற்றி, நாம் கொண்டிருந்த கண்ணோட்டத்தின்படி பார்க்கப்பட்டால், இப்படிப் போதகர் பதில் சொல்வது சரி என்று நாம் எண்ணியிருந்திருப்போம்.

இப்படித்தான் மாபெரும் போதகர் பதில் சொன்னாரா? இல்லை. தேவனுக்கு நன்றி! அவருடைய போதனைகள் முற்றிலும் எதிர்மாறாக காணப்பட்டது. அதாவது, அனுதாபத்துடனும், அன்புடனும், இரக்கத்துடனும் காணப்பட்டது. அவரிடம் பிதாவின் ஆவி இருந்தது. மேலும், தம்மிடம் பிதாவின் ஆவி இருப்பதை அவர் புரிந்துக் கொண்டிருந்தார், மற்றும் அதைப் பூரணமாய்ப் பின்தொடரவும் செய்தார். “”அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” (லூக்கா 9:55-56).

ஓர் இரட்சகர், ஒரு மாபெரியவர்

இயேசுவின் நாட்களில் பாலஸ்தீனியாவில் பேசப்பட்ட மொழி சிரியாக் (Syriac) ஆகும். மாபெரும் போதகரின் நாமங்களில்/பட்டங்களில் ஒன்று “”இரட்சகர்” என்பதாகும். இரட்சகர் என்பதற்குச் சிரியாக் மொழியில், “”ஜீவன் கொடுப்பவர்” என்பது அர்த்தமாகும். இயேசு வருவதற்கு முன்பாக முழு உலகமும் போதுமானளவுக்குக் குற்றவாளி என ஏற்கெனவே தீர்க்கப்பட்டுள்ளனர். அவர் இன்னும் அதிகமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பதற்கு வராமல் மாறாக, அவர்கள் (உலகம்) தம் மூலம் ஜீவனையடைவதற்கே வந்தார்! (யோவான் 10:10; 3:17)

[R4702 : page 331]
ஜீவன்! உலகத்திற்கு ஜீவன் இல்லையா? ஆம், ஜீவன் இல்லை. ஆதாமின் கீழ்ப்படியாமைக் காரணமாக மனுஷீக ஜீவன் இழக்கப்பட்டது. இதன் விளைவாக மனுக்குலம் முழுவதும் மரித்துக் கொண்டிருக்கின்றது. (நித்திய சித்திரவதையிலிருந்து அல்லாமல்) மரணத்திலிருந்து, இரட்சிக்கின்ற ஓர் இரட்சகரே, ஜீவன் அளிப்பவரே, மனுக்குலத்திற்கு அவசியம்.

இரட்சகரின் முதல் வேலை, கல்வாரியின் மீட்பின் வேலையாகும். அவருடைய இரண்டாம் வேலையானது, இராஜ்யத்தில் தம்முடன் உடன் சுதந்தரர்களாகக் காணப்படத்தக்கதாக, தமது சபையைத் தெரிந்தெடுப்பதாகும். அவருடைய மூன்றாவது வேலை, பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் ஆதாமையும், அவருடைய சந்ததி முழுவதையும் இரட்சிப்பதாகும். அதாவது, தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையின் மூலமாகவும், அவருடைய பிள்ளைகள் பாவத்தில் பிறந்து, துர்க்குணத்தில் உருவாகி, மற்றும் அவர்களது தாய் அவர்களைப் பாவத்தில் கர்ப்பந்தரித்ததின் மூலமாகவும் வந்திட்ட மனரீதியில், சரீர ரீதியில் மற்றும் ஒழுக்க ரீதியிலுள்ள சீர்க்கேடுகள் அனைத்திலிருந்தும் அவர்களை இரட்சிப்பதாகும்.

சபையை இரட்சிப்பது என்பது மாபெரும் வேலையாகும்! கிறிஸ்துவின் மணவாட்டி வகுப்பாரில் அங்கங்களாகுவதற்கான இந்த அருமையான சிலாக்கியத்திலுள்ள தேவனுடைய கிருபையை, ஒருவேளை நமது இருதயங்கள் ருசிபார்த்ததானால், ஒருவேளை நம்முடைய கண்கள் கண்டதானால், ஒருவேளை நாம் கேட்டிருப்போமானால், நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். எனினும் கொஞ்சம் பேர்களை மாத்திரமே இரட்சிப்பது என்பது, உலகத்தைச் சிருஷ்டித்ததிலும், உலகத்தை மீட்பதிலுமுள்ள தேவனுடைய நோக்கம் என்று நாம் அனுமானித்து விடக்கூடாது. மாறாக, இந்தத் தெரிந்துக்கொள்ளப்படும் “”சிறுமந்தையினர்” தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலனானவர்கள் என்று கூறப்படுகின்றனர் (யாக்கோபு 1:18; வெளி 14:4). அப்படியானால் பிற்பலன்கள் அநேகம் இருப்பது காட்டப்படுகின்றது. எந்த ஒரு நபருடைய தனிப்பட்ட விருப்பத்திற்கு எதிராக, அவரைத் தேவன் மரணத்திலிருந்து இரட்சித்து, நித்தியத்திற்குரிய ஜீவனைக்கொடுப்பதாக அறிவிக்கவில்லை என்றாலும், ஆதாமுக்குள் இழந்துப்போய் மற்றும் இயேசுவினால் மீட்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படத்தக்கதாக, சத்தியம் பற்றிய தெளிவான அறிவிற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று தேவன் தெரிவிக்கின்றார். துணிந்துப்பிடிவாதமாக இருப்பவர்கள் மாத்திரமே இழப்பிற்குள்ளாகப் போவார்கள் என்று தேவன் தெரிவித்துள்ளார்; மேலும், இத்தகையவர்களுடைய இழப்பு என்பது, ஜீவனை இழந்து போவதாகும். அதாவது, அப்போஸ்தலர் தெரிவித்துள்ளது போன்று “”நித்திய அழிவிற்குள்” ஆகுவார்கள்.