R5905 – பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5905 (page 163)

பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்

TRAINING OUR AFFECTIONS HEAVENWARD

“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”” (கொலோசெயர் 3:2)

நம்மால் பகுத்தறியவோ அல்லது விவரிக்கவோ முடியாதபோதிலும், மனுக்குலத்தினுடைய இயல்பான அமைப்பியலில், நம் அனைவராலும் மனதினுடைய சீர்க்குலைவு என்று அடையாளம் கண்டுகொள்ளப்படும் ஒருவகையான மனப்பாங்கு காணப்படுகின்றது. நாம் மனுஷர்களாகவும், ஸ்திரீகளாகவும் காணப்படுவதினால் நமக்கு மற்றச் சிருஷ்டிகள்மீது, மற்றப் பொருட்கள்மீது ஈர்க்கப்படும் நாட்டத்தின் சில ஈர்ப்புகள், சில ஆற்றல்கள் காணப்படுகின்றன; அவைகள் எதன்மீது ஈர்க்கப்படுகின்றது என்பதைப் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான காரியமாகும்; இல்லையேல் அவை விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்திவிடும். திராட்சச்செடியின் சிறு கொடிகள் அதன் அருகில் உள்ள எதன்மேலும் படர்ந்து பற்றிக்கொண்டிருப்பது போன்று, நம்முடைய ஆர்வங்களும் / நாட்டங்களும் பல்வேறு பூமிக்குரிய காரியங்கள்மீது பற்றிக்கொள்கின்றன் மேலும் எப்படித் திராட்சக்கொடிகளுக்கு அவசியப்படுகின்றதோ, அப்படியே நம்முடைய நாட்டங்களும்கூடக் கிள்ளிவிடப்பட வேண்டும் மற்றும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உங்கள் திராட்சச்செடியை ஒரு குறிப்பிட்ட திசையில் வளர்த்திட நீங்கள் விரும்புவீர்களானால், அதை நீங்கள் சரியான திசையில் திருப்பிவிடுவீர்கள்; தேவைப்பட்டால் கட்டிவைப்பீர்கள் மற்றும் அதன் தளிர் இலைகள் சரியான கம்புகளைப் பற்றிக்கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்வீர்கள்.

பல்வேறு உலகம் சார்ந்த நாட்டங்கள்

இப்படியாகவே நம் ஒவ்வொருவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. இந்த நாட்டங்கள் தகுதியானவைகளாகவும், நல்லவைகளாகவும் இருக்கின்றன; ஆனால் அவைகள் வழிகாட்டப்பட வேண்டும், பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒருவேளை இந்த நாட்டங்கள் நமக்கு இல்லையெனில், நம்மால் தேவனை அன்புகூரமுடியாது. சமச்சீரான குணலட்சண நிலைமையினை அடைவதற்கு நமக்கு அவை அவசியமாகும். இந்த நாட்டங்கள் இல்லையெனில் நம்மால் ஒன்றிணைந்து வாழமுடியாது. ஒரு பெண்மணி தனது பாசத்தினை / நாட்டத்தினை ஒரு சிறு நாய்க்குட்டியின்மீது பெற்றிருந்து, அதற்கு அதிக நேரம் செலவிடுவதையும், அதிக கவனம் அதன்மீது செலுத்துகிறதையும், தெரிவுசெய்து கவனமாய் உணவுகொடுக்கிறதையும் நாம் காண்கையில், நாட்டங்களுக்கான சரியான வழிகாட்டுதலின் அவசியத்தினைக் காணலாம். சில ஐசுவரியவான்கள் பூடில்வகை நாய்கள்மீதும், புல்வகை நாய்கள்மீதும், வேட்டை நாய்கள்மீதும் அல்லது அங்கோரா பூனைகள்மீதும் தங்கள் நாட்டத்தினைப் பெற்றிருக்கின்றனர். சிலர் கேனரி பறவைகள், முயல்கள், வெள்ளை எலிகள் முதலானவைகளைச் செல்லப் பிராணியாக வைத்துக்கொள்கின்றனர். இவர்கள் மற்ற விதங்களில் சிறப்பாய்ச் செலவிடப்பட வேண்டிய மிகவும் விலையேறப்பெற்ற நேரத்தையும், சிந்தனையையும், பராமரிப்பையும் இந்தச் செல்லப்பிராணிகளுக்காய்க் கொடுக்கின்றனர் . . . ஏதோ அப்பிராணிகளைக் குழந்தைகள்போன்று பெரும்பாலும் நடத்துகின்றனர் மற்றும் ஏதோ அவைகளை மனுஷர்போன்று நினைத்து, [R5906 : page 163] அவைகள்மீது அதிகப்படியான பாசத்தினைக் குவிக்கின்றனர். சிலர் இப்படியாக மலர்களிடம் செய்கின்றனர்.

வாய்ப்பேசாத பிராணிகள்மீது எங்களுக்கு அன்பான உணர்வுகள் இருக்கின்றபோதிலும்… மலர்களை நாங்கள் வெகுவாய் இரசிக்கின்றபோதிலும்… கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் இவைகளில் எதையும், ஏதோ அவைகளை மனித ஜீவிகள்போன்ற விதத்தில் நடத்திடக்கூடாது என்றும், நமக்குப் பாதகமான விதத்திலும், மிகவும் முக்கியமான காரியங்களைப் புறக்கணித்துவிடும் விதத்திலும் அவைகள்மீது நாம் நாட்டம் வைத்திடக்கூடாது என்றும் நாங்கள் கருத்துப் பெற்றிருக்கின்றோம். பராமரிக்கப்படுவதற்கு அநேகம் பிள்ளைகள் இருக்கின்றனர்; மற்றும் இவர்களுடைய இடத்தில் நாம் மலர்களை, நாய்களை, விளையாட்டுப்பொருட்களை வைத்துவிடக்கூடாது. இவைகளை எல்லாம் நம்முடைய சந்தோஷத்திற்காகக் கொடுத்த நமது பரம பிதா எவ்வளவு நல்லவர் என்று நாம் சிந்திப்பது சரியே எனினும் அவைகள்மீது நமது நாட்டங்களை வைத்துவிடாதளவுக்கும், அவைகளுக்கு நம்முடைய இருதயங்களில் மிக அதிகமான இடம்கொடுத்துவிடாதளவுக்கும் நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இப்படி ஜனங்கள் எங்கு இடம் கொடுத்துவிடுவார்களோ, அங்கு விலையேறப்பெற்ற ஏதோ ஒன்றினை அவர்களுடைய ஜீவியங்களில் அவர்கள் தொலைத்திருப்பார்கள். ஒருவேளை இப்படிச் செய்பவர்கள் வளர்ந்தவர்களாய் இருப்பார்களானால், இவர்கள் தங்கள் அன்பினை நாய்கள், பூனைகள் மீது வைத்து, அவைகளுக்காக விலையேறப்பெற்ற நேரத்தினை வீணடிப்பதற்குப் பதிலாக, இவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்வது நலமாயிருக்கும்.

மனுக்குலத்தின் உலகத்தை நாம் பார்க்கையில் சிலர் மற்றச் சிலரைக்காட்டிலும் சீரான மனநிலை உடையவர்களாய் இருக்கின்றனர் என்பதை நாம் காண்கின்றோம். நாங்கள் உலகத்திற்காக அனுதாபம்கொள்கின்றோம்; ஏனெனில் பெரும்பாலானோர் கர்த்தரை அறியார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்களில் அநேகர் ஏழைகளாகவும், தங்கள் இருதயங்களை நிரப்பிடுவதற்கும், தங்கள் மனதின் எல்லையை விரிவாக்கிடுவதற்கும், மனதினைப் பிரகாசிப்பிப்பதற்கும் கொஞ்சமே உள்ள, பற்றாக்குறைவுள்ள ஜீவியமே ஜீவிப்பவர்களாகவும் இருக்கின்றனர். செல்லப்பிராணிகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுபவர்கள் அல்லது இவைகளுடன் நேரம் செலவிடாதவர்கள் – தங்கள் நாட்டங்களையும், எண்ணங்களையும் வீட்டின்மீது பெற்றிருக்கின்றனர். “”எனக்கென்று நல்லதொரு வீடு உள்ளது”” என்று கூறுவதில் இவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கொள்கின்றனர். வீட்டிற்கான இந்த ஏக்கம் என்பது மனித ஜீவிகளுக்கு இயல்பான ஓர் ஆசைதான். இந்த இயல்பான பண்பினை மண்டையோட்டின் வெளி அமைப்புமூலம் ஒருவருடைய பண்புகளை ஆராயும் நிபுணர்கள் / phrenologists… குடியிருப்பிற்கான ஆசை என்கின்றனர். ஆனால் இதன்மீதுகூட நம்முடைய நாட்டங்களை நாம் மையங்கொள்ளச் செய்திடக்கூடாது. தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும் நாம் உலகம்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக மேலான இலட்சியங்களைக்கொண்டிருக்க வேண்டும்.

வங்கிக்கணக்கில் அதிகமான பணம் வைத்திருக்க வேண்டும் என்று அநேகர் தங்களுடைய இருதயங்களில் இலட்சியம்கொண்டிருக்கின்றனர். வங்கிக்கணக்கில் கணிசமாகப் பணம் காணப்படத்தக்கதாக எதையும் செய்துவிடும் அளவுக்குச் சீரற்ற மனநிலையினை உடைய ஜனங்களை நாம் அறிந்தவர்களாய் இருக்கின்றோம். இந்த இலட்சியம் நிறைவேறினாலும், அவர்கள் இன்னும் திருப்தியடைகிறதில்லை. தங்கள் ஆசையைப் பூர்த்திச் செய்யும்வண்ணமாய் இவர்கள் தொடர்ந்து பணத்தைப் பெருக்கிக்கொண்டே இருப்பார்கள் மற்றும் இதற்காக நேர்மையற்ற முறைகளையும் கையாளுவார்கள். இத்தகையவர்கள் மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் ஒழுங்கற்றவர்களாய் / தாறுமாறானவர்களாய் இருப்பார்கள். மனிதக் குடும்பமானது, விழுந்துபோன நிலைமையில் ஏறக்குறைய ஒழுங்கற்ற நிலையிலேயே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். முற்றும் முழுமையான மற்றும் தீவிரமான சீர்த்திருத்தமே இவ்விடர்பாட்டினை மாற்றிட முடியும். முழு மனித சந்ததியையும் பாதித்துள்ள நோயினைக் கர்த்தரினால் மாத்திரமே குணப்படுத்திட முடியும்.

நியாயமான அன்பு / நாட்டங்கள் கூட விபரீதமாகிடலாம்

சரியாய்ப் பயிற்றுவிக்கப்பட்டு, வழிகாட்டப்படவில்லையெனில் மிகவும் அபாயகரமாகிவிடும் என்று நாம் மேலே பட்டியலிட்டவைகளைக் காட்டிலும், இன்னும் மேலான அன்புகள் / நாட்டங்கள் காணப்படுகின்றன. அவை மனுஷன் ஸ்திரீக்காகவும், ஸ்திரீ மனுஷனுக்காகவும், மனுஷன் மனுஷனுக்காகவும், ஸ்திரீ ஸ்திரீக்காகவும் கொண்டிருக்கும் அன்புகள் / நாட்டங்கள் ஆகும். இவை அனைத்தும் தகுதியானவைகளே ஆனாலும் நாம் அளவுக்கு மீறின நாட்டங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் சாதாரண – அதாவது நியாயமான, தகுதியான / உரிய நாட்டங்களை / அன்புகளை மாத்திரமே பெற்றிருக்க வேண்டும். மிதமிஞ்சி செல்லாதபடிக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தைகளில் தம்முடைய பிள்ளைகளுக்கான முறையான நடக்கைக்குரிய வரையறைகளைக் கொடுத்திருக்கின்றார் மற்றும் இவைகளை நாம் அவரது வழிகாட்டுதல்களைக் கற்கும்போது மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். இல்லையேல் நிச்சயமாய் நாம் தவறான வழிமுறையைப் பின்பற்றிடுவோம். “”பூமியிலுள்ளவைகள்மேல் அன்புகூராதிருங்கள்.””

கணவன்மார்களும், மனைவிமார்களும்கூட ஒருவர் ஒருவரின்மீது மிக அதிகமாய்த் தங்கள் நாட்டங்களை/ பற்றாசைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தேவ ஏற்பாடாய் இருக்கின்றது. ஆகையாலே அப்போஸ்தலனாகிய பவுல்: “”இனி வரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும் இருக்க வேண்டும்”” என்கிறார் (1 கொரிந்தியர் 7:29). நாம் நமது பூமிக்குரிய உறவுகளை அனைத்திலும் சிறந்ததெனவும், உயர்ந்ததெனவும் கருதிடக்கூடாது என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீவியத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் ஒருவர் இன்னொருவருடைய ஆதரவைப் பெற்றிருப்பது பெரிய காரியமே. இந்தப் பாக்கியமான (விவாக) பந்தத்தினைப் பெலவீனப்படுத்திவிடும் எதையும் சொல்லிவிடுவதற்கு நாங்கள் விரும்புகிறதில்லை. ஆனாலும் அது தேவ வசனத்திற்கு இசைவாகவும், தேவ வசனம் பற்றின அறிவின்படியும் காணப்பட வேண்டும். அது எவ்விதத்திலும் பரலோக ஓட்டப்பந்தயத்தில் நாம் வெற்றிகரமாய் ஓடிடுவதற்குத் தடையாய் இருக்கத்தக்கதாக நாம் அனுமதித்துவிடக்கூடாது. அது பிதாவின் முகத்தையும், அங்கீகரிப்பையும் நமக்கு மறைத்திடும் பூமிக்குரிய மேகத் திரையாகிடக்கூடாது.