R5555 – இராஜரிக அன்பின் பிரமாணம்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5555 (page 309)

இராஜரிக அன்பின் பிரமாணம்

THE ROYAL LAW OF LOVE

“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.” (ரோமர் 15:1-3)

“மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; நமக்கு உகந்ததையே தேடலாகாது. அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை.” (திருவிவிலியம்)
[R5556 : page 310]

நம் சகோதர சகோதரிகள் நெருக்கமான விதத்தில், நமக்குப் பிறன் ஆவர்

அப்போஸ்தலனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் பார்க்கையில், பரிசுத்த பவுல் அடிகளாரால் பயன்படுத்தப்பட்டுள்ள “பிறன்” என்னும் வார்த்தைக்கான பிரதான அர்த்தம் “நமக்கு நெருக்கமானவர்கள்” என்பதே ஆகும் என்று நம் எண்ணம் காணப்படுகின்றது; அதாவது கிறிஸ்துவின் சபையில், நம் சகோதர சகோதரிகளே நம் அயலார்கள் ஆவர்; இவர்கள் நம் இருதயங்களுக்கு நெருக்கமானவர்களாகவும், அருமையானவர்களாகவும் காணப்படுகின்றனர். தேவ பிள்ளைகள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள் ஆவர்; இவர்கள் குறிப்பாய் நம்முடைய பிறனாய் இருக்கின்றனர்; காரணம் இவர்கள் நம் தளத்திலேயே காணப்படுகின்றனர். இவர்களுடைய பக்திவிருத்திக்கு ஏதுவாய் இவர்களைப் பிரியப்படுத்திடுவதற்கு நாம் விசேஷமாய் நாடிட வேண்டும். ஆனால் அதற்கென்று இவர்களை மாம்சத்தின்படி பிரியப்படுத்திட வேண்டும் என்று அர்த்தமாகாது; ஏனெனில் மாம்சத்தில் பிரியப்படுத்துவது என்பது பக்திவிருத்திக்கு நேர்மாறாகவே அநேகம் சந்தர்ப்பங்களில் இருந்துள்ளது. நாம் சரியாய்ச் சகோதர சகோதரிகளைப் பிரியப்படுத்தினோமானால், அன்பிற்கும், விசுவாசத்திற்கும், வைராக்கியத்திற்கும், நற்கிரியைகளுக்கும் நாம் அவர்களின் ஆவிக்குரிய மனங்களை – “அவர்களின் தூய்மையான மனங்களை ஏவுகின்றவர்களாய்” இருப்போம். இது “பிரியப்படுத்துதல்” எனும் வார்த்தையானது அவ்வசனத்தில் எல்லைக்குட்பட்ட விதத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

நாம் அனைத்து ஜனங்களுக்கும் உகந்தவர்களாய் வாழ்வது என்பது கூடாத காரியமாகும். நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கேற்ப ஜனங்களுக்கு நன்மை உண்டாகத்தக்கதாக நம் ஆற்றல்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். உலக ஜனங்கள் பரிசுத்தவான்களாய் இல்லை என்றாலும், நம்மால் கூடுமட்டும் “அன்பிற்கும், நற்கிரியைகளுக்கும்” நாம் அவர்களை ஏவுகிறவர்களாக/ தூண்டிவிடுபவர்களாகக் காணப்பட வேண்டும்; மற்றும் கோபங்கொள்ளவோ, துர்க்குணங்கொள்ளவோ அல்லது பாவஞ்செய்யவோ அல்லது அபாத்திரமான எதையாகிலும் செய்திடுவதற்கோ நாம் அவர்களை ஏவிட / தூண்டிடக் கூடாது. உலக ஜனங்களுக்குப் பிரயோஜனம் உண்டுபண்ணி, அவர்களுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்திடும் நம் பிரயாசத்தில் நாம் எப்போதும் வெற்றிக் காணமுடியாது. சில சமயங்களில் சகோதர சகோதரிகள்கூட அவர்களுக்கு ஊழியம்புரியும் நம் பிரயாசங்களில் பிரியம் அடைவதற்குப் பதிலாய் மனக்குறைக்கொள்கின்றனர். தெளிந்த புத்தியுள்ள ஆவியினைச் செயல்படுத்தி நாம் மற்றவர்களுக்கான பக்திவிருத்திக்கென நாடி, நாம் அவர்களைப் பிரியப்படுத்த முற்பட்டால், ஒருவேளை அது மற்றவர்களுடைய – சகோதர சகோதரிகளுடைய அங்கீகரிப்பைப் பெற்றுத்தருகிறதோ இல்லையோ, அது நமது நடத்தைக்குக் கர்த்தருடைய அங்கீகரிப்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.

ஆகையால் நம்மில் ஒவ்வொருவனும் “பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்க” முயற்சிப்போமாக. பிறன் என்ற நெருங்கிய நிலைமையில், சபைக்கு அடுத்ததாக நம் சொந்தக் குடும்பங்கள் வருகின்றனர். ஆம் பூமிக்குரிய கடமைகள் மற்றும் பூமிக்குரிய தேவைகள் விஷயத்தில் நம் குடும்பமானது முதலாவது வருகின்றது மற்றும் இவர்கள் நம் பிறனாகவும், மாம்சத்தில் மிகவும் நெருக்கமானவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு நன்மை உண்டாகும்படி, இவர்களுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்திட இவர்களுக்கு நன்மை செய்திட நாம் நாடிட வேண்டும். இதே கொள்கையானது இறைச்சிக் கடைக்காரன் விஷயத்திலும், ரொட்டி சுடுகிறவன், ஐஸ்கிரீம் கடைக்காரன் முதலானவர்கள் விஷயத்திலும் பொருந்தும். இவர்களுக்குப் பாதகம் ஏற்படும் விதத்திலோ அல்லது இவர்களுக்குப் பிரயோஜனமாய் இராத ஏதேனும் விதத்திலோ நாம் இவர்களுக்குப் பிரியமாய் நடத்தல்கூடாது. நாம் உலக வழிமுறைகளைச் செயல்படுத்த இறங்கிடக்கூடாது. நன்மையும், தூய்மையும் இல்லாத கதைகளை இவர்கள் நமக்குச் சொல்ல விரும்புவார்களானால், நாம் இவர்களோடு இணைந்துகொள்ளக்கூடாது. நன்மையானவைகள் மூலம் நாம் இவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியவில்லையெனில், அவசியமற்ற நட்புகளை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் நன்மை செய்கிறவர்களாகவும், (வளர்ச்சி உண்டு பண்ணுகிறவர்களாகவும்) பக்திவிருத்தி பண்ணுகிறவர்களாகவும் மாத்திரம்தான் காணப்பட வேண்டும்.

உலகம் நல்லவைகளை அடையாளம் காணும்

நம்முடைய பிறன்கள் அனைவருக்கும் கூடுமானமட்டும் உகந்தவர்களாய் நாம் இருப்பதற்குப் பிரயாசம் எடுத்திட வேண்டும். ஒருவேளை நாம் மரியாதையின்றி கடிந்துகொள்வோமானால், அது அவர்களுக்குப் பிரியமாய் இராது மற்றும் அவர்களுடைய பிரயோஜனத்திற்கும் ஏதுவாயிராது. உலகப்பிரகாரமான ஜனங்களைக் கடிந்துகொள்வதற்கும் ஒரு சரியான வழி இருக்கின்றது. ஒழுக்கம் மற்றும் மத விஷயத்தில் உலகமானது அது அங்கீகரித்திட விரும்பிடும் அளவிற்கும் அதிகமான ஓர் உயர்வான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. வெளிப்புறமாய் அவர்கள் முகம் சுளித்தாலும், தங்கள் இருதயத்தில் நல்லவைகளை அவர்கள் அங்கீகரிக்கவே செய்கின்றனர். தங்கள் சொந்த ஜீவியங்களில் தூய்மையற்றுக் காணப்படும் ஜனங்கள், தூய்மையான ஜனங்களின் சகவாசத்தினை விரும்புவதை நாம் அடிக்கடி கண்டிருக்கின்றோம். அசுசியானவர்களாகவும், தாங்கள் தொடும் எதையும் அசுசிப்படுத்துகிறவர்களாகவும் காணப்படுபவர்களும்கூட, நலமானவைகள் குறித்துக் கொஞ்சம் மதிக்கிறவர்களாய்க் காணப்படுகின்றனர்.

உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு நம்மால் அதிகமான நன்மைகளைச் செய்திட முடியும் என்று நாம் எண்ணங்கள் கொண்டிருப்பது சரியல்ல; ஓரளவுக்கு தற்போது நாம் உலகப்பிரகாரமான ஜனங்களுக்கு செய்திடலாம். தேவனுக்கு நேர்மையாயும், சத்தியம் அனுமதிக்கிற அளவிலும் நம்மால் கூடுமானமட்டும் நாம் உகந்தவர்களாய் / பிரியப்படுத்துகிறவர்களாய்க் காணப்பட வேண்டும் என்பதே எப்போதும் நம் நோக்கமாய் இருக்கவேண்டும். நாம் “எரிச்சலடைகிறவர்களாகவும்,” எப்போதும் உலகத்தில் சண்டையிடுகிறவர்களாகவும் காணப்படக்கூடாது. மாறாக நம் நற்கிரியைகளை மற்றவர்கள் காணவும், இப்படியாக “தங்களுடைய சந்திப்பின் நாளில் தேவனை மகிமைப்படுத்தவும்” தக்கதாக நாம் நம் வெளிச்சத்தினைப் பிரகாசிக்கப்பண்ண வேண்டும். சத்தியத்தின் ஆற்றலை நாம் இப்பொழுது உலகத்திற்கு இனிமையான மற்றும் இரக்கமான ஆவியின் மூலம் வெளிப்படுத்திட முடியும். எல்லா மனுஷரிடத்திலும் – அதிலும் விசேஷமாகச் சபையிடத்திலும், நம் தொடர்புக்குள் வரும் அனைவரிடத்திலும், கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் இரக்கத்துடன் காணப்பட வேண்டும்.

எச்சரிப்பின் ஒரு வார்த்தை

சத்தியத்திற்கு இசைவாய் வராத நிலைமையிலுள்ள அல்லது அநேகமாக சத்தியத்திற்கு இசைவாக வந்தும், கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணாத நிலைமையிலுள்ள கணவனையோ அல்லது மனைவியையோ உடைய கர்த்தருடைய ஜனங்களில் சிலர் தவறு செய்பவர்களாகவும், தங்களுடைய நடத்தையின் வாயிலாக தங்கள் ஜீவித துணையினிடத்தில் ஆர்வம் வளர்வதைத் தடுத்துப்போடுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று நாங்கள் அஞ்சுவதை இங்கே பதிவு செய்கின்றோம். உதாரணத்திற்குக் கணவன் முழுமையாய் அர்ப்பணம்பண்ணினவராகவும், இவர் மனைவி அர்ப்பணம்பண்ணாதவளாகவும் இருக்கையில், சத்தியத்திற்கான தன் வைராக்கியமானது – மனைவி மீது அழுத்திக்கொண்டிருக்கின்றதான வீட்டுப்பராமரிப்பிற்கடுத்த பாரங்களைச் சுமப்பதில் அவளுக்கு உதவிடும் தனது கடமையினைப் புறக்கணித்துப் போடுவதற்குத் தன்னை வழிநடத்திவிடாதபடிக்குக் கணவன் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தன் மனைவிக்கான உண்மையான தேவைகள் அல்லது ஆறுதல்களைச் சந்தித்திடும் மிகவும் விசேஷித்த கடமை தனக்கு இருக்கின்றது என்னும் காரியத்தினைக் காணத் தவறுமளவுக்கு, கர்த்தருக்கடுத்த தன்னார்வ பணிகள், கூட்டங்கள் முதலானவைகள் கணவனின் ஓய்வு நேரத்தினை மிக முழுமையாய் ஆக்கிரமித்துக்கொண்டு காணப்படக்கூடாது.

கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளதாக அறிக்கைப் பண்ணிக்கொண்டிருக்கும் ஜீவித துணையினிடத்தில் அன்புடன்கூடிய, அக்கறையுடன் கூடிய பரிவு இல்லாமைக் காரணமாய்ச் சிலர் கசப்படைந்து, சத்தியத்தினை முழுமையாய் ஏற்றுக்கொள்வதிலிருந்து தடைப்பட்டுள்ளனர் அல்லது எதிர்ப்புத் தெரிவிக்க வழிநடத்தப்பட்டுள்ளனர் என்று நாங்கள் அஞ்சுகின்றோம். ஒருவேளை நாம் உண்மையில் கர்த்தருக்கு முழுமையாய் உரியவர்களாய் இருப்போமானால், இது நிரூபிக்கப்பட வேண்டிய முதலிடம் நம் இல்லமேயாகும். நம் இல்லங்களுக்கு வெளியில் சத்தியத்திற்கடுத்த ஊழியங்களில் நாம் கொண்டிருக்கும் எந்தளவிலான வைராக்கியமும், நம்முடைய குடும்பங்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளதும், அவர்கள் நம்மிடம் எதிர்ப்பார்த்திடுவதற்கு உரிமைப் பெற்றிருக்கின்றதுமான கடமைகளினின்று நம்மை விடுவித்துக்கொள்ளமுடியாது. நம்முடைய கடமைகளை நாம் நிறைவேற்றுதல் என்பது, சத்தியத்திற்கான உண்மையான ஊழியமாகும் மற்றும் இதுவே பெரும்பாலும் ஆற்றல்மிக்க ஒன்றும்கூட. கணவன் மனைவிக்கு வேண்டி தண்ணீரையோ அல்லது நிலக்கரியையோ அல்லது மரத்துண்டுகளையோ சுமக்க வேண்டியதிருந்தால் அல்லது மனைவிக்குக் கணவன் செய்ய முடிகின்ற அல்லது செய்ய வேண்டிய வேறு ஏதேனும் வேலைகள் இருக்குமானால், இவைகள் மற்ற ஊழியங்களுக்காகப் [R5557 : page 311] புறக்கணிக்கப்படக்கூடாது. ஒருவேளை கூட்டங்கள் எவற்றிலாகிலும் கலந்துகொள்ள அவள் விரும்புவாளானால், அவளைத் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்புவதையும், அவள் கலந்துகொள்ள தான் விரும்புவதையும் கணவன் வெளிப்படுத்திடுவாராக.

இதே விஷயம் அர்ப்பணம்பண்ணியுள்ள மனைவிக்கும் பொருந்தும். நேரம் செலவிடப்படுவதும், தனிப்பட்ட சேவைகள் செய்யப்படுவதும்தான் கணவனுடைய நியாயமான எதிர்ப்பார்ப்புகளாய் இருக்கும்; மேலும் இது விஷயத்தில் மனைவியானவள் நீதியின், அன்பின் மற்றும் தெளிந்த மனதின் ஆவியினைச் செயல்படுத்திட வேண்டும் மற்றும் மனைவிக்குப் புதிய விஷயங்கள் மீது கவனம் திரும்பியுள்ளதால், மனைவியினால் கணவன் மறக்கப்பட்டுள்ளார், அன்புகூரப்படவில்லை மற்றும் கவனிக்கப்படவில்லை என்று கணவன் எண்ணத்தக்கதாக மனைவி நடந்துகொள்ளக்கூடாது. கணவனே இல்லத்தின் உரிமையுள்ள தலைவன் ஆவார். தேவ பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் கடமைகளாக இருக்கும் பொறுப்புகள் இருக்கின்றன மற்றும் இவற்றைப் புறக்கணிப்பது அல்லது அசட்டைப்பண்ணுவது என்பது கணக்கிடமுடியாத பாதகத்திற்குக் காரணமாகிடும். நாம் நம்மையே கர்த்தருக்கென்று கொடுத்துவிடும்போது, கணவனுடைய அல்லது மனைவியுடைய அல்லது பெற்றோருடைய அல்லது பிள்ளையினுடைய உண்மையான கடமைகளானது ஒருபோதும் இரத்து ஆகிறதில்லை. தேவனை மகிமைப்படுத்தும் வண்ணமாக “ஜீவனுள்ள நிருபங்களாக” நாம் காணப்படத்தக்கதாகவும், அவரது காரணகாரியங்கள் மீதோ, கிறிஸ்தவனென நம் சொந்த அறிக்கைகள் மீதோ நிந்தையை நாம் கொண்டுவராமல் இருக்கத்தக்கதாகவும், அர்ப்பணம்பண்ணியுள்ள ஒவ்வொரு பரிசுத்தவானும் – ஜெபம் மூலமாயும், திவ்விய வசனம் மற்றும் நம் ஜீவியங்களிலுள்ள திவ்விய வழிநடத்துதல்களை ஆராய்வதன் மூலமாயும் நம்மைக்குறித்தக் கர்த்தருடைய சித்தத்தினை அறிந்துகொள்ள நாடிடுவானாக.