R2388 – அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2388 (page 338)

அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ

AVOID IT, PASS NOT NEAR IT, TURN FROM IT

நீதிமொழிகள் 4:10-19

“என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.” (நீதிமொழிகள் 1:10)

சாலொமோன் தன் சொந்தப் போதனைகளின்படி நன்கு கைக்கொண்டு அல்லது கைக்கொள்ளாமல் நடந்திட்டாலும்சரி, அந்தப் போதனைகளானது அன்றும், இன்றும் ஆரோக்கியமான ஞானமென அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுகின்றது. சாலொமோனால் எழுதப்பட்டவைகளானது ஆவியின் ஏவுதலினால் வேதவாக்கியங்களில் இடம்பெறும் தீர்க்கத்தரிசனங்களுக்குச் சமமானவை என்று கருதப்படாவிட்டாலும், ஞானத்திற்கான சாலொமோனின் விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டருளி விண்ணப்பத்தை அருளினார் என்ற உண்மையும், நமது கர்த்தருடைய நாட்களில் இவரது எழுத்துக்களானது திருமறை நூல்களில் ஒரு பாகமாகக் கருதப்பட்டதும், புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களால் மறுக்கப்படாததும், இந்த எழுத்தாளர்களால் அவரது எழுத்துக்கள் மேற்கோள் இடப்பட்டிருப்பதுமான உண்மையும் – இந்த நீதிமொழிகளின் ஞானமானது பரத்திலிருந்துவரும் ஞானவகையாய் இருக்கின்றது என்று நமக்கு உறுதியளித்திட போதுமானவையாகும்.

நம்முடைய பாடத்தில் நாம் பார்க்கும் வேதப்பகுதியில் ஞானி தன்னை ஒரு குமாரனுக்கு நல் ஆலோசனைக்கொடுக்கும் தகப்பன் என அடையாளம் காட்டுகின்றார்; மேலும் தகப்பன்மார்கள் வாலிபர்களோடு அடிக்கடி சம்பாஷித்து, ஜீவியத்தில் கிடைக்கப்பெற்ற தங்கள் அனுபவங்களைக்குறித்துப் பகிர்ந்துகொள்வார்களானால், அது உலகத்திலுள்ள வாலிபர்கள் அனைவருக்கும் நலமாயிருக்கும். தகப்பன்மார்கள் தங்களால் உலகத்திற்குள் கொண்டுவரப்படுபவர்களின் விஷயத்தில், உணவு, உடை முதலான பூமிக்குரிய காரியங்கள் தொடர்பாகப் பொறுப்பு ஒன்றினைத் தாங்கள் பெற்றிருப்பதாக அடையாளம் கண்டுகொள்கின்றனர். ஆனாலும் தங்களுடைய பிள்ளைகளின் இருதயங்களையும், மனங்களையும், ஞானம், நீதி, நியாயம் மற்றும் சத்தியத்தின் பாதையில் வளர்ப்பது தொடர்புடைய விஷயத்தில் தகப்பன்மார்கள் மிக அதிகமான பொறுப்பையுடையவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா?

நம்முடைய நாட்களில் கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியிலுங்கூடப் பெருகிவரும் தீமைகளில் ஒன்று பெற்றோர்களின் ஒரு விதமான மனப்பான்மையாகக் காணப்படுகின்றது; குறிப்பாகத் தாங்கள் தகப்பன்மார்கள் ஆகிட்டபோது தாங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பொறுப்பினைத் தகப்பன்மார்கள் தள்ளிவிடுவதாகும். தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரைக் கொடுப்பதையும், கண்டிப்பதையும், வழிக்காட்டுவதையும், ஆலோசனை வழங்குவதையும் முற்றிலுமாக மற்றவர்களிடத்தில் – அதாவது சபை ஊழியக்காரரிடத்தில், ஞாயிறு பள்ளி ஆசிரியரிடத்தில் அல்லது தாய்மார்களிடத்தில் விட்டுவிடும் மனப்பான்மை கொண்டிருக்கின்றனர். முறையான பெற்றோருக்குரிய இயல்புணர்வுகளில் இவ்வளவுக்குக் குறைவுபட்டிருக்கும் தகப்பன்மார்களின் பிள்ளைகளானவர்கள், மற்றவர்களின், விசேஷமாகத் தங்கள் தாய்மார்களின் ஆலோசனை, அறிவுரை முதலானவைகளைப் பெற்றுக்கொள்வது நலமாய் இருக்கும்; எனினும் இவைகள் அனைத்தும் தகப்பன் கொடுக்கும் ஆலோசனைக்கு ஈடாகாது; அதாவது உண்மையான விதத்தில் தகப்பனாயிருந்து, தெய்வீக ஏற்பாட்டினால் தன் பராமரிப்பிற்குக் கீழ்க்காணப்படுபவர்களின் உயர்ந்த நன்மைக்கு அடுத்தவைகளைப் பார்த்துக்கொள்ளும் தகப்பனுடைய ஆலோசனைக்கு ஈடாகாது.

தேவனால் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்குப் பெற்றோர்கள் சார்பில் காணப்படும் இத்தகைய அஜாக்கிரதையினால் பிள்ளைகள் மாத்திரம் பாதிப்பிற்குள்ளாகுகிறதில்லை இக்காரியத்தின் விளைவுகள் பெற்றோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது – கவனிக்கப்படாத பிள்ளையானது தன் மேலான நன்மைக்கடுத்த காரியங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, இதற்கேற்ப பெற்றோரைக் குறைவாய் மதித்திடுவார்கள். இதன் விளைவாகக் குடும்பத்தில் பெற்றோருக்கு மரியாதை இருக்காது மற்றும் இதனால் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் இருக்காது; ஆகையால் குடும்பத்தில் ஒழுங்கின்மையே நிச்சயமாய் ஆளுகை செய்திடும் – சந்தோஷமற்றக் குடும்பமாகிடும். இம்மாதிரியான இல்லங்களில், குடும்பத்தினுடைய எந்த ஓர் அங்கத்தினனிடத்திலும் கிறிஸ்தவ இயல்புகளானது வேரூன்றுவதோ அல்லது வளர்ந்து செழிப்பதோ மிகவும் சிரமமான காரியமாகக் காணப்படும்; ஆனாலும் சிலசமயங்களில் இம்மாதிரியான இடங்களிலும்கூட வேரூன்றுகின்றது. அநேகம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய இருதயங்களாகிய தோட்டங்களில் சரியான கொள்கைகளை விதைத்திடத் தாங்கள் தவறிவிட்டதையும், தீய பண்புகளாகிய – அன்பின்மை, பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை, நன்றியின்மை முதலான களைகள் படர்ந்து அளவுக்கு மீறி தங்கள் பிள்ளைகளில் வளர தாங்கள் அனுமதித்துள்ளதையும் மிகவும் தாமதமாய் உணர்ந்துகொள்கின்றனர். பிள்ளையானவனைப் பயிற்றுவிக்க வேண்டிய விதத்தில் பயிற்றுவிப்பதற்கான அவசியத்தினைக்குறித்துக் கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு நாங்கள் வலியுறுத்துகின்றோம்; வார்த்தையிலும், மாதிரியிலும் தங்கள் பிள்ளைகளுக்குச் சமாதானத்தை, இரக்கத்தை, நன்றியுணர்வை, பெருந்தன்மையை, சாந்தத்தை, அன்பை அன்றாட ஜீவியத்தின் அவசியமான சட்டங்களென விளக்கிக் கொடுப்பதற்கும் கிறிஸ்தவ பெற்றோர்களை நாங்கள் வலியுறுத்துகின்றோம். இத்தகைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சரியான பாதையில் செல்வதற்கு நல்லதொரு துவக்கத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள்; ஜீவியம் ஆரம்பமாகுகையில் பிள்ளைகளுக்கு அவசியமானதாகவும், தங்களை ஜீவிகளாக உலகத்திற்குள் கொண்டுவந்தவர்களின் கரங்களிலிருந்து பிள்ளைகளும், சமுதாயமும் எதிர்ப்பார்ப்பதற்கு உரிமைக்கொண்டிருப்பதுமான ஒரு துவக்கத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள்.

ஞானமுள்ள தகப்பனின் நல் ஆலோசனைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலமாகக் கீழ்ப்படிதலுள்ள குமாரன் தன் நாட்களை நீடிக்கப்பண்ணுகிறவனாய் இருப்பான் என்று தகப்பனாகிய சாலொமோன் தெரிவிக்கின்றார். பிள்ளைகளுக்கான அன்பையும், பிள்ளைகளின் நலனுக்கான ஆழ்ந்த அக்கறையையும், பெற்றோரின் முழு ஜீவியமும் வெளிப்படுத்திட வேண்டும். பிள்ளையின் குழந்தைத்தனமான நம்பிக்கையானது பெற்றோர் சார்பிலான அன்பற்ற நடத்தைகளினாலும், பயமுறுத்துதல்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தினாலும் உடைந்து சிதறிடாததுவரையிலும், பிள்ளையானது இயல்பாகவே தன் பெற்றோர்களைக்குறித்து உயர்வாய் எண்ணம்கொண்டிருக்கும் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை மதித்திடும். பிள்ளைகள் பெரும்பாலும் பெரியவர்கள் போலவே, சிலசமயம் இவர்களைக் காட்டிலும் அதிகமாகவே சரியாய்ச் சிந்திக்கிறவர்களாய் இருப்பார்கள்; பிள்ளைகள் பின்வருமாறு, அதாவது (1) பெற்றோரின் அன்பையும், தங்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களில் பெற்றோரின் அக்கறையையும் தாங்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், (2) தன் வாழ்க்கையினைச் சரியாய்த் துவக்கத்தக்கதாகப் பெற்றோரின் ஜீவித அனுபவமானது தங்களுக்கு விலையேறப்பெற்ற ஒன்றாய்க் காணப்படுகின்றது என்றுமுள்ள சான்றுகளின் அடிப்படையில் பிள்ளைகள் சிந்திக்கின்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படியாகப் பெற்றோரின் அறிவுரையினால் வழிகாட்டப்படும், உதவப்படும் பிள்ளையானது, ஜீவியத்தின் அநேகமான சிரமங்கள், பிரச்சனைகள், படுகுழிகளினின்று தப்புவிக்கப்படுவார்கள் மற்றும் அநேகம் நோய்கள், [R2388 : page 339] சரீரப்பிரகாரமான பெலவீனங்கள் முதலியவைகளிலிருந்து தப்புவித்து, நீண்ட ஆயூட்காலம் பெறுவார்களே! மேலும் பிள்ளையின்மீது இப்படி அக்கறைக்கொண்டவர்களாகக் காணப்பட்டு, தன் சொந்த அனுபவங்களின் புத்தகத்திலிருந்து பிள்ளைக்குப் பாடம் கற்பிக்க நாடுகின்ற பெற்றோர் தன் ஜீவியத்தில் ஏற்பட்ட வெற்றிகள், தோல்விகள் மற்றும் தவறுகள் குறித்தும், இவைகளுக்கான காரணங்கள் குறித்தும் திரும்பிப்பார்க்கையில், இதனால் நன்மை அடைகின்றவனாய் இருப்பான். தகப்பனெனத் தன் கடமையினை நிறைவேற்றிடும் யார் ஒருவரும் தனக்கும் சரி, தன் பிள்ளைக்கும் சரி ஆசீர்வாதமாய் இருப்பான் மற்றும் தன் சொந்த ஆயுள்காலங்களையும், தன் பிள்ளையின் ஆயுள்காலங்களையும் கூட்டிக்கொள்கின்றவனாய் இருப்பான்.

நம்முடைய பாடத்தினுடைய 11-ஆம் வசனத்தின் வார்த்தைகளைத் தனது மரணப்படுக்கையில் தன் பிள்ளையை நோக்கி: “ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே (என்னுடைய முன்மாதிரியின் மூலமாய்) உன்னை நடத்தினேன்” என்று உண்மையாய்க் கூறமுடிகின்றதான எந்த ஒரு பெற்றோரும் எத்துணைப் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; மேலும் அப்பிள்ளைகளும் எத்துணைப் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; இப்பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டிலும் ஜீவியத்தின் பாதையில் சறுக்கிவிழுவதற்கு எத்தனை குறைவான வாய்ப்புகள் உடையவர்களாய் இருப்பார்கள்; இவர்கள் பரலோக பிதாவின் சத்தத்தைக் கேட்பதற்கும், அதற்குச் செவியைச் சாய்ப்பதற்கும், அவர் வழிகளில் நடப்பதற்கும், எவ்வளவுக்கு அதிகமாய் ஆயத்தமாயும் காணப்படுவார்கள்.