R4837 – தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4837 (page 186)

தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா

A GODLY YOUNG KING

2 நாளாகமம் 34:1-13

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” (பிரசங்கி 12:1)

இராஜாவாகிய மனாசே, ஆமோன் என்னும் பொல்லாத குமாரனை உடையவனாய் இருந்தார்; ஆமோன் இரண்டு வருஷங்கள் மாத்திரமே அரசாண்டு, தன் சொந்த அரண்மனையிலுள்ள தன் ஊழியர்களால் கொல்லப்பட்டார். இவரது குமாரனும், நம்முடைய இப்பாடத்தின் மையமுமான யோசியா, தன்னுடைய எட்டாவது வயதில் இராஜாவானார். இவரது பதினாறாம் வயதில் இவர் இருதயம் சர்வவல்லமையுள்ள தேவனைத் தேடவும், அவருக்கென்று சேவிக்க விரும்பவும் துவங்கினது. இவரது இருபதாம் வயதில் மதத்தின் விஷயத்திலுள்ள இவரது காரியங்கள் ஆழமாகவும், உறுதியாகவும் இருந்தது மற்றும் இராஜாவாக இவர் தன் கையில் பெற்றிருந்த அதிகாரத்தினால், சீர்த்திருத்தத்தின் வேலையினைத் துவங்கிட இவர் துணிந்தார். விக்கிரகங்களும், அவைகளின் கோவில்களும், அவைகள் தொழுதுகொள்ளப்படுவதற்கான மேடைகளும் அழிக்கப்பட்டன. முன்பே சொல்லப்பட்டது போன்று இன்னோம் பள்ளத்தாக்கானது அவமதிக்கப்பட்டு, எருசலேமின் குப்பைகளைப் போடும் இடமாக்கப்பட்டது.

கர்த்தருடைய ஆலயமானது பழுதுபார்க்கப்பட்டது மற்றும் விக்கிரக அசுசிகள் அனைத்தினின்றும் அது சுத்திகரிக்கப்பட்டது மற்றும் அங்கு மீண்டுமாகச் சர்வவல்லவரைத் துதிப்பதும், தொழுதுகொள்வதும் கொண்டுவரப்பட்டது. இதற்கும்மேலாக இராஜா தன் செல்வாக்கினைப் பயன்படுத்தி, ஒரு காலத்தில் தன்னுடைய இராஜ்ய பாரத்தின் வடக்குப் பகுதியின் இரண்டு கோத்திரங்களின் இடமாகக் காணப்பட்ட இடத்திலுள்ள விக்கிரகங்களையும் அழித்துப்போட்டுவிட்டார்.

இளமைப் பருவத்துக்குரிய இன்பக் களியாட்டங்களில் மூழ்கிட வேண்டும் என்று எண்ணுவது தவறு

“உன் வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை” எனும் நம்முடைய ஆதார வசனத்தில் எத்தகைய ஓர் ஆற்றல் காணப்படுகின்றது! தங்கள் பிள்ளைகள் நீதியைப் புரிந்துகொண்டு, அதன் ஊழியர்களாகிட ஆயத்தமாகிடுவதற்கு முன்னதாக, “இளமைப் பருவத்துக்குரிய இன்பக் களியாட்டங்களில் மூழ்கும்” அனுபவம் வேண்டும் என்று சில பெற்றோர்கள் எண்ணிடுவது எத்தனை மாபெரும் தவறாய் இருக்கின்றது! இவர்களின் இந்த எண்ணங்களானது வாலிப ஆண்கள் மற்றும் [R4838 : page 186] பெண்களின் மனதிலும்கூடக் காணப்படுகின்றன; அபூர்வமாகவே பிள்ளைகளிடத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எதிர்ப்பார்த்திடுவதற்கும் அதிகமாய், உயர்கொள்கைகளின் அடிப்படையில் ஜீவித்திடுவதற்குப் பிள்ளைகள் நாடுகின்றனர். பரிசுத்தவான்களாய்க் காணப்படும் சில தாய்மார்கள் தாங்கள்கூட நடக்கமாட்டாத உலகத்தினுடைய வழிகளுக்குள், வேண்டும் என்று இல்லாமலேயே தங்கள் பிள்ளைகளை அறிமுகப்படுத்துவதன் வாயிலாய்த் தங்கள் பிள்ளைகளின் பாதங்களுக்குக் கண்ணி வைத்துவிட்டதை நாங்கள் அறிவோம். இவர்களின் வார்த்தைகள் பின்வருமாறு காணப்பட்டது: “இந்தக் குழந்தைகள் மீது நான் சிலுவையினுடைய பாரப்பளுவினைச் சுமத்திவிடக்கூடாது; அவர்கள் பரிசுத்தவான்களாகிட நான் எதிர்ப்பார்த்திடக்கூடாது; ஒருவேளை எப்போதேனும் பிள்ளைகள் தேவனுக்கு உண்மையுள்ள, அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்தவான்களாவார்களானால் . . . அப்போது அவர்கள் “இடுக்கமான வழியினுடைய” சோதனைகளை அறிந்துகொள்வார்கள் மற்றும் அப்போது அவற்றை நிறைய அனுபவிக்கட்டும்” என்பதேயாகும்.

அந்தோ பரிதாபம்! இத்தகைய கிறிஸ்தவ தாய்மார்கள் சூழ்நிலையினைக் கிரகித்திட தவறினவர்களாய் இருந்துள்ளனர். தற்காலத்தில் “இடுக்கமான வழியினைத் தவிர” மற்றபடி உலகத்தில் உண்மையான சந்தோஷம் என்ற எதுவுமில்லை என்பதை இத்தாய்மார்கள் உணர்ந்துகொள்ளத் தவறியுள்ளனர். சுயத்தைத் திருப்திப்படுத்திடுவதற்கான, பெருமைக்கான, இச்சைக்கான, பாவத்திற்கான, சுயநலத்திற்கான “விசாலமான பாதை” தூரத்திலிருந்து பார்க்கையில் உண்மையாகவே அருமையான காட்சியாகவேதான் இருக்கும்; ஆனால் அக்காட்சியானது, மாயத்தோற்றமே / கானல் நீரேயாகும் – அது ஒருபோதும் சென்று அடையப்பட முடியாது – அது ஒரு மாயத்தோற்றம். சுயநலம், பெருமை முதலானவற்றின் விசாலமான வழியில் கூட்டமாய் நெருக்கிக்கொண்டு செல்லும் இலட்சக்கணக்கானோர் அனைவருமே இன்பத்திற்குத் தலைவணங்கி, அதைத் தங்கள் முழுப்பலத்தில் நாடிக்கொண்டிருக்கின்றனர்; ஆனால் இவ்வழியில் போய்க்கொண்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர்தான் இன்பத்தைக் கண்டடைந்துள்ளனர்? இவர்கள் இன்பத்தைத் தேடுபவர்கள் மாத்திரமே, மாறாக இன்பத்தைக் கண்டடைபவர்களல்ல என்று நாங்கள் கருதுகின்றோம்; சுயத்தைப் பலிசெலுத்திடும் இடுக்கமான வழியில்தான் – மாபெரும் போதகரின் அடிச்சுவடுகளில்தான் – அவரைப் பின்பற்றும்படிக்குச் சிலுவையை எடுத்துச்செல்வதில்தான் – அவர் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தது போன்று, நாம் ஜீவனை ஒப்புக்கொடுப்பதில்தான் – “அவரோடு ஆளுகை செய்யத்தக்கதாக, அவரோடுகூடப் பாடுபடுவதில்தான்” – “அவரோடுகூடப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவரோடுகூட மரிப்பதில்தான்” – உலகத்தில் அந்த ஒரே உண்மையான இன்பமும், மெய்யான சந்தோஷமும் கண்டடையப்பட முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

விசாலமான வழியில் பிரவேசித்துள்ளவர்களில் வெகு சிலரே இடுக்கமான வழிக்குத் திரும்புகின்றனர். விசாலமான வழி என்பது சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியான ஒன்று என்ற தவறான அபிப்பிராயத்தினைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களும், நண்பர்களும், கிறிஸ்தவர்களும் கொடுத்திருக்கின்றனர். ஆனால் விசாலமான வழியோ, சந்தோஷமானதல்ல என்று பிள்ளைகள் கண்டுபிடிக்கையில், அவர்கள் இயல்பாகவே இடுக்கமான வழியும்கூட மிகவும் மகிழ்ச்சியற்றதாக இருக்கக்கூடும் மற்றும் அதிகம் விரும்பத்தகாததாக இருக்கக்கூடும் என்று எண்ணிவிடுகின்றனர்.

ஒவ்வொரு குழந்தையினுடைய மனதிலும் ஓரளவுக்கு எளிமையும், நேர்மையும் காணப்படும்

விசாலமான வழியில் நடந்த பிற்பாடு, இடுக்கமான வழியினைக் கண்டடைந்த சிலர்: “ஓ! கர்த்தருடைய வழியினை, சத்தியத்தின், சந்தோஷத்தின், சமாதானத்தின் மற்றும் மகிழ்ச்சியின் வழியினை, ஏன் நான் ஆரம்பக் காலங்களிலேயே கண்டுகொள்ளவில்லை!” என்று புலம்பியுள்ளனர்.

அனைவருமே சீரழிந்த நிலையில்தான் பிறந்திருப்பினும், ஒவ்வொரு குழந்தையினுடைய மனதிலும் ஓரளவுக்கு எளிமையும், நேர்மையும் காணப்படவே செய்கின்றது. இந்தக் கொள்கையே ஆசிரியர்களாலும், பொதுவான உதவியாளர்களினாலும் பயன்படுத்தப்பட வேண்டும்; ஒருவேளை குழந்தைச் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டால், குழந்தையானவன் மிகவும் சீக்கிரமாக தன் சிருஷ்டிகருடன் ஓர் உறவினையும், இணக்கத்தையும் அடைந்துவிடுவான்; ஆசிரியர் வேண்டும் என்ற அவசியம் எப்போதும் இருப்பதில்லை. சிலசமயங்களில் தேவனுடைய வழிநடத்துதலின்படி, உன்னதத்திலிருந்து வரும் செய்தியானது இருதயத்தைச் சென்றடைந்து, எதிர்ப்பு ஏதுமின்றி இருதயத்தினை இழுத்துவிடுகின்றதாய் இருக்கின்றது. பிள்ளையினால் ஜீவியத்தின் மாயம் புரிந்து கொள்ளப்படுகின்றது – பரத்திலிருந்து வரும் ஞானத்தினுடைய அவசியம் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றது மற்றும் அநேகமாக ஊழியக்காரன் வாயிலாகவோ, அநேகமாகப் பெற்றோருடைய அறிவுரையின் வாயிலாகவோ, அநேகமாக ஒரு நண்பனுடைய ஆலோசனைகள் வாயிலாகவோ, அநேகமாக ஒரு கைப்பிரதி அல்லது புத்தகம் வாயிலாகவோ வாலிபனுடைய இருதயத்திற்கு ஞானத்தின் பாதைச் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது மற்றும் கர்த்தரிடத்திற்கும், இடுக்கமான வழியினிடத்திற்கும் சுட்டிக்காண்பிக்கப்படுவான்.

தெய்வீக வழிக்காட்டுதலின்கீழ், சித்தமே நம்முடைய எதிர்க்காலத்திற்கான உண்மையான வழிக்காட்டியாக இருக்கின்றது என்றும், சித்தத்தைச் சரியாய் வழிக்காட்டப்பட்ட நிலையிலும், சித்தத்தை ஸ்திரமாகவும் பெற்றிருப்பதே மிக முக்கியமான காரியம் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். பாவம் மற்றும் சுயநலத்தின் விசாலமான பாதையிலும் மற்றும் இன்று தேவனிடமிருந்து தூர நிலையிலும் உள்ள அநேகரில் சிலர், தன் ஜீவியத்தின் நடத்தைக்கும், நிலைமைக்கும் முற்றிலும் முரண்படும் அநேகம் நல் இயல்புகளை, தன் மனதினுடைய அமைப்பில் பெற்றவர்களாய் இருப்பார்கள்; ஆனால் வழிநடத்துவதற்கும், வழிக்காட்டுவதற்கும் சித்தம் இல்லாமல், அவன் கீழ்நோக்கிப் போகிறவனாகவே இருப்பான். இதுபோலவே முன்னோர் வழிவந்த சரீர, மன, ஒழுக்க ரீதியிலான அநேகம் பெலவீனங்கள் காரணமாய்த் தொடர்ந்து விசாலமான வழியில் இழுக்கப்படும் நிலையில் சிலர் இடுக்கமான வழியில் காணப்படுவர்; ஆனாலும் இவர்கள் கர்த்தரினால் இடுக்கமான வழியில் தக்கவைக்கப்படுவர் – அதுவும் மாம்சத்தினுடைய சுயசித்தத்தினால் இல்லாமல், மாறாக புதிதாக்கப்பட்ட சித்தத்தினுடைய வல்லமையினால் ஆகும். அப்படியானால் வாலிபப் பிராயத்திலேயே நம் சித்தங்களைச் சரியாய் வழிக்காட்டப்பெற்றும், ஸ்திரப்படுத்தி வைப்பதும் எத்துணை முக்கியமானதாக இருக்கின்றது! இப்படிச் செய்வோமானால் தற்கால ஜீவியத்தில் நாம் எத்துணை மகா ஆசீர்வாதங்களை அனுபவிப்பவர்களாய் இருப்போம் மற்றும் இதனால் எதிர்க்கால ஜீவியத்திற்கென்று எத்தனை அதிகமாக ஆயத்தங்களை நாம் பெற்றவர்களாய் இருப்போம்!

யோசியா இராஜா குறித்த இன்றைய பாடமானது, ஒவ்வொரு வாலிபனும் எடுத்துக்கொள்ள வேண்டிய சரியான பாதைக்கான உதாரணமாகும். பொல்லாத நாட்களும், தீமையான அனுபவங்களும் வருவதற்கு முன்னதாக, விரட்டியடிப்பதற்கு மீதமுள்ள ஜீவிதக் காலம்கூடப் போதாமல் போகுமளவுக்கு மிக அதிகமான தீமைகளை ஒருவன் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, வாலிப நாட்களில் இருதயமானது முதலாவதாகக் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அப்போது யோசியா போன்று நீதிக்கு ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகளைக் காலமானது நமக்குக் கொண்டுவருகையில், சரியானவற்றிற்கு ஆதரவாய் இருப்பதிலும், தவற்றை எதிர்ப்பதிலும் முழு இருதயத்தோடு இருப்போமாக மற்றும் “தேவனுக்கே முதலிடம்” எனும் குறிக்கோளுடன் எல்லாவற்றிலும் நமது தேவனுக்குத் துதிகள் சாற்றிடுவோமாக.