R4959 (page 33)
விவாகம் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு, விவாகம் குறித்துக் கீழ் இடம்பெறும் கடிதமானது பிரயோஜனமாய் இருக்கும் என்று நம்பப்படுவதினால், இக்கடிதத்தினை வெளியிடுவதற்கு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்; இதோ பின்வருமாறு:-
அன்புக்குரிய சகோதரி:
சகோதரியே நீங்கள் என்னிடம் முன்புபோல் நடந்துகொள்ளாததினாலும், வேண்டுமென்றே எனக்கு மரியாதைக் கொடுப்பதைத் தவிர்த்துவிட்டு என் அருகே கடந்துபோவதினாலும், நான் என் நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டதன் காரணமாக அல்லது நான் சொன்ன ஏதோ ஒன்றின் காரணமாக, ஏதோ சில அன்பற்ற உணர்வுகளைத் தாங்கள் என்னிடத்தில் கொண்டிருக்கின்றீர்கள் என்று நான் நினைக்கின்றேன். உங்களுக்கு நான் ஏதேனும் தவறு செய்திருப்பேனாகில், உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் மீது என்னால் அனுதாபங்கொள்ள முடிகின்றது; ஏனெனில் நானும்கூட விழுந்துபோன மாம்சத்துடன் போராடிக்கொண்டுதான் இருக்கின்றேன் மற்றும் அறுவடைக் காலத்தினுடைய இந்த ஒரு கடைசி காலக்கட்டத்தில் விவாகம் பற்றின காரியத்தினை நான் எவ்வாறு பார்க்கின்றேன் மற்றும் எவ்வாறு கருதுகின்றேன் என்பதையும், கர்த்தருடைய கிருபையினால் எப்படி நான் பெலன் அடைகின்றேன் என்பதையும் நான் உங்களுக்கு இங்கு எழுதுகின்றேன்.
இந்தக் காரியமானது நம்மால் புதிய மனதினுடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே பார்க்கப்பட வேண்டும் மற்றும் அவ்வாறு கண்ணோக்கும்போது மாம்சத்தின் அடிப்படையில் மாம்சமானது என் மீது அதிகாரம் செலுத்தாதபடிக்கு அடக்கி வைத்துக்கொள்வதற்கு நான் பெரிதும் உதவப்படுகின்றேன்.
நம்முடையதும், மற்றவர்களுடையதுமான ஆவிக்குரிய நலன்களை எப்போதுமே நம்மனதில் பிரத்தியேகமாகத் தொடர்ந்து நாம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் நான் என்னிடமே கேட்டுக்கொள்வதாவது:- “மாம்சத்தில் ஒன்றிணைவதன் மூலம் எப்படி ஆவிக்குரிய விஷயத்தில் என்னால் ஒரு சகோதரிக்கு உதவிட முடியும்? மேலும் ஒன்றிணைவதன் மூலம் பரத்திற்குரியவைகள் மீது மனதினை வைத்திடும் விஷயத்தில் எப்படிச் சகோதரியோ அல்லது நானோ உதவப்பட முடியும்? சகோதரியின் ஐக்கியத்தினையா நான் விரும்புகின்றேன்? அப்படியானால், விவாகம் பண்ணாமலேயே அத்தகைய ஐக்கியத்தினை என்னால் பெற்றுக்கொள்ள முடியாதா? நேரடியாக இல்லை என்றாலும் கடிதங்கள் எழுதுவதன் மூலம் சகோதரிக்கு ஆவிக்குரியவற்றில் உதவவும், சகோதரியை ஊக்குவிக்கவும், இப்படியாகக் குணலட்சணம் வளர்த்திடவும் என்னால் முடியாதா?” என்பதாகும்.
சுயநலமான ஆசைகளாய்க் காணப்படும் விழுந்துபோன மாம்சத்தினுடைய மனப்பான்மைகளை நாம் சிலுவையில் அறைந்திட வேண்டும் மற்றும் சரீரத்தைக் கீழ்ப்படித்திட வேண்டுமே ஒழிய, அதற்கு இணங்கிடக்கூடாது; ஏனெனில் நாம் புதிய ஜீவியத்தில் நடந்துகொண்டிருக்கின்றோம் மற்றும் மாம்சத்தின்படியாக இல்லாமல், ஆவியின்படி சகோதரர்களை அறிகிறவர்களாக இருக்கின்றோம் – “ஆணென்றும் பெண்ணென்றுமில்லை, நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” நம்முடைய அன்பு, தூய்மையானதாக, பரிசுத்தமானதாக, சகோதர சிநேகமானதாக இருப்பதாக.
“பிதாவினிடத்தில் ஒரு வாக்குறுதி” என்பது எனக்கு மிகவும் உதவியாய் இருக்கின்றது; அதிலும் விசேஷமாக “அழிவுக்குரிய என் சரீரத்தில் உம் சித்தம் நிறைவேற்றப்படுவதாக” எனும் வாக்கியம் மிகவும் உதவியாய் இருக்கின்றது. கர்த்தருடைய சித்தம் என்ன? ஏன் இந்தப் பாலின வித்தியாசம் கொடுக்கப்பட்டுள்ளது? அது பூமியை நிரப்புவதற்காகவும், ஜனத்தொகை உண்டாகுவதற்காகவும் என்று நான் எண்ணுகின்றேன் மற்றும் இது நிறைவேறின பின்பு, பாலின வேறுபாடு இருக்காது என்று காண்கின்றோம்.
தேவதூதர்கள் மத்தியில் பாலின வேறுபாடு இல்லை என்றும், இப்படித்தான் மனுக்குலத்தின் எதிர்க்கால நிலைமைக்கூடக் காணப்படும் என்றும் உணர்கையில், “நம்முடைய ஓட்டத்தின் நிறைவு காலங்களில் நான் விவாகம்பண்ணிட வேண்டுமா அல்லது பரத்திற்குரியவைகள் மீது என் மனதை வைத்துப் புதிய மனதை வளர்த்துவதன் மூலமாக மாத்திரமில்லாமல், என் மாம்ச சரீரத்தினுடைய ஆசைகளைக் கீழ்ப்படுத்திப் போடுவதன் மூலமாகவும் நமது எதிர்க்கால நிலைமைக்கு நேரான குணலட்சணங்களை என்னில் நான் இப்பொழுது வளர்த்தினால் நான் கர்த்தருக்கு மிகவும் பிரியமுள்ளவனாய் இருப்பேனா?” என்று என்னிடமே நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த மாம்சீக சரீரங்களானது, திரைக்கு இப்பக்கத்தில் நாம் இருக்கையில் நமக்கு ஊழியம்புரிய வேண்டியதாயினும், அவைகள் பாவத்திற்கும், விழுந்துபோன தன்மைகளுக்குமென்று நமக்கு ஊழியம்புரியும்படிக்குப் பயன்படுத்தப்படக்கூடாது.
விவாகம்பண்ணுவதன் மூலம் நாம் பாவம் ஏதும் செய்கிறதில்லை என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார்; விவாகம் என்பது பிதாவின் சித்தம் செய்யும் கடமையையும், நம்முடைய சரீரத்தின் செயல்பாடுகளை முறையாய்க் காத்துக்கொள்வதையும் அல்லது விலகியிருக்கும் காரியத்தையும்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது மற்றும் இது இந்த அனுபவங்களுக்குள் கடந்து போயுள்ளவர்களால் சாட்சி பகிரப்பட்டுள்ளது போன்று விழுந்துபோன மற்றும் சீரழிந்துபோன மாம்சத்தின் காரணமாய்ச் செய்யப்படமுடியாது.
பெலனையும், கிருபையையும் கேட்டுக்கொள்வதும் மற்றும் “அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையில் நிலைத்திருக்கக்கடவன்” என்று பரிசுத்த பவுல் அடிகளால் நமக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைக்கு உண்மையாய் இருப்பதும் சிறந்த வழியாகும்; மேலும் இப்படிச் செய்வதன் மூலம் நிச்சயமாய் நாம் ஓர் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வோம்; அநேகமாய் நாம் சிந்திப்பதைக் காட்டிலும் மாபெரும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்பவர்களாய் இருப்போம்; இப்படிச் செய்வது நமக்குக் கிரீடத்தை வென்று தரக்கூடும் மற்றும் இப்படிச் செய்வதைப் புறக்கணிப்பது என்பது கிரீடத்தை அடைவதிலிருந்து நம்மைத் தவிர்க்கவும் செய்திடலாம் மற்றும் இதனால் திரள்கூட்டத்தினுடைய அங்கத்தினர்களாகவும் ஒருவேளை ஆகக்கூடும்.
திருமணமாகாதவர் தன்னை அர்ப்பணிக்கையில், திருமணமானவரால் முடிகிறதைக் காட்டிலும் அதிகமான நேரத்தினைக் கர்த்தருக்குக் கொடுக்க ஒப்புக்கொள்கின்றார். இதை உணர்கையில் [R4959 : page 34] கர்த்தருக்கு நான் கொடுத்துவிட்ட நேரத்தில் கொஞ்சம் நேரத்தைத் திரும்ப எடுத்து, வேறொருவருக்குக் கொடுப்பது எனக்குச் சரியான காரியமாய் இருக்குமா? அப்படி நான் செய்தால், நான் கர்த்தருக்குப் பிரியமானவனாக இருப்பேனா? என்று என்னிடமே கேட்டுக்கொள்கின்றேன்.
திருமணத்தில் ஒன்றிணைந்ததன் மூலம் ஆவிக்குரிய காரியத்தில் நன்மை அடைந்திட்ட ஒரு சகோதரன் அல்லது சகோதரி பற்றி நான் அறிந்துள்ளேனா? அநேகமாகச் சொற்பமானவர்களே காணப்படுவார்கள்; ஆனாலும் பரிசுத்த பவுல் அடிகளார் கூறியுள்ளது போன்று, “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்துக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்” (1 கொரிந்தியர் 7:32,33).
“அநேகமாக என்னைப் பூரணமாக்கிடுவதற்கு மாம்ச்த்தில் எனக்கு அத்தகைய அனுபவங்களும், அத்தகைய பிரச்சனைகளும் அவசியப்படலாம்” என்ற எண்ணம் எனக்குள் தோன்றலாம். இத்தகைய எண்ணங்களுக்கு நான் எனக்கே கூறிக்கொள்ளும் பதிலானது: “அப்படி அவசியம் என்றால், எனக்குத் துன்பங்களை நானே கொடுத்துக்கொள்வதன் மூலம் கர்த்தருக்கு நான் உதவிச் செய்யாமலேயே, கர்த்தர் அவைகளை எனக்குக் கொடுக்கத்தக்கதாக, காரியங்களை நான் கர்த்தர் கரங்களில் விட்டுவிட்டுவேன்; ஏனெனில் எனக்கு என்ன தேவை என்பதை அவர் நன்கு அறிவார்; மேலும் “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் நல்லது” என்பதை நினைவுகூர்ந்து, நான் அவரைப் பிரியப்படுத்திட நாடிடுவேன்” என்பதேயாகும்.
“நம்முடைய பாதங்களுக்கு வழியைச் செவ்வையாக்கும்படிக்கு” நமக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது மற்றும் குறைவான பாரப்பளு இருக்கையில் எப்படிச் சுபாவ மனுஷனால் நன்கு ஓடிட முடியுமோ, அப்படியே ஆவிக்குரிய மனுஷனுடைய விஷயத்திலும் காணப்படும். நான் ஓட வேண்டியிருக்க என்னை நானே தடைப்பண்ணிடும் விதத்தில் ஏன் நான் என்னுடைய வழியில் கூடுதல் கற்களையும், தடைக்கற்களையும் போட்டுக்கொள்ள வேண்டும்?
என்னுடைய தனிப்பட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பவனாக, என்னிடமே நான் கேட்டுக்கொள்கிறதாவது: “இந்தத் திருமண ஒண்றிணைதலானது இருவரையும் வேலைக்குள் பிரவேசிக்கப்பண்ணுமா? அல்லது இப்பொழுதோ, எதிர்க்காலத்திலோ நானோ அல்லது சகோதரியோ அல்லது இருவருமே வேலைக்குள் பிரவேசியாமல் தடைப்பண்ணப்படும் விதத்தில் இருவரையுமே வேலையினின்று வெளியே எடுத்திடுமா?” என்பதேயாகும்.
தற்போது என்னைச் சார்ந்திருப்பவர்கள் விஷயத்திலுள்ள கடமைகளினால் நான் கட்டப்பட்டு, தொகுதி விநியோகிக்கும் வேலைக்குள் பிரவேசிக்க முடியாமல் இருக்கையில், நான் என்னிடமே கேட்டுக்கொள்கிறதாவது: “என்னுடைய பொறுப்புகளினுடைய பாரப்பளுவினை நான் இன்னும் அதிகமாக்கிட வேண்டுமா மற்றும் ஒரு சகோதரியின் மீதும்கூடப் பொறுப்பினைக் கட்டிக்கொண்டு, இப்போதோ அல்லது எதிர்க்காலத்திலோ அவள் ஊழியம்புரிவதைத் தடைப்பண்ணி, அவளது அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தினை என் மாம்ச சரீரத்திற்குச் சேவைச் செய்வதற்கு அவளை நான் ஆக்கிவிட வேண்டுமா?” என்பதேயாகும். “நீங்கள் கிரயத்துக்குக்கொள்ளப்பட்டீர்கள் மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்” (1 கொரிந்தியர் 7:23).
ஒருவேளை திருமணம் பண்ணி, ஆனால் பொறுப்புகளினால் கட்டுப்படுத்தப்பட்டவனாக இராமல், கர்த்தர் என்னைப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டவனாக இருக்க சித்தம் கொண்டிருப்பாரானால், இந்தக் கண்ணோட்டத்தின்படி நான் என்னிடமே கேட்டுக்கொள்ள வேண்டியதாவது: “எங்கள் இருவருடைய அன்றாட தேவைகளைப் பூர்த்திச்செய்திடும் பண வசதி என்னிடத்தில் உள்ளதா அல்லது ஒருவேளை சகோதரியால் உதவிசெய்ய முடியாமல் போனால், சகோதரியின் உதவி இல்லாமலேயே வேலை செய்து என்னால் போதிய அளவு சம்பாதிக்க முடியுமா அல்லது எனக்கு வேலை இல்லாமல் போனால், சகோதரியால் தேவ வேலையைத் தொடர முடியுமா அல்லது எங்கள் இருவராலும் இவைகள் அனைத்தையும் சமாளிக்க முடியுமா அல்லது நாங்கள் இருவருமே தேவ ஊழியத்தினின்று வெளியேறும் அவசியம் ஏற்பட்டு, மற்றவர்களைப்போன்று நானும் வேறு ஏதேனும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்து, இதன் நிமித்தம் நான் ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் இழப்பது மாத்திரமல்லாமல், சகோதரியும் இழந்துபோக நான் காரணமாகிடுவேனா?”
நாங்கள் இருவருமே சோதனையினுடைய இந்தக் கடைசி தருணத்தின்போது நிலைநிற்போம் என்பதை நான் எப்படி அறிவேன்? ஒரே ஒரு தருணத்தின்போதே விவாகத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தப்பறையினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில்… ஜீவித துணை வீழ்ந்துபோகையில், மற்றத் துணைக் கர்த்தருக்குத் தொடர்ந்து உண்மையாய்க் காணப்பட்டதை நான் அறிந்திருக்கின்றேன்; மற்றபடியுள்ள எல்லாச் சந்தர்ப்பங்களிலும், நான் அறிந்திருக்கிறவரை திருமணமாகியுள்ள இருவருமே வீழ்ந்துபோயுள்ளனர். இதன் காரணமாக இப்படி முயற்சி எடுத்து என்னுடைய அல்லது ஒரு சகோதரியினுடைய கிறிஸ்தவ நலனுக்கடுத்த காரியங்களை அபாயத்திற்குள்ளாக்குவது தகுதியான காரியமென இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது ஒருவேளை என் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் [R4960 : page 34] நான் நிறைவேற்றுவதிலிருந்து என்னைத் தடைப்பண்ணிடுவதற்கான வாய்ப்பாக இருக்குமானால், கர்த்தருடைய கிருபை மற்றும் பலத்தினால், “இதைச் செய்யாதே” என்று நான் என்னிடமே கூறிக்கொள்வேன்.
இது விஷயங்களில் அதிகமான சாக்குப்போக்குகளை நமக்குச் சாத்தான் கொடுத்திடுவதற்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கின்றான் என்பதை நாம் அறிவோம் மற்றும் ஒருவேளை சாக்குப்போக்குகளைத் தேடிக்கொண்டிருப்போமானால், நாம் ஏற்றுக்கொள்ளும் வண்ணமான சாக்குப்போக்குகளைச் (ஒரு சகோதரன் அல்லது சகோதரி மூலமாகக்கூட) சாத்தான் நமக்குக் கொடுக்க முடிகிறவனாய் இருக்கின்றான்.
“சில விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை நாம் நாடிக்கொண்டிருந்து, அவ்வாலோசனைகளை, சிறுமந்தையினருக்கு ஆலோசனைக்கொடுக்க முடியாத சிலரிடமிருந்து – அதாவது திரள்கூட்டத்தாரின் அங்கத்தினர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்போம்” என்று ஒரு சகோதரன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு எண்ணங்களையும், வார்த்தைகளையும், கிரியைகளையும் கூர்ந்து ஆராய்ந்துபார்ப்பதன் வாயிலாக, சுயநலமான எண்ணங்கள் நம்மில் இடங்கொள்ளக்கூடாது என்று பார்க்கின்றேன் மற்றும் தவறான எண்ணங்களுக்கு நாம் ஒருவேளை இடம்கொடுக்கவில்லையெனில், தவறான செயல்களும் நடைப்பெறாது.
காலம் வெகு குறைவாய் உள்ளது! வருஷங்களை எண்ணிக்கொண்டிருக்காமல், வாரங்களையும், நாட்களையும் வைத்து நாம் காலங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம்; சிறு மந்தையினுடைய கடைசி அங்கத்தினன் இரண்டாம் திரையைக் கடந்து செல்வதற்குச் சில காலங்களே உள்ளன மற்றும் அதிலும் சில காலங்கள் கடந்துபோயுள்ளது.
இந்த வார்த்தைகள் புதிய மனதிற்கோ அல்லது அவர் சித்தத்திற்கோ முழு இசைவுடன் இல்லாதிருந்தால், இவ்வார்த்தைகளைக் கர்த்தர் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிடுவாராக என்று நான் ஜெபம்பண்ணுகின்றேன்.
நான் ஜெயங்கொள்பவனாகத்தக்கதாக, ஆம்! முற்றிலும் ஜெயங்கொள்பவனாகத்தக்கதாக அருமையான சகோதரியே எனக்காக ஜெபம்பண்ணிடுங்கள்.
மிகுந்த கிறிஸ்தவ அன்புடன் இடுக்கமான வழியில் உங்களோடுகூட ஓடுபவனுமாகிய உங்கள் சகோதரன் ————————.
******
மேல்இடம்பெறும் கடிதத்தில் நல்வாதங்கள் காணப்படுகின்றபோதிலும், அப்போஸ்தலனால் முன்வைக்கப்படும் மறுபக்கக் காரியத்தினையும் நாம் மறந்துவிடக்கூடாது. விவாகம்பண்ண வேண்டுமா அல்லது விவாகம்பண்ண வேண்டாமா எனும் விஷயத்திலுள்ள தீர்மானத்தினுடைய பொறுப்பானது தனிப்பட்ட ஒவ்வொருவரின் மீதே காணப்படுகின்றது. சிலருக்கு இக்காரியமானது நிச்சயமாகவே மேல் இடம்பெறும் கடிதத்தில் இருப்பதுபோன்று காணப்படும், மேலும் இவர்களைப்போன்றே கவனத்துடன் காணப்படும் மற்றவர்களுக்கு இக்காரியமானது வேறுபட்டுக் காணப்படலாம். ஒவ்வொருவரும் தன் மனதில் திட்டவட்டமாய் முடிவெடுத்துக்கொள்வார்களாக.
இது விஷயத்தில் முழுமையாய்த் தீர்மானிக்க முடியாமலும், முடிவான நிலைப்பாட்டினை எடுத்து, விவாகம் வேண்டாம் என்று தீர்மானிக்க முடியாமலும் இருப்பவர்கள், மறுபக்க நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு, விவாகம்பண்ணிடுவார்களாக. தீர்மானமில்லாமல் இருத்தல், ஊசலாட்டம், வெதுவெதுப்பாய் இருத்தல் என்பவற்றைக்காட்டிலும், வேறு எதுவும் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பாதகமாய் இருக்கமுடியாது. உங்கள் பூமிக்குரிய உணர்வுகளின் விஷயத்தில் அல்லது மற்றவர்களுடைய உணர்வுகளின் விஷயத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டு விளையாடாதீர்கள். கர்த்தருக்கு மகிமையாகவும் – திவ்விய சித்தத்திற்கு இசைவாகவும் இருக்கும் என்று நீங்கள் கருதுகின்ற விதத்தில் உறுதியாயும், உடனேயும் காரியங்களை முடிவுப்பண்ணிடுங்கள். கர்த்தருக்கு உங்களிடத்தில் இருக்கும் சிறந்ததைக் கொடுக்கத்தக்கதாக, இந்த உங்கள் தீர்மானத்தின்படி செயல்படுங்கள் மற்றும் இதற்கு முரணான யாவற்றையும் தூரப்படுத்திடுவீர்களாக. தீர்மானம், உறுதியாயிருத்தல் என்பவை குணலட்சணம் வளர்வதற்கு உதவியாயிருக்கும். பொறுப்பற்று / விளையாட்டாய்ச் செயல்படுதல் என்பது உண்மை குணலட்சணத்தினைச் சிதைக்கின்றது.