3HG824 – இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

3HG 824

இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

NATURAL LAW PARALLELED ON THE SPIRITUAL PLANE

“பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” (2 கொரிந்தியர் 9:6)

பொதுவாகவே இந்த வசனமானது எல்லோருக்கும் பொதுவான விதத்தில் பொருத்திப் பார்க்கப்படுகின்றது, எனினும் இது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் குறிப்பாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கும். எல்லோருமே தாங்கள் விதைப்பதற்கேற்ப அறுப்பார்கள் என்றாலும், தேவனுக்குத் தங்களை முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களாகவும், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் காணப்படும் கிறிஸ்தவர்கள் மாத்திரமே ஆவியில் விதைக்க முடிகிறவர்களாய் இருப்பார்கள்; மேலும் இவர்கள் மாத்திரமே இப்பொழுது நித்திய ஜீவனா அல்லது மரணமா எனும் பரீட்சையில் காணப்படுகின்றனர். வெகுசிலர் மாத்திரமே ஆவிக்குரிய விதத்தில் விதைப்பவர்களாகக் காணப்பட்டு, ஆவிக்குரிய அறுவடைகளை அறுக்கின்றவர்களாய் இருக்கின்றனர்; பெரும்பான்மையான ஜனங்கள் மாம்சத்தின் அடிப்படையில் விதைக்கின்றனர்; மேலும் விதை நல்லதாகவோ அல்லது தீமையாகவோ இருப்பதற்கு ஏற்ப அறுவடையை அறுப்பார்கள் – சிலர் நற்பண்புகளையும், சிலர் இழிவான பண்புகளையும் அறுவடையாய் அறுப்பார்கள்.

ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட நிலைமையினின்று மனுஷன் இவ்வளவாய் விழுந்துபோயுள்ளான்; ஆகையால் “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை உணர்வுள்ளவன் இல்லை தேவனைத் தேடுகிறவன் இல்லை எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10-12) என்று அப்போஸ்தலன் கூறினதுபோன்று சொல்லிடலாம். பரிசுத்த ஆவியாய், பரிசுத்த மனமாய் அல்லது மனப்பான்மையாய் இருப்பதற்குப் பதிலாக, விழுந்துபோன மனுஷனுடைய மனமானது பெருமளவில் அசுத்தமானதாகவும், திருக்குள்ளதாகவும், அபூரணமாகவும் காணப்படுகின்றது. ஆனால் உலகத்தினின்று வெளியேறினவர்கள், கிறிஸ்துவின்மீதான விசுவாசம்மூலம் மற்றும் தங்களையே தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததன்மூலம் தேவனுடைய பிள்ளையாகியுள்ளவர்கள், அவரது பரிசுத்த ஆவியை, அவரது மனதை அல்லது மனப்பான்மையைப் பெற்றிருக்கின்றனர்; மேலும் இதை அவர்கள் எந்தளவுக்குத் தங்கள் ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தேவனுடன் நெருக்கமாய் ஜீவிக்கின்றார்களோ அந்தளவிற்குப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்த அளவிற்கு ஏற்ப இந்த வகுப்பார் “ஆவியில் விதைக்கிறவர்களாயிருந்து,” கிறிஸ்துவின் குணலட்சணத்தை, பரிசுத்த ஆவியின் கனிகளை அறுவடை செய்வார்கள். தம்முடைய ஜனங்கள் ஆவிக்கென்று விதைப்பவர்களாய் மாத்திரம் இராமல், அதிகமாய் விதைக்க வேண்டும் என்றும் கர்த்தர் சித்தமாய் இருக்கின்றார். இது விஷயத்தில் நீதியின் ஒரு கொள்கை காணப்படுகின்றது. “நீ என்ன செய்தாலும் அதைக்குறித்து நீ கவலைப்பட வேண்டாம். நான் உன்னை மன்னித்து எல்லாவற்றையும் சரிசெய்துவிடுவேன். நீ அபூரணமானவன் என்பதை நான் அறிவேன்” என்று தேவன் சொல்லுகிறதில்லை. இல்லை! யாரெல்லாம் நல்ல விதைகளை விதைக்கிறார்களோ, அவர்கள் இதற்கேற்ப ஆசீர்வாதங்களை அறுவடை செய்வார்கள்; ஆனால் தீமையான விதைகளை விதைப்பவர்கள், இதற்கேற்ப தீமையையே அறுவடை செய்வார்கள் எனும் கொள்கைகளானது தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது. கிறிஸ்தவன் தன்னால் முடிந்ததைச் செய்கையில், அவனுடைய வேண்டுமென்று இல்லாத தப்பிதங்களைக் கிறிஸ்துவின் புண்ணியமானது மூடுகின்றது; ஆனால் கிறிஸ்துவின் புண்ணியமானது ஒருவன் விதைக்கிற விஷயத்தில், அவன் என்ன விதைக்கிறான் எனும் காரியத்தில் கொண்டிருக்கும் அசட்டையை, அஜாக்கிரதையை அல்லது பொறுப்பற்ற தன்மையை மூடுகிறதில்லை.”மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்.”

காரணமும், விளைவும் எனும் மாறா விதி

இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாகியுள்ளவர்கள் தாங்கள் உலகத்தைவிட்டு வருவதற்குமுன்னதாக, விழுந்துபோன மனுஷீக சுபாவத்தினுடைய சித்தத்திற்கிசைவாகத் தாங்கள் ஜீவித்தபோது, நல்லப் பலன்களையும், சந்தோஷத்தையும் கொடுக்குமெனத் தாங்கள் எதிர்பார்த்த காரியங்களானது மோசமான பலன்களையும், எதிர்ப்பார்ப்புகளினுடைய அதிருப்தியையும் கொண்டுவந்ததைக் கண்டிருக்கின்றார்கள். இன்னுமாகத் தங்கள் சொந்த சித்தப்படி செய்வது என்பது பொதுவாகவே தீய பலன்களையே கொண்டுவந்தது என்பதையுங்கூடக் கண்டிருக்கின்றார்கள். அவர்கள் தீய எண்ணங்களை விதைத்தார்கள் மற்றும் இந்தத் தீய எண்ணங்கள் இன்னும் அதிகம் தீய எண்ணங்களையே கொணர்ந்தது. தீய எண்ணங்கள் தீய கிரியைகளைக் கொணர்ந்தது மற்றும் இது காலப்போக்கில் தீய குணமாக வளர்ந்தது. ஆரம்பத்தில் விருப்பத்தேர்வாக மாத்திரம் காணப்பட்டவைகள், பிற்பாடு உறுதியான குண இயல்புகளாகின. “சிந்தனையொன்றை விதையுங்கள், அதனால் கிரியையொன்றை அறுப்பீர்கள்; கிரியை ஒன்றை விதையுங்கள், அதனால் பழக்கம் ஒன்றை அறுப்பீர்கள்; பழக்கம் ஒன்றை விதையுங்கள், அதனால் குணலட்சணம் ஒன்றை அறுப்பீர்கள்; குணலட்சணம் ஒன்றை விதையுங்கள், அதனால் விதியொன்றை அறுப்பீர்கள்” என்று சொன்ன மனுஷன் சரியாகவே சொல்லியிருக்கின்றார். எந்தளவிற்கு அசுத்தமான குணலட்சணம் வளர்க்கப்பட்டுள்ளதோ அந்தளவிற்கு அதை ஒழித்துக்கட்டுவதும், நீதியான குணலட்சணத்தை வளர்த்துவதும் கடினமான காரியமாய் இருக்கும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களது மனங்களுக்கு முன்பாகச் சிறுபிராயங்களிலிருந்தே தூய்மையான, சிறந்த, அன்பான எண்ணங்களை வைத்திடுவதின்மூலம், பெற்றோர்கள் பிள்ளைகளின் விஷயத்தில் தங்கள் பயிற்சியினைத் துவங்க வேண்டும். பிள்ளைகளைப் பரிபூரணர்கள் ஆக்கிடுவது என்பது கூடாத காரியமாக இருப்பினும், பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளை உலகத்திலுள்ள தீமைகளினின்று அதிகம் பாதுகாத்திட முடியும். தங்கள் பிள்ளைகளுக்கு ஜீவியத்தில் சரியான துவக்கத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதின்மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, நித்திய காலமும் பிள்ளைகளால் நன்றி ஏறெடுக்கப்படக்கூடிய சொத்தினைக் கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளுடைய மனங்களை வனைந்திடும் விஷயத்தில் தங்களுக்கு எத்தகைய வல்லமையிருக்கின்றது என்று ஒருவேளை தாய்மார்களினால் அறிந்துகொள்ள முடியுமானால், அவர்கள் எத்தனை ஜாக்கிரதையாய்க் காணப்படுவார்கள்! சாபமாய் இருப்பதற்குப்பதிலாக ஆசீர்வாதமாய்க் காணப்படும் நற்குணமுள்ள, நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளைத் தாங்கள் உலகில் கொண்டுவரத்தக்கதாகப் பெற்றோர்கள் தங்கள் சொந்த மனநிலைகளையும், மனப்பான்மைகளையும் எத்துணை ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்வார்கள்.

ஒருவேளை தாயானவளைத் தீய உணர்வுகளானது கட்டுப்படுத்திக் கொண்டிருக்குமானால், ஒருவேளை தீய எண்ணங்கள் மனதில் வைத்திருக்கப்படுமானால், பிள்ளையானது இத்தகைய தீய இயல்புகளோடுதான் பிறக்கும்; பின்னர் நற்குணத்தை வளர்த்திடுவதற்குப் பிள்ளையானவன் எவ்வளவுதான் கடினமாய் முயற்சித்தாலும், அவனுக்குக் கர்ப்பக்காலத்தின்போது பெற்றோர் வாயிலாய்க் காணப்பட்டிருந்த தகுதியற்ற செல்வாக்குகளின் விளைவுகளோடு ஜீவிதக்காலம் முழுவதும் போராட்டம் இருக்கும். இத்தகைய உண்மைகளானது நமக்கு நீண்ட காலத்திற்கு முன்னமே தெரியாமல்போனது, எத்தகைய வருந்தத்தக்கக் காரியமாகும்!

இது விஷயத்தில் தகப்பன்மார்களுக்கும், விசேஷித்தப் பொறுப்புக் காணப்படுகின்றது. நற்குணமுள்ள பிள்ளையைப் பிறப்பிக்க வேண்டுமானால், தகப்பன்மார்கள் நற்குணமுள்ளவர்களாக இருப்பது மாத்திரம் போதாது, கூடுமான மட்டும் தாயானவளுக்குத் தகுதியான ஐக்கியங்களும், நல்லச் சூழ்நிலைமைகளும், நல்லப் பராமரிப்பும், கவனிப்பும் கிடைக்கத்தக்கதாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படியான விஷயங்களெல்லாம் நல்லக் குதிரைகள், நாய்கள் முதலியவைகளை இனப்பெருக்கம்பண்ணுவதில் கவனிக்கப்படுமானால், நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல நிலைமையில், பெற்றோர் காணப்படத்தக்கதாகப் பார்த்துக்கொள்வது என்பது எத்தனை அதிகம் முக்கியத்துவம் உடையதாய்க் காணப்படும்!

பிள்ளையைச் சரியாய்ப் பற்றுவித்தல்

சிந்திக்கிற ஜனங்கள் அனைவரும் இப்பாடத்தினால் எழுச்சியடைந்து கூடுமானமட்டும் மனரீதியிலும், ஒழுக்கரீதியிலும், சரீரரீதியிலும் மோசமான நிலையில் காணப்படும் பிள்ளைகளைப் பிறப்பிக்காமல் இருப்பார்களாக. குழந்தையின் மனோநிலை உருவாகும் விஷயத்தில் கர்ப்பக்காலத்தின் போதான பெற்றோர்களின் தகுதியான செல்வாக்குகளின் முக்கியத்துவத்தினை நாம் பலமாய் வலியுறுத்துகின்றோம். ஆனாலும் பிள்ளையின் பிறப்போடு பெற்றோரின் பொறுப்பானது முற்றுப்பெறுகிறதில்லை. பிள்ளையின் முழு ஜீவியத்திற்கும் மேற்பார்வை தேவைப்படுகின்றது. மீண்டுமாகப் பிள்ளையானவன் சக விளையாட்டுத் தோழர்களுடனும், நாய் போன்ற பிராணிகளிடத்திலுங்கூட அநீதியாய் நடந்துகொள்ளாதபடிக்குத் தாயானவள் கவனித்துக்கொள்ள வேண்டும். சரீரத்தைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதும் மற்றும் மனதைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதும் குறித்தும் அவள் கற்பித்துக்கொடுக்க வேண்டும். ஒருவேளை இவ்விஷயங்களிலெல்லாம் அவள் அஜாக்கிரதையாய் இருப்பாளானால், தான் என்ன செய்தாலும் அதினால் ஒன்றும் இல்லை எனும் எண்ணத்தினைப் பிள்ளையானவன் பெற்றுக்கொள்வான்; இப்படியாக அநீதியாய் வாழ்வதற்கும், அசுத்தமாய் ஜீவிப்பதற்குமான வாய்ப்புப் பெரிதும் அதிகரித்திடும்.

இந்த விஷயங்கள் அனைத்திலும் விசேஷித்த விதமான பொறுப்பானது கிறிஸ்தவ பெற்றோர்களின்மீது காணப்படுகின்றது. தேவனின் நிர்வாகத்தினுடைய கொள்கைகளை நாம் காணவருகையில் நம்முடைய மனங்களானது நீதி, நியாயம், இரக்கம், அன்பின் எண்ணங்களினால் நிரம்பிட வேண்டும். இந்த எண்ணங்களானது நம்முடைய பிள்ளைகள்மீது பிரதிபலிக்கப்பட வேண்டும்; இப்படியாக அவர்கள் தேவனால் கற்பிக்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் தேவனுடைய ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட பிள்ளைகளாக ஆகாமலிருக்கலாம், எனினும் எந்தவொரு ஜீவ தளத்திலும் நித்திய ஜீவனை அடையும் அனைவருமே இந்தப் பரிசுத்த ஆவியை, மனதைப் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை ஒரு பிள்ளையானவன் இயல்பாகவே சாந்தமானவனாக இல்லையென்றால், ஒருவேளை சாந்தத்தின் விஷயத்தில் கர்ப்பக்காலத்தின்போதான அதன் வளர்ச்சிப் புறக்கணிக்கப்பட்டிருந்ததானால், பிள்ளைக்குச் சாந்தத்தைக்குறித்துக் கற்பிக்கப்பட வேண்டும். முரட்டுத்தனமும், பிடிவாதமும் எவ்வளவு கேடானதாய் இருக்கின்றது என்று பிள்ளைக்குக் காண்பித்துக் கொடுக்கப்பட வேண்டும். கருணை மற்றும் இரக்கத்தின் அழகானது பிள்ளைக்கு முன்பாக எடுத்துக் காண்பிக்கப்பட வேண்டும். ஜீவியத்தினுடைய ஆரம்ப வளர்ச்சிக்குரிய வருஷங்களில் / வயதுகளில் பிள்ளையானவன் சரியாய் நடத்தப்பட்டானானால், சீக்கிரத்தில் அவன் இந்த நல்லக் கொள்கைகளைத் தன் மனதில் பதியப்பெற்றுக்கொள்வான். சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை, இரக்கம், அன்பு, ஆகிய இந்தப் பண்புகளானது பெற்றோர்களால் தங்களுக்குள்ளாக ஜாக்கிரதையாய் வளர்த்திக்கொள்ள வேண்டிய பண்புகளாகும். இவைகள் தேவனுடைய ஆவியின் பண்புகளாகும். மேலும் இவற்றை தம் பிள்ளைகள் அனைவரும் ஐசுவரியமாய் வளர்த்திக்கொள்வதற்குத் தேவன் எதிர்ப்பார்க்கின்றார். ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய பிள்ளையாகிடுவதற்கு முன்பாக, எவ்வளவுதான் மோசமான பழக்கங்களைப் பெற்றிருந்தாலும், அவன் பிற்பாடு கூடுமானமட்டும் குணங்களில் தன்னிடத்தில் காணப்படும் விரும்பத்தகாத இயல்புகளைத் தெய்வீகக் கிருபையினால் ஒழித்துக்கட்டும்படிக்குப் பரமபிதா எதிர்ப்பார்க்கின்றார். அவன் தன் தோட்டத்திலிருந்து விஷமுள்ள களைகளைப் பிடுங்கி எடுப்பதுபோல் இந்த விரும்பத்தகாத இயல்புகளைத் தோண்டி வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். பின்னர் இவைகளுக்குப்பதிலாக அருமையானவைகளையும், கனிகொடுக்கிறவைகளையும் அவன் நட வேண்டும். சாந்தம் எத்துணை அழகான அலங்காரமாய் உள்ளது! அகங்காரமும், இறுமாப்பும் எத்தனை தகுதியற்றதாய் இருக்கின்றது!

இந்த அருமையான குணலட்சணமானது பெற்றோரினால் வெளிப்படுத்தப்படும்போது, இது – மிகச் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிகிறவர்களாகவும், பொதுவாகவே நீதியையும், நிலையான முன்மாதிரியையும் கூர்ந்து கவனிக்க முடிகிறவர்களாகவும் காணப்படும் பிள்ளைகளினால் கவனிக்கப்படும். விரைவாய்ப் பெற்றோரிலுள்ள இந்த அருமையான குணலட்சணமானது பிள்ளைகளிடத்தில் பலனைக்கொண்டுவரும் – அதாவது இது விஷயத்திலுள்ள தங்கள் பொறுப்பினைப் பெற்றோர்கள் உணர்ந்துகொள்வதற்கு முன்னதாக, பிள்ளைகளில் ஒருவேளை அதன் குணம் ஸ்திரமடையாமல் இருந்தால், பெற்றோரிலுள்ள இந்த அருமையான குணலட்சணமானது பிள்ளைகளிடத்தில் பலனைக்கொண்டுவரும். சந்தேகத்திற்கிடமின்றி இன்றைய காலங்களில் பரவலாய்க் காணப்படும் பெற்றோரை அவமதித்திடும் காரியமும், பெற்றோர்களை அவர்களது வயோதிப காலத்தில் கவனியாமல் புறக்கணிக்கும் காரியமும்… ஆரம்பக்காலங்களில் பெற்றோர்கள் வெளிப்படுத்தின அசட்டையின் பலனேயாகும். அநேகம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களது சிறு பிராயங்களிலேயே சரியாய்ப் பயிற்றுவிக்கத் தவறினதின் பலனையே இன்று அறுவடைப்பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அநேகம் சந்தர்ப்பங்களில் நல்ல விதைகளுக்குப்பதிலாக, தீமையான விதைகள் பிள்ளைகளினுடைய மனதில் விதைக்கப்படுகின்றன; இன்றைய நாட்களில் அத்தகைய விதைத்தலின் மோசமான பலனானது வெளிப்படுகின்றது. சிலரின் சந்தர்ப்பங்களில் மிகக்குறைவாய் விதைக்கப்பட்டு, அதற்கேற்ப மிகக்குறைவாகவும் அறுவடை செய்யப்படுகின்றது.

ஆமென்!!