R5353 – விவாகம் கனமுள்ளதாகும்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5353 (page 349)

விவாகம் கனமுள்ளதாகும்

MARRIAGE IS HONORABLE

மற்ற ஜனங்கள் எதையெல்லாம் சொன்னாலும் அல்லது செய்தாலும் சரி, கர்த்தருடைய ஜனங்களிலுள்ள ஒவ்வொருவனும் காரியங்களை நிதானிக்கும் விஷயத்தில் வேதாகமமாகிய தேவனுடைய வார்த்தையிலுள்ள எழுத்துக்களினாலும், ஆவியினாலும் வழிக்காட்டப்பட வேண்டும். “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக” என்று வேதம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது (எபிரெயர் 13:4). கர்த்தருடைய ஜனங்களில் யார் திவ்விய ஊழியத்திற்கென்று தங்களை முழுமையாய்க் கொடுத்துவிட விரும்புவார்களோ, அவர்கள் திருமணமாகாமல் இருந்துவிடுவதன் வாயிலாய்ச் சந்தேகத்திற்கிடமின்றி சந்தோஷமாகத் தங்கள் பலியினை நிறைவேற்றி முடிக்க முடிகின்றவர்களாக இருப்பார்களெனப் பரிசுத்த பவுல் அடிகளார் பரிந்துரைத்துள்ளார். தன்னுடைய இக்கருத்திற்கான காரணத்தையும் அவர் தெரிவிக்கின்றார்; ஆனாலும் திருமணமாகும் நிலை என்பது பரிசுத்தமற்றது என்றோ, தூய்மையற்றது என்றோ, ஏதேனும் விதத்தில் தேவ பிரமாணத்திற்கு முரணானது என்றோ அவர் கூறிடவில்லை. திருமணமான புருஷன் இயல்பாகவே தன் மனைவியைப் பிரியப்படுத்திட நாடுவான் என்றும், திருமணமான ஸ்திரீ தன் கணவனை இயல்பாகவே பிரியப்படுத்திட நாடுவாள் என்றும், இது முறையானது என்றும் மாத்திரமே கூறியுள்ளார்.

ஒருவனைச் சரீரத்திலும், ஆவியிலும் தேவனுக்கு ஊழியம்புரிய வைத்திடுவதற்கு ஏதுவான ஒருமுகமான நோக்கத்தினின்று ஏறக்குறைய திசைத்திருப்புகின்றதாய், இந்தத் திருமணமான நிலைமைக் காணப்படும் (1 கொரிந்தியர் 7:32-35). துணைவியைப் பராமரிப்பதிலும், துணைவியாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலும் ஈடுபட்டிருக்கையில் தன்னால் ஒருவேளை செய்ய முடிவதைக் காட்டிலும், தனித்திருக்கையில், மணமாகாத நிலையில் இருக்கையில் தன்னால் அதிக ஊழியங்களை நிறைவேற்ற முடிகின்றது என்றும், மணமாகாத நிலைமையே அனுகூலமாய் உள்ளது என்றும் தான் கண்டறிந்ததாகப் பரிசுத்த பவுல் அடிகளார் சபைக்கு நினைப்பூட்டுகின்றார்.

ஆனால் கர்த்தருக்குள்ளான சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஒருவேளை தங்கள் கணிப்பில், தங்களுக்குத் திருமணம் அவசியம் என்று காண்பார்களானால் அல்லது அதை விரும்புவார்களானால் – ஒருவேளை திருமணமான நிலைமையிலேயே தங்கள் அர்ப்பணிப்பின் வாக்குறுதிகளை நன்கு நிறைவேற்ற முடியும் என்று நம்புவார்களானால்… அவர்களுக்குத் தடை விதிக்கும் எந்தத் தேவ பிரமாணமும் இல்லையெனப் பரிசுத்த பவுல் அடிகளார் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றார்.

இதை நாம் இங்குக் குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில்… சில சந்தர்ப்பங்களில் திருமணமாகாதவர்களுக்கு ஆலோசனை வழங்கிடும் சகோதர சகோதரிகள், எழுதப்பட்டவைகளுக்கு மிஞ்சிபோய், திருமணம் செய்துகொள்வது என்பது நமது பரம அழைப்பிற்கான பரிசினை இழக்கச் செய்திடும் என்று கூறுவதன் மூலம், கர்த்தர் ஒருபோதும் சொல்லிடாத பாரங்களை, ஆலோசனைக் கேட்பவர்கள் மீது சுமத்திவிடுகின்றனர். நல் நோக்கங்கள் என்று கூறி இப்படியான நடத்தைகளை நியாயப்படுத்திட முடியாது.

சமீபத்தில் சிறு குழந்தை ஒன்றைப் பெற்றிருக்கிறவர்களும், அக்குழந்தையை மிகவும் நேசிக்கிறவர்களுமான ஓர் அருமையான தம்பதிகளிடமிருந்துகூட நாம் சில காரியங்களைத் தகவலாக அறிந்தோம். சீக்கிரத்தில் சம்பவிக்க இருக்குமென நாம் எதிர்ப்பார்த்திருக்கும் மாபெரும் மாற்றங்களுடைய கண்ணோட்டத்தில் சில சகோதரிகள் அத்தாயாரிடம்… ஒரு தாயாக இருப்பது என்பது கனவீனமாய்க் கருதப்படவேண்டும் என்று கூறிய காரியமானது அத்தாயாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த அருமையான சகோதரிகள் தவறு செய்துள்ளனர் என்று நாம் நம்புகின்றோம். இவர்கள் தங்களுக்காகச் சிந்தித்துக்கொள்வதற்கும், கர்த்தருடைய சித்தம் குறித்த தங்களது சிறந்த கணிப்புகளுக்கு ஏற்ப, தங்கள் ஜீவியத்தின் காரியங்களை வனைந்துகொள்வதற்கும் உரிமை பெற்றிருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் இது விஷயத்தில் மற்றவர்கள் வேறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருப்பதினால், அவர்களைக் கண்டனம் பண்ணிடுவதற்கு இச்சகோதரிகளுக்கு உரிமை இல்லை. ஒவ்வொரு ஊழியக்காரனும் நின்றாலும், விழுந்தாலும், அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. தகப்பன் ஸ்தானத்தையோ அல்லது தாய்மையையோ வேதாகமம் அவமதித்து ஏதும் கூறுகிறதில்லை இதற்கு மாறாகவே கூறுகின்றது.

ஒருவேளை அப்போஸ்தலன் கருத்துரைத்திருப்பது போன்று கர்த்தருடைய ஜனங்களில் சிலர் துறவற ஜீவியம் ஜீவிப்பதற்குப் பரஸ்பரமாய் முடிவெடுப்பார்களானால், அது அவர்களுடைய சொந்தக் காரியமாகும். தேவனுக்கடுத்த ஊழியங்களில் செலவிடத்தக்கதாக அதிகம் வாய்ப்புகளும், ஆற்றல்களும், வழிவகைகளும் தங்களுக்குக் கிடைக்கத்தக்கதாக, கர்த்தருக்காக அண்ணகர்களாய் வாழ்வதற்கு அவர்கள் இப்படியாய் முடிவெடுப்பார்களானால், இது அவர்களது தெரிவின் / விருப்பத்தின்படியான அவர்களது பலியாகும் மற்றும் கர்த்தர் நலமென்று காணும் பலன்களுக்காய், அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்க்க வேண்டும். அவர்களது தெரிவு இதுவாக இருந்தால், அவர்கள் இதற்கான பலனை அடைவார்கள்; நாமோ மற்றவர்களுக்கும்கூட அவர்களுக்கான விருப்பத்தெரிவு இருக்கின்றது என்றும், ஒருவேளை அவர்கள் சரியாய்ச் சிந்தித்து வேறுவழியைத் தெரிவு செய்வார்களானால், அவர்களை நாம் கண்டனம்பண்ணக்கூடாது என்றும், அவர்களது சமூக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் விஷயத்தில் குறுக்கிடுவதற்கு நமக்கு உரிமை இருக்கின்றதென நாம் எண்ணிடக்கூடாது என்றும் நினைவில்கொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளைக் கையாளும் விஷயத்திலும், உலகத்தைக் கையாளும் விஷயத்திலும், பொன்னான பிரமாணமானது நமக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவோமோ, அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்திட வேண்டும். நமக்குத் தகுந்தது என்று நாம் கருதிடும் அதே சுயாதீனங்களை நாம் மற்றவர்களுக்கும் அருளிட வேண்டும்.

இது விஷயமான வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியின், ஏழாம் அத்தியாயத்திற்கு நம் வாசகர்களில் சிலர் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்று நாம் அஞ்சுகின்றோம்.