R1882 – குழந்தையாகிய சாமுயேல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R1882 (page 243)

குழந்தையாகிய சாமுயேல்

THE CHILD SAMUEL

1 சாமுயேல் 3:1-13

“கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன்.” – 1 சாமுயேல் 3:9)

குழந்தைக்கான கல்வி புகட்டுதலானது அது பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது சரியே. குணலட்சணம் உருவாகும் விஷயத்தில் பெற்றோர்களின் ஆரோக்கியமான செல்வாக்குகளானது ஆற்றல்மிக்கக் காரணியாக இருக்கின்றது. சாமுயேல் தேவபக்தியுள்ள பெற்றோர்களின் குமாரனாய்க் காணப்பட்டார்; அதாவது குழந்தை வேண்டுமென்று கர்த்தரிடத்தில் விண்ணப்பஞ்செய்து பிறந்தவராவார்; ஒருவேளை குழந்தையருளப்பட்டால், குழந்தையானவன் சிறுபிராயம் முதற்கொண்டு கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்படுவான் என்ற புனிதமான வாக்குறுதியும், இவர்களின் விண்ணப்பத்தோடுகூடச் செய்யப்பட்டது. இப்படியாகப் பயபக்தியுள்ள பெற்றோர்களினால் மாத்திரமே கொடுக்கமுடிகிற சொத்தோடுகூட – அதாவது தேவன் மற்றும் நீதியின்பால் விருப்பங்கொள்ளும் மனதோடுகூட ஐசுவரியமாய் உலகத்தில் சாமுயேல் பிறந்தார்.

கூடுமானமட்டும் சீக்கிரமாய் அன்னாள் தன் குமாரனைக் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து அங்கே கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாய்க் காணப்பட்ட பிரதான ஆசாரியனாகிய ஏலியினுடைய பராமரிப்பின்கீழ்ப் பயிற்றுவிக்கப்படுவதற்கும், கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்தப்படுவதற்கும் வேண்டி விட்டுச்சென்றாள். சாமுயேலின் இருதயமானது சரியானதாகவும், நற்தன்மையுள்ளதாகவும் காணப்பட்டபடியால், அவர் சுறுசுறுப்பானவராகவும், கீழ்ப்படிதல் உள்ளவராகவும், கற்பிக்கப்படத்தக்கவராகவும், சரியான வழியில் எளிதில் வழிநடத்தப்பட முடிகிறவராகவும் காணப்பட்டார் என்கிற காரியமானது, ஏலி அழைத்ததாகச் சாமுயேல் எண்ணி அவ்வழைப்புகளுக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர் கொண்டிருந்த ஆயத்தத்தன்மையில் வெளிப்படுகின்றது.

இந்த நற்பண்புள்ள குழந்தையைச் சிறுப்பிராயம் முதற்கொண்டு, புருஷன் ஆகிடுவதுவரையிலும், நீதியின் பாதையில் காத்துக்கொள்வதற்கேதுவான, மனுஷீகப் பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் சாமுயேலுக்குக் கொடுத்திடுவதற்கு ஏலியின் சாந்தகுணமும், [R1882 : page 244] கனிவான அணுகுமுறையும், இவரது நீதியுள்ள ஜீவியமும், போதித்தல்களும் போதுமானதாய் இருந்தன. இவரது செல்வாக்கின்கீழ்க் குழந்தையானது சிறந்த மற்றும் நீதியான குணங்களில் வளர்ந்து பலமடைந்தது மற்றும் கர்த்தருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாயும், விடாமுயற்சியுடனும் காணப்பட்டது. ஆனால் ஏலியினுடைய சொந்தக் குடும்பத்தின் விஷயத்தில் காரியங்கள் இப்படியாக இருக்கவில்லை. இவரது சொந்தக் குமாரர்கள் ஒழுக்கமற்றவர்ளாகவும், கீழ்ப்படியாதவர்ளாகவும், நன்றியற்றவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும், சீர்க்கெட்டவர்களாகவும் காணப்பட்டனர். ஏலி தன் சுபாவத்தற்கே உரியதான சாந்தமான வழிமுறைகளில் அவர்களது இந்த ஒழுக்கமற்றத் தன்மையைச் சரிச்செய்திடுவதற்கு நாடினார்; ஆனாலும் தன்னுடைய
இந்தப் பிரயாசங்கள் தோல்வியடைந்தபோது, தன் பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் அவசியமாயிருந்த கடுமையான பிரயாசங்களினால் அவர்களைக் கட்டுப்படுத்திட அவர் முயற்சித்திடவில்லை இப்படியாக அவர்கள் தங்கள் தகப்பனுக்கும், பிரதான ஆசாரியனென அவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய நோக்கங்கள்மீதும் நிந்தையைத் தொடர்ந்து கொண்டுவந்தார்கள்.

இந்தக் கவனக்குறைவானது குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவானதாய் இருந்தது மற்றும் அது கர்த்தருக்கும் பிரியமற்றதாய் இருந்தது. ஆகையாலே குழந்தையாகிய சாமுயேல் வாயிலாக ஏலிக்கு வந்ததாக 11-13 வரையுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதான எச்சரிப்புகளை நாம் பார்க்கின்றோம்.

கர்த்தருடைய சினம் குறித்தும், தன் குமாரர்களுடைய ஒழுக்கமற்ற நிலைக் குறித்தும், தன் சொந்த உண்மையற்ற நிலைக் குறித்தும், குற்றஞ்சாட்டப்படத்தக்கதான தனது கவனக்குறைவு குறித்தும் எண்ணிப்பார்ப்பதற்கு ஏலிக்குக் கடினமாகவே இருந்தது; ஆனாலும் சாந்தத்தோடும், தாழ்மையோடும் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டவராக, “அவர் கர்த்தர், அவர் தன் பார்வைக்கு நலமானதைச் செய்வாராக” என்று கூறினார். இந்த முன்னுரைக்கப்பட்ட தீர்ப்பின் நிறைவேறுதல் குறித்தச் செய்திவந்தபோது – அதாவது பெலிஸ்தர்களுக்கு முன்பாக இஸ்ரயேலர்களின் தோல்விகுறித்தும், யுத்தத்தில் தனது இரண்டு குமாரர்களின் மரணம் குறித்துமான செய்தி வந்தபோது, அது கடுமையான அடியாக இருந்தது; ஆனாலும் கர்த்தருடைய பெட்டியானது சத்துருக்களின் கரங்களை எட்டியது என்ற செய்தியை அவர் கேட்டபோது, அவருடைய ஆழ்ந்த துக்கம் அவரை நிலைகுலையச் செய்தது, மற்றுமவர் இருக்கையிலிருந்து பின்னாக விழுந்து, பிடரி முறிந்து செத்துப்போனார் (அதிகாரம் 4:18). இவருக்குப் பெலவீனங்கள் காணப்பட்டபோதிலும், இவரது இருதயமானது எப்போதும் தேவனுக்கு நேர்மையாயும், உண்மையாயும் காணப்பட்டது மற்றும் தேவனுடைய நோக்கங்களானது இவருக்கு அருமையானவைகளாகவும் காணப்பட்டது; இரக்கமுள்ளவராகவும் கிருபையுள்ளவராகவும், கோபங்கொள்வதில் தாமதிக்கிறவராகவும் காணப்படும் தேவன், ஏலியை அவரது கவனக்குறைவின் காரணமாகக் கடுமையாகத் தண்டித்திட்டாலும், அவர் இயேசு கிறிஸ்துவின் வாயிலாய் மனுஷர்களுடைய இரகசியங்களை நியாயந்தீர்த்திடும் நாளில் இரக்கத்திலும், மன்னிப்பிலும் தம்முடைய இந்த வேலைக்காரனை நினைவுகூர்ந்திடுவார் என்பதில் ஐயமில்லை (ரோமர் 2:16).

இச்சம்பவமானது குணலட்சணத்தினுடைய பலத்திற்குக் கர்த்தரால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து ஆற்றல்மிக்க விதத்தில் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகின்றது. நீதியின் வழிகளைக்குறித்துப் போதுமான அளவுக்குக் கற்பித்துக்கொடுத்த பிற்பாடு, பலமான குணலட்சணங்களைக் கர்த்தர் எதிர்ப்பார்த்திடுவார் மற்றும் எதிர்ப்பார்த்திடுவதற்குமான உரிமையையும் அவர் பெற்றிருக்கின்றார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபேசியர் 6:10). “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” (1 கொரிந்தியர் 16:13). நாம் விசுவாசத்திலும் பலமுள்ளவர்களாய் இருக்க வேண்டும், குணலட்சணத்திலும் பலமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; இப்படியே நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும், அவரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாகவும் காணப்படுவோம். ஒருவேளை பெலவீனமும், இருமனமும் நம் இயல்பான குறைபாடாக இருப்பினும், இவைகளுக்கு எதிராய் நாம் போராடாமல் இருந்தால், அது நாம் சாக்குச் சொல்வதற்கு ஏதுவானதல்ல. தலைச்சிறந்த பாத்திரங்களில் சிலர் சுதந்தரிக்கப்பட்ட பலவீனங்களுக்கு எதிராக உண்மையாய்ப் போராடி சாதித்தவர்கள் ஆவார்கள். நாம் தேவனுடைய உதவியை வேண்டினால், அவர் நம் பிரயாசங்களோடுகூடத் தம் பலத்தை அருளுவதற்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கின்றார்.

இன்னொரு பாடம் கர்த்தருக்குரிய பயபக்தியிலும், அறிவிலும் பிள்ளையைப் பயிற்றுவிப்பதிலுள்ள பெற்றோரின் பொறுப்புக்குறித்த தேவனுடைய கண்ணோட்டம் பற்றியதாகும். கடமையானது வீட்டைத்தாண்டியும் செயலாக்கம்கொண்டிருப்பினும், அது வீட்டில்தானே துவங்குகின்றது எனும் உண்மையினை இங்கு நாம் வலியுறுத்துகின்றோம். வெளியில் உள்ளவர்கள் மத்தியில் வைராக்கியம் கொண்டிருப்பதைக் காட்டிலும், தங்கள் சொந்தக் குடும்பத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும், அதை மாதிரிப்படுத்துவதிலும் குறைவான வைராக்கியம் கொண்டிருப்பதன்மூலம் சிலர் தவறு செய்கின்றனர். (அன்பு, பராமரிப்பு, பெருந்தன்மை) அறம் இல்லத்திலேயே துவங்கிட வேண்டும் மற்றும் அங்கிருந்தே தொடர்ந்திட வேண்டும். மற்ற அனைத்தையும்விட இக்களத்திலேயே (இல்லத்திலேயே), அதுவும் மற்றவைகளைக் காட்டிலும் இக்களம் பலன்கொடுப்பதில் தாமதமாய்க் காணப்பட்டாலும், இக்களத்திலேயே ஜெபத்துடனும், பொறுமையுடன் வேலை செய்யப்பட வேண்டும்.