R3598 – தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3598 (page 219)

தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்

A DISHONOR TO HIS FATHER

2 நாளாகமம் 33:1-13

“நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.” (நீதிமொழிகள் 14:34)

வேறொரு பாடத்தில் எசேக்கியா அநேக விதங்களில் ஒரு முன்மாதிரியான இராஜாவாகவும் – தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் காணப்பட்டார் என்பதைப் பார்த்தோம். இப்பாடத்தில் நல்ல மனுஷராகவும், கர்த்தருக்கு நேர்மையானவராகவும் காணப்படுபவர்கள் சரியற்ற தகப்பன்மார்களாகவும், தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் தங்களுக்கிருக்கும் பொறுப்பின் விஷயத்தில் அஜாக்கிரதையாகவும் இருக்கக்கூடும் என்று எடுத்துக்காட்டுகின்றதாய் இருக்கும். அந்தோ பரிதாபம் இன்றும்கூட இப்படியாகவே இருக்கின்றது; தேவனுடைய பிள்ளைகளாகவும், பரிசுத்த ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுபவர்கள் மத்தியிலும்கூடச் சிலர் இவ்விஷயத்தில் தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினை அடைய இன்னமும் தவறுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6) என்று வேதவாக்கியம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது பிள்ளையினுடைய வனையப்படுதலுக்கேதுவான மனமானது முறையாய்ப் பேணப்பட்டால், நீதியின்கொள்கைகளினால் முறையாய்ப் பதியவைக்கப்பட்டால், பிள்ளையானது அவ்வப்போது தற்காலிகமாய்த் தடைச்செய்யப்பட்டுள்ள பாவ வழிகளில் செல்ல முற்பட்டாலும், பதியவைக்கப்பட்ட காரியங்களானது முழுமையாய் அழிந்துபோகாது என்பதுதான் கருத்தாகும். இந்த முக்கியமான காரியமானது கர்த்தருடைய ஜனங்கள் அனைவராலும் தெளிவாய்ப் புரிந்துகொள்ளப்பட முடியுமானால் . . . உலகத்திற்குள் குழந்தையைக் கொண்டுவருகையில், முக்கியமான ஒரு பொறுப்பானது – துறக்க முடியாத ஒரு பொறுப்பானது – சரியான மனம்கொண்ட எந்த ஒரு நபராலும் தட்டிக்கழிக்க எண்ணங்கொள்ளப்படாத ஒரு பொறுப்பானது கையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவராலும் உணர்ந்துகொள்ளப்படமுடியும்.

இந்த ஒரு கருத்தானது சீயோன் காவல் கோபுர வெளியீட்டினுடைய வாசகர்கள் யாவரின் மனதிலும் பதியவைக்கப்பட முடியுமானால், இது நிச்சயமாய் அவர்களுக்கும், அவர்களது பிள்ளைக்கும் அதிகமாய்ப் பிரயோஜனம் உண்டாக்குகின்றதாயிருக்கும். சத்தியமானது காவல்கோபுர வெளியீட்டின் வாசகர்களுடைய ஜீவியத்திலும், அவர்களது குடும்பங்கள்மீதும்கூடப் பல்வேறு வழிகளில் பெரிதளவில் செல்வாக்குக்கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சிக்கொள்கின்றோம். இது கர்த்தருடைய ஆவியின், தெளிந்த புத்தியுள்ள மனதினுடைய ஆவியின், அன்பின் ஆவியின், நீதியின் ஆவியினுடைய நடைமுறை சார்ந்த செயல்பாடுகளாகும். இவை அதிகமதிகமாய்ப் பெருகி, தற்கால ஜீவியத்தில் பிள்ளைகளுடைய நலனுக்கடுத்த காரியங்களில் மாத்திரம் வெளிப்படாமல், இதோடுகூடப் பரத்திலிருந்துவரும் ஞானமானது முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்பதற்கான நற்சாட்சியானது நண்பர்கள் மற்றும் அயலார்களுக்கு முன்பும் காணப்படுவதாக.

எசேக்கியாவின் பொல்லாத குமாரன்

மனாசே பற்றின பதிவுகளானது சுருக்கமாய்ச் சொல்லப்பட்டுள்ளது மற்றும் அது கர்த்தர் பார்வையில் அருவருப்பாயிருந்தது. பன்னிரண்டு வயதுள்ள சிறுவன் சரியாய் வளர்க்கப்பட்டிருந்தால், நீதியின் வழிகளிலும், கர்த்தரைப்பற்றின உணர்ந்துகொள்ளுதலிலும், யூதேயாவில் கர்த்தருடைய பிரதிநியாகத் தான் காணப்படும், பொறுப்புள்ள ஸ்தானம் குறித்த உணர்ந்துகொள்ளுதலிலும் போதுமானளவுக்கு உறுதிப்பட்டிருக்கும் பகுத்துணர்வையும், புத்தியையும் ஓரளவிற்குப் பெற்றிருக்க வேண்டும். பிள்ளைகள் இருபது முதல் முப்பது வயதை அடையாதது வரையிலும் அவர்களால் பகுத்தறிவுள்ள மற்றும் விவேகமான சிந்தனைகளைச் சிந்திக்க முடியாதவர்களாய் இருப்பார்கள் என்று எண்ணி அநேகம் பெற்றோர்கள் தவறு செய்கின்றனர். மாறாக பத்து வயதை அடைவதற்கு முன்னதாகவே, ஜீவியத்தை விட்டு என்றும் நீங்கா எண்ணங்களானது மனதினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது மற்றும் இப்படிப்பினைக் கொடுக்கப்படுதலானது குழந்தை ஒருமாத குழந்தையாக இருக்கும்போதே கொடுக்க துவங்கப்பட வேண்டும் – சட்டத்திற்கும், ஒழுங்கிற்கும், சிருஷ்டிகரின் மேலான அதிகாரத்திற்கு அடையாளமாய்க் காணப்படும் பெற்றோரின் அதிகாரத்திற்கும் அன்புடன் கீழ்ப்படிவதற்கான படிப்பினைகளானது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தன் பெற்றோர்களையும், [R3598 : page 220] தன் இல்லத்தின் சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளாத பிள்ளையானவன் – கர்த்தருக்கும், அவரது உடன்படிக்கையினுடைய பிரமாணங்கள் முதலியவைகளுக்கும் தனக்குக் காணப்படும் பொறுப்புகளை உணர்ந்துகொள்ளும் விஷயத்தில் சிரமத்திற்குள்ளாகுவான்.

குழந்தைப்பருவ காலங்களானது குழந்தையின் விருப்பப்படி அல்லது முக்கியத்துவமில்லாத காரியங்களில் அல்லது விளையாட்டுகளில் செலவிடப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறாகும். வாழ்க்கை என்பது மாபெரும் சிலாக்கியமான ஒன்று என்றும், மகா ஆசீர்வாதமான ஒன்று என்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் ஞானமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், வாழ்க்கையில் செய்யப்படும் காரியங்களானது தேவனுக்கு மகிமையை அல்லது நமக்கு நன்மையை அல்லது மற்றவர்களுக்கு நன்மையைக் கொண்டுவந்திட வேண்டும் என்றும் உள்ள எண்ணங்களானது… சிறுவயதிலேயே ஊட்டிவிடப்பட வேண்டும். நேரத்தைப் போக்குவது, நேரத்தை வீணடிப்பது, பிரயோஜனமில்லாமல் அல்லது ஏதோ நன்மையான விதத்தில் இல்லாமல் மணி நேரங்களையும், நாட்களையும் போக்குவது என்பது அவமானத்திற்குரிய காரியம் என்றும், இது பாவம் என்றும் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். நேரத்தை வீணடிப்பதற்கு அல்லது பிரயோஜனமற்ற, நன்மையற்ற விதங்களில் நேரத்தைப் போக்குவதற்குக் கற்றுக்கொண்டிருக்கும் குழந்தையானவன்… நிரந்தரமாய்ப் பாதிப்பிற்குள்ளாகுவான்; அவன் உலகில் பிரயோஜனமானவனாக இருக்க வேண்டுமானால், அவன் தன் குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட தவறான பாடங்களை எதிர்த்துப் போராடியே, எதிர்த்து முயற்சித்தே செய்திட முடியும்.

பிள்ளைகளுக்குச் சரியான அஸ்திபாரம் போடுவதற்கும், அவர்களது மனங்களானது ஆடம்பரமான, அறிவீனமான, முட்டாள்தனமான காரியங்களினால் நிரம்பாமல் பார்த்துக்கொள்வதற்கும், அவர்களது மணி நேரங்களும் நாட்களும் வீணடிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படுவதற்கும், பிள்ளையானவன் வாழ்க்கையில் பிரவேசிக்கவிருக்கின்ற ஜீவியத்தின் மாபெரும் வேலைக்கு அவனை ஆயத்தமாக்கிடுவதற்கு, தகுதியாக்கிடுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் விலையேறப்பெற்றது என்று அன்போடு பிள்ளையானவனுக்குப் புரிய வைக்கப்படுவதற்கும் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். வனையப்படுவதற்கேதுவான தன் பிள்ளையினுடைய மனதில் சுயநலமான காரியங்களை அல்ல, மாறாக மேலான எண்ணங்களை, சிறந்த இலட்சியங்களைப் பதியவைத்திடுவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கடமைப்பட்டிருக்கின்றனர். எவ்விதமான வீணடித்தல்களும் குற்றஞ்சாட்டுதலுக்கு ஏதுவானவை என்றும், கஞ்சத்தனமாய்ப் பணத்தைச் சேமித்தலும்கூடப் பழிப்புக்கிடமானது என்றும், பணத்தைக் குவித்துக்கொள்வதை மாத்திரமே பிரதானமான இலட்சியமாக வைத்திருக்கும் ஜனங்கள் இது விஷயத்தில் வெறிகொண்டவர்களாய்க் காணப்படுவார்கள் என்றும் வார்த்தையின்மூலமாயும், முன்மாதிரிமூலமாயும் அன்பான விதத்தில் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்; இன்னுமாக தேவனுடைய வழிநடத்துதலின்பேரில் நமக்கு வருகின்றதான ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள், அனுகூலங்கள் மற்றும் வாய்ப்புகள் அனைத்தையும் – நம்முடைய மனரீதியான, ஒழுக்க ரீதியான, சரீர ரீதியான முன்னேற்றத்திற்காக வேண்டியும், பொன்னான பிரமாணத்திற்கு இசைவாகவும், அன்பின் பிரமாணத்திற்கு இசைவாகவும், முதலாவது தேவனை அன்புகூர்ந்து இரண்டாவது நம் அயலார்களை அன்புகூர்தல் எனும் பிரமாணத்திற்கு இசைவாகவும், நம்மால் முடிந்தளவுக்கு அனைவருக்கும் உதவியளிப்பதற்காக வேண்டியும் – பயன்படுத்திடுவது நியாயமான மற்றும் சரியான காரியமாயிருக்கும் என்றும் வார்த்தையின்மூலமாயும், முன்மாதிரிமூலமாயும் அன்பான விதத்தில் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.