R2279 – யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2279 (page 94)

யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்

JOHN THE BAPTIST AND HIS MURDERERS

மத்தேயு 14:1-12

யோவான்ஸ்நானன், எதிர்காலத்தில் வரும் பரலோக இராஜ்ய வகுப்பாரில், மணவாட்டியின் அங்கத்தினர்களில் காணப்படுவதில்லை; ஆனால் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் தீர்க்கத்தரிசிகள் அனைவரின் மத்தியிலும், இவர் பிரதானமானவர்களில் ஒருவராகக் காணப்படுவார்; இராஜ்யத்தினுடைய பூமிக்குரிய பாகத்தின் அங்கத்தினனாகப் பங்கெடுக்கும் சிலாக்கியம் அடைவார்; மேலும் பூமியெங்கும் காணப்படும் பிரபுக்களில் ஒருவராகக் காணப்படுவார். மேலும் இராஜ்யத்தின் ஓர் ஊழியக்காரனாக இவர் மிகவும் கனப்படுத்தப்படுவார், ஆசீர்வதிக்கப்படுவார் மற்றும் தேவனுடைய கிருபையினால் இவர் அழைக்கப்பட்ட ஸ்தானத்தில் பயன்படுத்தப்படுவார். மேலும் இப்படி இராஜ்ய வகுப்பாரின் ஊழியக்காரர்களாகக் காணப்படும் முற்பிதாக்கள், சுவிசேஷ யுகத்தில் ஜெயங்கொண்டவர்களைக்காட்டிலும் குறைவாய் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவதின் நிமித்தமாக, சபையைவிட வேறுபட்ட விதத்தில் கனப்படுத்தப்பட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாங்கள் இங்குக் குறிப்பிடுகின்றோம்; ஒருவேளை அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கவில்லையெனில், அவர்கள் கனப்படுத்தப்படவே மாட்டார்கள். ஜெயங்கொள்பவர்கள் மாத்திரமே இராஜ்யத்தின் வேலையில் எந்த ஒரு பங்கையாகிலும் அடைய முடியும்; மேலும் அந்த வேலையில் எந்த ஒரு பங்கையாகிலும் அடைவது என்பது கனமுள்ளதாகவும், வாஞ்சிக்கப்பட வேண்டியதாகவும் காணப்படும். தேவன் இரண்டு வகுப்பாரைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்; ஆகையால் அவரது திட்டத்தில், இரண்டு வகுப்பாரை அழைத்தார்; இவ்விரு வகுப்பாரும் கனமுள்ளவர்களாகவும், கனமுள்ள ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர் – ஒன்று பூமிக்குரிய தளத்திற்கு, மற்றொன்று ஆவிக்குரிய தளத்திற்கு என்று அழைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு வகுப்பாரிலும், எந்த ஒரு வகுப்பாரும் அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் காணப்படவில்லை; கர்த்தரால் அழைக்கப்படுவதும், அவரது ஊழியத்தில் எந்த ஒரு பாகத்திலாகிலும் அவரால் பயன்படுத்தப்படுவதும் கனமுள்ள காரியமாகும்; இப்படியாகப் பயன்படுத்தப்படும் அனைவரும் அவர்களுக்கேயுரிய தளத்தில் பூரணர்களாகக் காணப்படுவார்கள்; மேலும் அவரவருக்கான நிலைமையில் முழுமையாய்த் திருப்தி உடையவர்களாகவும் இருப்பார்கள்; அதாவது மீன் தண்ணீருக்குள் காணப்படுவதிலும், பறவைகள் ஆகாயத்தில் காணப்படுவதிலும் திருப்தியாய் இருப்பது போன்றதாகும்.

இந்த ஒரு பதிவும்கூடத் தவறான மனங்கொண்டுள்ள ஒரு ஸ்திரீயினால் எத்தனை மாபெரும் செல்வாக்கினைச் செயல்படுத்தமுடியும் என்பதைக் காண்பிக்கின்றது. (ஏரோதியாளாகிய) இந்தப் பொல்லாத ஸ்திரீக்கு இடம் கொடுக்கத்தக்கதாக தனது சட்டப்பூர்வமான மனைவியை ஏரோது தள்ளிவிடும் அளவிற்கு, ஏரோது அவளது செல்வாக்கின் கீழ்க்காணப்பட்டான்; தன் தாயினுடைய பொல்லாத விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கு வேண்டி ஏரோதினுடைய இராஜ்யத்தின் பாதியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையைத் துறந்துவிடும் அளவிற்கு ஏரோதியாளின் மகளும் அவளது செல்வாக்கின் கீழ்க்காணப்பட்டாள். இங்கு நமக்கு முன்புள்ள ஒரு பாடம் என்னவெனில்,… ஸ்திரீகள் இயல்பாகவே ஆண்களைக் காட்டிலும் உணர்ச்சிப் பூர்வமானவர்களாகவும், அநுகூலமான சந்தர்ப்பங்களில் நல் உணர்வுகளினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பினும், ஒருவேளை அவர்கள் தீய மனமுள்ளவர்களாகவும், பொல்லாதவர்களாகவும் மாறிப்போனால், இதற்கேற்ப தங்கள் சகோதரர்களைக் காட்டிலும் பொல்லாப்பின் உச்ச எல்லைகளுக்கும்கூடச் சென்றுவிடும் தன்மையுடையவர்களாய் இருப்பார்கள். பாவம் மற்றும் சுயநலத்தின் தீமையான ஆவி இல்லாதவர்களாக மாத்திரம் இராமல், கிறிஸ்துவின் ஆவியினால், பரிசுத்த ஆவியினால் நிரம்பிக் காணப்படுவதும் ஆண்களுக்கு மிக முக்கியமானதாகும்; இப்படியே நன்மை அல்லது தீமைக்கேதுவான உணர்ச்சிகரமான இயல்பை அதிகமாய்ப் பெற்றிருக்கும் ஸ்திரீகளுக்கும் மிக அதிக முக்கியமாய்க் காணப்படும்.

தங்கள் குமாரத்திகள் விஷயத்தில் நன்மைக்கு அல்லது தீமைக்கு ஏதுவாக வல்லமை பெற்றிருக்கும் தாய்மார்களுக்கு எத்துணை ஆலோசனை தரும் படிப்பினை இங்குக் காணப்படுகின்றது. வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டது போன்று ஸ்திரீகளின் செல்வாக்குச் செயல்படுத்தப்படுவதற்கான சரியான எல்லை இல்லத்திலே ஆகும் என்று இங்கு நாங்கள் குறிப்பிடுகின்றோம். ஓர் உண்மையான, தூய்மையான, நற்குணமுள்ள, விவேகமான தாயானவள் தன் கணவன் விஷயத்திலும், குமாரர்கள் விஷயத்திலும், தன் குமாரத்திகள் விஷயத்திலும் நன்மைக்கேதுவாய் அல்லது தீமைக்கேதுவாய்க் கிட்டத்தட்ட சொல்லமுடியாத அளவிற்குள்ள செல்வாக்கினைப் பெற்றிருப்பாள். சில நல்ல நோக்கமுள்ள ஆனால் வேதவாக்கியங்களின்படி வழிநடத்தப்படாத தாய்மார்கள் தெய்வீக ஏற்பாட்டினால் தங்கள் கைகளில் வைக்கப்பட்டுள்ளதான குடும்பச் சிலாக்கியங்கள், வாய்ப்புகள் மற்றும் கடமைகளை விட்டுவிட்டு உலகத்தைச் சீர்த்திருத்தம்பண்ணும்படிக்கு உலகத்திற்குள் கடந்து செல்பவர்கள், எத்தனை மாபெரும் தவறு செய்கின்றவர்களாய் இருக்கின்றனர். பெண் சீர்த்திருத்தவாதிகள் மற்றும் மகளீர் வாக்குரிமைக்காகப் போராடும் பெண்களின் குடும்பங்கள் எவ்வளவாய்ப் புறக்கணிக்கப்பட்டுக் காணப்பட்டு, இதன் தீமையான பின்விளைவுகள் கணவன்மார்கள்மீதும், பிள்ளைகள்மீதும் காணப்படுவதை நாம் பார்க்கின்றோம். ஒவ்வொரு தாயானவளும் தன் சொந்தக் குடும்பத்திலும், குடும்ப வட்டாரங்களிலும், கர்த்தருடைய குடும்பமாகிய சபையில் அவளுக்குத் திறக்கப்படும் வாய்ப்புகளிலும், அவள் தனது ஒவ்வொரு தாலந்தையும், வரத்தையும் திவ்விய வசனத்திற்கும், பரத்திலிருந்து வரும் ஞானத்திற்கும் இசைவாகச் செயல்படுத்துவதற்கான திரளான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றாள் என்பதை உணர்ந்துகொள்வாளாக.