R4268 – அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4268 (page 324)

அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது

LOVING KINDNESS, O HOW GREAT!

“ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”(எபேசியர் 4:32)

“என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் / ஆரம்பத்திலேயே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.”(நீதிமொழிகள் 8:17)
[R4269 : page 326]

நமது இரண்டாம் ஆதார வசனம்

ஓய்வுநாள் பாடசாலையின் குழு, இந்த நாளின் தியதியினை உலகம் முழுவதிலுமுள்ள ஓய்வுநாள் பள்ளியில் உள்ள ஜனங்களினால் தேவனுக்கு விசேஷித்த ஜெபத்தினை ஏறெடுக்கும்படியாக நியமித்துள்ளது. மேலே நாம் பார்த்துவரும் பாடத்திற்கும், இவ்விஷயத்திற்கும் தொடர்பு இல்லை என்றாலும், “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;; அதிகாலையில் / ஆரம்பத்திலேயே என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” என்ற நமது இரண்டாம் ஆதார வசனம் மிகவும் பொருத்தமானதாய்க் காணப்படுகின்றது. இது ஞானம் தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது, தேவன்தாமே ஞானத்தின் உருவமாய் இருக்கின்றார்; ஆகையால் இது தேவனுக்குப் பொருந்தும். இதுபோலவே தேவனுடைய கிருபையைக்குறித்துக் கேள்விப்படுவதற்கான சிலாக்கியம் பெற்றிருப்பவர்களுக்கு, கிறிஸ்து ஞானமாய் இருப்பார். அப்போஸ்தலர் கூறுகிறதுபோல நீதியுள்ளவர்கள், அவரை முறையாய் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் “கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமுமானார்.”

சுவிசேஷ அழைப்பானது விசேஷமாய்ப் பிள்ளைகளுக்கென்று விடுக்கப்பட்டது என்றோ, நமது கர்த்தருடைய போதனைகள் விசேஷமாய்க் குழந்தைகளினுடைய மனதிற்கு ஏற்றது என்றோ, அவர் பிள்ளைகளுக்குப் போதித்தார் என்றோ, அவரோ அல்லது [R4270 : page 326] அப்போஸ்தலர்களோ ஞாயிறு பள்ளிகளை நிறுவினார்கள் என்றோ நம்முடைய கருத்துக்கள் காணப்படுகிறது இல்லை. (ஆறாம் தொகுதியில் ஞாயிறு பள்ளி வேலைகள்குறித்த நமது விளக்கங்களைப் பார்க்கவும்). எனினும் முப்பது வயதை அடைவதுவரையிலும் சத்தியத்தின் ஊழியக்காரர்களாகிட முடியாத அளவுக்கு கிறிஸ்துவையும், அப்போஸ்தலர்களையும் யூதருடைய நியாயப்பிரமாணத்திலுள்ள வரையறைகள் தடைப்பண்ணினாலும், அத்தகைய வரையறைகள் இப்பொழுது செயலாக்கத்தில் இல்லை, ஆகையால் எவ்வளவுதான் வயதானவராக இருப்பினும், எவ்வளவுதான் சிறியவராக இருப்பினும் “கேட்க செவியுள்ளவன் கேட்கக்கடவன்” என்று நாம் கூறுவது சரியே.

தங்கள் பிள்ளைகள் மிகச் சிறந்த விதத்தில் மதத்தின் அடிப்படையிலுள்ள போதனைகளையும், அன்றாட ஜீவியத்தில் பெற்றோரின் முன்மாதிரியையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்ளும்படிக்கு எங்கும் காணப்படும் சத்தியத்திலுள்ள அருமையான சகோதர சகோதரிகளை நாம் ஊக்குவிக்கின்றோம். இல்லத்தில் ஒரே ஒரு குழந்தைதான் இருப்பினும் ஒவ்வொரு இல்லமும் அதன் ஞாயிறு பள்ளி வகுப்பினைப் பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளினால் பங்கெடுக்கப்படும் ஐக்கியத்தின், உறவின் மற்றும் துதித்தலின் அமைதியான, புனிதமான மணி நேரங்கள் காணப்பட வேண்டும் சந்தோஷத்திலும், அன்பிலும் மற்றும் சத்தியத்திலும் காணப்படும் சிலரின் குடும்பங்களில் முறையான குடும்ப ஜீவியத்தினுடைய செல்வாக்கினை கவனிப்பதற்கு அருமையாய் உள்ளது. அனைவரும் இப்படியாகத் தீர்மானித்தவர்களாகி, தேவகிருபையினால் நிறைவேற்றினார்களானால் அது என்னமாயிருக்கும்!

குழந்தைப்பருவத்தில் ஓர் அருமையான நிலை உள்ளது – அதன் கள்ளங்கபடற்ற நிலைமை, அதன் விசுவாசம் அருமையானதாகும்; குழந்தையின் மனமானது சத்தியத்திற்கும், அதன் ஆவிக்கும்கூட, அர்ப்பணிப்பின் ஆவிக்கும் ஆச்சரியப்படும் விதத்தில் இணங்குகின்றது. நம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் சிறுவயது முதற்கொண்டு – சகல ஈவுகளையும் அருளுகிறவரென ஆண்டவரை அன்புகூர்ந்திடுவதற்கும், அவர் சித்தத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கும், தங்களுடைய சின்னஞ்சிறியவைகள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்திடுவதற்கும் கற்றுக்கொடுக்கப்பட்டால், அது எத்துணை ஆசீர்வாதமாய்க் காணப்படும்! இப்படியாகப் போதிக்கப்படும் பிள்ளைகள் பெறும்பாலும் அவர்களது பெற்றோர்களுக்குப் போதிப்பவர்களாகி, அர்ப்பணிப்பின் உண்மையான ஆவியினை வெளிப்படுத்துகிறவர்களாய் இருப்பார்கள். நாங்கள் இங்கும் அங்குமாகப் பல பிரயாணங்களில் கடந்துசெல்கையில், இப்படியாகச் சிறுவயதிலேயே கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மற்றும் அவரது சித்தத்திற்கு இசைவாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ள சிறியவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகளில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் எந்தக் காசுகளையும் மிட்டாய்கள் வாங்குவதற்குப் பயன்படுத்திடுவதற்குப் பதிலாக, அப்பணமானது கர்த்தருக்காகக் கொடுக்கப்படவேண்டிய பணமாகவும், ஜனங்கள் வேதத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவன் அன்புள்ளவராய் இருக்கின்றார் என்று புரிந்துகொள்வதற்கும் உதவப்படும்படிக்கு கைப்பிரதிகளை அச்சிடும்படி அவ்வப்போது சகோதரர் ரசல் அவர்களுக்கு அனுப்பிவைக்கவேண்டிய பணமாகவும் இவர்களால் சேமித்து வைக்குமளவுக்கு, மிகப் பலமாய் வளர்ச்சிப்பெற்றுள்ள அர்ப்பணிப்பின் ஆவியினை உடையவர்களாய் இருக்கின்றனர். இந்த அருமையான குழந்தைகளுடைய காசுகளை நாம் நாடாமல், மாறாக இவர்களுடைய நலன்குறித்தும், இவர்கள் ஜீவியத்தில் கடந்துவரும் மாபெரும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்குறித்தும், இவர்களது ஆறுதலுக்காகவும், இவர்களது சந்தோஷத்திற்காகவும், வரவிருக்கிற நாட்களில் இவர்களோடுகூட நிச்சயமாய்க் கடந்துவரும் அந்த மாபெரும் ஆசீர்வாதங்கள் குறித்தும்தான் நாங்கள் நோக்கமாய் இருக்கின்றோம். இத்தனை சிறுவயதிலேயே தேவனுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அன்புள்ள இருதயங்களானது நிச்சயமாக ஓர் ஆசீர்வாதத்தினையும், உலகத்திலுள்ள மிகுதியான தீமைகளிடமிருந்து ஒரு பாதுகாப்பையும் கண்டடையும்.

இப்படியாகச் சூழ்நிலையை முழுமையாகச் சரியாய்க் கிரகித்துப் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே அர்ப்பணிப்பின் ஜீவியத்தையும், சத்தியத்திற்காய்ச் சுயத்தை வெறுத்த ஜீவியத்தையும் துவங்கியுள்ள சிறுபிள்ளைகளில் அநேகர் இப்பொழுது மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் முதிர்ச்சியடைந்திருக்கின்றனர்; மேலும் பன்னிரண்டு மற்றும் பதிமூன்றாம் வயதுகளை அடைந்தபோது தங்களுடைய அர்ப்பணிப்பை அடையாளப்படுத்திடுவதற்கான வாய்ப்பைக்குறித்து வேண்டிக்கொண்டவர்களாக இருக்கின்றனர்; மேலும் சுவிசேஷத்தினுடைய அடிப்படைகளைக்குறித்த விரிவான அறிவைப் பெற்றிருப்பதற்கான தெளிவான சான்றையும், கர்த்தருக்கு ஒப்படைக்கப்படும் பலியைக்குறித்த இருதயப்பூர்வமான உணர்ந்து கொள்ளுதலுக்கான தெளிவான சான்றையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

“உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று நமது கர்த்தர் கூறியுள்ளார். இது போலவே உலகத்தாரை ஆசீர்வதிப்பதற்கென்று ஆயிரவருட இராஜ்யமும், அதன் வாய்ப்புகளும் ஏற்பாடுபண்ணப்பட்டுள்ளபடியினால் நம்முடைய ஜெபங்கள் உலகத்தாருக்காக ஏறெடுக்கப்படவேண்டாம்; மாறாக அவருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளவர்கள், கிறிஸ்துவுக்குள்ளான நமது சகோதர சகோதரிகள் சார்பாக நமது விண்ணப்பங்கள் ஏறெடுக்கப்படுவதாக; மேலும் இது அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களில் வயதானவர்களையும், இளையவர்களையும் உள்ளடக்கிடும். நம்முடைய பராமரிப்பு மற்றும் அறிவுரையின் கீழ்ப் பிதாவினால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும்கூடப் பொதுவான விதத்தில் நாம் ஜெபத்தில் உள்ளடக்கிக்கொள்ளலாம்; அவர்களது மேலான நன்மைக்கென்றுள்ள தேவனுடைய இந்த அனுகூலமான ஏற்பாடுகளுக்காகவும் நாம் ஜெபிக்கலாம், மேலும் இவர்களுக்குக் கர்த்தருடைய செய்தியைச் சிறந்த விதத்தில் முன்வைத்திடுவதற்கும், நம்முடைய அன்றாட நடத்தையிலும் மற்றும் நம்முடைய பிள்ளைகளை நாம் நடத்தும் விஷயத்திலும் இச்செய்தியினுடைய சாரத்திற்கு நாம் உதாரணங்களாகக் காணப்படுவதற்கும் தேவையான ஞானத்தையும், கிருபையையும் நமக்காகக் கேட்டுக்கொள்ளலாம்.