R5167 – சொந்த அலுவல்களைப் பார்த்தல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5167 (page 26)

சொந்த அலுவல்களைப் பார்த்தல்

Quietly Minding One's Own Business

“நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 4:12)

வீண் அலுவற்காரர் என்பவர், தனக்குச் சம்பந்தமில்லாத மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுபவர் ஆவார். இத்தகையவன் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கிடுவதும், அவர்களை விமர்சிப்பதும், விசாரணைச் செய்வதும், கண்டிப்பதும், கடிந்துகொள்வதும் தன் கடமை என்று கற்பனைப்பண்ணிக்கொள்கின்றான். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரின் கடமை என்ன என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொன்னான பிரமாணமானது மிகவும் உதவிக்கரமாய் இருக்கின்றது. கர்த்தருடைய இக்கட்டளையானது வீண் அலுவல் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தடைப்பண்ணுகின்றதாய் இருக்கின்றது. சகோதர அன்பிற்கும், வீண் அலுவலுக்கும் இடையிலுள்ள வித்தயாசத்தினைக் கண்டுகொள்ளத்தக்கதாகப் புதுச்சிருஷ்டியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் தன் மனசாட்சியினைப் பயிற்றுவிக்க வேண்டும் மற்றும் தன் ஒவ்வொரு வார்த்தை, கிரியை மற்றும் சிந்தையினுடைய விஷயத்தில் நீதி மற்றும் அன்பினுடைய பிரமாணங்களைச் செயல்படுத்திடுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தில், நாம் தனிப்பட்ட விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் இருந்து, அதில் நாம் உரிய கவனம் செலுத்துவோமானால், மற்ற ஜனங்களுடைய காரியங்களில் நாம் தலையிடாமல், நம் சொந்த அலுவலைப் பார்த்துக்கொள்பவர்களாக இருப்போம். ஆனால் கண்டிப்பதும் தலையிட்டுச் சரி செய்வதும் தகுதியானது என்று வேதாகமம் சுட்டிக்காண்பித்திடும் நேரங்களும், இடங்களும், சூழ்நிலைகளும் உள்ளன. பெற்றோர் பிள்ளையைத் திருத்திடலாம்; ஆசிரியர் மாணவனைத் திருத்திடலாம். வீட்டில் நடந்துகொண்டிருக்கும் காரியம் அனைத்தையும் குறித்துப் பெற்றோர் அறிந்துகொள்வது என்பது தலையிடும் காரியமாய் இராது; பள்ளிக்கூடத்தின் காரியங்களை ஆசிரியை அறிவது என்பது தலையிடுதலாய் இராது. எனினும் குடும்பத்தின் அல்லது பள்ளிக்கூடத்தின் அங்கத்தினர்களுடைய தனிப்பட்ட உரிமைகளானது ஒருபோதும் கவனிக்கத் தவறப்படக்கூடாது. பெற்றோர்-பிள்ளை மற்றும் ஆசிரியர்-மாணவன் போன்று, வீட்டின் உரிமையாளரும், வீட்டிற்குக் காரியங்களைச் செய்பவரும் அதே பிரமாணத்தின் கீழ் வருபவர்களாய் இருக்கின்றனர்.

மற்றவர்களைத் திருத்திடுவதற்கு அதிகமான நேரத்தினைச் செலவிடுபவன், அதிலும் இத் திருத்தங்களைச் சரியாயும், நேர்த்தியாயும் செய்பவனாக இருந்தாலுங்கூட, இத்தகையவன் தன்னைக் குறித்து மறந்துபோய்விடுபவனாக இருப்பான் என்பதே கற்றுக்கொள்ள வேண்டிய ஜீவியத்தின் மகா படிப்பினைகளில் ஒன்றாகும். ஒருவன் தன்னைத் திவ்விய ஏற்பாடுகளுக்கு இசைவாகக் கொண்டுவருவதும், அதிலே தன்னைத் தக்கவைத்துக் காத்துக்கொள்வதும்தான், அவனுடைய முதலாம் கடமையாகும்.

வீண் அலுவல் என்பது அவிசுவாசத்திற்கான சான்றாகும்

தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் பரிசுத்த ஆவியினுடைய கனிகளையும், கிருபைகளையும் வளர்த்தி, விருத்தியாக்கிட வேண்டும். இப்பண்புகள் குறித்துக் கற்றறிந்து, தேவ செய்திக்கொடுக்க முடிபவர்களாய் இருந்தும், தங்களுடைய இந்த அறிவை அன்றாட ஜீவியத்தின் காரியங்களில் சரியாய்ச் செயல்படுத்திட முடியாதவர்களாய் இருப்பவர்கள் அநேகர். சாந்தமும், தயவும், அன்பும் தங்களுடைய சொந்தக் காரியங்களில் எதிலே காண்பிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்துகொள்ள முடியாதவர்களாய் இருக்கின்றனர். வார்த்தைகள் மூலமாய் என்பதைவிட மாதிரியின் மூலமாய் நம்மால் சில விஷயங்களை மற்றவருக்கு நன்கு போதிக்க முடியும். ஒருவேளை நீதி மற்றும் அன்பின் கொள்கைகளினால் நாம் ஆளப்படுகின்றோம் என்பதை ஜீவியத்தினுடைய சிறு காரியங்களிலேயே நாம் காண்பிப்போமானால் மற்றும் ஒருவேளை சோதனையின் வேளையில் சாந்தம், தயவு மற்றும் ஆவியின் மற்றக் கனிகளை நாம் வெளிப்படுத்துவோமானால், நன்மைக்கேதுவான நம் செல்வாக்கானது மிகவும் பெரிதாகிடும்.

வாழ்க்கையில் கவனித்ததை வைத்துப்பார்க்கையில் உலகில் பாதிப்பேர் வீண் அலுவல் காரர்களாகவே இருக்கின்றனர் மற்றும் இந்தப் பலவீனத்தின் காரணமாகவே இவர்களுடைய சோதனைகளில் பெரும்பாலானவைகள் வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் இப்படியாக இருப்பார்; ஒருவேளை கணவன், ஒருவேளை மனைவி, ஒருவேளை பிள்ளை மற்றவர்களுடைய பரிவையும், பெருந்தன்மையையும் சாதகமாக்கிக் கொண்டு, வீட்டை ஆளுகிறவராக இருப்பார். பொதுவாகவே இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அதிகமான அநீதி செய்யப்படுகின்றது. இந்த நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்பவர்கள், “ஒருவேளை அதிகாரத்தினை நான் கையில் எடுக்காவிட்டால், காரியங்கள் சரியாய் நடக்காது” என்று கூறி, தங்கள் நடத்தையினை நியாயப்படுத்திட பெரும்பாலும் முற்படுகின்றனர். இத்தகையவர்கள் தாங்கள் வீண் அலுவலர்களாய் இருக்கின்றனர் என்பதை உணராதவர்களாய் இருக்கின்றனர்.

இத்தகைய நடத்தையானது, தேவனிடத்தில் விசுவாசமின்மையை விவரிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் நமது கடமையினைச் செய்திட வேண்டும் மற்றும் மீதியைக் கர்த்தரிடத்தில் விட்டுவிட வேண்டும். திவ்விய ஏற்பாடுகளுக்குத் தாங்கள் கீழ்ப்பட்டிருக்காததால் தாங்கள் பெரும் காரியங்களை இழந்துள்ளனர் என்று பிற்காலங்களில் ஜனங்கள் உணர்ந்துகொள்வார்கள். இப்படியாக அநீதியினைச் செயல்படுத்திடும் கர்த்தருடைய ஜனங்களில் உள்ள யார் ஒருவரும், புதுச்சிருஷ்டியென வளர்ச்சிக் காண்பிக்காதவர்கள் ஆவர். மற்றவர்களுடைய உரிமைகளைப் புறக்கணித்துப்போட்டு, தாங்கள் விரும்பினதைச் செய்வதற்குத் தங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்துவது கணவனாகவோ, மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ இருந்தால், அத்தகைய நடத்தையானது திவ்வியப்பிரமாணத்திற்கும், அன்பின் ஆவிக்கும் முரணானதாக இருக்கும். தாங்கள் பெரிய தவறைச் செய்துள்ளதை இவர்கள் என்றோ ஒருநாள் உணர்ந்துகொள்வார்கள். (கொலோசெயர் 3:18-21).

குடும்பத்தின், இல்லத்தின் தலைவன் தான் பெற்றிருக்கின்றதான பொறுப்பினை அடையாளம் கண்டுகொண்டவராய்க் காணப்பட வேண்டும் மற்றும் அப்பொறுப்பினை நிறைவேற்றிடுவது அவரது கடமையாக இருக்கின்றது. தன்னால் வழிகாட்டப்படுபவர்களுடைய நலன்களையும், விருப்பங்களையும் கருத்தில்கொண்டவராக அன்புடன்கூடிய அக்கறையில் காரியங்களை அவர் செய்திட வேண்டும். இல்லத்தில் கணவனுடைய கடமை என்பது திவ்வியப்பிரமாணம் இவர்மேல் வைத்திட்ட கடமையாக இருக்கின்றது மற்றும் இக்கடமையினை நிறைவேற்றிடுவதற்கு இவர் தன் குடும்பத்தினுடைய நலன் கருதி, தன் சொந்த நேரத்தையும், விருப்பங்களையும் தியாகம் செய்வதற்குப் பெரும்பாலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றார். இந்தப் பொறுப்பினை நிறைவேற்றிடுவது என்பது இவருடைய கடமையாக இருக்கின்றது (எபேசியர் 5:25-33; 6:4).

குடும்பத்தில் தாயினுடைய ஸ்தானம் குறித்தும் வேதவாக்கியங்களானது விவரிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த ஸ்தானம் உயர்ந்த ஒரு ஸ்தானமாகும். ஆனால் இல்லத்தில் தலைவனுடைய ஸ்தானத்தின் உரிமையினைப் பறித்துக்கொள்ளும் ஒவ்வொரு ஸ்திரீயும், ஒருவேளை அவளது இத்தகைய தவறான நடக்கையில் சிலகாலம் செழித்தோங்கினாலும்கூட, இப்படிச் செய்வது என்பது அவளுக்கும், அவள் குடும்பத்தினுடைய மேலான நன்மைகளுக்கும் ஊறுவிளைவிக்கின்றதாய் நிச்சயமாயிருக்கும் (1 பேதுரு 3:1-6).

தங்கள் சொந்தக் குடும்பத்தினுடைய அங்கத்தினர்களைக் கையாளும் விஷயத்தில் அநேகர் பொறுமையற்றும், இரக்கமற்றும் காணப்படுகின்றனர்; ஆனால் வெளியாட்களுக்கு ஒழுக்கத்திற்கு மாதிரிகளாகத் தோற்றமளிக்கின்றனர். இவர்கள் மனரீதியான, சரீர ரீதியான விஷயத்தில் தங்கள் குடும்பத்தாரிடத்தில் குறிப்பிட்ட பொறுப்பு ஒன்றினைப் பெற்றிருக்கின்றனர் என்று நாம் இவர்களுக்கு விசேஷமாய் நினைப்பூட்டிடும்போது, இவர்கள் தங்கள் நடத்தைக்கு நியாயம் கற்பித்திடும் விதத்தினைக் காண்பதற்கே நமக்கு வருத்தமாயுள்ளது. தேவனுடைய அங்கீகரிப்பினைப் பெற நாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் – உலகத்தார் மற்றும் சகோதரர்கள் விஷயத்தில் மாத்திரமல்லாமல், தங்கள் சொந்தக் குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் விஷயத்திலும்… தாங்கள் எல்லா விதத்திலும் தங்கள் சொந்த அலுவல்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதில் உறுதிக்கொள்ளத்தக்கதாக, தன் நடத்தையினைக் கவனித்துக்கொள்வானாக.