R3204 (page 173)
“அப்போஸ்தலர் 27:33-44
“”தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.”” (சங்கீதம் 107:6)
“பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும், இதோ உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார்”” எனும் வார்த்தைகள் மிகவும் அர்த்தமுள்ளவைகளாகும் (அப்போஸ்தலர்27:24). இது சோதோமிற்கான ஆபிரகாமினுடைய ஜெபத்தினை நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது – ஒருவேளை சோதோமில் ஐந்து நீதிமான்கள்கூட இருப்பார்களானால், அப்பட்டணத்தைக் காப்பாற்றிடுவதற்குத் தேவன் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வார்த்தைகளில் – சிறந்த நோக்கமுடையவர்கள் அநேகரால் இக்காலங்களில் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தவறான போதனையாகிய… “”தேவனுடைய தகப்பன்துவமும் மற்றும் மனுஷருடைய சகோதரத்துவமும்”” குறித்துத் தெரிவித்திடும் எதுவும் இல்லை. மாறாக அவ்வசனத்தினுடைய வார்த்தைகளில், தேவனுடன் தனிப்பட்ட உறவுகொண்டிருக்கும் நிலைமையில் ஒரே ஒரு மனுஷன்தான் அந்தக் கப்பலில் காணப்பட்டதாகத் தெரிகின்றது. கப்பலில் இருந்த மற்றவர்கள் எப்படிப்பட்டதான இயல்பான குணங்களை உடையவர்களாக இருப்பினும், அவர்கள் ஒருபோதும் பிதாவுடன் தனிப்பட்ட உறவுக்குள் வராதவர்கள் ஆவர். இவ்வசனத்தின் மற்றுமொரு கருத்து என்னவெனில் … பரிசுத்தவான்களோடு கடந்துவரும் திவ்விய பராமரிப்பானது, அவர்களோடு கூட இருப்பவர்களுக்கு… இப்பாடத்தின் சந்தர்ப்பத்தில் காணப்படுவது போன்று, கூடஇருப்பவர்கள் உலகத்தாராகவும், மறுபடி ஜெநிப்பிக்கப்படாதவர்களாகவும் இருப்பினும்… அவர்களுக்கும் ஒரு மாபெரும் ஆசீர்வாதமாய்க் காணப்படும். இக்கருத்தானது தேவனுடைய ஜனங்களின் பூமிக்குரிய குடும்பங்கள் விஷயத்தில் குறிப்பாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. விசுவாசிக்கும் அர்ப்பணம்பண்ணியுள்ள தகப்பன் அல்லது தாய் நேரடியாய்த் திவ்விய பராமரிப்பின் கீழ்க் காணப்படுபவர்களாய் இருக்கின்றனர்;; ஏனெனில் தேவதூதர்களைக் குறித்து, “”இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?”” (எபிரெயர் 1:14) என்று எழுதப்பட்டுள்ளது மற்றும் இவர்களுக்குப் பணிவிடைச் செய்கையில், கர்த்தரோடு முழுமையான உறவிற்குள் வராத இவர்களது குடும்பங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு, பாதுகாக்கும் பராமரிப்பின் கீழ் வருகின்றனர் என்று நாம் பொதுவாய் அனுமானிக்கின்றோம். வேறொரு இடத்தில் சில விதங்களில் விசுவாசியான மனைவி, தன் கணவன் மீது ஓர் ஆசீர்வாதமான செல்வாக்கினைக் கொண்டிருக்கிறாள் அல்லது விசுவாசியான கணவன், பிள்ளைகள் தொடர்புடைய விஷயத்தில் மனைவி மீது ஓர் அனுகூலமான செல்வாக்கினைப் பெற்றிருக்கின்றார், இல்லையேல் பிள்ளைகள் அசுத்தமானவர்களாய்க் கருதப்பட்டிருப்பார்கள் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார் (1 கொரிந்தியர் 7:14). இதுவும் திவ்விய பராமரிப்பானது விசேஷமாய்ப் பரிசுத்தவான்களுக்கு உரியது என்றாலும், அது எல்லா வகையான அவர்களது நலனுக்கடுத்தவைகளையும் உள்ளடக்கிடும் என்னும் அதே படிப்பினைக்கான மற்றுமொரு உதாரணமாகும். இது பூமிக்குரிய ஐசுவரியம், ஆஸ்தி அருளுவதையோ, பவுலின் சம்பவத்தைப் போன்று விபத்துக்கள், கப்பல் சேதங்கள் முதலானவைகளிலிருந்து காப்பாற்றுவதையோ கண்டிப்பாய் உள்ளடக்கிடும் என்றில்லை ஆனாலும் அது சில விதங்களில், சில அளவுகளில் ஓர் அனுகூலத்தினை எப்போதும் உள்ளடக்குகின்றதாக இருக்கும். இக்கருத்திலிருந்து நம்மால் முடிந்த அளவுக்கு ஆறுதல் அனைத்தையும் எடுத்துக்கொள்வோமாக. பரிசுத்தவான்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாய் நடந்தேறும் மற்றும் இந்தப் பரிசுத்தவான்களுக்கு நெருக்கமானவர்களாகவும், அருமையானவர்களாகவும் இருப்பவர்களும்கூட நிச்சயமாய்ப் பரிசுத்தவான்களுக்குரிய திவ்விய பராமரிப்பிலும், அவர்களது நலனுக்கடுத்தவைகளிலும் சில அளவுகளில் / விதங்களில் பங்கெடுப்பவர்களாய் இருப்பார்கள். “