R4854 – தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4854 (page 218)

தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்

PROVIDING FOR ONE'S NATURAL HOUSEHOLD

“””தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.”” (1 தீமோத்தேயு 5:8; திருவிவிலியம்)

தன்னைச் சார்ந்திருப்பவர்களாகிய தன் சொந்த வீட்டாரை ஆதரியாத ஒருவன் விசுவாசத்தை மறுதலித்தவனாகவும், அவிசுவாசியிலும் கேடானவனாகவும் இருப்பான் என்று, மேல் இடம்பெறும் வேதவாக்கியமானது விவரிக்கப்படலாம்.

இது குறிப்பாய்க் கிறிஸ்தவ கணவன் மற்றும் அவன் தன் மனைவி மற்றும் தன் பிள்ளைகளுக்காய்க் கொண்டிருக்கும் கடமைச் சம்பந்தப்பட்டதாகும். கணவனானவன் ஒருவேளை மனைவியை ஆதரியாமலும், அவளைப் பேணுவதை நிறுத்தியும் விடுவாரானால், மேலும் இருதயத்திலோ, பாசத்திலோ அல்லது நிஜமாகவோ அவளைக் கைவிட்டுவிடுவாரானால், இப்படி இருப்பது என்பது அவர் கர்த்தரிடமிருந்தும், ஆவியினுடைய வழிநடத்துதலிடமிருந்தும், “”முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கும் பரத்திலிருந்து வருகிற ஞானத்தினிடமிருந்தும்”” கவலைக்கிடையான விதத்தில் விலகிப்போயுள்ளார் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.

இம்மாதிரியான சூழ்நிலைகளில் இத்தகையவர் சீர்த்திருந்தாதது வரையிலும், இவர் கர்த்தரினால் “”ஜெயங்கொண்டவரென”” அங்கீகரிக்கப்படுவார் என்று நாம் எண்ணிட முடியாது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் உலகத்தில் பிறக்கத்தக்கதாக அவர்களுக்குச் செத்துக்கொண்டிருக்கும் சிறு அபூரண சரீரங்களைக் கொடுப்பது மாத்திரமல்லாமல், ஜீவியத்தை ஆரம்பிக்கத்தக்கதாக இன்னும் அதிகமானவைகளை அவர்களுக்குச் செய்திடுவதற்கும் கடமைப்பட்டிருக்கின்றனர். பிள்ளைகளை உலகத்திற்குக் கொண்டு வந்திருப்பதினால், அவர்கள் உலகில் நிலைநிற்கத்தக்கதாக அவர்களுக்கு அவசியமான, நியாயமான காரியங்களைப் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகின்றது. இது குழந்தைப் பருவத்திலும்;, வாலிபப் பருவத்திலும் அவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குவதை மாத்திரம் உள்ளடக்காமல், இன்னுமாக நாம் அநேகம்முறை குறிப்பிட்டுள்ளது போன்று அறிவு சார்ந்த மற்றும் ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளை வழங்குவதையும்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது; இவை அனைத்தும், தேவைக்குத் தவிர மற்றபடி குழந்தைகளுடைய நலன்களுக்காகச் சேர்த்து வைப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.

ஜீவியம் நிலையற்றதாய் இருப்பதைக் காண்கையில், பிள்ளைகள் முதிர்ச்சி நிலைமைக்கு வருவதற்கு முன்னதாக ஒருவேளை தான் மரித்தால், குடும்பத்தின் தேவைகளுக்கெனத் தகப்பன் முன்னதாகவே ஏதோ சிலவற்றைச் சேர்த்து வைப்பதற்கான வேதாகம அறிவுரைகளாக இவ்வார்த்தைகளைப் பொருத்திப்பார்ப்பதும் நியாயமானதே. ஆனாலும் பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்ளத்தக்க விதத்திலும், பாதிப்பு அடையும் விதத்திலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென்று சொத்துக்களைச்   சேர்த்து   வைக்க   நாடிட   வேண்டும்   என்ற   அர்த்தத்தில்  அப்போஸ்தலன் இவ்வார்த்தைகளைப்  பேசியுள்ளாரென  நாங்கள்  எண்ணுகிறதில்லை.  நற்பிறப்படைந்து,   நியாயமான கல்வியறிவையும், முதிர்ச்சிக்கு நேரான நியாயமான வழிகாட்டுதலையும் பெற்றிருக்கும் குழந்தையானவன் நல்ல நிலைமையில் இருப்பவனாகவும், தன்னில் ஐசுவரியமான சொத்தைப் பெற்றவனாகவும் இருப்பான்; மேலும் இத்தகைய ஏற்பாடுகளைத் தன் பிள்ளைக்காகச் செய்துள்ள தகப்பன், இவ்விஷயத்தில் தான் தெளிந்த புத்தியினாலும், பரிசுத்த ஆவியினாலும் ஆண்டு நடத்தப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை தன் குடும்பத்திற்கென்று தான் எந்தச் சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை என்றாலும் அல்லது ஓர் உறைவிடம் அல்லது வீட்டைத்தவிர வேறு ஏதும் விட்டுச்செல்லவில்லை என்றாலும்கூட, தான் கர்த்தரினால் அங்கீகரிக்கப்படும் நிலைமையில் இருப்பதாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒரு மனுஷன் தன் உக்கிராணத்துவத்தை நிறைவேற்றியுள்ளவனாய் இருப்பான்; மற்றும் இத்தகையவருடைய பிள்ளைகள் இறுதியில் இவரது உண்மையினை நிச்சயமாய் உணர்ந்துகொள்வார்கள்.

பொதுவாய் இருக்கும் மனுக்குலத்தாரைக்காட்டிலும் நம்முடன் இரத்த பந்தத்தில் காணப்படுபவர்கள் மீது நாம் அக்கறைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். ஒருவேளை பொதுவாய் இருக்கும் மனுக்குலத்தாரிடம் நாம் இரக்கமும், பரிவும் கொண்டிருக்கத்தக்கதாக, கர்த்தருடைய ஆவியானது நம்மை வழிநடத்துமானால், நம்முடைய உறவினர்கள் மீதான நம் உணர்வுகளுக்கு நாம் விசேஷமாய்க் கவனம் செலுத்திட வேண்டும் மற்றும் நம்முடைய வாய்ப்புகளுக்கு ஏற்ப உதவிகரமாய் நாம் காணப்பட வேண்டும். எனினும் நம்முடைய கணிப்பின்படி பார்க்கையிலும், வேதவாக்கியங்களினுடைய அறிவுரைகளின்படி பார்க்கையிலும், நமது கர்த்தருடைய நடத்தையிலும், அப்போஸ்தலர்களுடைய நடத்தையிலும் நமக்கு முன்வைக்கப்பட்டுள்ளதான முன்மாதிரியின்படி பார்க்கையிலும், நம்முடைய பூமிக்குரிய உறவினர்களிடத்தில் மிக விசேஷித்த ஐக்கியத்தைக்கொண்டிருப்பதும் அல்லது விசுவாச வீட்டாரை நாம் நடத்திடுவதுபோன்று நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதும், நடத்திடுவதும் ஞானமாய் இராது.

[R4854 : page 219]

“”தன் சொந்த வீட்டாரை ஆதரியாதவன். . . விசுவாசத்தை மறுதலிக்கிறவனாய் இருப்பான்”” எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்கு இசைவாக நம்மேல் சார்ந்திருக்கும் இத்தகைய நெருக்கமான உறவுமுறைகளை இங்கு    நாம் விதிவிலக்காக்குகின்றோம்.  இந்த   விதிவிலக்கிற்கு  அப்பாற்ப்பட்டவர்களாகிய பொதுவான ஜனங்களுக்கு “”நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்”” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளை நாம் பொருத்துகின்றோம் (கலாத்தியர் 6:10). விசுவாச வீட்டாருக்கு அடுத்தே நம் தூர சொந்தங்கள் வருகின்றனர்.

ஆம்! புதுச்சிருஷ்டியினுடைய கண்ணோட்டத்தின்படி புதிய உறவுகள், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கங்கள்  என்பவர்கள்,  நம்முடைய  சொந்த  வீட்டாரின்  அங்கத்தினர்களாய்  இருப்பார்கள் மற்றும் இவர்களுடைய இம்மைக்குரிய காரியங்கள் சில விதங்களில் நமக்கான பொறுப்புகளாகுகின்றது. நம்முடைய கர்த்தர் வாழ்ந்த காலத்திலிருந்து வேறுபடும் ஒரு காலகட்டத்தில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கும்   இக்காலங்களில்   பொதுத்தர்மங்கள்   இருக்கின்றன;   இதன் காரணமாக இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் பேசினபோது அதற்கிருந்த அதே அழுத்தத்துடன் இக்காலங்களில் பொருந்துகிறதில்லை. பொது நலன்களுக்காக தன் பங்கு வரியினை ஒருவன் செலுத்துவானானால், அது உரிய   முன்னேற்பாடுகளைச்   செய்கிறதாய்ச்   சிலசமயங்களில்   காணப்படும்;    அநேகமாக   இதன்
இலாபங்களில் ஒரு பங்கானது பிற்காலங்களில் அவனுக்கே பயன்படும் அவசியம் ஏற்படலாம் அல்லது அவன் நண்பர்கள் யாருக்கோ – அவன் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கோ பயன்படும் அவசியம் ஏற்படலாம்.

 

பரிசுத்த விசுவாசத்தில் ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல்

 

கிறிஸ்து தம் சொந்த வீட்டாருக்கான தலையாக இருக்கின்றார். தம் ஜனங்கள் தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் பாரமாய் இராமல், மாறாக ஒவ்வொருவரும் மற்றவர் விஷயத்தில் பொறுப்பு ஒன்றினை உணர்ந்து, பலப்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும், “”ஒருவரையொருவர் மகா பரிசுத்த விசுவாசத்தில் கட்டியெழுப்புவதற்கும்”” மகிழ்ச்சியோடு உதவிகரம் அளித்திட வேண்டுமெனக் கர்த்தர் நோக்கம் கொண்டுள்ளார். இதுவே நம் கர்த்தர் தம் பின்னடியார்களைப் புதிய குடும்பமென, புதிய வீட்டாரென, “”விசுவாச வீட்டாரென”” ஒன்றுகூட்டிடுவதற்கான நோக்கமாகும். எங்கே கர்த்தருடைய நாமத்தில் இரண்டு  அல்லது  மூன்று  பேர்கள்  கூடுகின்றார்களோ,  அங்கே  ஆசீர்வாதம்  ஒன்றை  அருளத்தக்கதாக, அவர்கள் நடுவில் அவர் விசேஷமாய்க் காணப்படுவார் என்ற வாக்குத்தத்தத்துடன்கூட, நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியங்கொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவவும், ஒருவரோடொருவர் ஒன்றுகூடவும் வேண்டும் என்பதாகவும், ஒருவரோடொருவர் ஒன்று கூடுவதற்குத் தம் ஜனங்கள் மறந்துவிடக்கூடாது என்பதாகவும் திரும்பத்திரும்ப அறிவுறுத்தப்பட்டிருப்பதையும், ஊக்குவிக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம்.

மீண்டுமாக நம் ஆதார வசனத்திற்கு நாம் திரும்புகையில், தன் சொந்தக் குடும்பத்தைப் பற்றின தன் கடமையைப் புறக்கணிக்கிற ஒருவன், விசுவாசத்தை மறுதலிக்கிறவனாக இருப்பான் என்று அப்போஸ்தலன் கூறுவதை நாம் கவனிக்கின்றோம். நாம் அறிக்கைப் பண்ணுகிற விசுவாசமானது, நாம் பெற்றுக்கொள்ளுகின்றதான சில விஷயங்களிலுள்ள விசுவாசமாக மாத்திரம் காணப்படாமல், அது ஒழுக்கம் விஷயங்களையும், நமது குணலட்சணங்களையும், பொதுவாயுள்ள ஜீவியத்தின் காரியங்கள் அனைத்தையும்கூடத் தாக்கத்திற்குள்ளாக்குகின்றதாய் இருக்கின்றது. மற்றவர்கள் தேவனை அன்புகூருவதைக் காட்டிலும் நாம் தேவனை அதிகமாய் அன்புகூருவதாக அறிக்கைப்பண்ணுகின்றோம். நம்மை நாம் அன்புகூருவதுபோன்று நம் அயலானை அன்புகூருவதாக நாம் அறிக்கைப்பண்ணுகின்றோம். இதுவே நம் தரநிலையென நாம் அறிக்கைப்பண்ணுகின்றோம். தன்னை அன்புகூருவதுபோன்று தன் அயலானை அன்புகூருவதே தன் அயலான் விஷயத்திலுள்ள ஒரு மனுஷனுடைய கடமையாகக் காணப்படுமானால்,  அப்படியானால்  அவனுடைய  சொந்தக்  குடும்பத்தின்  விஷயத்தில்  இதுவிஷயம் இரண்டு மடங்காய்க் காணப்படும். ஒருவன் இதுவிஷயத்தில் தவறுவானானால், அவன் தான் அறிக்கைப்பண்ணுகின்ற கிறிஸ்துவின் உபதேசங்களைத் தவறாய்க் காட்டுபவனாய் இருப்பான். ஒருவன் தான் அறிக்கைப்பண்ணிடும் உபதேசங்களுக்கு முரணாய் ஜீவித்தல் என்பது, அவன் தன் விசுவாசத்தை மறுதலிக்கின்றதாய் இருக்கும். ஜீவியத்தின் விஷயத்தில் பரவலாய் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ள இந்த நியமங்களை மீறி வாழுதல் என்பது, உலகத்தாரைக்காட்டிலும் அதிகமாக என்ற நிலைமைக்குப் பதிலாக, உலகத்தாரைவிட கீழான நிலைமையில் ஜீவிப்பதாயிருக்கும்.

விசுவாசத்தை மறுதலித்தல் என்கிறபோது, யார் மீது அக்கறைக் காண்பிக்கப்படாமலிருக்கிறதோ, அவர்களின் நலன்களுக்கடுத்த விஷயங்களில் பரிவும், அன்பும் இல்லாமல் காணப்படும் மற்றும் இதன் அளவிற்கேற்ப விசுவாசம் மறுதலிக்கப்படுகின்றதாயிருக்கும். நமது ஆண்டவர் மாபெரும் துயரத்திலும், பிரச்சனையிலும் காணப்படுகையில், அவர் மற்றவர்களைக் குறித்துப் பரிவோடு சிந்தித்துக்கொண்டிருந்த காரியத்தில், சுயநலமின்மைக்கான எத்தகையதொரு பூரணமான உதாரணத்தை நாம் காண்கின்றோம்! தம் தாயாரை அன்புக்குரிய யோவானுடைய பராமரிப்பில் அவர் ஒப்படைத்தபோது, தம் தாயாருடைய நலனுக்கடுத்த காரியங்களுக்கான அவரது ஏற்பாட்டினை நாம் கவனிக்கின்றோம் மற்றும் இப்படியாக ஆண்டவருடைய சோதனை வேளையில் தன் ஆண்டவரோடு காணப்பட்ட யோவானில், வெளியான உயர்பண்புகளை நமது கர்த்தர் அங்கீகரித்த காரியமும் வெளியானது!