R4019 – மற்றவர்களுக்கான நமது கடமைகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4019 (page 199)

மற்றவர்களுக்கான நமது கடமைகள்

OUR OBLIGATIONS TOWARD OTHERS

“யாத்திராகமம் 20:12-17

“”உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக.”” (லேவியராகமம் 19:18)

R4020 : page 201

களவு செய்யாதிருப்பாயாக

மற்றவர்களுடைய உரிமைகள், மற்றவர்களுடைய உடைமைகள் குறித்தச் சரியான அடையாளம் கண்டுகொள்ளுதல் குறித்து இங்குப் போதிக்கப்பட்டுள்ளது. இதில் சுபாவத்தின்படியான மனுஷனோ, உலக ஞானியோ வரையறைகளைக் கண்டுப்பிடிப்பதில்லை இது பின்வருமாறு: “”நீங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்குரிய, பிடிபடுவதற்குரிய, தண்டிக்கப்படுவதற்குரிய வாய்ப்பானது கொஞ்சமேனும் இருக்குமானால் களவு செய்யாதிருங்கள்””; “”கொஞ்சம் பணத்திற்காகக் களவு செய்யாதிருங்கள்; ஏனெனில் கொஞ்சம் பணத்திற்காகக் களவு செய்து பிடிப்படும் பெரிய அபாயத்தினை எடுத்துக்கொள்ள வேண்டாம்; உங்களால் முடியுமானால் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு அல்லது ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டாலும் சட்டப்படி செய்தது என்ற தோற்றத்தில் மூடி மறைக்கப்படத்தக்கதாகக் கொஞ்சம் சட்டப்பூர்வமான விதங்களில் செய்யுங்கள்”” என்று கூறிடவில்லை. இக்கட்டளையானது ஒவ்வொரு யூதனும், மற்ற ஒவ்வொரு யூதனுடைய உரிமைகளையும், உடைமைகளையும், நலன்களையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும், இவைகளை அபகரித்தல் கூடாது என்றும் எளிமையாகவும், தெளிவாகவும் தெரிவிக்கின்றது. இந்தக் கட்டளையானது பொதுப்படையான மற்றும் தனிப்பட்ட எல்லா வகையான களவுகளையும் பற்றியே தெரிவிக்கின்றது; ஏனெனில் களவுகள் அனைத்திலும் மிகமோசமான களவுகளாக நாம் பார்ப்பவைப் பொதுப்படையான களவுகளாகும்; இந்தக் களவுகளானது சட்டப்பூர்வமானது என்ற போலி தோற்றத்தின்கீழ், பொதுச் சொத்துக்களை அபகரிக்கின்றது அல்லது சட்டத்தின் மொழியில் குறிப்பிட வேண்டுமெனில் நியாயமான பங்கு கொடுக்கப்படாமல் “”பறிமுதல்”” செய்யப்படுதல் ஆகும்.

இந்தக் கட்டளையானது பொதுவாய் நீதி சம்பந்தப்பட்டதாய் இருக்கின்றது; பிள்ளையினுடைய உரிமைகளையும் பெற்றோர் அடையாளம் கண்டுகொள்ள தவறுவதின் மூலமும், பெற்றோரெனத் தனக்கிருக்கும் கடமைகளை அடையாளம் கண்டுகொள்ள தவறுவதின் மூலமும் பெற்றோர் தன் பிள்ளையிடமிருந்து களவு செய்யக்கூடும். உதாரணத்திற்கு ஜீவியத்தின் கடமைகளுக்குப் பிள்ளைகள் ஆயத்தமாகத்தக்கதாக அவர்களுக்கு ஒரு சராசரி / பொதுக்கல்வியையாகிலும் கூடுமானால் பெற்றோர்கள் வழங்குவது பெற்றோருடைய நியாயமான கடமையாக இருக்கின்றது; ஆனால் காரணம் இல்லாமல் தன் பிள்ளையினிடமிருந்து இக்காரியத்தினைப் பறிக்கிறவன், பிள்ளையிடமிருந்து களவு செய்கிறவனாய் இருப்பான் மற்றும் பிள்ளைக்கு உரிமையான இவைகளை, பொதுவான இவைகளை, நியாயமான இவைகளை அவர்களிடமிருந்து பறிக்கிறவனாய் இருப்பான். பிள்ளைகளும்கூடத் தங்கள் பெற்றோரிடத்திலும் மற்றும் தங்களுக்குள் ஒருவர் இன்னொருவரிடத்திலும் உள்ள கடமையினை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; என்னுடையவை [R4020 : page 202] மற்றும் உன்னுடையவைகள் என்பவை ஒவ்வொரு இல்லத்திலும் ஒழுங்கின் அடிப்படையாகவும், நீதியின் அஸ்திபாரமாகவும் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும்; குடும்பங்களில் ஒருவர் மற்றவருடைய உரிமைகளைப் புறக்கணிப்பது – ஒருவர் இன்னொருவரைச் சாதகமாகப் பயன்படுத்துவது – வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒருவர் இன்னொருவரிடமிருந்து, அதாவது சாதாரணமான காரியங்களைக் களவு செய்வது என்பவைகள் குடும்பங்களில் ஏற்படுத்திவிடும் சண்டை சச்சரவுகள் தவிர, மற்றபடி வேறு எதுவும் சண்டை சச்சரவுகளைக் கொண்டுவருவதாக நாம் அறிந்திருக்கிறதில்லை. முக்கியத்துவமில்லாத காரியங்களில் மனசாட்சியும், நீதியும் புறக்கணிக்கப்படுதல் என்பது மனச்சாட்சியினை நோய்க்குள்ளாக்ககுகின்றது – பின்னர் இறுதியில் மற்றவர்களுடைய உரிமைகளை அலட்சியம்பண்ணுவதற்கும் வழிநடத்திவிடுகின்றது – அபாயமும், தண்டனையும் மிக அதிகமாய்க் காணப்படும் எக்காரியத்தையும் மற்றும் அனைத்தையும் தன் சொந்தப் பயன்பாட்டிற்கு எனச் சுயநலமாய் அபகரித்திடுவதற்கு வழிநடத்திவிடுகின்றதாய் இருக்கும்.

புதுச்சிருஷ்டியைப் பொறுத்தமட்டில் அவனது மனம் மற்றும் இருதயத்தின் சாராம்சமாய் இருக்கும் அவனது அன்பின் பிரமாணமானது களவு செய்வதற்கு எதிராய் இருக்கும்; அன்பானது கொடுப்பதற்கும், உதவுவதற்கும் ஏவுகின்றதாய் இருக்கும்; நன்மையானவைகளைச் செய்வதிலும், நன்மையானவைகளைப் பேசுவதிலும், நன்மையானவைகளைக் கொடுப்பதிலும் சந்தோஷம்கொள்கின்றது. சத்தியத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மாத்திரம் அவன் பிரியம்கொள்ளாமல், மாறாக கர்த்தருடைய ஆவியானது அவனுடைய இருதயத்தையும், அவனுடைய ஜீவியத்தையும் நிரப்பியிருக்கும் அளவிற்கும், ஊடுருவியிருக்கும் அளவிற்கும் ஏற்ப அவன் தேவையில் இருப்பவர்கள் அனைவருக்கும், பூமிக்குரிய நன்மைகளைக் கொடுப்பதிலும் பிரியமுள்ளவனாய் இருப்பான். அன்பின் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புதிய இருதயத்தின், புதிய மனதின், புதிய மனநிலையின் அம்சமாய்த் தயாள குணம் காணப்படுகின்றது. எனினும் பொதுவாய் நிலவிவரும் ஒழுங்கின்மையில் பழக்கப்பட்டிருப்பதினாலும், வீட்டிலும், தொழிலிலும் சிறுசிறு அநியாயங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதினாலும், இவைகள் அனைத்தும் அன்பிற்கு இசைவற்றதாய் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதற்குப் புதுச்சிருஷ்டிக்குச் சில காலங்கள் எடுத்துக்கொள்ளும்; எனினும் எந்தளவிற்குப் பரிசுத்த ஆவியானது அவன் இருதயத்தில் பொங்கி வழிகின்றதோ அவன் அந்தளவிற்குத் தன் வார்த்தைகளையும், கிரியைகளையும், ஆம் தன் எண்ணங்களையும் கவனிப்பான்; மேலும் தேவனுடைய சிங்காசனத்தின் அஸ்திபாரமாய் இருக்கும் நீதியானது, ஜீவியத்தில் மற்றவர்களிடத்திலுள்ள தன் நடத்தைகள் அனைத்திற்கும் அஸ்திபாரமாகக் காணப்படுகின்றதா என்று பார்த்துக்கொள்வான் – நீதிக்குக் குறைவான எதையும் தான் மற்றவர்களுக்குச் செய்யாதபடிக்குப் பார்த்துக்கொள்வான்.

அடுத்ததாக அவன் நீதிக்கும் அதிகமாய்ச் செய்திடுவதற்கு எதிர்ப்பார்க்கப்படும் தருணங்களில், அதுவும் பாதகமாய்க் காணப்படாத தருணங்களில், அன்பானது எப்படி நீதிக்கும் அதிகமாய்ச் செய்திடும் என்பவைகளில் கவனம்கொள்வான்; மேலும் மற்றவர்கள் தன்னிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில், தனக்கு முழுமையாய் நீதியோடு காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்கவோ அல்லது எதிர்ப்பார்க்கவோ செய்யாதளவுக்கு, விழுந்துபோன நிலைமையிலுள்ள பொதுவான மனுக்குலத்தின்மீது முழுக்க அனுதாபம்கொண்டிருப்பான். மனுக்குலத்தினுடைய விழுந்துபோன நிலைமைக்குறித்த அவனது அறிவானது, அவனால் கையாளப்படுபவர்களிடத்தில் அவனை அனுதாபம்கொண்டிருக்க செய்திடும். அவனது இவ்வன்பும், தயாளமும் அவன் பொறுப்பின் கீழுள்ள அவனது சொந்தக் குடும்பத்தாருக்குப் பாதகம் செய்யாதப்படிக்கு, இதுவிஷயத்தில் அவன் தனக்கு வேகத்தடையிட்டுக்கொள்வதும் கூட அவசியமாயிருக்கும். கர்த்தருடைய ஜனங்களில் குடும்பங்களுடைய தலையானவர்களாய்க் காணப்படும் சிலர்… ஒருவேளை ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குக் காரியங்கள் நீதியாய்ச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தாதிருந்தாலும், குடும்பத்தினுடைய பல்வேறு அங்கத்தினர்களிடையே காரியங்கள் நீதியாய்ச் செய்யப்படத்தக்கதாக அன்போடும், தயவோடும், அதேசமயம் உறுதியோடும் அவர்களிடம் வலியுறுத்திடுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.