R4977 – நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4977 (page 66)

நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்

RIGHTEOUS REPROOF AND FORGIVENESS OF WRONG

“””நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெய்யைப்போல் இருக்கும்; அது என் தலையை நொறுக்கிப் போடுவதில்லை.”” – (சங்கீதம் 141:5; சரியான மொழியாக்கம்)

வேதவாக்கியங்களில் நீதிமான் என்ற வார்த்தையானது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் அது முற்றும் முழுமையான நீதியான நிலையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; உதாரணத்திற்கு, “”அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.”” நம்முடைய ஆதார வசனத்தில், நமது கர்த்தர் இயேசு குட்டுகிற நீதிமானாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்படியான விதத்தில் பார்க்கும்போது, சிட்சைகள் என்பது நமது கர்த்தரிடத்திலிருந்து வருகின்றதாய் இருக்கின்றது; மற்றும் சிட்சையைப் பெற்றுக்கொள்கின்றவன், இப்படியான கண்டித்தலிலுள்ள தேவனுடைய ஞானம், நீதி மற்றும் அன்பை அறிந்தவனாக, அதை உணர்ந்துகொண்டுள்ள நிலையில் ஏற்றுக்கொள்வான். ஆனால் இன்னொரு விதத்தில் நீதிமான் என்ற வார்த்தையானது, மனுக்குலத்திற்குப் பொருந்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகின்றது. வேதவாக்கியங்களில் பல்வேறு நபர்கள் நீதிமான்கள் என்று குறிப்பிடப் படுகின்றனர்; காரணம் அவர்கள் பூரணமானவர்கள் என்பதினால் இராமல், மாறாக அவர்கள் சரியான நோக்கமும், சரியான சித்தமும் உடையவர்களாய் இருந்து, தங்கள் நடக்கையில் தேவனுடைய ஆவியை,நீதியின் ஆவியை வெளிப்படுத்தினதினாலேயே ஆகும்.

இப்படியாக நீதிமான் என்ற இந்த வார்த்தையை, ஆதார வசனத்தில் பொருத்திப் பார்க்கும்போது, அது கர்த்தருடைய ஜனங்களாய் இருப்பவர்கள் அனைவரும் யாரை திருத்திட முயற்சிக்கின்றார்களோ, அவர்களுக்கு உதவியாகவும், அவர்களுடைய நன்மைக்காகவும் இருக்கும் வகையில், நீதியாய்க் கண்டித்தலையும், நெறிப்படுத்துதலையும் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்;; அதுவும் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும், புத்துணர்வையும் கொண்டுவரும் விதத்தில் செய்ய முடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும்; அதுவும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டுள்ள நறுமண எண்ணெய் போன்று இருக்கும் விதத்தில் செய்யமுடிகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இந்தக் கருத்துக்களை நம்முடைய மனங்களுக்கு முன்பாகக் கொண்டிருக்கும்போது, இதில் நமக்கு விலையேறப்பெற்ற படிப்பினைகள் கிடைக்கின்றதாய் இருக்கும். முதலாவதாக நாம் கர்த்தரிடமிருந்து வரும் சரிப்படுத்துதல்களை ஏற்றுக்கொள்பவர்களில் அடங்குகின்றவர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் ஏதேனும் காரியத்தில் நாம் தவறு செய்திருந்தால், அதனை சரிசெய்துகொள்வதில் மகிழ்ச்சியாய் இருப்பவர்களாக இருத்தல் வேண்டும்; அடுத்தப்படியாகக் கண்டித்தல் வழங்கப்படுவது ஏற்றதாக இருக்குமென்றால், அது பாதிப்பை ஏற்படுத்துகிற விதமாய் இராமல், மாறாக ஆவிக்குரியதாகவும், தூக்கிவிடுவதாகவும், புத்துணர்வு ஊட்டுவதாகவும் காணப்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இப்படியாகக் காணப்பட வேண்டுமெனில், கண்டித்தல் என்பது அனுதாபத்துடன் / இரக்கத்துடன்கூடிய ஒன்றாகக் காணப்படவேண்டும். கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் மாம்சத்தில் விழுந்துபோனவர்களாகவும், ஆனால் கிறிஸ்துவில் புதுச்சிருஷ்டிகளாகவும் காணப்படுகின்றனர் என்றும், அவர்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகள் என்றால் அவர்கள் கர்த்தருடைய மனதையும், அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். இந்த ஒரு கண்ணோட்டத்திலிருந்து கண்டித்தலை வழங்கக்கூடிய எந்த ஒரு சகோதரரும், தான் யாரைக் கண்டிக்கின்றாரோ அந்நபர் தீமையான நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை அடையாளம் கண்டுகொண்டு, முடிந்தமட்டும் தயவாயும், இரக்கமாயும், உண்மை விவரங்களை விளக்கிக்கொடுப்பவராய்க் காணப்படுவார். இம்மாதிரியான கண்டித்தலானது திடீரென்று கொடுக்கப்படக்கூடாது; மற்றும் கண்டித்தலை வழங்கும் நபர், வழங்கப்படவேண்டிய தண்டனை மற்றும் அதற்கான ஏறற் வேளை முதலானவைகள் கர்த்தருக்குரியது என்பதையும் நிதானித்துக்கொள்ள வேண்டும். இப்படியாகவே நீதிமானாய்க் காணப்படும் யாவரும், மற்றவரைக் கண்டிக்கும்போது காணப்பட வேண்டும். ஜாக்கிரதையாய்க் கருதிக்கொண்டும், ஜெபத்தில் வைத்த பிற்பாடும்தான், கண்டித்தல் பண்ண வேண்டும் மற்றும் இப்படிக் கண்டிப்பதே ஒரு சகோதரனுக்கு (அ) சகோதரிக்கு உதவி செய்வதற்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த வழியாய் இருக்கும் என்ற முடிவிற்கு வந்த பிற்பாடே கண்டிக்க வேண்டும். இப்படியான நிலைமையில் கண்டிப்புகள் யாவும் கொடுக்கப்பட்டால், இது சாதாரணமாய் வழங்கப்படும் கண்டிப்புகளைக் காட்டிலும், மிகவும் உதவிகரமானதாகக் காணப்படும் என்று நம் அனைவராலும் ஒத்துக்கொள்ள முடியும்.

நொறுக்கும் விதமான கண்டித்தல் என்பது அநீதியானதாகும்

ஆதார வசனத்தில் இடம்பெறும் “”அது என் தலையை நொறுக்கிப்போடுவதில்லை”” என்பதான வார்த்தைகளானது, கண்டித்தல் துன்பத்தைக் கொடுக்கிறதாகவோ, நொறுக்கிப்போடுகிறதாகவோ காணப்படாமல், ஆசீர்வாதமாய்க் காணப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவருடைய தலையை நொறுக்கிப்போடுதல் என்பது, அந்நபரைக் கொன்றுபோடுவதான காரியமாகும். மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்துவதற்கான (அ) மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்திற்காக நீதிமான்கள் உலகத்தில் காணப்படாமல், மாறாக உலகத்தில் நன்மை புரிவதற்கான நோக்கத்திற்காகவே காணப்படுகின்றனர். மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றவர்கள், இப்படிச் செய்ததற்கு ஏற்ப அநீதிமான்களாய் இருப்பார்கள். தங்களால் கண்டிக்கப்படுபவர்களை நொறுக்கிப்போடத்தக்கதாக தங்களது விமர்சனங்களையும் / குற்றஞ்சாட்டுதல்களையும் மற்றும் கண்டனங்களையும் பயன்படுத்துகின்றவர்கள் நீதிமான்கள் அல்ல. இப்படிப்பட்டவர்கள் குற்றங்களைச் சரியாய் எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அப்போஸ்தலனின், “”கடிந்துகொள்ளுதல்,”” “”கண்டனம் பண்ணுதல்”” முதலான வார்த்தைகள், தேவனுடைய ஜனங்கள் அனைவரிடமும் கூறப்படாமல், மாறாக மூப்பனாகிய தீமோத்தேயுவிடம் கூறப்பட்டதை அறிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் சாந்தகுணமுள்ள மனிதர்களாகவும், வளர்ச்சியடைந்துள்ள மனிதர்களாகவும், தங்களது சொந்த ஜீவியங்களையும், சொந்த நாவுகளையும் கட்டுப்படுத்தியுள்ள மனிதர்களாகவும் இருப்பவர்கள் மாத்திரமே மூப்பர்களாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்; இதினிமித்தம் இவர்கள் மற்றவர்களை நொறுக்கிப்போடுகின்றவர்களாய் இராமல், மாறாக இவர்களது கடிந்து கொள்ளுதலானது, மற்றவரைக் கர்த்தரிடம் நெருக்கமாய்க் கொண்டுவருவதற்கு நோக்கமாயும் மற்றும் இதற்கு உதவியாயும் மற்றும் உற்சாகமூட்டுகிறதாயும் மற்றும் துணைப்புரிகின்றதாயும் காணப்படும்.

முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல்

முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல், அவரைத் தகப்பனைப்போன்று பாவிக்கும்படிக்கு, பரிசுத்தவனாகிய பவுல், தீமோத்தேயுவுக்குப் புத்திமதி கூறினபோது, அப்போஸ்தலன் இங்குச் சபையிலுள்ள மூப்பரைக் குறித்துக் குறிப்பிடாமல், மாறாக ஒரு நபரைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவராய் இருப்பவரைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். உன்னைக்காட்டிலும் வயதில் முதிர்ந்தவரைக் கடிந்துகொள்ளாதே என்றும், அவரைத் தகப்பன்போன்று பாவிக்க வேண்டும் என்றும், இதுபோலவே முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய புருஷர்களைச் சகோதரர்கள்போலவும், பாலிய ஸ்திரீகளைச் சகோதரிகள் போலவும், நடத்தவேண்டும் என்றும் உள்ள விதத்தில் அப்போஸ்தலன் குறிப்பிடுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், மற்றவர்களுடைய சுயாதீனங்களை நசுக்கிடுவதற்கோ (அ) மற்றவர்களை அச்சுறுத்துவதற்கென்றோ, சபையில் மூப்பர்கள் நியமிக்கப்படவில்லை. தயவு, காருண்யம் முதலானவைகளின் ஆவியே பரிசுத்த ஆவியாய் இருக்கின்றது. இவைகள் அல்லாத வேறே ஆவியில் ஒரு மூப்பர் கடிந்துகொள்வாரானால், அவர் தன்னால் கடிந்துகொள்ளப்படும் நபர் ஒரு குழந்தை அல்ல என்பதையும், அந்நபர் குழந்தை போன்று நடத்தப்படக்கூடாது என்பதையும், அந்நபர் கடிந்து கொள்ளப்படவோ (அ) தாக்கிப்பேசப்படவோ (அ) “”இவைகள் அனைத்துமே தவறு!”” என்று கூறப்படவோ கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஞானமற்ற விதங்களில் வழங்கப்படும் கடிந்துகொள்ளுதலானது, பிரச்சனைக்கான பலமான காரணமாய் அமைகின்றது.

வயதில் முதிர்ந்த ஒருவர், ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று, வயதில் குறைந்த ஒரு நபர் எண்ணி, “”இவைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டியிருக்கிறது, நான் உங்களுக்குப் பாடம் புகட்டுகிறேன்”” என்று வயதில் குறைந்தவர் கூறுவதும், பொறுமையை இழந்துபோவதும், ஞானமுள்ள காரியமாகவோ (அ) இரக்கமுள்ள காரியமாகவோ (அ) தயவுள்ள காரியமாகவோ இருந்திடாது. இம்மாதிரியான ஆவியானது, அநேக இடங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான நடக்கைகளுக்கு எதிர்மாறாகவே அப்போஸ்தலனுடைய புத்திமதி காணப்படுகின்றது மற்றும் அவர் இரக்கத்தையும், தயவையும், வயதை கருத்தில்கொள்ளும் தன்மையையும் மற்றும் இது விஷயத்தில் தேவையான அனைத்தையும் அறிவுறுத்துகின்றவராய்க் காணப்படுகின்றார். அநேக வேதவாக்கியங்களைப் பார்க்கும்போது, நம் நாட்களில் நாம் காணமுடியாத அளவு, முற்காலங்களில் குடும்பத்தின் மீதான ஓர் அனுதாபம் காணப்பட்டுள்ளது என்பது நிச்சயமே இதுவே அப்போஸ்தலனின் பின்வரும் வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றது. “”முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு”” (1 தீமோத்தேயு 5:1-2).

இன்றைய நாட்களில் அந்நியர்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்துகொள்வதும், ஒருவருடைய சொந்த குடும்பத்தாரிடம் மிகவும் பரிவற்ற / பண்பற்ற விதத்தில் நடந்துகொள்வதும் வழக்கமாய்க் காணப்படுகின்றது; சிலர் வெளியாட்களிடம் மிகவும் பரிவுடன் / பண்பட்ட விதத்தில் நடந்து கொள்வார்கள், ஆனால் தாங்கள் யாருக்கு இரக்கமும், உதவியும் மற்றும் அனுதாபமும் காண்பிக்க வேண்டுமோ அத்தகையவர்களிடம் மிகவும் பரிவற்று/பண்பற்று நடந்துகொள்வார்கள். இதே கருத்தே, “”சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள்”” என்ற புத்திமதியில் வெளிப்படுகின்றது. ஆனால் இன்றைய நாட்களில் நீங்கள் உண்மையான நண்பர்களைத் தேடுகையில், நீங்கள் சொந்தக் குடும்பத்திற்குள் பெரும்பாலும் தேடிடுவதில்லை. இந்த விஷயத்தில் நம்முடைய வளர்ச்சி என்பது பரிணாம [R4978 : page 67] வகையாய் நிச்சயமாய்க் காணப்படுவதில்லை. தகப்பன், தாய், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அக்கறையுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் நடத்தப்பட வேண்டும். மேலும் இந்தக் கொள்கையானது விசுவாச வீட்டாரிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

அன்பானது பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாது

2 தீமோத்தேயு 4:2-ஆம் வசனத்தில், தேவனுடைய கிருபையின் ஊழியக்காரனாக அப்போஸ்தலன், சுவிசேஷம் அறிவிக்கப்படும் விஷயத்தில் அடங்கும் மூன்று அம்சங்களை அதாவது: (1) கண்டனம்பண்ணுதல்; (2) கடிந்துகொள்ளுதல்; (3) புத்திசொல்லுதல் எனும் அம்சங்களைக் குறித்து விவரிக்கின்றார். ஆனால் முதல் இரண்டு அம்சங்களைத் தாராளமாய்ப் பயன்படுத்தும் விஷயத்திற்கு எதிராக, கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் எச்சரிக்கப்படுவது பாதுகாப்பானதாகும். சரியாய்க் கண்டனம் பண்ண வேண்டுமெனில் இருதயமானது, அன்பினாலும், அனுதாபத்தினாலும் மிகவும் நிரம்பிக் காணப்பட வேண்டும்; இல்லையேல் கண்டனங்களும், கடிந்துகொள்ளுதல் களும் கூர்மையுடன் கடந்துவருகின்றதாய் இருந்து, நன்மையைப் பார்க்கிலும், பாதகத்தையே உண்டுபண்ணுகிறதாய் இருக்கும். இருதயம் முழுக்க அன்பினால் நிரம்பி இருந்தாலும், யாருக்கு உண்மையில் அவசியப்படுகின்றதோ, அப்படிப்பட்டவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக கடிந்துகொள்ளுதல்களையும், கண்டித்தல்களையும் பயன்படுத்த முடிகின்றதான மிகுந்த சீரான தலையும்கூட அவசியமாய் உள்ளது. இதில் தேவனுடைய ஜனங்கள், “”சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களாகவும்”” காணப்பட வேண்டும். “”புத்திசொல்லும்”” வகை ஊழியமானது, பெரும்பான்மையான கர்த்தருடைய ஜனங்களினால் நன்கு பயன்படுத்தப்படலாம். இந்த வகை பிரயாசங்களும், மற்ற வகை பிரயாசங்களும், பொறுமையுடனும், நீடிய பொறுமையுடனும், சகோதர சிநேகத்துடனும் கையாளப்பட வேண்டும்.