R2319 – இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2319 (page 179)

இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்

MEAN CHRISTIANS AND NOBLE UNBELIEVERS

1கொரிந்தியர் 1:26

அவிசுவாசிகள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் உயர்பண்புள்ளவர்கள் காணப்படுகின்றனர் எனும் கூற்றினை எதிர்த்து யாரும் வாதாடுவதில்லை அதேபோல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், உலகத்தார் மத்தியிலும் இழிவான ஜனங்கள் காணப்படுகின்றனர் என்னும் கூற்றினையும்கூட அனுபவமிக்கவர் எவரும் எதிர்த்து வாதாடுவதில்லை. இதைக்குறித்து நாம் என்ன சொல்லுவது? உண்மை கிறிஸ்தவத்தின் உயர்வான கொள்கைகளானது உலகத்திலுள்ள சிறந்த மனமுள்ள யாவரையும் கவர்ந்து இழுத்திடும் என்றும், இழிவான பண்புடையோரைத் தள்ளிவிடும் என்றும் எதிர்ப்பார்ப்பது நியாயமல்லவா? கிறிஸ்துவின் உபதேசங்களும், அவரது போதனைகளின் ஆவியும், அதாவது சாந்தம், தயவு, சகோதர சிநேகம், அன்பு முதலானவைகள், இப்பண்புகளை விரும்புகிற யாவரையும், உலகில் உள்ள உயர் மனமுடையவர் யாவரையும் கவர்ந்து இழுத்திடும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா? மேலும் வேதவாக்கியங்களும், கர்த்தருடைய ஆவியும் – கோபம், துர்க்குணம், பகைமை, பொறாமை, சண்டை, புறங்கூறுதல், தூஷணம் பேசுதல், அசுத்தங்கள் முதலியவைகளைக் கண்டிக்கின்றதால், மாம்சம் மற்றும் பிசாசின் இத்தகைய கிரியைகளுடன் இணக்கம் கொண்டிருக்கும் அனைவரும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் புறக்கணிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா? என்று கேள்விகள் கேட்கப்படலாம்.

இது விஷயத்தில் நமது மனதின் தத்துவமானது என்னவாக இருப்பினும் நிலவரங்களின் உண்மையானது, உலகத்தினுடைய சிறந்த மனமுள்ள ஜனங்களில் பெரும்பாலானோர் கர்த்தரையும், அவரது சுவிசேஷத்தையும் புறக்கணிக்கின்றனர் என்றும், உலகத்திலுள்ள இழிவான ஜனங்களில் பெரும் எண்ணிக்கையினர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் நமக்கு நிரூபித்துத் தருகின்றதாய் இருக்கின்றது. அனைத்து மற்றும் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்புகளுக்கும் நேர்மாறானதாகக் காணப்படும் இந்த மிக விநோதமான சூழ்நிலைக்கான காரணம் என்ன என்ற கேள்வியானது அதிகம் சுவாரசியமான மற்றும் குழப்பமான கேள்வியாகக் காணப்படுகின்றது.

இதற்கான காரணங்களை நாம் கர்த்தருடைய வார்த்தைகளின் அடிப்படையில் தெரிவிக்கின்றோம் – அது என்னவெனில் அவர் நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்பும்படிக்கு அழைக்க வந்தார் என்பதேயாகும். உண்மைதான் நீதிமான் ஒருவனாகிலும் இல்லை அனைவரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டனர்; தகப்பனாகிய ஆதாமின் வீழ்ச்சி என்பது அவரது சந்ததியிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனையும் உள்ளடக்கியது; ஆகையால் அனைவரும் பாவிகளாக இருக்கின்றனர் மற்றும் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பிற்காகக் கிறிஸ்துவுக்குள்ளான தேவ கிருபை அனைவருக்கும் தேவையாய் இருந்தது; ஆனால் தங்கள் அயலார்களில் சிலரைப்பார்க்கிலும் ஒழுக்க ரீதியிலும், அறிவு ரீதியிலும் குறைவான வீழ்ச்சி நிலையில் தாங்கள் காணப்படுவதாகக் கண்டுகொள்பவர்கள் தங்களைப் பரிபூரணர்கள் என்று சொல்லாவிட்டாலும், சுயநீதியின் மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர். ஆகையால் இத்தகையவர்கள் தங்களை ஒன்றுமில்லாதவர்களாகவும், திவ்விய தயவிற்குப் பாத்திரமற்றவர்களாகவும் ஒப்புக்கொள்வதற்கும், சிலுவையின் அடிவாரத்தில் புழுதிமட்டும் தங்களைத் தாழ்த்திக்கொள்வதற்கும், தேவனுடைய கிறிஸ்து இயேசுவின் மூலமான நித்திய ஜீவனின் கொடையாகிய கிருபையுள்ள ஈவைப் பெற்றுக்கொள்வதற்கும் விருப்பம் காண்பிக்காதவர்களாய் இருப்பார்கள்.

நல்ல மருத்துவத்தின் தேவை உணரப்படவில்லை

இத்தகையவர்கள் மனித சந்ததியிலுள்ள மிகவும் சீரழிந்தவர்களில் சிலருக்குத் திவ்விய அனுதாபமும், மன்னிப்பும் அவசியம் என்று உணர்கின்றனர்; மேலும் சீரழிந்தவர்களுக்குத் தேவன் மனதுருக்கம் கொண்டிருப்பதைக்குறித்தும், தேவன் இந்த இழிவானவர்களுக்கு உதவுவார் என்பதுகுறித்தும் இத்தகையவர்கள் எண்ணி மகிழ்ச்சிக்கொள்கின்றனர்; எனினும் இத்தகையவர்கள் தங்களை மூடிக்கொள்வதற்குக் கிறிஸ்துவின் நீதியினால் தரிப்பிக்கப்படும் வஸ்திரம் தங்களுக்குத் தேவையில்லையென்று எண்ணம்கொண்டிருக்கின்றனர்; இத்தகையவர்கள் தங்களை மிகவும் மதிப்பிற்குரியவர்களென எண்ணி, இதனால் தேவன் எதிர்க்கால ஜீவனை அருளுவதற்கு யாரையேனும் ஏற்றுக்கொள்வாரெனில், அவர் நிச்சயமாய்த் தங்களைத் தள்ளிவிடமாட்டார் என்று எண்ணுகின்றனர். இத்தகையவர்கள் தங்களைச் சுற்றிப்பார்த்து, தங்களைக் கிறிஸ்தவர்களுடன் ஒப்பிட்டு, அதுவும் பெருமளவிலான தற்பெருமையுடன், சரி எது, தவறு எது மற்றும் நன்னெறிகள் மற்றும் பெருந்தன்மை முதலானவைகள் குறித்த தங்கள் அபிப்பிராயங்களானது கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணிக்கொள்கிறவர்களைக் காட்டிலும் மேலானதாக, உயர்ந்ததாக, சிறந்ததாகக் காணப்படுகின்றது என்று தங்களுக்குள் நிச்சயம்கொண்டவர்களாக இருக்கின்றனர்; மேலும் “தேவன் நீதி உள்ளவர் மற்றும் நான் பரிபூரணமானவனாக இல்லையென்றாலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தவனாகக் காணப்படுகின்றேன் மற்றும் இதனால் இருதயம் மற்றும் மனதின் நற்பண்புகள் சிலவற்றில் என்னைக் காட்டிலும் குறைவுடையவர்களாய் இருக்கின்றனர் என்று நான் காணும் மற்றவர்களைத் தேவன் பராமரிப்பதைக் காட்டிலும், அவர் தம் நீதியில் என்னை அதிகமாய்ப் பராமரிப்பார்” என்று தங்களுக்குள்ளாகச் சொல்லிக்கொள்கின்றனர். பூர்வ காலத்திலுள்ள பரிசேயன் போன்று இத்தகையவர்கள், மற்ற மனுஷர்களைப் போன்று தாங்கள் [R2319 : page 180] காணப்படாததற்காகத் தேவனை ஸ்தோத்திரித்து, “வானத்தின்கீழ் அல்லது மனுஷர் மத்தியில் நாம் இரட்சிக்கப்படத்தக்கதாக அருளப்பட்டிருக்கும் ஒரே நாமத்தை” புறக்கணித்து விடுகின்றனர்.

நாம் விவரித்துவரும் இவ்வகுப்பார் ஒரு பெரும் வகுப்பார் ஆவர்; அநேகர் எண்ணியிருந்ததைவிட மிக பெரும் வகுப்பார் ஆவர். மேலும் இவ்வகுப்பாரில் சுவிசேஷத்தை ஒருபோதும் புரிந்திடாத, மாய்மாலக்காரர்களாய் இராத அநேகர் உள்ளடங்குகின்றனர். ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதிகளில் அநேகர் இவ்வகுப்பாரைச் சேர்ந்த புருஷர்களாய் இருக்கின்றனர் – மதத்தின்மீது மரியாதை கொண்டிருக்கின்றனர்; ஜீவியத்தில் நல்லொழுக்கம் உடையவர்களாய் இருக்கின்றனர். நீதியோடு நடந்துகொள்கின்றனர் – உதாரணத்திற்கு LINCOLN மற்றும் GRAND முதலானோர் ஆவர்; மேலும் இவர்களை இந்த வகுப்பாரின் உதாரணங்களாக மாத்திரம் குறிப்பிடுகின்றோம். இதுவுமல்லாமல் இவ்வகுப்பாரில் அநேகர் சபை கூட்டங்களில் கலந்துகொள்பவர்களாக அல்லது சபையின் அங்கத்தினர்களாகக் காணப்படுகின்றனர். நாகரிகத்தின் முன்னேற்றமானது கிறிஸ்தவ மார்க்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது எனும் உண்மையினை இவர்கள் உணர்ந்துகொள்கின்றனர்; மேலும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின்மீதான விசுவாசத்தின்மூலம் பாவங்களுக்கான மன்னிப்பைத் திவ்விய கிருபையின் கரங்களினின்று இத்தகையவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டிராத போதிலும், பிரபலியத்தின் மற்றும் நன்னெறியின் பக்கத்தில் நிற்பதில் மகிழ்ச்சிக்கொள்கின்றனர்.

இவர்களுக்கான சிரமத்தை நாம் காண்கின்றோம் – அதாவது கண்டிப்பான நீதி மற்றும் சட்டத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே கர்த்தர் கையாளுகின்றார் எனும் காரியத்தினை இவ்வகுப்பார் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அபூரணமான அனைத்தும் தேவனுக்கு முரணானது என்றும், ஆதியில் தேவனுடைய கிரியையானது ஆதாமில் பரிபூரணமாய் இருந்தது என்றும், அபூரணமாய்க் காணப்படும் எவற்றோடும் இணைந்துகொள்வதைத் [R2320 : page 180] தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திவ்விய பிரமாணமும், நீதியும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்தப் பிரமாணத்தின்கீழ்ச் சிறியவற்றில்கூடக் குற்றமுள்ளவனாய் இருப்பவன், குற்றம்புரிந்தவனாகவும், அநேகம் மற்றும் மிகக் கடுமையான குற்றங்களின் நிமித்தம் குற்றவாளியாக இருப்பவனோடுகூட ஒரே மரணத்தண்டனையின் கீழ் வருகின்றவனாகவும் இருப்பான் என்று இவ்வகுப்பார் காணத்தவறுகின்றனர். ஆகையால் அனைத்து மனுஷரும், அபூரணராக இருக்கின்றபடியால் ஒருவனும் முழுமையாய் நீதிமானாய் இராதபடியினால், ஒரு மரணத்தீர்ப்பானது மனிதக்குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களையும் பற்றிக்கொண்டது. கிறிஸ்து இயேசுவாகிய நீதிமான் தம்மையே மனுஷருக்கான மீட்பராகும்படிக்குப் பலிசெலுத்தினதின் மூலமான தேவனுடைய ஏற்பாட்டினால் தவிர மற்றப்படி மரணத்தினின்று தப்பித்துக்கொள்ளும் எவ்வழியுமில்லை ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான வழியில்லை. ஒருவன் எவ்வளவுதான் பாவத்திற்கு எதிராய்ப் போராடினாலும் – எவ்வளவுதான் வாசலை நெருங்கினவனாகக் காணப்பட்டாலும் – வாசல் / வழி ஊடாக வரத்தவறுகிறவன் ஒருபோதும் ஜீவனை அடையான். வாசல்வழியான பிரவேசம் மாத்திரமே நித்திய ஜீவனுக்கான பிரவேசத்தினை அர்த்தப்படுத்துகின்றதாய் இருக்கும். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்;, குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் (மரணத்தண்டனை) அவன்மேல் நிலைநிற்கும்” (யோவான் 3:36).

இப்பாடத்தின் இதே கோட்பாடானது, உலகத்தின் நற்பண்புள்ள ஜனங்களைக்காட்டிலும், இழிவான ஜனங்களே கிறிஸ்துவிடம் பெரும்பான்மையாய் ஏன் வருகின்றனர் என்பதற்கான காரணத்தையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. தாங்கள் பாவிகள் என்று உணர்ந்துகொள்பவர்கள் மாத்திரமே, பாவத்திலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்று எண்ணுபவர்கள் மாத்திரமே, மன்னிப்பு அருளப்படுவதை ஏற்றுக்கொள்கின்றனர். தாங்கள் நோயாளிகளாக இருப்பதை உணர்ந்துகொள்ளும் நோயாளிகள் மாத்திரமே மாபெரும் வைத்தியனுக்கான தங்கள் தேவையைக்குறித்து உணர்ந்துகொள்கின்றனர். தங்கள் விழுந்துபோன, சீரழிந்த நிலைமைக்குறித்து ஓரளவிற்கு உணர்ந்துகொண்டவர்களாகவும், மற்றவர்களைக் காட்டிலும் தாங்கள் இழிவானவர்கள் என்று உணர்ந்துகொண்டவர்களாகவும் தான் அநேகர் உண்மையில் கர்த்தருடைய கிருபையைத் தேடுகின்றனர்; இத்தகைய உணர்ந்துகொள்ளுதலினால் மாத்திரமே இவர்கள் தங்கள் நிலைமைக்குறித்து விழித்தெழுகின்றதாகத் தெரிகின்றது; மேலும் இதனால் மாத்திரமே இவர்கள் “தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்” என்று கூக்குரலிடுவதற்கு வழிநடத்தப்படுகின்றனர். திவ்விய தயவினைப் பெற்றுக்கொள்வதற்குத் தனிப்பட்ட விதத்தில் தான் பாத்திரவானில்லை என்று உணர்ந்துகொள்ளும் மனநிலையே, தேவனுடைய தயவை, அதற்கே உரிய நிபந்தனைகளோடு ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்கும் அவசியமாயிருக்கின்றது.

நம்முடைய பாடத்திற்கான அடிப்படைக் கோட்பாட்டினை இப்படியாகக் கண்டுபிடித்துள்ளபடியால், இப்பொழுது விளைவைக்குறித்து விசாரித்தறியப் போகின்றோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதினால் உண்டாகும் நியாயமான விளைவென்ன? புதிய உடன்படிக்கையினுடைய நிபந்தனையின் கீழ்க் கிறிஸ்துவை முறையாய் ஏற்றுக்கொள்வதின் நிச்சயமான விளைவு, ஒழுக்கம் சார்ந்த சீர்த்திருத்துதலாய் இருக்கும் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம்; ஏனெனில் கடந்த காலத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மாத்திரம் விரும்பிடாமல், எதிர்க்காலத்திலும் பாவத்தை விட்டுவிடவும் விரும்பிட வேண்டும் எனும் நிபந்தனையின்கீழே யார் ஒருவரையும் கர்த்தர் ஏற்றுக்கொள்கின்றார். ஒழுக்கத்தின் அளவில் அவன் கீழ்நிலையில் காணப்பட்டால், மாற்றம் இறுதியில் மிகத் தீவிரமானதாய்க் காணப்படும்; ஆனாலும் அவனது மாற்றத்தினுடைய துவக்கத்தில் கிறிஸ்தவ பாதையில் அவனுக்கு முன்பிருக்கும் வார்த்தையிலும், எண்ணங்களிலும், கிரியையிலுமுள்ள சுத்திகரிக்கப்படுதலின் படிநிலைகள் அனைத்தையும் குறித்துக் குறைவாகவே உணர்ந்துகொள்பவனாய்க் காணப்படுவான். முதலாவதாக அவன் பாவத்தின் மோசமான வெளிப்பாடுகளில் சீர்த்திருந்த மாத்திரமே சிந்திப்பான்; படிப்படியாக, ஒன்றன்பின் ஒரு பாடமாகக் கொடுக்கப்பட்டு, மாபெரும் போதகரினால் அவன் போதிக்கப்படுவான்; மேலும் அவன் கிறிஸ்துவின் பள்ளியில் தொடர்வானாகில் அறிவிலும், உணர்ந்துகொள்ளுதலிலும், குணலட்சண வளர்ச்சியிலும் வளர்கின்றவனாய் இருப்பான்.

அப்போஸ்தலன் வாயிலாய் மாபெரும் போதகர் முன்வைத்திடும் எதிர்ப்பார்ப்பு என்னவெனில்… அவரிடத்திற்கு முழுமையான அர்ப்பணிப்பில் வருபவர்கள், விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற்பாடு, உடனடியாக “மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்த” துவங்கிட வேண்டும் என்பதேயாகும். இதைச் செய்ய முயற்சிக்காத யார் ஒருவராலும் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் தொடரமுடியாது; ஏனெனில் இப்படிப்பட்டவன் அவருடைய ஆவியைப் பெற்றிருப்பதில்லை மேலும் அவரது ஆவி இல்லாதவன் “அவருடையவன் அல்ல.” (அறிந்தும், விரும்பியும்) “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்” (1 யோவான் 3:8). பாவம் மற்றும் சுயநலத்தின் உளையான சேற்றில் மிக ஆழமாய் அமிழ்ந்துபோனவர்களும், இதன்விளைவாய் அநேகம் இழிவான இயல்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளவர்களுமானவர்கள் – ஓரளவிற்கு அல்லது மிக நல்ல, உயர்பண்புள்ளவர்களாகிடுவதற்கு முன்னதாக, மாபெரும் போதகருடைய பயிற்சி மற்றும் படிப்பித்தலின்கீழ் அநேகம் வருடங்கள் காணப்பட வேண்டும். குணலட்சணம் என்பது காளான் போன்றதாயிராமல், கருவாலி மரம் போன்று காணப்படும்; அது வளர்வதற்கு காலம் எடுத்துக்கொள்ளும். எனினும் கருவாலி மரமானது, கோடாரியினால் உடனடியாகக் வெட்டிப்போடப்பட முடியும்; இதுபோலவே உறுதியான குணலட்சணம் / பாத்திரம்கூட உடனடியாகப் பாவத்தினால் கெடுக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, வீழ்த்தப்படலாம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் மேல்நோக்கின வளர்ச்சியின் வேகம் மெதுவாகவே இருக்கும்; ஆனால் கீழ்நோக்கின மன இயல்புகள், ஒருவேளை அனுமதிக்கப்பட்டால், உடனே செயலாற்றிடும். ஆகையாலே அநேகம் கிறிஸ்தவர்களானவர்கள், கிறிஸ்துவின் மதத்தினால் தாங்களும், தங்கள் நண்பர்களும் பாவத்தின் உளையான சேற்றிலிருந்து வெளியே வந்து, கன்மலையாம் கிறிஸ்து இயேசுவின்மீது நிற்பதற்கு உதவப்பட்டு, மாம்சத்தின் அசுசிகள் அநேகவற்றிலிருந்தும், அதன் இழிவான இயல்புகள் அநேகவற்றிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டு, இப்படியான பயிற்சி மற்றும் விடாமுயற்சியை மேற்கொண்டவர்களாக – பத்து அல்லது இருபது அல்லது நாற்பது வருடங்கள் ஆன நிலைமையில் இருக்கையில், இவர்கள் – தங்களுக்குச் [R2320 : page 181] சமமான நிலைமையில் நாணயத்திலும், நியாயத்திலும் அல்லது பெருந்தன்மையிலும் காணப்படும் சில அவிசுவாசிகளைக் காண்கையில் ஆச்சரியத்திற்குள்ளாகுவார்கள்.