R5900 – விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5900 (Page 154)

விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்

SOME PASTORAL COUNSEL ON MARRIAGE

நமது ஆதிபெற்றோராகிய ஆதாம் மற்றும் ஏவாளை ஒன்றிணைத்து, எளிமையான முறையில் தேவன்தாமே முதலாம் திருமண நிகழ்ச்சியினை நடத்திவைத்தார். தாயாகிய ஏவாள் ஏற்கெனவே ஆதாமின் எலும்பின் எலும்பாகவும், மாம்சத்தின் மாம்சமாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் தனித்தனி நபர்களாகத் தேவனாலேயே பிரித்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரீரத்தில் இருவராக இருந்தனர், ஆனால் இருதயத்திலோ ஒன்றாக இருந்தனர்; ஏனெனில் முழு மனுக்குலமும் இந்த ஒரு ஜோடியிடமிருந்து பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தேவன் நோக்கம்கொண்டிருந்தார்; இப்படி இருக்கையில் பாவமானது உட்பிரவேசித்து, முழு மனுஷஜாதியையும் உட்படுத்திக் காணப்படுகையில், முழு மனுக்குலத்தையும் மீட்பதற்கு ஒரு நபருடைய மரணம் போதுமானதாய்க் காணப்படும். “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று” (1 கொரிந்தியர் 15:21; ரோமர் 5:12,19).

உலகத்தைச் சீர்ப்பொருந்தப்பண்ணுவதோடு தேவனுடைய மகா திட்டமானது நிறைவு பெறுகையில், இந்தச் சீர்ப்பொருந்துதலானது ஸ்திரீயானவள் ஆதாமிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆதாம் இருந்த நிலைமைக்கு மனுக்குலத்தினைக் கொண்டுவந்திடும் என்று வேதாகமம் தெளிவாய்ப் போதிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் “மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை… தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்” (லூக்கா 20:35) என்று இயேசு கூறியுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் திரும்பக்கொடுத்தலின் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களது வேறுபடுத்தும் அம்சங்களை இழந்துபோய், ஆதியில் ஆதாம் இருந்ததுபோன்று மீண்டும் ஆகிடுவார்கள் – அதாவது பூமியானது ஜனங்களினால் நிரப்பப்பட்டிருக்கும் போது, ஒவ்வொருவனும் தன்னில் முழுமையானவனாகக் காணப்படுவான். பூமியானது அளவுக்கு மீறி நிரப்பப்படுவதற்குத் திட்டமிடாமல், மாறாக அதை நிரப்ப மாத்திரமே தேவன் திட்டமிட்டுள்ளார்.

புருஷன் மற்றும் ஸ்திரீயின் ஒன்றிணைதலானது, அவர்களுக்கிடையே உள்ள அன்பின் காரியமாக இருப்பினும், சட்டமானது முன்னேறிவந்து, எதிர்க்காலத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தக்கதாகச் சாட்சிகள் முன்னிலையில் இவர்களது ஒன்றிணைதலை அதிகாரப்பூர்வமானதாக்கிட, பொருத்தமான விதிமுறைகளும், சில ஒழுங்குமுறைகளும் அவசியமென வலியுறுத்துகின்றது. ஆகையாலே உரிமம் (licenses) முதலானவைகள் தொடர்புடைய சில திட்டவிவரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன மற்றும் இவை மிக ஏற்றவை என்றும் நாம் நம்புகின்றோம்.

விவாகத்திலுள்ள ஒரு விசேஷித்த அர்த்தம்

தேவ வசனத்தைப் பெற்றிருக்கும் கிறிஸ்தவ ஜனங்களாகவும், அந்த வசனத்தைக் குறித்த சில புரிந்துகொள்ளுதலுக்குள் வந்துள்ள வேத மாணவர்களுமாகிய நாம்… விவாகமுறையைத் தேவன் நிறுவினபோது அவர் அதில் கொண்டிருந்த ஒரு விசேஷித்த அர்த்தத்தினை காண்கின்றோம். புருஷன் மற்றும் ஸ்திரீக்கு இடையிலான விவாகமானது, கிறிஸ்து மற்றும் சபைக்கு இடையில் நடைபெறவிருக்கும் ஒன்றிணைதலுக்கான ஓர் அடையாளம் அல்லது மாதிரியாகும்; மற்றும் இப்படியாக இருக்கும்படிக்குத் தேவன் ஏற்படுத்தியுள்ளார். விவாகத்தினை ஓர் அடையாளமெனக் குறிப்பிட்டவராக அப்போஸ்தலன் தொடர்ந்து, கிறிஸ்து எப்படிச் சபையை அன்புகூர்ந்து, சபைக்காய்த் தம்மையே கொடுத்தாரோ, அப்படிப்போலவே புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்களது சொந்தச் சரீரமாக பாவித்து, அன்புகூர வேண்டும் என்று கூறினார் (எபேசியர் 5:25-32).
ஒரு புருஷன் தனக்கு என்ன செய்திடுவானோ அதைத் தன் மனைவிக்கும் செய்திட வேண்டும் என்பது எத்துணை மகா அன்பாகும்! இப்படியே கிறிஸ்துவும் எல்லாவற்றையும் தம் சரீரமாகிய சபைக்காகச் செய்திட்டார். இதைக்காட்டிலும் அதிகமாகவே அவர் செய்திட்டார் – அவர் நமக்காய்த் தம் ஜீவனையே கொடுத்திட்டார். இது புருஷன்மார்களும் தங்கள் மனைவிகளுக்காய்த் தங்கள் ஜீவியங்களைக் கொடுத்திட வேண்டும்; மேலும் அவளுக்கு உணவு, உடைகள் கொடுப்பது மாத்திரமல்லாமல், அவளது மனம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களுடைய நலனுக்கடுத்தவைகளுக்கும் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றதாயிருக்கின்றது. இவை அனைத்தும் புருஷனால் பார்க்கப்பட வேண்டும் மற்றும் ஒரு நல்லப் புருஷன் தன் மனைவியானவள் நன்கு கவனிக்கப்படுகிறாளா என்று பார்த்துக்கொள்ள வேண்டும், அதுவும் இது – தேவைப்படும் பட்சத்தில் அவனுக்கானவைகளில் சிலவற்றை அவன் தியாகம் செய்தும், அவனால் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

இப்பொழுது மறுபக்கத்திற்கு வருகையில், சபையானவள் எப்படிக் கிறிஸ்துவினிடத்தில் பயபக்திக்கொண்டிருக்கிறாளோ, அப்படிப்போலவே மனைவிகளும் தங்கள் புருஷன்மார்களிடத்தில் பயபக்திக்கொண்டிருக்கும்படிக்கு அப்போஸ்தலன் கூறுகின்றார். எந்தளவிற்கு இந்தத் தெய்வீகப் பாடத்திலுள்ள கருத்தினை மனுக்குலமானது கிரகித்துக்கொண்டுள்ளதோ, அந்தளவின்படியே அவர்களால் ஜீவியத்திலிருந்து சிறந்த நன்மைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறவர்களாக இருப்பார்கள். திருமண விஷயத்தில் கர்த்தருடைய ஏற்பாடுகளை கவனமாய்க் கைக்கொள்பவர்கள் திருமண உறவிலிருந்து சிறந்த நன்மைகளை அடைபவர்களாய் இருப்பார்கள். அவ்வப்போது தன் சொந்த விருப்பங்களையும் புறக்கணித்தவனாய் தன் மனைவியை அன்புகூரும் புருஷன் மிகுதியான பாராட்டிற்கு ஏதுவானவனாக இருப்பான் மற்றும் தன் கணவனுடைய நலனுக்கடுத்த காரியங்களுக்காக தன்னால் செய்ய முடிந்தவைகளைச் செய்பவளும், புருஷனுக்கு முழுவதும் சமர்ப்பிக்கப்பட்டவளாக இருப்பவளுமாகிய மனைவியானவள் – கர்த்தருக்குச் சபையால் செய்யப்படும் காரியங்களுக்கு உதாரணமாய் இருப்பாள்.

இப்படியாக நாம் கூறுகையில், “இப்படியிருக்க, விவாகம் பண்ணுகிறவனும் நன்மைசெய்கிறான்; விவாகம் பண்ணாதிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்” (1 கொரிந்தியர் 7:38) என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு முரணாக விவாதிக்க நாம் முற்படவில்லை. இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் உலகத்தாரிடம் பேசாமல், மாறாக தங்கள் ஜீவியங்களைக் கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களுக்கே பேசுகின்றார். ஒருவேளை இவர்களது விவாகமானது, கர்த்தருக்கான இவர்களது அர்ப்பணிப்பிற்கு இடையூறாக இல்லாதிருக்குமானால் இவர்கள் விவாகம் செய்திடலாம். ஒருவேளை இவர்களது அர்ப்பணத்திற்கு இடையூறாகக் காணப்படும் பட்சத்தில் இவர்கள் விவாகம்பண்ணிக்கொள்ளுதல் என்பது இவர்களது ஜீவியங்களை அபாயத்திற்குள்ளாக்கிடுவதாய் இருக்கும் (அடமானம் வைத்துக்கொள்வது போலிருக்கும்). ஆனாலும் சகோதரர்களும் சரி, சகோதரிகளும் சரி – இருவருமே தனிப்பட்ட விஷயத்தில் மாத்திரமல்லாமல், கர்த்தருடனும், மற்றவர்களுடனுமான தங்களுடைய உறவிலும் விவாகத்தின் வாயிலாய் நன்மைகள் அடைந்துள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

விவாகம்பண்ணுகிறவர்கள் கர்த்தருக்கெதிராகச் செயல்படுகின்றனர் என்று நாங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. கர்த்தரைப் பிரியப்படுத்த விரும்பிடும் யாவரும் இம்மாதிரியான காரியத்தில் மிகவும் ஜாக்கிரதையாகக் காணப்பட வேண்டும் மற்றும் விவாகம்பண்ணிக்கொள்கிறவர்களை மற்றவர்கள் விமர்சிக்கவும் முற்படக்கூடாது. இது தேவன் நமக்களித்த சுயாதீனமாகும் மற்றும் இந்தச் சுயாதீனத்தை நாம் நமக்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கும் அருளிட வேண்டும்.

நல்லதோ கெட்டதோ

விவாகம்பண்ணுகிறவர்கள் தாங்கள் பூரணநிலையிலுள்ள நபரை விவாகம்பண்ண வாய்ப்பில்லை என்ற உண்மையினைப் புரிந்திருக்க வேண்டும்; ஏனெனில் “பூரணமானவன் ஒருவனாகிலுமில்லை” என்று வேதம் நமக்குத் தெரிவிக்கின்றது. ஒருவனாகிலும் பரபூரணன் அல்ல மற்றும் ஒருவரும் பரிபூரணராய் இல்லாதிருக்கையில் அல்லது பரிபூரணமாய் இருக்கமுடியாது என்றிருக்கையில் அபூரணமான ஒருவர், மற்றவர் பரிபூரணராய் இருக்கும்படிக்குக் கேட்டுக்கொள்வது என்பது தவறாய் இருக்கும். எனினும் ஒவ்வொருவரும் தன்தன் சொந்தப் பலவீனங்களைத் திரையிட்டு மூடி அடக்கி வைப்பதற்கு முயற்சித்திட வேண்டும். இந்த விஷயத்தில் ஞானமற்றவர்களாய் இருப்பவர்களும் உண்டு. நம்முடைய மனங்கள் பூரணமாய் இருக்கின்றபடியால், மனதின் அந்த உயர் தரநிலைக்குத்தக்கதாக நம்மால் முடிந்தமட்டும் நாம் ஜீவித்திட வேண்டும். இடையூறு இராதவண்ணம் ஒவ்வொரு குறைவையும் விரைவாய் நாம் மூடி அடக்கிப்போட வேண்டும். ஒருவன் விவாகம்பண்ணுகையில், அவன் பூரணனாய் இருக்கும் நபரை விவாகம்பண்ணுவதாக எண்ணிக்கொள்வது தவறாக இருக்கும். அவன் தன்னுடைய பெலவீனங்களை அவளிடமிருந்து மூடி அடக்கிவைத்திருக்கின்றான் மற்றும் அவளும் அவளது பெலவீனங்களை அவனிடமிருந்து மூடி அடக்கிவைத்திருக்கின்றாள்; இவர்கள் தங்கள் தங்கள் பெலவீனங்களை ஜீவியம் முழுவதும் திரையிட்டு மூடி அடக்கிவைத்திருப்பது நலமாயிருக்கும்.

விவாகம்பண்ணுகிறவர்கள் ஒருவருக்கொருவர், ஒருவர் இன்னொருவருடைய கடந்தகால காரியங்களைக்குறித்து விசாரித்திடக்கூடாது; ஏனெனில் விவாகத்தின்போது ஒருவர் இன்னொருவரை நல்லவரோ கெட்டவரோ அவரை ஏற்றுக்கொள்கின்றார்; திரும்பிப்பார்த்தல் கூடாது. இப்படியாகவே கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டபோதும் காணப்பட்டது; அவர் பழைய வாழ்க்கையைக்குறித்து விசாரணை செய்துகொண்டிருப்பதில்லை. நாமும் அப்படிச் செய்யக்கூடாது. விவாகமான தம்பதிகளுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுகையில் அவர்களது பிரச்சனைகளை அவர்களுக்காகச் சரி செய்யும்படிக்கு மற்றவர்கள் பிரயாசம் எடுப்பதன்மூலம் அவர்களுக்கிடையே குறுக்கிடுவதற்கு, அவர்கள் யாரையும் அனுமதித்திடக்கூடாது; ஏனெனில் இம்மாதிரியான முயற்சிகள் அனைத்தும் பிரச்சனையையே உண்டுபண்ணிடும். தேவன் ஒன்றாய் இணைத்துள்ளவர்களுக்கிடையே குறுக்கிடுவதற்கு யாரும் முயற்சி செய்யாதிருப்பார்களாக. விவாக உறவில் ஏற்படும் பிரச்சனைகள், எப்பொழுதும் அநேகம் பேச்சு வார்த்தைகளுக்கு வழிநடத்துகின்றது; ஆகையால் இதை அறிந்தவர்களாக மற்றவர்களுடைய ஜீவியங்களில் பிரச்சனைகளை அதிகரித்திடும் யாதொன்றையும் செய்துவிடாதபடிக்கு நாம் விழிப்பாய் இருக்க வேண்டும். இப்பிரச்சனைகளின் விஷயத்தில் நாம் அனுதாபங்கூடப் பாராட்டிடக்கூடாது. அவர்களை நாம் தனியே விட்டுவிட வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்கிறார்களே, அப்போதெல்லாம் ஆலோசனை கொடுங்கள், ஆனால் குறுக்கிடாதீர்கள். அவர்கள் விவாகம்பண்ணின பிற்பாடு, வாழுங்காலமெல்லாம் நல்லதோ கெட்டதோ அதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆகையால் விவாகமென்பது தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு காரியமாகும் மற்றும் தீவிரமாய்ச் சிந்தித்தப் பிற்பாடு மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும். அது மிகப் புனிதமானதொரு பொறுப்பாகும். விவாகம்பண்ணும் இருவரும் ஜீவியகாலம் முழுவதற்கும் தங்களை ஒப்பந்தம் பண்ணிக்கொள்கிறார்கள். இக்கருத்தானது முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கைக்கொள்ளப்பட்டால் விவாகங்கள் அனைத்துமே அதிகம் திருப்திகரமாகக் காணப்படும்.