R5093 (page 279)
கர்த்தருடைய இந்த ஆவியானது நமக்கு என்ன கொண்டுவந்தது என்பதை அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கின்றார். அது ஒரு வல்லமையின், பெலத்தின் ஆவியாய் இருக்கின்றது. ஆவியின்படி நடக்க விரும்பி, கர்த்தருடைய அன்பைக்குறித்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாடுகின்றவர்கள் அனைவரையும் அவர் கைவிடாமல், அவர்களைத் தீமையினின்று விடுவிப்பார். இவர்கள் இந்த வல்லமையின் ஆவியிடமிருந்து வரும் தைரியத்தின் ஆவியினை அல்லது மனதின் மீதான ஒரு தாக்கத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். இது இவர்கள் மற்றப்படி செய்ய முடிகிறதைக் காட்டிலும் அதிகமாய்ச் செய்யத்தக்கதாக அத்தகையதொரு சக்தியை இவர்களுக்குக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது இவர்களையே ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. பிதாவுடைய தயவுள்ள சித்தத்தை விரும்பவும், செய்யவுந்தக்கதாக, தேவசமாதானத்தை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள் (பிலிப்பியர் 2:13). சத்தியத்தினை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள், தாங்கள் அதன் ஆவியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு இருந்த நிலைமையிலிருந்து மிகவும் வேறுப்பட்டவர்களாகுகின்றனர்; இவர்களுடைய மாற்றத்தினை அயலகத்தாரும், நண்பர்களும் உணர்ந்துகொள்வார்கள். மனைவியானவள் சத்திய அறிவிற்குள்ளாக வருகையில், சரியான விஷயங்கள் அனைத்திலும் அவள் எவ்வளவு அதிகமான உறுதியினைக் கொண்டிருக்கின்றாள் என்பதைக் காண்கையில், கணவன் பெரும்பாலும் ஆச்சரியமடைகின்றான். இந்த உறுதி என்பது கர்வத்தினுடைய ஆவியாய் இராமல், மாறாக தேவன் நன்மைக்கேதுவாய் அனைத்தையும் செய்துமுடிக்க விருப்பமும், வல்லமையுமுள்ளவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கையின் ஆவியாய் இருக்கின்றது. இது கணவன் விஷயத்திலும் பொருந்தும். அநேகம் மனைவிகள் சத்தியமானது எவ்வளவாய்த் தங்கள் கணவன்மார்களைப் பலப்படுத்தியுள்ளது என்று கண்டுள்ளனர். இந்த மாற்றமானது, கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கென்று கொடுத்துள்ள வல்லமையின் ஆவியினாலாகும். எந்தளவுக்கு இந்த ஆவியினைப் பெற்றிருக்கின்றோமோ, அவ்வளவாய் இந்த வல்லமையையும் பெற்றுக்கொள்வோம். உண்மைதான் சிலர் இயல்பாகவே வலுவானவர்களாய் இருக்கின்றனர்; மேலும் சத்தியமும் இவர்களைப் பலமுள்ளவர்களாக்குகின்றது. இயல்பாகவே பெலவீனர்களாய் இருப்பவர்கள், இவர்களுடைய நண்பர்களும், அயலகத்தாரும் ஆச்சரியத்திற்குள்ளாகும் வகையில் மிக அதிகமாய்ப் பலமுள்ளவர்களாக்கப்படுகின்றனர்.