R5700 – நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5700 (page 169)

நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்

THANKLESS, REBELLIOUS ABSALOM

2 சாமுவேல் 18:1-15

“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.” (எபேசியர் 6:1)

“நன்றியற்ற பிள்ளையைப் பெற்றிருப்பது என்பது பாம்பின்
பல்லினும் எத்துணைக் கூர்மையானது!”

இன்றைய நமது பாடமானது, அப்சலோமின் மரணத்தினைப் பற்றினதாகும். இக்காரியமானது விளக்கம் தர வேண்டிய நிலை இல்லாதளவுக்கு விளக்கமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் இளவரசனின் ஜீவியத்தைத் திரும்பிப்பார்ப்பதும், இவருடைய தோல்விகள் சிலவற்றைக் கவனிப்பதும் நமக்குப் பிரயோஜனமாயிருக்கும். முதலாவது விஷயம் என்னவெனில் . . . இவர் நற்பிறப்புடையவரல்ல. இவரது தாயும், இராஜாவாகிய தாவீதின் மனைவியுமானவள், அருகாமையிலுள்ள ஒரு புறஜாதி இராஜாவின் மகளாவாள். அப்சலோமின் தாய் அழகானவராக இருந்திருக்கக்கூடும்; ஏனெனில் அப்சலோம் அழகான ஆண்மகனாக, அழகான வாலிபனாக, பண்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்பவனாக, பிரபலமானவனாக வேத வாக்கியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றார். இராஜ குடும்பத்தின் அங்கத்தினனாய் இருந்ததும், வேர்வை சிந்தி உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்ததும், இவருக்குப் பாதகமாகவே இருந்தது.

தன் சகோதரிக்காய்ப் பழிவாங்கும்படிக்குத் தனது ஒன்றுவிட்ட சகோதரனாகிய அம்னோனைக் கொன்றுபோடுவதன்மூலம், அப்சலோம் முதலாவதாக நமது கவனத்திற்குப் பிரத்தியட்சயமாய்க் கொண்டுவரப்படுகின்றார். இதினிமித்தம் தன் தாத்தாவினுடைய பாதுகாப்பின்கீழ்த் தஞ்சம்புக ஓடுகின்றார். இப்படியாக இவரது தகப்பனுடனும், உண்மையான மதத்துடனும் இருக்கையில் உண்டாகும் நல்தாக்கங்களிலிருந்து இவர் இன்னும் விலகினவரானார். இப்படிப் பல வருடங்களாக இவர் காணாமல் போயிருக்க, இவர்மீது தொடர்ந்து அன்புகொண்டிருந்து, இவருக்காய்த் துக்கித்துக்கொண்டிருந்த இவரது தகப்பனார், அப்சலோமை எருசலேமுக்குத் திரும்பிவரச் சொல்ல ஏவப்பட்டார் – ஆனாலும் தன் குமாரன் தன் முன்னிலையில் வருவதற்கு இரண்டு வருடங்கள் தகப்பனார் மறுத்தார். இதன் தாக்கங்கள் அனைத்துமே இந்த இளைஞனுக்குப் பாதகமாகவே இருந்தது; எனினும் இந்தக் காரணங்கள் எதுவும் இவர் தன் தகப்பனாகிய, இஸ்ரயேலின் இராஜாவுக்குப் பண்ணின துரோகத்திற்கான பழியினை இவர் மேலிருந்து விலக்குவதற்குரிய காரணங்களாகாது.

அப்சலோமின் சதித்திட்டம்

சாதாரணமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இஸ்ரயேல் தேசம் எங்கும் நியாயாதிபதிகள் காணப்பட்டனர்; ஆனால் இவர்களால் அளிக்கப்படும் தீர்ப்பில் அதிருப்தி ஏற்படுகையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு பண்ணப்படுவதுபோல, இராஜாவினிடத்தில் மேல்முறையீடு செய்யப்படுகின்றது. ஆலயம் கட்டுவதற்குத் தேவையான பொருட்களை ஆயத்தம்பண்ணுவதில் இராஜாவாகிய தாவீது மிகவும் விறுவிறுப்பாய் ஈடுபட்டிருந்தார்; இந்த ஆலயமானது இவரது மரணம்வரையிலும் கட்டப்படவில்லை. இதினிமித்தம் மேலான நியாயாதிபதியென ஜனங்களுக்கு ஆற்றிடும் தன் பணியினைத் தாவீது இராஜா சிலவிதங்களில் செய்ய முடியாதவராயிருந்திருக்கலாம்… ஆகையால் ஒவ்வொரு உச்சநீதிமன்றங்களில் நடைபெறுவது போன்று ஜனங்களுடைய வழக்குகளில் சிலவற்றின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டது – இது முடிவுகளுக்காய்ப் பொறுமையற்றுக் காணப்படுவோருக்குச் சோர்வை உண்டாக்கிற்று.

நீதி வழங்கும் விஷயத்தில், இராஜாவாகிய தாவீதின் சார்பில் ஏதேனும் குறைவு இருந்ததாவென நம்மால் உறுதியாய்க் கூறமுடியவில்லை. இவரது தந்திரமுள்ள மகனாகிய அப்சலோம் தன்னையே மிகவும் பிரபலமாக்கிக்கொண்டான் என்று மாத்திரமே அறிவோம். அப்சலோம் ஜனங்களிடத்தில் மிகவும் தயவு பாராட்டினவனாகவும், ஜனங்களுடன் நன்கு பழகினவனாகவும், அவர்களுடைய புகார்களைக் கேட்பதற்கு எப்போதுமே ஆயத்தமாயிருப்பவனாகவும் இருந்தான்; மேலும் ஜனங்களுடைய விசாரணை விஷயத்தில் ஏற்படும் தாமதத்திற்காய் மனவருத்தத்தினைத் தெரிவித்து, “நான் இராஜாவாக இருந்திருப்பேனாகில், சூழ்நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கும்!” என்று கூறி தந்திரமாய்ப் பதிலளித்தான். இப்படியாக வஞ்சனையினாலும், சூழ்ச்சியினாலும், பொய்யுரைத்தும் தந்தையிடமிருந்து ஜனங்களுடைய இருதயங்களைத் தன்பால் கவர்ந்துகொண்டான் என்று நாம் வாசிக்கின்றோம். இப்படியான ஒரு மனுஷனை இராஜாவாகப் பெற்றிருந்தால், எவ்வளவு நலமாயிருக்குமென ஜனங்களும் உண்மையில் சிந்திக்கத் துவங்கினார்கள். தேவன்தான் இஸ்ரயேலின் இராஜா என்றும், வேதாகமம் சொல்வது போன்று இராஜாவாகிய தாவீது கர்த்தருடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து மாத்திரம் இருந்தார் என்றும் உள்ள உண்மையினை ஜனங்கள் முழுவதும் பார்க்கத் தவறினதாகத் தெரிகின்றது (1 நாளாகமம் 29:23).

அப்சலோம் கண்கவரும் அழகான இராஜகுமாரனாக, அலையலையான நீண்ட மயிரை உடையவனாய் இருந்தார். இவர் தன் இரதத்தில் செல்வார் மற்றும் இவருக்கு முன்னே வேகமாய் ஓடும் ஐம்பது வீரர்கள் செல்வதுண்டு. சிந்திக்காத ஜனங்கள் இவைகளினால் கவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த மினுக்கின் மயக்க நோயினால் ஒரு ஞானவான் கூடத் தாக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்சலோம் தன் தகப்பனுடைய மத உணர்வுகளை அறிந்திருந்தார் மற்றும் அவ்வுணர்வுகளை அப்சலோம் பெற்றிருக்கவில்லை. தந்தைக்குப்பின் தான் இராஜாவாகக் காணப்படுவது, தகப்பனுடைய விருப்பமாயிராது என்றும், தாவீது இராஜா வயதாகிக்கொண்டிருப்பதால், புதிய இராஜா ஏற்படுத்தப்படுவதற்குரிய தருணம் வெகு தொலைவில் இல்லை என்றும் அப்சலோம் உணர்ந்தார். பேராசைகொள்ளுதல் மற்றும் தேவனுக்குத் துரோகம் செய்தல் எனும் சாத்தானின் வழியினை அப்சலோம் பின்பற்றினவராகி, தன் தகப்பனுக்குத் துரோகம் புரிந்தார். இவர் ஒரு படையைத் திரட்டி, தன்னை இராஜாவென அறிவித்தார்; மேலும் இராஜாவாகிய தாவீதும், அவரது வழக்கமான சேனையும், அவருக்கு உண்மையாய் இருந்தவர்களும் தங்கள் ஜீவனைத் தப்பிக்க ஓடும் கட்டாயம் ஏற்படுமளவுக்கு, அப்சலோம் தன்னால் கவரப்பட்ட அநேகம் ஜனங்களுடைய ஆதரவுடன், காரியங்களை மிக வேகமாகவும், மிக நேர்த்தியாகவும் செய்துமுடித்தார். அப்சலோமின் பெரிய சேனைக்கும், இராஜாவாகிய தாவீதின் சிறிய சேனை, ஆனால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட போர்வீரர்களைப் பெற்றிருந்த சேனைக்கும் இடையில் யுத்தம் நடந்தது. தாவீது இராஜாவிற்கே வெற்றிக் கிடைத்தது. தன் குமாரனாகிய இளைஞன் அப்சலோமினைக் கொன்று போடக்கூடாது என்று தாவீது தன் போர்வீரர்களிடம் கேட்டுக்கொண்ட போதிலும், அப்சலோம் கொல்லப்பட்டார்.

இங்குத் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனுக்கும், தன் தகப்பனைக் கொல்வதற்கு நாடினவனும், கலகக்காரனும், சதித்திட்டம் போட்டவனும், சூழ்ச்சிக்காரனும், பேராசைக்கொண்டவனும், பகட்டானவனும், ஆடம்பரமானவனும், ஜனங்களால் விரும்பப்பட்டவனுமான மனுஷனுக்கும் இடையில் எத்தகையதொரு வித்தியாசம் காணப்படுகின்றது! தேவனுடைய மனுஷன், தான் அறிக்கைப்பண்ணி, மனந்திரும்பிக் காணப்பட்ட அந்தப் பெலவீனங்களுக்கு அப்பாற்பட்டு, தேவனுடைய மனுஷன் தேவனிடத்தில் உண்மையுள்ள இருதயத்தினைப் பெற்றிருந்தார்; “என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” எனும் புலம்பலின் வார்த்தைகளில் தன் குமாரனுக்காய் அவர் பெற்றிருந்த அனுதாப அன்பும் வெளிப்படுகின்றது.

ஒரு மிக முக்கியமான கொள்கை

மனித சித்தம் என்பது அருமையானதாகும், ஆகையாலேயே ஒவ்வொருவனும் தன்தன் எதிர்க்காலத்திற்குப் பொறுப்பாளியாகுகின்றான். ஆகையால் தன் முயற்சியினாலுயர்ந்த மனிதன் எனும் கூற்றுக் கிட்டத்தட்ட உண்மையே.

எனினும் இது – ஓரளவுக்குத் திறமையுள்ளவர்களாகவும், வெளிப்புற அழகுடன் மாத்திரமல்லாமல், தேவனுக்கும், நீதியின் கொள்கைகளுக்கும் நேர்மையுள்ள, நீதியுள்ள, மனசாட்சியுள்ள நல்லப் பிள்ளைகளை உலகில் கொண்டுவரத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பெற்றோரின் கடமையினின்று பெற்றோரை விலக்கிடாது. மேலும் இது – வாழ்க்கைக்குறித்த சரியான புரிந்துகொள்ளுதலையும், முறையான அறிவுரைகளையும் பிள்ளைகளுக்குக் கொடுத்திடும் பெற்றோரின் கடமையினின்று பெற்றோரை விலக்கிடாது; ஏனெனில், “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்” [R5700 : page 170] (நீதிமொழிகள் 22:6) என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றது.

பல நூற்றாண்டு காலங்களாகப் பிரசங்கிக்கப்பட்ட, போதிக்கப்பட்ட பின்னரும்கூட, வெகு சில பெற்றோர்களே உலகத்தில் தங்களால் கொண்டுவரப்படுகின்றதான பிள்ளைகள் விஷயத்திலுள்ள தங்கள் கடமைகளை உணர்ந்திருப்பதைக் காண்பது உண்மையில் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. வெகு சில தகப்பன்மார்களே தங்கள் மனைவிகள் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கான பாதுகாவலர்களாக, பராமரிப்பவர்களாகத் தாங்கள் இருப்பதை உணர்ந்திருக்கின்றனர்; மேலும் வெகு சில தகப்பன்மார்களே குடும்பத்தின் தாயானவளாய் இருக்கும்படிக்கு, உயர்குணம் உள்ள மற்றும் மனசாட்சிக்குக்கட்டுபட்டு நடக்கும் மனைவியைத் தெரிந்துகொள்வது மாத்திரம் தங்களது கடமையாகவும், சிலாக்கியமாகவும் இராமல், தங்கள் குழந்தைகள் உயர்பண்புகள் பதியப்பெற்றவர்களாகவும், பாவத்தினால் குறைவாய்ப் பதியப்பெற்றவர்களாகவும் பிறக்கத்தக்கதாக கர்ப்பக்காலத்தில் தாயானவளை நல்ல / அனுகூலமான சூழ்நிலைகளின்கீழ் வைத்துக்கொள்வதும், அவளது மனமும், இருதயமும் – தூய்மையாகவும், அன்பானதாகவும், பெருந்தன்மையுடையதாகவும் மற்றும் தேவனுக்கும், நீதியின் கொள்கைகளுக்கும் உண்மையாகவும் காணப்பட அவளுக்கு உதவுவதும் தங்கள் கடமையாக இருக்கின்றது என்று உணர்ந்திருக்கின்றனர். ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்று வேதவாக்கியங்கள் சரியாகவே சொல்லியிருக்கின்றன (ஓசியா 4:6).

இனமேம்பாடு கோட்பாடானது எத்திசையிலும் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே ஆனால் எதற்காக? ஆரோக்கியம் மற்றும் ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தெரிவுசெய்தல் எனும் விதத்தில் இக்கோட்பாட்டின் அறிவுரைகளானது முக்கியமானதாய் இருப்பினும், நம்மால் பார்க்கப்பட்டுவரும் கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அதாவது கர்ப்பக்காலங்களில் தாயானவளின் மனமானது, அவளது குழந்தையினுடைய குணங்களை நல்லதாகவோ, கெட்டதாகவோ பதியபண்ணுகின்றது எனும் கொள்கையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இனமேம்பாடு கொள்கையானது முக்கியமற்றதாகுகின்றது. தாயானவளால் பூரணமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதுதான்; எனினும் அவள் தன் சொந்தக் குறிக்கோள்களை உயர்வானதாகவும், உண்மையானதாகவும், அசைவுறாததாகவும், தூய்மையானவைகள், சிறந்தவைகள் மற்றும் நன்மையானவைகள்மீது பதியபெற்றதாகவும் கொண்டிருப்பாளானால், சந்தேகத்திற்கிடமின்றி, அவளது குழந்தையானது, சரீர ரீதியிலும், அறிவு ரீதியிலும், நல்லொழுக்க ரீதியிலும்கூட வெகு அனுகூலமடையும். போட்டோ டிராமா ஆப் கிரியேஷனில் (Photo-Drama of creation) நாம் ஏற்கெனவே சுட்டிக்காண்பித்துள்ளது போன்று, பூரண தாயாகிய ஏவாளினால் தன் குமாரனாகிய காயீனிடத்தில் பொறாமை, சந்தோஷமின்மை எனும் பண்புகளைப் பதியவைக்க முடியும் மற்றும் பதியவைத்தாள் மற்றும் இதன் காரணமாகவே காயீன் தன் சகோதரனைக் கொன்றுபோட்டார்.