R2337 (page 216)
[R2338 : page 219]
கேள்வி:– இந்த யுகத்தில் நீதிமானாக்கப்பட்ட பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறக்கையில், ஜீவனுக்கு உயிர்த்தெழும்போது ஆவிக்குரிய (தூதர்) சுபாவத்தினைப் பெற்றுக்கொள்வார்களா? இல்லையெனில் இக்குழந்தைகளுக்கும், இறந்துபோயுள்ள மற்றக் குழந்தைகளுக்கும் வித்தியாசம் என்ன? ஜூன் 15-ஆம் தேதி பக்கம் 181-இல் இடம்பெறும் காவல் கோபுர கட்டுரையை வாசித்ததின் அடிப்படையில் இக்கேள்வி எழும்புகின்றது.
பதில்:– “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்.” நீங்கள் குறிப்பிடும் குழந்தைகளானவர்கள் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல, ஆகையால் ஆவிக்குரிய ஜீவிகளாக இருப்பதில்லை. இவர்கள் அடையப்போகும் பூரணமானது மாம்ச சுபாவத்திலிருக்கும் மற்றும் இது (மீதமான உலகத்தாரோடுகூட) திரும்பக்கொடுத்தலின் வழிமுறையின்மூலம் திரும்பக்கொடுத்தலின் காலங்களில் – அதாவது ஆயிர வருஷயுகத்தின்போது அடையப்படும். இந்தக் குழந்தைகளுக்கும், உலகத்திலுள்ள மீதமானவர்களுக்கும் (அவிசுவாசியான பெற்றோர்களது பிள்ளைகளுக்கும்) ஆயிர வருஷயுகத்தின் போது எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை காணப்படும் ஒரு வித்தியாசம் என்னவெனில் விசுவாசியின் பிள்ளைகளானவர்கள் பெற்றோர் வாயிலான நற்பிறப்பின் காரணமாய்த் தங்கள் மாம்சத்தில் மற்றவர்களைவிடக் குறைவான சீர்க்கேட்டினை உடையவர்களாய் இருப்பார்கள். அப்போஸ்தலனால் (1 கொரிந்தியர் 7:14) குறிப்பிடப்படும் மற்றும் ஜூன் 15-ஆம் தேதி, பக்கம் 181-இல் காவற்கோபுர கட்டுரையில் எங்களால் குறிப்பிடப்பட்டுள்ளதுமான நீதிமானாக்கப்படுதலின் அம்சமானது தற்கால யுகத்திற்கும் மற்றும் பகுத்தறிவின், தனிப்பட்ட பொறுப்புணர்வின் வயதை அடைவதற்கு முன்புள்ள குழந்தைகளுக்கும் மாத்திரமே பொருந்துகின்றதாயிருக்கும். அது விசுவாசியான பெற்றோர்களின் பிள்ளைகளும், அவர்களது பெற்றோர்களும் தற்கால ஜீவியத்தின்போது – அதாவது பிள்ளைகள் பகுத்தறிவின் வயதை அடைவதுவரையிலும் தெய்வீகப் பராமரிப்பிற்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று மாத்திரம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; அப்பிள்ளைகள் முதிர்ச்சி அடைகையில் அவர்கள் தானாய் முன்வந்து தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாய்க் காணப்படுவதற்கு அவர்களை நன்கு ஆயத்தமாக்கும் நோக்கத்தில், அப்பிள்ளைகள் பகுத்தறிவின் வயதை அடைவதுவரையிலும் தெய்வீக வழிநடத்தல் மற்றும் பராமரிப்பின்கீழ்க் காணப்படுகின்றனர் என்று மாத்திரம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. மனுக்குலத்தார் அனைவரும் இறுதியில் சரீர ரீதியிலும், மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் அனுகூலமான நிலைமைகளுக்குக் கடந்துவருவார்கள். இது அடுத்த யுகத்தில் விசுவாசிகளின் பிள்ளைகளுக்குச் சாதகமற்றச் சூழ்நிலைகள் இருக்குமென்றும், மற்றவர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றதென எடுத்துக்கொள்ளப்படக்கூடாது.