R3786 (page 168)
மாற்கு 7:24-30
“உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது.” (மத்தேயு 15:28).
விசுவாசம் பற்றின இப்பாடத்தினை நாம் அதிகம் தியானிக்கையில், தேவனுடைய பார்வையில் விசுவாசம் என்பது இன்றியமையாதது மாத்திரமல்ல, அது மிகவும் விலையேறப்பெற்றது என்றும்கூட நாம் அதிகமாய் அறிந்துகொள்கின்றோம். விசுவாசம் இல்லாமல் நம்மால் தேவனிடத்தில் வரமுடியாது; விசுவாசமில்லாமல், நம்மால் அவர் அன்பில் நிலைத்திருக்க முடியாது; அவரது வாக்குத்தத்தங்கள் மீதான விசுவாசமில்லாமல், நம்மால் தினந்தோறும் அவரது இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும், வழிநடத்துதல்களையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றோம், தேவனுடைய சுதந்தரர்களாக, நமது கர்த்தராம் இயேசு கிறிஸ்துவோடுகூட உடன் சுதந்தரர்களாக இருக்கின்றோம் என்பதை, இது விஷயம் குறித்த அவரது வாக்குத்தத்த வசனங்கள் மீதான விசுவாசமில்லாமல் நம்மால் உணர்ந்துகொள்ளவும் முடியாது. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதற்கு விருப்பம் இல்லாமல், நம்மால் தினந்தோறும் கர்த்தரைப் பின்பற்றிச் செல்லவும் முடியாது, ஏனெனில் இதையே பரீட்சையாக அவர் தம் பின்னடியார்களுக்கு வைக்கின்றார். நமக்கு மிகவும் நாசகரமாய்த் தோன்றிடும் உலகம், மாம்சம் மற்றும் பிசாசின் எதிர்ப்புகளானது, ஆசீர்வாதங்களாகக் காணப்படும் என்றுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மீதான விசுவாசம் நமக்கில்லையெனில், இதைக்குறித்து நம்மால் இப்படிக் காணமுடியாது. இப்பொழுது விசுவாசம் வைப்பதன் மூலம், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் நமக்குக் கொடுக்கப்படுகின்றதான பல்வேறு பாடங்களினால் நன்மை அடையாமல், நாம் பரலோக இராஜ்யத்திற்கும், அதன் மகிமைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்களுக்காகவும் ஆயத்தமாகக் காணப்பட முடியாது.
இது விஷயமாகச் சம்பவம் ஒன்று நமக்கு ஞாபகம் வருகின்றது. அலிகெனியிலிருந்து வெகுதொலைத்தூரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சத்தியத்தில் ஆழ்ந்த விருப்பம் காட்டும் சகோதரி ஒருவர் எங்களிடம், அவள் தன் கணவனுக்குக் கர்த்தர் கிருபையாய்ப் புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறந்தருளும்படிக்கு ஊக்கமாய் ஜெபம்பண்ணிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். சகோதரியின் கணவனுடன் எங்களுக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததினால், அவர் சத்தியத்திற்குள் வரவாய்ப்பில்லை என்பது எங்கள் அபிப்பிராயமாய் இருந்தது. அவர் மோசமான மனிதரல்ல, மாறாக அவர் முற்றிலும் உலகப்பிரகாரமானவராகவும், தொழிலிலும், வேட்டையாடுவதிலும், (lodge) வாடகை விடுதியிலுள்ள வேலை முதலியவற்றிலும் முழுக்க மூழ்கினவராகவும் காணப்படுபவர் ஆவார். ஆகையால் இது விஷயத்தில் மிகுந்த ஏமாற்றம் அடைவதிலிருந்து அச்சகோதரியைத் தடைப்பண்ண வேண்டும் என்று நாங்கள் அச்சகோதரியை நோக்கி: “அருமையான சகோதரியே, தம்முடைய ஆவிக்குரிய மணவாட்டி வகுப்பாரின் அங்கத்தினர்கள் விஷயத்தில், கர்த்தர் தம்முடைய சொந்தத் தெரிந்துகொள்ளுதலைச் செய்துகொண்டு இருக்கின்றார் என்பதை நீங்கள் நினைவில்கொண்டிருக்க வேண்டும். ஜெபத்தில் கர்த்தருக்குக் கட்டளையிடுவதோ அல்லது அவர் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டளையிடுவதோ நமக்கடுத்த காரியமல்ல; அவருடைய வழிநடத்துதலினால் சத்தியம் நம் செவிகளுக்கு எட்டி, திருமணவிருந்தில் பங்குகொள்வதற்கான அழைப்பாகிய ஆசீர்வாதத்தினை நமக்குக்கொண்டுவந்துள்ளதற்காய் நாம் நன்றியோடு இருப்பதே நமக்கடுத்த காரியமாய் இருக்கின்றது. உங்கள் கணவன் சத்தியத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை வளர்த்திக்கொண்டிராதீர்கள் மற்றும் இப்படியாக நீங்கள் குறிப்பாய் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்காதீர்கள்; மாறாக நீங்கள் அறிந்திருப்பது போன்று அவர் ஒரு நல்ல மனிதனாக இருப்பதினால் அதற்காய்க் கர்த்தருக்கு நன்றி ஏறெடுங்கள் மற்றும் உங்கள் சொந்த ஜீவியத்தின் மூலமாக, உங்கள் சொந்த நடத்தையின் மூலமாக மற்றும் நீதி என்றால் என்ன என்றும், கிறிஸ்துவின் சீஷி என்றால் என்ன என்றும் சகல விதத்தில் உங்கள் முன்மாதிரி மூலமாக, கூடுமானமட்டும் உங்கள் கணவனுக்கு நல் உதாரணமாய் விளங்குங்கள் – அதாவது கர்த்தருக்கும், அவரது ஊழியத்திற்கென்றும் உங்கள் கணவன் தன்னை ஒருபோதும் அர்ப்பணம்பண்ணாதவராய் இருப்பினும், அவருக்குத் தற்கால ஜீவியத்திலும், எதிர்கால ஜீவியத்திலும்கூட நன்மையாய்க் காணப்படும் என்ற நம்பிக்கையில் இப்படி நல் உதாரணமாய் விளங்குங்கள்” என்று கூறினோம்.
அச்சகோதரியினுடைய பதில் பின்வருமாறு இருந்தது:
“இவை அனைத்தையும் சகோதரர் ரசல் அவர்களே, நான் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றேன்; ஆனால் என் கணவனாகிய ஜான் மீது ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தினை அருள நான் கேட்டுக்கொள்வதில் – என் கணவனுடைய புரிந்துகொள்ளுதலின் கண்களைத் தயவாய்த் திறந்தருள நான் கேட்டுக்கொள்வதில் – கர்த்தர் சினங்கொள்ளமாட்டார் என்று நான் இன்னமும் எண்ணுகின்றேன். என் கணவனுடைய சித்தத்திற்கு எதிர்மாறாக அவரை மாற்றத்தக்கதாக அவரிடத்தில் அற்புதம் ஒன்று நிகழ்த்தப்பட நான் வேண்டிக்கொள்ளவில்லை மாறாக கர்த்தர் தம்முடைய வழிநடத்துதலில் என் கணவனுக்குத் தயவுப்பாராட்டிடவும், திவ்விய ஞானத்திற்கு இசைவாக, கணவனுக்கு முன்பாக வழியினை எளிமையாக்கிடவும் நான் வேண்டிக்கொள்கின்றேன்” என்று கூறினாள். அவளின் மனைவிக்குரிய பக்தியையும் கர்த்தருடைய தயவின் மீதான விசுவாசத்தினையும் நாங்கள் மதித்தும், அதேவேளையில் நாட்கள், வருஷங்கள் கடந்து செல்கையில் எவ்வளவாய் இந்தப் பாவப்பட்ட ஸ்திரீ ஏமாற்றம் அடையப்போகிறாளோ என்று எங்களுக்குள்ளாய் எண்ணி, மறுக்கும் சில வார்த்தைகளைக் கூறினோம். நாங்கள் பெரிதும் ஆச்சரியமடையும் விதத்தில் ஒரு வருடத்திற்குப் பின்னர்… அவளுடைய கணவன் சத்தியத்தின் மீது ஆர்வம் அடைந்தார் மற்றும் அந்த ஆர்வத்தினால் கர்த்தருக்கும், அவர் ஊழியத்திற்கும் என்று தன் இருதயத்தையும், ஜீவியத்தையும் முழுமையாய் அர்ப்பணித்தார். அதிலிருந்து நாங்கள் ஒரு படிப்பினையை, இக்கட்டுரையில் இருந்து நாம் கற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஒத்த நிலைமையில் கற்றுக்கொண்டோம். தேவனுடைய தயவின் மீதான விசுவாசத்தினை, நம்பிக்கையினைத் தேவன் பெரிதும் மதிக்கின்றார் என்பதும், தம்முடைய திட்டம் குறுக்கிடப்படாமல், கூடுமானமட்டும் விடாப்பிடியான விசுவாசத்தில் ஏறெடுக்கப்படும் சில விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கின்றார் என்பதும்தான் படிப்பினைகளாய் இருக்கின்றன. ஆவியின் இந்த முக்கியமான கனியினை வளர்த்தி, விருத்தியாக்கிடுவதற்கு நாம் ஒவ்வொருவரும் அதிகமதிகமாய் முயற்சிப்போமாக மற்றும் இதற்கேற்ப நாம் அன்பிலும், சந்தோஷத்திலும், சமாதானத்திலும், ஊழியத்திலும், “உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது” என்று கூறுபவரிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களிலும் பெருகுகின்றவர்களாய் இருப்போம்.