R5296 – ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R5296 (page 281)

ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்

PRACTICAL LESSONS FROM THE LIFE OF ELI

1 சாமுயேல் 3:18

ஏலியின் வீட்டில் துன்பத்தின் சம்பவம் வரப்போகின்றது என்று தெரிவிக்கும் ஒரு செய்தியை, கர்த்தர் சாமுயேலின் வழியாக ஏலிக்கு அனுப்பினார். கர்த்தர் அனுமதிக்க சித்தம் கொண்டுள்ள பெருந்துன்பத்தைப்பற்றிக் கேட்ட மாத்திரத்தில்தான், நமது பாடத்தின் ஆதார வசனத்தினுடைய வார்த்தைகளை ஏலி பேசுகின்றார்; இன்னுமாக பெருந்துன்பம் வந்த பிற்பாடு என்று இல்லாமல், பெருந்துன்பம் வருவதற்கு முன்னதாகவே ஏலி, அதற்குக் கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுப்பதையும் இவ்வசனத்தின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே இவ்வசனத்தின் வார்த்தைகளானது, ஏலியிடம் வெளிப்படும் தாழ்மையைக் காண்பிக்கின்றதாய் இருக்கின்றது.

ஏலி அநேக வருடங்களாக, இஸ்ரயேலில் நியாயாதிபதியாக இருந்திருக்கின்றார்; இன்னுமாக பதிவுகளை வைத்துப்பார்க்கையில், இவர் பின்பற்றத் தகுந்த மாதிரியாகவே, அதாவது தனது சகல செயல்களிலும் நீதியுடன்தான் காணப்பட்டிருந்திருக்கின்றார். ஆனால் இவருடைய குமாரர்கள் “பேலியாளின் மக்கள்” என்று அழைக்கப்பட்டிருந்தனர்; இவர்கள் பல்வேறு வழிகளில் பொல்லாதவர்களாகக் காணப்பட்டார்கள். ஏலியிடமிருந்து வெளிப்பட்ட செல்வாக்கானது, இஸ்ரயேல் ஜனங்களுக்கு நன்மை பயப்பிக்கின்றதாய் இருக்க, ஏலியின் பராமரிப்பின் கீழிலும், அவருடைய ஒப்புதலின்கீழிலும் இன்னொரு முரண்பாடான செல்வாக்கும் உதித்து வளர்ந்தது. ஒருவேளை இந்தப் பொல்லாத செய்கைக்காரர்கள், ஏலியின் சொந்தக் குடும்பத்தாராக இல்லாதிருந்திருப்பார்களானால், சந்தேகத்திற்கு இடமின்றி ஏலி, நியாதிபதி எனும் தனக்குரிய அதிகாரத்தின்படி இவர்களிடத்தில் செயல்பட்டிருந்திருப்பார். இங்குத் தேவபக்தியாய் இருந்தும், தனது குடும்பத்திற்குரிய தலைவன் என்ற நிலையில் குறைவுடன் இருக்கும் மனிதனைப் பார்க்கின்றோம். இவர் இவருடைய வீட்டின் தலைவனாக, தனது பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் பயிற்றுவித்திருக்க வேண்டும்; அவர்களை இவர் நீதியில் பயிற்றுவித்திருக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் இவருடைய குடும்பத்தின் அங்கத்தினர்களிலிருந்து தள்ளப்பட்டு, நியாயம் வழங்குபவராகிய இவரால் செயல்படுத்த முடிகின்ற குறிப்பிட்ட கட்டுப்பாட்டுகளுக்குள் இவர்கள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.

[R5297 : page 251]

ஏலியின் குணலட்சணத்தில் காணப்பட்ட வழு / தவறு

இச்சம்பவத்திலிருந்து, தேவன் நம்மிடத்திலும், நம்முடைய குடும்பத்திலிருந்தும் எதிர்ப்பார்க்கின்றவைகள் தொடர்பான ஒரு பாடத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஒரு பிள்ளை திருடுகிறதாய், ஒழுக்கம்கெட்டதாய், தேவையின்றிக் குறுக்கிடுகின்றதாய் அல்லது பாதகம் ஏற்படுத்துகின்றதாய் இருக்குமாயின், கிறிஸ்தவ பெற்றோர் இப்படியாகத் தொடர அனுமதிக்கக்கூடாது. இதை எப்படியேனும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குக் கிறிஸ்தவ பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். எனினும் தேவனுக்கான பயபக்தி தொடர்புடைய விஷயத்தில் நாம் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிள்ளையானது வித்தியாசமான கருத்துக்கொண்டிருக்குமானால், நாம் பிள்ளையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாக வேண்டும் என்று எண்ணிவிடக்கூடாது.

பெருந்துன்பம் பற்றின இச்செய்தியானது, சிறுவனாகிய சாமுயேல்மூலம் ஏலிக்கு வந்ததை நாம் நினைவில்கொள்ள வேண்டும். அக்காலத்தில் தீர்க்கத்தரிசிகளுக்கு நடப்பதுபோன்று கர்த்தர் தன்னை அழைக்கும் குரலைச் சாமுயேல் கேட்டார். ஏலியின் குரல் என்று சாமுயேல் எண்ணிக்கொண்டு, ஏலியினிடத்திற்குப்போய், நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஏலி தான் அழைக்கவில்லை என்றும், திரும்பிப்போய்ப் படுத்துக்கொள்ளுமாறும் சாமுயேலிடம் கூறினார். இப்படியாக மூன்றுதரம் நடந்தது; கர்த்தர் பிள்ளையை அழைப்பதாக ஏலி புரிந்துகொண்டார். ஆகவே சாமுயேலை மீண்டும் போய்ப் படுத்துக்கொள்ளுமாறும், ஒருவேளை மீண்டும் அழைக்கும் குரல் கேட்குமானால், “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லி, சாமுயேல் கர்த்தருக்கு ஊழியஞ்செய்யக் கொண்டிருக்கும் தனது ஆயத்தத்தைக் காண்பிக்குமாறும் ஏலி சாமுயேலிடம் கூறினார். சாமுயேல் தனக்குச் [R5297 : page 252] சொன்னபடியே செய்தார், மேலும் ஏலி தனது குடும்பம் சார்ந்த விஷயத்தில் கொண்டிருந்த அஜாக்கிரதையின் காரணமாக, அவர்கள் ஆசாரியத்துவத்திலிருந்து அறுப்புண்டுப் போவார்கள் என்று கர்த்தர் சாமுயேலிடம் கூறினார்.

ஏலியின் அருமையான கீழ்ப்படிதல்

கர்த்தர் பயன்படுத்தின சாமுயேலாகிய கால்வாய்க்கு எதிராக ஏலி எவ்விதமான கோபத்தையும் வெளிக்காட்டாத விஷயம் குறிப்பிடத்தக்கக் காரியமாகும்! சாமுயேலின் பெற்றோர்கள், சாமுயேலை அர்ப்பணித்ததுமுதல், ஏலி சாமுயேலைத் தனது குடும்பத்திற்குள் ஏற்றுக்கொண்டிருந்தார். பிள்ளையாகிய சாமுயேல் வழியாகத் தேவன் தன்னிடம் பேசுவதன்மூலம், தேவன் தன்னைப் புறக்கணிக்கின்றார் என்று புரிந்துகொண்ட காரியமானது கோபத்தை மூட்டுவதற்குரிய பெருமையின் ஆவியைத் தூண்டிவிடுவதற்குப் போதுமான காரணமாக இருந்திருக்கும். ஆனால் ஏலியின் நடத்தையோ, அவருடைய இருதயம் மென்மையாய் இருப்பதைக் காட்டுகின்றது. கர்த்தர் தன்னிடம் தெரிவித்ததைச் சாமுயேல் தெரிவித்தபோது, ஏலி: “அவர் கர்த்தர். அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக, இது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு. இது நிச்சயமாகச் சரியானதும்! நிச்சயமாக நல்லதும்தான். கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நலமானதைச் செய்வாராக, ஒருவேளை என்னுடைய சொந்தக் குடும்பத்திற்கு அழிவு வருவதாகவும், ஒருவேளை ஆசாரியத்துவத்திலிருந்து என்னுடைய குடும்பம் தள்ளப்படுவதாகவும் இருப்பினும், கர்த்தர் தம்முடைய பார்வைக்கு நலமானதைச் செய்வாராக” என்றும் கூறினார்.

ஆசாரியத்துவத்திலிருந்து ஏலியின் குமாரர்கள் தள்ளப்படுவது என்பது ஏலியின் குமாரர்கள் மரித்துப்போவதைக் குறிக்கின்றது, ஏனெனில் ஏலியின் குமாரர்கள் ஆரோனின் ஆசாரியத்துவத்தில் ஆசாரியர்களாக வரும் வரிசையில் காணப்பட்டார்கள். ஏலியின் இவ்வார்த்தைகள் முழுமையாகக் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பதற்கு ஓர் அருமையான உதாரணமாகக் காணப்படுகின்றது. ஏலி ஒருவேளை சில விஷயங்களில் பெலவீனராய்க் காணப்பட்டாலுங்கூட, வேறு விஷயங்களில் பலமாய்க் காணப்படுகின்றார், அதாவது அவருடைய தாழ்மையிலும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பதிலிலும் பலமாய்க் காணப்படுகின்றார். யாரெல்லாம் சாந்தத்துடனும், கற்பிக்கத்தக்க நிலையிலும் தங்கள் விஷயத்தில் காணப்படுகின்றார்களோ, இவர்கள் பெரும்பாலும் இவர்களுடைய கட்டுப்பாட்டின்கீழ்க் காணப்படும் மற்றவர்களைக் கையாளும் விஷயத்தில் போதுமான அளவுக்கு உறுதியுடன் காணப்படுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களைக் கர்த்தரிடத்தில் கீழ்ப்படியச் செய்கிறதும், சாந்தமாய் இருக்கச் செய்கிறதுமான பண்பானது, இவர்களை மற்றவர்களிடத்தில் இரக்கத்துடனும், கடினமில்லாமலும் இருக்கச் செய்கின்றது. ஆனால் கர்த்தர் மற்றும் அவருடைய வழிநடத்துதல்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்புடைய விஷயத்தில் சாந்தத்துடனும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்தலுடனும் நாம் காணப்படும் அதேவேளையில், மற்றவர்கள் தொடர்புடைய விஷயத்திலும் கர்த்தருடைய சித்தத்தை உறுதியாகச் / நிலையாகச் செயல்படுத்த முடியக்கூடிய நிலையில் நாம் காணப்படுவது நல்லதாகும்.