R3088 – பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3088 (page 303)

பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்

FIDELITY TO EARTHLY AND HEAVENLY BRIDEGROOMS

“அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:

ஏற்ற கால சத்தியத்தினுடைய வெளிச்சத்தினை அறிந்தது முதற்கொண்டும், அதிலே நடப்பதற்குப் பிரயாசம் எடுத்தது முதற்கொண்டும், நான் அவைகளை வாசிப்பதற்கு (கணவனால்) மிகவும் தடைபண்ணப்பட்டிருக்கின்றேன் மற்றும் நடத்தப்படும் எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு அல்லது அன்புக்குரிய சகோதர சகோதரிகளிடம் எவ்விதமான சம்பாஷணைப்பண்ணுவதற்கு நான் அநேகந்தரம் தடைபண்ணப்பட்டிருக்கின்றேன்.

கொஞ்சம் காலம் நானும் அமைதியாகக் கீழ்ப்படிந்தவளாகக் காணப்பட்டேன் மற்றும் என் கணவன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வேதாகமத்தைத் தவிர வேறு எந்தப் புத்தகங்களையும் “”நான்”” என் அருகே வைத்திருக்கிறதில்லை. பின்னர் நான் தைரியமடைய ஆரம்பித்தேன் மற்றும் மறுபடியுமாகக் கைப்பிரதி ஒன்றை ஆங்காங்கே (வீட்டில்) தெரியும்படி வைத்தேன். ஆனால் ஒவ்வொரு தாக்குதலும் மோசமானதாகவே இருந்தது; பின்னர் இறுதியில் என் கணவனோ: “”இந்தப் புத்தகங்களையோ அல்லது கைப்பிரதிகளையோ இனிமேலும் நான் பார்த்தேனாகில், நான் அவற்றை எரித்துப்போடுவேன்”” என்றார். என் மகனிடம் சில வேதாகமங்கள் இருந்தன; இவைகளும், டாண் (volumes) புத்தகங்களும், சத்தியத்தில் காணப்படாத என் மூத்த மகனின் பராமரிப்பில் கொடுத்து வைத்திருந்தேன்.

டாண் புத்தகங்களை நான் வாசித்தாக வேண்டும் என்று எண்ணினேன்; அவைகள் என் அனுதின ஆகாரத்தைப்பார்க்கிலும் எனக்கு மேன்மையானவையாக இருந்தன; அவைகளை இரகசியமாய் நான் வாசிப்பேன்; எனினும் யாரொருவரின் கால் நடையினுடைய சத்தம் கேட்டாலே நான் நடுங்கிப்போய், அவற்றை ஒளித்து வைத்துவிடுவேன். மனுஷனுக்கல்ல, தேவனுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று எனக்குச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளதினால், நான் மகிழ்ச்சியாய் இல்லை. கிறிஸ்து என் தலையாய் இருக்கின்றார் என்று நான் [R3089 : page 303] காண்கின்றபடியால், இது விஷயத்தில் என் கணவனுக்கு நான் கீழ்ப்படிய வேண்டுமா? இது விஷயத்தில் என்னை நான் ஒரு கோழையாய் உணர்கின்றேன்.

எங்கள் பதில்:

அன்புக்குரிய சகோதரிக்கு,

உங்கள் கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைக்குறித்து வெளிப்படையாய் வெளிப்படுத்தி இருக்கின்றபடியால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் மற்றும் இந்த முக்கியமான விஷயத்தில் நீங்கள் தெளிந்த புத்தியுள்ள மனதினைப் பெற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் கவனிக்கையில், இதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அநேகமாக உறுதியான மனமுள்ள மனிதனாகக் காணப்படும் உங்கள் கணவன் இது விஷயத்தில் உங்களிடத்திலுள்ள அவரது நடக்கையானது எந்தளவுக்கு நியாயமற்றதாயும், அடக்குமுறையாயும் இருக்கின்றது என்பதை முழுவதுமாய் உணராதவராய் இருக்கின்றார். மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் எனும் வேதவாக்கிய கட்டளைக்கு நாங்கள் முழுமையாய் இசைவாகவே இருக்கின்றோம்; எனினும் இவ்வசனமானது, பரலோக மணவாளனுடைய அறிவுரைகளுக்கு எதிராகவுள்ள காரியங்களில், மனைவிகள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நீங்கள் புரிந்திருப்பதுபோன்று சுட்டிக்காட்டுகிறதில்லை. இப்படியான கோரிக்கைகளைப் பகுத்தறிவுள்ள எந்தப் பூலோக கணவனும் எதிர்ப்பார்க்கிறதில்லை மற்றும் உங்கள் கணவனும் காரியங்களை வித்தியாசமாய்க் கண்ணோக்குவார் என்று நாங்கள் நம்புகின்றோம். அவரை அன்பாய், பரிவாய் நடத்துவதையும் மற்றும் முறையாக மற்றும் சரியான விதங்கள் வாயிலாய் அவரைப் பிரியப்படுத்துவதற்கான உங்கள் உண்மையான பிரயாசத்தையும், அதேசமயம் மனசாட்சி சம்பந்தப்பட்ட உங்களுக்குரிய தகுதியான சுயாதீனங்கள் தொடர்புடைய விஷயங்களில் எல்லாம் உங்களது உறுதியான, உங்கள் நிலையான தீர்மானம் மற்றும் தயக்கமற்ற உறுதியான நடத்தையையும் அவர் காண்கையில், அவர் சரியான பாதையை அறிந்துகொள்வதற்கு உதவப்படுவார். ஒருவேளை நான் உங்கள் இடத்தில் காணப்பட்டிருந்தால், இல்லத்தில் என் கணவன் காணப்படுகையில் புத்தகங்களையும், கைப்பிரதிகளையும் அவர் பார்வைக்கு முன்பாக வைக்காமல் இருப்பதற்கு நான் முடிவெடுப்பேன்; ஆனாலும் அவைகளைக் குறித்துச் சிந்திக்கவோ, வாசிக்கவோ மாட்டேன் என்றோ அல்லது இந்த விலையேறப்பெற்ற விசுவாசத்தில் காணப்படும் மற்றவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்றோ நான் முடிவெடுக்க மாட்டேன்.

பூலோக கணவனை நான் நோக்கி: “”பரலோக மணவாளனுக்கு முதலாவது கீழ்ப்படிதலே நம் கடமை என்றும், “”சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்”” என்று பரலோக மணவாளன் கூறுகையில், எப்படியேனும் அந்தக் கட்டளையைக் கடைப்பிடிப்பது கடமையாகும் என்று நான் கருதுகின்றேன் என்றும், இதை நியாயமான மற்றும் சரியான நடத்தையாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும், கணவனுக்கும், குடும்பத்தினுடைய மற்ற அங்கத்தினர்களுக்கும் நான் செய்ய வேண்டிய நியாயமான, சரியான குடும்பக் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் புறக்கணிப்பதற்கான எந்த எண்ணமும் எனக்கில்லை என்றும், மாறாக நான் இப்போது பெற்றிருக்கும் நம்பிக்கை இல்லாமல் வேறு ஏதேனும் ஒருவேளை பெற்றிருந்தால், அதனுடைய தாக்கத்தின் கீழிருந்து நான் எப்படிக் காணப்படுவேனோ அதைப்போலவே இப்போதும் உண்மையாக அல்லது அதைவிட அதிகம் உண்மையாகக் காணப்படுவேன் என்றும்”” தெளிவாய்ச் சொல்லிடுவேன். மேலும் கணவனை நோக்கி: “”இந்த மட்டிலுமான சுயாதீனமாகிலும் எனக்கு இருக்கும் என்று விவாக உறவிற்குள் பிரவேசிக்கையில் நாம் இருவரும் தெளிவாய்ப் புரிந்திருந்தோம் என்றும், ஒருவேளை கணவனாகிய உங்கள் விவாக வாக்குறுதியில் மனசாட்சியின் சுயாதீனத்தை எனக்கு அருளிட தாங்கள் நோக்கம் கொண்டிருக்கவில்லையெனில், நீங்கள் என்னை ஏமாற்றி, வஞ்சித்திருக்கின்றீர்கள் என்றும், என்ன நடந்தாலும் இத்தகைய அடிமைத்தனத்திற்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கமாட்டேன் என்றும் கூறிடுவேன்; சீக்கிரமாய் இது விஷயத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டால் நலமாயிருக்கும் என்றும், எந்தச் சந்தர்ப்பச்சூழ்நிலையிலும், என்னுடைய இந்த நிலைப்பாடானது கர்த்தருடைய சித்தத்திற்கு இசைவானது என்று நான் கருதிடுவதுவரையிலும், என்னுடைய இந்த நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் நான் அசையமாட்டேன் என்றும், இக்காரியமானது ஏதேனும் நமக்கிடையே விரிசல் கொண்டுவருமானால், நான் ஒருபோதும் என்னுடைய மனசாட்சியின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத காரணத்தாலும் மற்றும் அப்படி விட்டுக்கொடுக்க ஒருபோதும் நோக்கம் கொண்டிராத காரணத்தாலும், உங்கள் மனசாட்சியினை நீங்களும் மீறும்படி நான் கேட்காத காரணத்தினாலும் – தவறும், மாற்றம் காண்பிக்க வேண்டியதும் நிச்சயமாய் உங்கள் பக்கமே என்றும், என்னுடைய இந்தக் கண்ணோட்டமானது வேதவாக்கியங்களுடைய பரீட்சையில் நிலைநிற்பது மாத்திரமல்லாமல், தெளிந்த பகுத்தறிவுள்ள மனுஷன் மற்றும் மனுஷி முன்பும் சரியானதாய்க் காணப்படுமென நான் நம்புகின்றேன் என்றும்”” கூறிடுவேன்.

இதோடுகூடச் சத்தியமானது கணவனுக்குரிய நலனுக்கடுத்த காரியங்களில், என்னை அலட்சியமுள்ளவளாக்குவதற்குப் பதிலாய், மனைவியெனவுள்ள என் கடமைகள் விஷயத்தில் என்னை அதிகம் ஜாக்கிரதையுள்ளவளாக்கிடும் என்று நான் என் கணவனுக்கு உறுதிப்படுத்திடுவேன்; மேலும் நான் செய்யத் தீர்மானித்திருப்பது போன்று கணவனாகிய தாங்கள் ஒருவேளை சரியான கண்ணோட்டம் மற்றும் நிலைப்பாடு எடுத்துக்கொள்வீர்களானால், அது நம் இருவருக்கும் மற்றும் வீட்டாருக்கும் ஆசீர்வாதத்தை அதிகரிக்கின்றதாய் இருக்கும் என்று நான் நம்புவதாகக் கணவனுக்கு உறுதிப்படுத்திடுவேன்.
ஒருவேளை என் மனசாட்சியினை விலங்கிடுவதற்குரிய இத்தனை முயற்சிகளுக்கு எதிராய் இப்படிப் பொறுமையாயும், அன்பாயும் மறுத்து விளக்கிக் கூறியும், எந்த மாற்றமும் இல்லையெனில், நான் என் கணவனால் கைவிடப்பட்டுள்ளேன் என்று கருதிடுவேன் – அதாவது அவர் என் கணவனாகக் காணப்படுவதை நிறுத்திவிட்டு, என்னை ஒடுக்குகிறவராகியுள்ளார் மற்றும் மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கப்பட்டு நடத்தப்படும் அடிமை போன்றுகூட அவர் என்னை நடத்தவில்லை என்று கருதிடுவேன். இக்காரியத்தினை நான் கர்த்தரிடத்திற்கு எடுத்துச்சென்று, விடுதலைக்காய் – கிறிஸ்து உண்டாக்கின சுயாதீனத்திற்காய்க் கர்த்தரை நோக்கிடுவேன். இது மறுமணம்பண்ணிடுவதற்கான சுயாதீனமல்ல; (மத்தேயு 19:9-ஆம் வசனத்தில் இடம்பெறும் ஒரே காரணத்தினால் தவிர மற்றப்படி) திருமணத்தினை நிரந்தரமான ஒன்றாக்கிடும் திவ்விய பிரமாணமானது, அனைவருக்கும் பொருந்தும்.

கர்த்தர் உங்கள் காரியங்களை வழிநடத்தத்தக்கதாக, கிருபையின் சிங்காசனத்தினிடத்தில் உங்களை நினைவுகூர்ந்திடுவேன்.